under review

சு.வெங்கடேசன்: Difference between revisions

From Tamil Wiki
Line 31: Line 31:


====== காவல்கோட்டம் ======
====== காவல்கோட்டம் ======
சு.வெங்கடேசன் அரசியல்பணியாளராக பரவலாக அறிமுகமாகியிருந்தாலும் இலக்கியவாதியாக அறிமுகமானது அவருடைய முதல் நாவலான [[காவல்கோட்டம்]] என்னும் படைப்பின் வழியாகவே. மதுரையின் காவலுரிமை மரபுவழியாக அங்குவாழும் கள்ளர் மறவர் இன மக்களிடம் இருந்ததையும் நாயக்கர் ஆட்சிக்காலத்தில் அது பறிபோனதையும் பின்னர் அது மீட்கப்பட்டதையும் சொல்லும் நாவல் இது.  
சு.வெங்கடேசன் அரசியல்பணியாளராக பரவலாக அறிமுகமாகியிருந்தாலும் இலக்கியவாதியாக அறிமுகமானது 2008ல் வெளிவந்த அவருடைய முதல் நாவலான [[காவல்கோட்டம்]] என்னும் படைப்பின் வழியாகவே. மதுரையின் காவலுரிமை மரபுவழியாக அங்குவாழும் கள்ளர் மறவர் இன மக்களிடம் இருந்ததையும் நாயக்கர் ஆட்சிக்காலத்தில் அது பறிபோனதையும் பின்னர் அது மீட்கப்பட்டதையும் சொல்லும் நாவல் இது.  


====== வேள்பாரி ======
====== வீரயுகநாயகன் வேள்பாரி ======
புறநாநூற்றில் குறிப்பிடப்படும் சிறு அரசர்களில் ஒருவரான [[வேள்பாரி]] பற்றியும் அவருடைய நண்பரும் சங்ககாலக் கவிஞருமான கபிலர் பற்றியும் எழுதப்பட்டுள்ள வரலாற்று நாவல். பொதுவாசிப்புக்குரிய இந்நாவல் தமிழில் மிகப்பெரிய வாசக வரவேற்பைப் பெற்ற ஒன்று. சங்ககாலத்தின் வாழ்க்கைமுறைகளை விரிவான தரவுகளுடன் சித்தரிப்பது.''"அலங்காரப்பிரியர்கள்"'' , பல்வேறு மனிதர்கள், சம்பவங்கள், தகவல்கள் பற்றிய கட்டுரைத் தொகுப்பு.
புறநாநூற்றில் குறிப்பிடப்படும் சிறு அரசர்களில் ஒருவரான வீரயுகநாயகன் [[வேள்பாரி]] பற்றியும் அவருடைய நண்பரும் சங்ககாலக் கவிஞருமான கபிலர் பற்றியும் எழுதப்பட்டுள்ள வரலாற்று நாவல். 2018ல் வெளிவந்தது பொதுவாசிப்புக்குரிய இந்நாவல் தமிழில் மிகப்பெரிய வாசக வரவேற்பைப் பெற்ற ஒன்று. சங்ககாலத்தின் வாழ்க்கைமுறைகளை விரிவான தரவுகளுடன் சித்தரிப்பது.''"அலங்காரப்பிரியர்கள்"'' , பல்வேறு மனிதர்கள், சம்பவங்கள், தகவல்கள் பற்றிய கட்டுரைத் தொகுப்பு.


====== ஆய்வுகள் ======
====== ஆய்வுகள் ======
Line 48: Line 48:
== இலக்கிய இடம் ==
== இலக்கிய இடம் ==
== நூல்கள் ==
== நூல்கள் ==
* ஓட்டை இல்லாத புல்லாங்குழல் (கவிதை) - 198
 
* திசையெல்லாம் சூரியன் (கவிதை)
====== நாவல்கள் ======
* பாசி வெளிச்சத்தில் (கவிதை)
 
* ஆதிப்புதிர் (கவிதை)
* காவல்கோட்டம்
* கலாசாரத்தின் அரசியல் (கட்டுரை)
* சந்திரஹாசம் (வரைகலைநாவல்)
* மனிதர்கள், நாடுகள், உலகங்கள் (கட்டுரை)
* வீரயுகநாயகன் வேள்பாரி
* கருப்பன் கேட்கிறான் கிடாய் எங்கே? (சிறு நாவல்)
 
* சமயம் கடந்த தமிழ் (கட்டுரை)
====== கவிதை ======
* காவல் கோட்டம் (புதினம்)
 
* அலங்காரப்பிரியர்கள் (கட்டுரை)2014
* ஓட்டை இல்லாத புல்லாங்குழல்  
* சந்திரஹாசம் (வரைகலைப் புதினம்)2015
* திசையெல்லாம் சூரியன்  
* வைகை நதி நாகரிகம் 2015-ம் ஆண்டில் ஆனந்தவிகடனில் வெளிவந்த தொடர்
* பாசி வெளிச்சத்தில்
* வீரயுக நாயகன் வேள்பாரி ஆனந்தவிகடனில் வெளிவந்த வரலாற்றுத் தொடர் (புதினம்) 2016
* ஆதிப் புதிர்
== விருதுகள் ==
 
