எம்.எஸ்.கல்யாணசுந்தரம்: Difference between revisions
Line 9: | Line 9: | ||
எம்.எஸ். கல்யாணசுந்தரம் பஞ்சாப் பல்கலையில் பி.ஏ பட்டமும், இந்தியில் பிரவீண் பட்டமும் பெற்றார். மாண்டிஸோரி முறை பயிற்றியலை மாண்டிஸோரி அம்மையாரிடம் இருந்து கற்றார். ஆங்கிலம் தமிழ், இந்தி, உருது தெலுங்கு வங்காளி குஜராத்தி சம்ஸ்கிருதம் மற்றும் ஜெர்மன் மொழிகள் அறிந்தவர். | எம்.எஸ். கல்யாணசுந்தரம் பஞ்சாப் பல்கலையில் பி.ஏ பட்டமும், இந்தியில் பிரவீண் பட்டமும் பெற்றார். மாண்டிஸோரி முறை பயிற்றியலை மாண்டிஸோரி அம்மையாரிடம் இருந்து கற்றார். ஆங்கிலம் தமிழ், இந்தி, உருது தெலுங்கு வங்காளி குஜராத்தி சம்ஸ்கிருதம் மற்றும் ஜெர்மன் மொழிகள் அறிந்தவர். | ||
== தனிவாழ்க்கை == | == தனிவாழ்க்கை == | ||
எம்.எஸ். கல்யாணசுந்தரம் மணம் செய்துகொள்ளவில்லை. கொடைக்கானல் சோலார் இயற்பியல் ஆய்வகத்தில் உதவியாளராகப் பணிபுரிந்தார். 1923 முதல் ஆக்ராவில் தபால் தந்தித் துறையில் பணியாற்றினார். 1925-ல் பொறியியல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்று டெல்லியிலும் பஞ்சாபிலும் பணியாற்றினார். 1931-ல் காந்தியின் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு வேலையிலிருந்து விடுவித்துக் கொண்டார். சுதந்திரத்திற்குப் பின் மீண்டும் 1950ஆம் ஆண்டில் தபால் தந்தித் துறையில் பொறியியல் கண்காணிப்பாளராகப் பணியில் சேர்ந்து | எம்.எஸ். கல்யாணசுந்தரம் மணம் செய்துகொள்ளவில்லை. கொடைக்கானல் சோலார் இயற்பியல் ஆய்வகத்தில் உதவியாளராகப் பணிபுரிந்தார். 1923 முதல் ஆக்ராவில் தபால் தந்தித் துறையில் பணியாற்றினார். 1925-ல் பொறியியல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்று டெல்லியிலும் பஞ்சாபிலும் பணியாற்றினார். 1931-ல் காந்தியின் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு வேலையிலிருந்து விடுவித்துக் கொண்டார். சுதந்திரத்திற்குப் பின் மீண்டும் 1950ஆம் ஆண்டில் தபால் தந்தித் துறையில் பொறியியல் கண்காணிப்பாளராகப் பணியில் சேர்ந்து 1956-ல் ஓய்வு பெற்றார். பின்னர் கொடைக்கானலில் உள்ள சர்வதேசப் பள்ளியில் (அந்நாளில் அமெரிக்க பள்ளி) ஆசிரியராகப் பணிபுரிந்தார். | ||
பின்தங்கிய பகுதிகளில் மக்கள் பணியாற்றியமையால் தொழுநோய்க்கு ஆளானார் என்று சொல்லப்படுகிறது. இறுதிநாட்களை கொடைக்கானலில் ஒரு மருத்துவ விடுதியில் கழித்தார். | பின்தங்கிய பகுதிகளில் மக்கள் பணியாற்றியமையால் தொழுநோய்க்கு ஆளானார் என்று சொல்லப்படுகிறது. இறுதிநாட்களை கொடைக்கானலில் ஒரு மருத்துவ விடுதியில் கழித்தார். |
Revision as of 14:47, 21 September 2024
To read the article in English: M.S. Kalyanasundaram.
எம்.எஸ். கல்யாணசுந்தரம் (மார்ச் 28, 1901 -1989) தமிழில் நாவல்களும் சிறுகதைகளும் எழுதிய எழுத்தாளர். தமிழ் இலக்கியத்தில் வழக்கமாகப் பேசப்படாத களங்களை கதைகளில் எழுதியவர் என்பதனால் முக்கியமானவர் என்று கருதப்படுகிறார். இரண்டாம் உலகப்போரில் கைதிகளாகச் சிக்கிக்கொண்டு பசிபிக் தீவு ஒன்றில் சிக்கி மீண்டு வருபவரை கதைநாயகனாகக் கொண்ட இருபது வருஷங்கள் அவருடைய முதன்மையான படைப்பு. மிகையில்லாத யதார்த்தவாதத்தை எழுதியவர்.
பிறப்பு கல்வி
எம்.எஸ். கல்யாணசுந்தரம் மார்ச் 28, 1901-ல் மதுரையில் ஒரு சௌராஷ்ட்ர குடும்பத்தில் பிறந்தார். இவருடைய தந்தையின் பெயர் சீதாராமையா. இவர் ஒரு காந்தியவாதி. எம்.எஸ்.கல்யாணசுந்தரத்தின் தமையன் மதுரை அருகே ஆண்டிப்பட்டியில் வேகவதி என்னும் காந்திய ஆசிரமத்தை நடத்திவந்தார். சீதாராமையா அந்த ஆசிரமத்தில் தங்கி கரட்டூர் ராமு என்னும் நாவலை 1934-ல் எழுதினார்
எம்.எஸ். கல்யாணசுந்தரம் பஞ்சாப் பல்கலையில் பி.ஏ பட்டமும், இந்தியில் பிரவீண் பட்டமும் பெற்றார். மாண்டிஸோரி முறை பயிற்றியலை மாண்டிஸோரி அம்மையாரிடம் இருந்து கற்றார். ஆங்கிலம் தமிழ், இந்தி, உருது தெலுங்கு வங்காளி குஜராத்தி சம்ஸ்கிருதம் மற்றும் ஜெர்மன் மொழிகள் அறிந்தவர்.
தனிவாழ்க்கை
எம்.எஸ். கல்யாணசுந்தரம் மணம் செய்துகொள்ளவில்லை. கொடைக்கானல் சோலார் இயற்பியல் ஆய்வகத்தில் உதவியாளராகப் பணிபுரிந்தார். 1923 முதல் ஆக்ராவில் தபால் தந்தித் துறையில் பணியாற்றினார். 1925-ல் பொறியியல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்று டெல்லியிலும் பஞ்சாபிலும் பணியாற்றினார். 1931-ல் காந்தியின் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு வேலையிலிருந்து விடுவித்துக் கொண்டார். சுதந்திரத்திற்குப் பின் மீண்டும் 1950ஆம் ஆண்டில் தபால் தந்தித் துறையில் பொறியியல் கண்காணிப்பாளராகப் பணியில் சேர்ந்து 1956-ல் ஓய்வு பெற்றார். பின்னர் கொடைக்கானலில் உள்ள சர்வதேசப் பள்ளியில் (அந்நாளில் அமெரிக்க பள்ளி) ஆசிரியராகப் பணிபுரிந்தார்.
பின்தங்கிய பகுதிகளில் மக்கள் பணியாற்றியமையால் தொழுநோய்க்கு ஆளானார் என்று சொல்லப்படுகிறது. இறுதிநாட்களை கொடைக்கானலில் ஒரு மருத்துவ விடுதியில் கழித்தார்.
அரசியல்
1931ஆம் ஆண்டு காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்க அழைப்பை ஏற்று பணியிலிருந்து விலகினார். சபர்மதி ஆசிரமத்திற்குச் சென்று காந்தியைச் சந்தித்தார். காந்தி இவரை தனது ஊருக்கே திரும்பிச் சென்று இந்தி பிரசாரம் செய்யும்படி கூறினார். தமிழ்நாடு திரும்பிய எம்.எஸ். கல்யாணசுந்தரம் 1932ஆம் ஆண்டு மதுரை பெரியகுளத்தில் பள்ளி ஒன்றைத் தொடங்கினார். 1935-41 வரை லாகூரில் இருந்த எம்.எஸ். கல்யாணசுந்தரம் அங்கு தமிழ் பள்ளி ஒன்றைத் உருவாக்கினார். அங்கு வசிக்கும் தென்னிந்தியக் குழந்தைகளுக்கு பாடம் கற்பித்தார்.