* சாகித்ய அகாதெமி விருது
====== அரசியல் ======
* சிறந்த படைப்பாளி விருது(டான் ஸ்ரீ கே.ஆர் சோமோ மொழி இலக்கிய அறவாரியம் )
 
* இயல் விருது(கனடா இலக்கியத் தோட்டம்)
* கலாசாரத்தின் அரசியல்  
*
* மதமாற்றத் தடைச் சட்டம் மறைந்திருக்கும் உண்மைகள்
* கருப்பன் கேட்கிறான் கிடாய் எங்கே?
* மனிதர்கள், நாடுகள், உலகங்கள்
* ஆட்சித் தமிழ் ஒரு வரலாற்றுப் பார்வை
* உ.வே.சா. சமயம் கடந்த தமிழ்  
* அலங்காரப் பிரியர்கள்
* கீழடி
* வைகை நதி நாகரிகம்  
* கதைகளின் கதை
* இந்தியில் மட்டும் பதில் சட்ட விரோதம்
 
====== மொழியாக்கம் ======
 
* இந்தி இந்துத்துவா இந்துராஜ்ஜியம் (சீத்தாராம் யெச்சூரி)
 
====== ஆங்கிலம் ======
 
* Chandrahasam
 
== உசாத்துணை ==
== உசாத்துணை ==



Revision as of 22:10, 6 September 2024

சு.வெங்கடேசன்

சு. வெங்கடேசன்(பிறப்பு:மார்ச் 16, 1960) தமிழ் நாவலாசிரியர், பேச்சாளர், அரசியல்வாதி. வரலாற்று நாவல்களை எழுதினார். இந்திய கம்யூனிஸ்டு (மார்க்ஸிஸ்ட்) கட்சி உறுப்பினராகவும் முழுநேர ஊழியராகவும் இருப்பவர். இந்திய பாராளுமன்ற உறுப்பினர். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் பொறுப்பாளராகவும் பணியாற்றினார்.

thehindu.com

பிறப்பு,கல்வி

சு.வெங்கடேசன் மதுரை ஹார்விபட்டியில் மார்ச் 16,1960 அன்று நல்லம்மாள்-சுப்புராம் இணையருக்குப் பிறந்தார்.

மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் இளம் வணிகவியல் (B.com) பட்டம் பெற்றார்.

நன்றி:விகடன்.காம்

தனி வாழ்க்கை

சு.வெங்கடேசன் கமலாவை 1998-ல் மணந்துகொண்டார். யாழினி, கமலினி என்று இரு மகள்கள்.

சு.வெங்கடேசன் மார்க்ஸிய கம்யூனிஸ்டுக் கட்சியின் முழுநேர உறுப்பினராகப் பணியாற்றினார்.

அரசியல் பணி

சு. வெங்கடேசன் தன் கல்லூரி மாணவப் பருவத்திலிருந்து மார்க்சிஸ்ட் பொதுவுடமைக் கட்சியின் உறுப்பினராக இருந்தார். படிப்பை முடித்தபின் கட்சியின் முழுநேர ஊழியராகப் பணியாற்றி வந்தார். உத்தப்புரம் சாதி தடுப்புச் சுவர் இடிப்பு உள்ளிட்ட தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பல்வேறு களப் போராட்டங்களில் பங்கு கொண்டார்.

சு. வெங்கடேசன் இந்திய கம்யூனிஸ்டுக் கட்சி (மார்க்ஸிஸ்ட்)யின் மாநிலக்குழு உறுப்பினரா 2018 முதல் 2022 வரை பணியாற்றினார்

சு.வெங்கடேசன் 2019-ம் ஆண்டு நடந்த இந்திய நாடாளுமன்றத் தேர்தலில், மதுரை தொகுதியிலிருந்து, மார்க்சிஸ்ட் பொதுவுடமைக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு வென்றார்.

சு.வெங்கடேசன் 2024 ல் நடைபெற்ற இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் மதுரை தொகுதியில் இருந்து மார்க்சிஸ்ட் பொதுவுடமைக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு வென்றார்.