இலக்கியவாழ்க்கை
எம்.எஸ். கல்யாணசுந்தரம் வாழ்ந்தபோது 'இருபது வருஷங்கள்' என்னும் நாவலும் 'பொன்மணல்' என்னும் சிறுகதை தொகுதியும் மட்டுமே வெளிவந்தன.'பகல்கனவு' என்னும் நாவல் நெடுங்காலம் கையெழுத்துப் பிரதியாக கி.ஆ. சச்சிதானந்தத்திடம் இருந்தது. எம்.எஸ்.கல்யாணசுந்தரம் மறைந்த பின்னர் வெளிவந்தது.
எம்.எஸ். கல்யாணசுந்தரத்தை சிறுபத்திரிகை உலகத்துக்கு அறிமுகப்படுத்தியவர் சி.சு. செல்லப்பா. 1934ல் 'ஆனந்த விகடன்' பத்திரிகை நடத்திய போட்டியில் ரூ.25 பரிசுபெற்ற 'தபால்கார அப்துல்காதர்' கதையை 'எழுத்து' இதழில் மறுபிரசுரம் (எழுத்து 23, நவம்பர் 1960) செய்தார். 'இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன்பு பாராட்டுப் பெற்று சிறுகதைத்துறை வளர்ச்சிப் பாதையில் புதுவழி காட்டிய கதைகள் சில இன்றும் புஸ்தக உருவம் பெறாமல் கிடக்கின்றன' எனவும் 'அவரது சிறுகதைத் தொகுதி ஒன்று வெளிவருகிறபோது சிறுகதைக்கு அவர் பங்கை மதிப்பிடமுடியும்' என்ற முன்குறிப்புடன் அந்தக் கதை பிரசுரமானது. 1961 ஏப்ரலில் 'பொன்மணல்' தொகுப்பு வெளியானதும் அத்தொகுப்பைப் பற்றி 'மனிதாபிமானப் படைப்பாளி' என்ற விமர்சனக் கட்டுரையை எழுத்து இதழில் எழுதினார்.
கவிதைகள், இதழ்களுக்கு எழுதும் வாசகர் கடிதங்கள் போன்றவற்றை ’முன்ஷி’ என்ற பெயரில் எழுதினார். சில கதைகள் வெளியான இதழ்களில் ம.சீ.கல்யாணசுந்தரம் என முன்னெழுத்துகள் தமிழில் குறிக்கப்பட்டுள்ளன. சில இதழ்களில் முன்னெழுத்துகள் இல்லாமல் பெயர் மட்டும் உள்ளது. தி மெயில், தி ஹிந்து, ஸன்டே ஸ்டாண்டர்டு முதலிய ஆங்கில நாளேடுகளில் நடைச்சித்திரங்கள் எழுதினார். அவற்றில் சிலவற்றை இவரே தமிழில் மொழிபெயர்த்து 'மஞ்சரி' இதழில் வெளியிட்டார். இருபது வருஷங்கள் நாவலின் சுருக்கப்பட்ட வடிவிலும் 'மஞ்சரி' இதழில் படங்களுடன் வெளியானது. ஆங்கிலம், தமிழ், இந்தியில் அரசியல் கட்டுரைகளை எழுதினார். தமிழ்-இந்தி, தமிழ்-ஆங்கிலம் அகராதிகள் தயாரித்தார்.
மொழிபெயர்ப்பு
1958-ல் இர்மெங்கார்டே எபேர்லெவின் நவீன வைத்திய சாதனைகள் நூலை மொழிபெயர்த்தார். 1960-ல் ஏ.என்.ஒயிட்ஹெட்டின் “கல்வியின் லட்சியம்” நூலை கே.ராமராஜனுடன் இணைந்து மொழிபெயர்த்தார். ஆலன் நெவின்ஸ், ஹென்ரி ஸ்டீல் கம்மாகர் ஆகியோரின் ”அமெரிக்க ஐக்கிய நாட்டுச் சரித்திரம்” என்ற நூலை 1960-ல் மொழிபெயர்த்தார்.
எம்.எஸ். கல்யாணசுந்தம் 1969-ல் புதுதில்லியிலிருந்து இயங்கிய குழந்தைகள் புத்தக அறக்கட்டளை (Children’s Book Trust) துணை ஆசிரியராகப் பணிபுரிந்தார். இந்நிறுவனத்திற்காக சிறுவர் நூல்களை மொழிபெயர்த்தார். சிறந்த நண்பன், நான்கு சகோதரர்கள், பாட்டனார் வீட்டில், பிச்சைக்கார அரசன், பேசும் குகை, மறுபடியும் கழுதை, வீடு ஆகிய சிறுவர் நூல்களை மொழிபெயர்த்தார்.
நூல்வெளியீடு
எம்.எஸ். கல்யாணசுந்தரம் தன் நூல்களை பிரசுரிக்க ஆர்வம் காட்டவில்லை. அவருடைய நூல்கள் இறுதிக்காலத்தில் அவரிடம் பழகிய கி.ஆ.சச்சிதானந்தம் அவர்களிடம் தங்கிவிட்டன. ’இருபது வருஷங்கள் தவிர அவருடைய நூல்கள் கவனிக்கப்படவுமில்லை. அவர் மறைந்து இருபதாண்டுகளுக்குப்பின் அவருடைய கைப்பிரதியில் இருந்து 2001-ல் தான் அவருடைய இரண்டாவது நாவலான பகல்கனவு வெளியிடப்பட்டது.
இலக்கிய இடம்
எம்.எஸ். கல்யாணசுந்தரம் தமிழில் அன்று எழுதப்பட்ட பொதுவான கதைக்களங்களான கிராமவாழ்க்கை, குடும்பச்சூழல், ஆண்பெண் உறவு ஆகியவற்றில் இருந்து வெளியே சென்று உலகப்போர்ச் சூழல் போன்ற முற்றிலும் புதிய களங்களில் கதைகளை எழுதினார். மிகையில்லாத யதார்த்தவாத எழுத்து அவருடையது. விலங்குகள், புறவயச்சூழல் ஆகியவற்றை நுட்பமாகக் கவனித்து எழுதும் பாணி கொண்டிருந்தார். நெடுங்காலம் அச்சில் இல்லாதிருந்த அவருடைய ஆக்கங்கள் அவருடைய நூற்றாண்டை ஒட்டி தமிழினி பதிப்பகத்தால் அச்சில் கொண்டுவரப்பட்டன. அவை வாசகர்களால் காலத்தால் பழைமையாகாத ஆக்கங்கள் என கருதப்பட்டன.
"மனிதாபிமானம்தான் அவரது ‘பொன் மணல்’ கதைத் தொகுதி நெடுக பொதுத்தன்மையாக அமைந்திருக்கும் இலக்கியப் பார்வை. இந்த பத்தொன்பது கதைகளில் ஒரு வில்லன் மருந்துக்கும் கிடையாது. தமிழ்ச் சிறுகதையின் பிதா என்று சொல்லத்தக்க வ.வெ.சு. அய்யர் முதல் என் வரையில், கெட்டதை மனதில் நினைக்காமல் இல்லை. அதை விஷயமாக வைத்து கதை எழுதாமல் இல்லை. ஆனால் கல்யாணசுந்தரம் அப்படி ஒரு கதையைக்கூட இந்தத் தொகுப்பில் எழுதவில்லை." என சி.சு. செல்லப்பா மதிப்பிடுகிறார்.
"தன் நோக்கத்தாலேயே தன் செயல்பரப்பைக் குறைத்துக்கொள்ள நேர்ந்த படைப்பாளி என்று எம்.எஸ்.கல்யாணசுந்தரத்தைச் சொல்லலாம். அந்தத்தளம் குறுகியது என்பதனால் அவர் முதன்மையான படைப்பாளி ஆகவில்லை. அது சாத்தியமே இல்லை. ஆனால் கலாச்சார இயக்கத்தில் அவர் தொடும் இடங்கள் இன்றியமையாதவை. ஆகவே அவர் படைப்புகள் என்றுமே தமிழுக்கு குறையாத முக்கியத்துவம் உடையவை’ என்று விமர்சகர் ஜெயமோகன் சொல்கிறார். ஜெயமோகன் எழுதிய இலக்கிய முன்னோடிகள் வரிசையில் தமிழிலக்கிய முன்னோடிகளில் ஒருவராக எம்.எஸ்.கல்யாணசுந்தரம் குறிப்பிடப்படுகிறார்.
தி.ஜ.ரங்கநாதன் எம்.எஸ்.கல்யாணசுந்தரத்திற்கு அளித்த முன்னுரையில் 'கல்யாண சுந்தரத்தின் சிறுகதைகள் எல்லாம் நவரத்தினங்கள் - உருவிலும் சரி, தன்மை யிலும் சரி, வகையிலும் சரி. அப்படிப் பட்டவை’ என்கிறார்.*
விருதுகள்
- 1934-ல் ஆனந்த விகடன் சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற கதைகளில் எம்.எஸ்.கல்யாணசுந்தரத்தின் 'தபால்கார அப்துல்காதர்' சிறுகதையும் ஒன்று.