இதழியல்

சு.வெங்கடேசன் கல்லூரிப்படிப்பை முடித்தபின் மார்க்ஸியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் இலக்கிய இதழான செம்மலர்'ரில் துணை ஆசிரியராகச் சேர்ந்து நான்காண்டுகள் பணியாற்றினார்

இலக்கிய அமைப்புப் பணிகள்

சு.வெங்கடேசன் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளராக 2011 முதல் 2018 வரை பணியாற்றினார். அவ்வமைப்பின் மாநிலத்தலைவராக 18 செப்டம்பர் 2011 முதல் 24 ஜூன் 2018 வரை பணியாற்றினார்

இலக்கியப் பணி

சு.வெங்கடேசன் கல்லூரி முதலாண்டில் (1989) "ஓட்டை இல்லாத புல்லாங்குழல்' என்ற கவிதைத் தொகுப்பை எழுதினார். கல்லூரியில் படிக்கும்போது தமிழ்க்கூத்தன் என்கிற தோழர் மூலமாக இடதுசாரி இயக்கத் தொடர்பு கிடைத்தது. செம்மலர் இதழில் தொடர்ந்து கவிதைகள் எழுதினார்.

படைப்பாளியாக மாறுவதற்கான பின்னணியாக தன் தமிழாசிரியர் இளங்குமரனாரையும் , பால்யத்தை கதைகள் மற்றும் வாழ்வனுபவங்களால் நிறைத்த இரு பாட்டிகளையும் குறிப்பிடுகிறார்.

காவல்கோட்டம்

சு.வெங்கடேசன் அரசியல்பணியாளராக பரவலாக அறிமுகமாகியிருந்தாலும் இலக்கியவாதியாக அறிமுகமானது 2008ல் வெளிவந்த அவருடைய முதல் நாவலான காவல்கோட்டம் என்னும் படைப்பின் வழியாகவே. மதுரையின் காவலுரிமை மரபுவழியாக அங்குவாழும் கள்ளர் மறவர் இன மக்களிடம் இருந்ததையும் நாயக்கர் ஆட்சிக்காலத்தில் அது பறிபோனதையும் பின்னர் அது மீட்கப்பட்டதையும் சொல்லும் நாவல் இது.

வீரயுகநாயகன் வேள்பாரி

புறநாநூற்றில் குறிப்பிடப்படும் சிறு அரசர்களில் ஒருவரான வீரயுகநாயகன் வேள்பாரி பற்றியும் அவருடைய நண்பரும் சங்ககாலக் கவிஞருமான கபிலர் பற்றியும் எழுதப்பட்டுள்ள வரலாற்று நாவல். 2018ல் வெளிவந்தது பொதுவாசிப்புக்குரிய இந்நாவல் தமிழில் மிகப்பெரிய வாசக வரவேற்பைப் பெற்ற ஒன்று. சங்ககாலத்தின் வாழ்க்கைமுறைகளை விரிவான தரவுகளுடன் சித்தரிப்பது."அலங்காரப்பிரியர்கள்" , பல்வேறு மனிதர்கள், சம்பவங்கள், தகவல்கள் பற்றிய கட்டுரைத் தொகுப்பு.

ஆய்வுகள்

சு.வெங்கடேசன் எழுதிய கதைகளின் கதை வாய்மொழி கதைகள் மற்றும் அன்றட நிகழ்வுகளில் பொதிந்திருக்கும் வரலாற்றை எடுத்துக் காட்டும் நூல்.

கீழடி குறித்து சு.வெங்கடேசன் ஆனந்த விகடனில்எழுதிய தொடர் கட்டுரை "வைகை நதி நாகரிகம்" என்ற பெயரில் நூலாக வெளிவந்தது.

விருதுகள்

  • 2011 ஆம் ஆண்டுக்கான கேந்திர சாகித்ய அக்காதமி விருது
  • 2019-ஆன் ஆண்டுக்கான கனடா இலக்கியத் தோட்ட இயல் விருதைப் பெற்றார்.

இலக்கிய இடம்

நூல்கள்

நாவல்கள்
  • காவல்கோட்டம்
  • சந்திரஹாசம் (வரைகலைநாவல்)
  • வீரயுகநாயகன் வேள்பாரி
கவிதை
  • ஓட்டை இல்லாத புல்லாங்குழல்
  • திசையெல்லாம் சூரியன்
  • பாசி வெளிச்சத்தில்
  • ஆதிப் புதிர்
அரசியல்
  • கலாசாரத்தின் அரசியல்
  • மதமாற்றத் தடைச் சட்டம் மறைந்திருக்கும் உண்மைகள்
  • கருப்பன் கேட்கிறான் கிடாய் எங்கே?
  • மனிதர்கள், நாடுகள், உலகங்கள்
  • ஆட்சித் தமிழ் ஒரு வரலாற்றுப் பார்வை
  • உ.வே.சா. சமயம் கடந்த தமிழ்
  • அலங்காரப் பிரியர்கள்
  • கீழடி
  • வைகை நதி நாகரிகம்
  • கதைகளின் கதை
  • இந்தியில் மட்டும் பதில் சட்ட விரோதம்
மொழியாக்கம்
  • இந்தி இந்துத்துவா இந்துராஜ்ஜியம் (சீத்தாராம் யெச்சூரி)
ஆங்கிலம்
  • Chandrahasam

உசாத்துணை

அடிக்குறிப்புகள்




✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Jan-2023, 09:57:38 IST