- 1969-ல் எம்.எஸ்.கல்யாணசுந்தரத்தின் 'நான் குற்றவாளியே' சிறுகதை பெர்க்லி-கல்கி இலக்கியப் பரிசுத் திட்டத்தில் 'சமூகக் கதைகள்' பிரிவில் மூன்றாம் பரிசு(ரூ.250) பெற்றது.
- இருபது வருஷங்கள் நாவலுக்கு இந்திய அரசின் விருது அளிக்கப்பட்டது.
மறைவு
எம்.எஸ். கல்யாணசுந்தரம் 1989-ல் காலமானார்.
நூல் பட்டியல்
நாவல்
- இருபது வருஷங்கள் (தமிழ் புத்தகாலயம், 1965)
- பகல்கனவு (தமிழினி, 2001)
சிறுகதைத் தொகுப்பு
- பொன்மணல் (தமிழ் புத்தகாலயம், 1961)
மொழிபெயர்ப்புகள்
- நவீன வைத்திய சாதனைகள் - இர்மெங்கார்டே எபேர்லெ (ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், 1958)
- கல்வியின் லட்சியம் - ஏ.என்.ஒயிட்ஹெட் (கே.ராமராஜனுடன் இணைந்து, ஜோதி நிலையம், 1960)
- அமெரிக்க ஐக்கிய நாட்டுச் சரித்திரம் - ஆலன் நெவின்ஸ், ஹென்ரி ஸ்டீல் கம்மாகர் (1960)
- சிறந்த நண்பன் (1969)
- நான்கு சகோதரர்கள் (1969)
- பாட்டனார் வீட்டில் (1969)
- பிச்சைக்கார அரசன் (1969)
- பேசும் குகை (1969)
- மறுபடியும் கழுதை (1969)
- வீடு (1969)
பிற
- செய்தித்தாள் (சிறார் நூல், தமிழ் புத்தகாலயம், 1961)
- தென்னாட்டு மலையூர்கள் (பயணக்கட்டுரைகள், தமிழ் புத்தகாலயம், 1961)
- Indian Hill Stations (1961)
- வளர்க அறிவு (முதியோருக்கு, அல்லயன்ஸ் பதிப்பகம், 1984)
- Hindi Reader (Vol I, II)
- The Wedding of the Rats & other stories (1969)
- Autobiography of an Unknown Telegraphist (1973) (பகல்கனவு நாவலின் ஆங்கில வடிவம் எம்.எஸ்.கல்யாணசுந்தரம் எழுதியது)
அகராதி
- ஹிந்தி-தமிழ் அகராதி
- ஆங்கிலம்-ஹிந்தி அகராதி
உசாத்துணை
- இலக்கிய முன்னோடிகள் நூல்: ஜெயமோகன்
- நூல்கள் வெளியான ஆண்டு, பதிப்பகம் முதலிய விவரங்கள் எழுத்து இதழ் புத்தக விளம்பரங்களிலிருந்தும், ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்திலிருந்தும் குறித்துக்கொண்டவை.
- 'மனிதாபிமானப் படைப்பாளி' கட்டுரை: எழுத்து 32, 33 (ஆகஸ்ட, செப்டம்பர்) இதழ்கள்
- இலக்கிய சிந்தனை ஆய்வு நூல்கள் வரிசையில் 'சாதனைச் செம்மல் சி.சு.செல்லப்பா' நூல்: வி.ராமூர்த்தி
- மகரம் தொகுத்த 'எழுதுவது எப்படி?' (தொகுதி 1) நூல்
- எம்.எஸ்.கல்யாணசுந்தரம் - சத்திய வேட்கை கொண்ட தத்துவவாதி: தி இந்து தமிழ்திசை
- எம்.எஸ்.கல்யாணசுந்தரம் - ஒரு லட்சியவாதியின் இலக்கியப் பயணம்: எம். கோபாலகிருஷ்ணன் வலைதளம்
இணைப்புகள்
- தபால்கார அப்துல்காதர் சிறுகதை - எம்.எஸ். கல்யாணசுந்தரம்: அழியாச்சுடர்கள்
- Indian Hill Stations (1961)
- தமிழ்நாட்டு நூற்றொகை - 1970
- தமிழ் எழுத்தாளர் யார் - எவர்?
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:30:41 IST