டேனியேல் பூர் நினைவு நூலகம்: Difference between revisions
No edit summary |
(→வரலாறு) |
||
Line 4: | Line 4: | ||
== வரலாறு == | == வரலாறு == | ||
[[File:அமெரிக்கன் கல்லூரி நூலகம்.jpg|thumb|அமெரிக்கன் கல்லூரி பூர் நினைவு நூலகம் ]] | [[File:அமெரிக்கன் கல்லூரி நூலகம்.jpg|thumb|அமெரிக்கன் கல்லூரி பூர் நினைவு நூலகம் ]] | ||
அமெரிக்க மிஷன் அமைப்பைச் சேர்ந்த மதப்பரப்புநரும் கல்வியாளருமான [[டேனியல் பூர்]] 1816 | அமெரிக்க மிஷன் அமைப்பைச் சேர்ந்த மதப்பரப்புநரும் கல்வியாளருமான [[டேனியல் பூர்]] 1816- ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் [[அமெரிக்க இலங்கை மிஷன்]] சார்பில் கல்விநிலையங்களை உருவாக்கியவர். புகழ்பெற்ற [[வட்டுக்கோட்டை குருமடம்]] அமைப்பின் தலைமை ஆசிரியர். 1835- ஆம் ஆண்டில் மதுரைக்கு அமெரிக்க மதுரா மிஷனின் நிர்வாகியாக வந்தார். மதுரை பகுதிகளில் கல்விப்பணிகளை ஒருங்கிணைத்தார். | ||
1914 முதல் 1920 வரை ஜே.ஏ. சாண்டர்ஸ் [[மதுரை அமெரிக்கன் கல்லூரி]]யில் பணியாற்றியபோது இந்த நூலகத்தை நிறுவினார். ரெவெ டேனியல் பூரின் பேத்தி திருமதி சாமுவேல் ஏ மோர்மன் (Mrs. Samuel A Morman) 1926 ஜனவரி 26 ஆம் நாளன்று அமெரிக்க மிஷனரிகள் வாரியத்திற்கு $ 25,000- நன்கொடை அளித்து நூலக கட்டிடத்தை கட்ட முன்வந்தார். ஜே.ஏ.சாண்டர்ஸ் இதன் முதல் நூலகர். இங்குள்ள அரிய நூல்சேகரிப்புகள் அவரால் செய்யப்பட்டவை | 1914 முதல் 1920 வரை ஜே.ஏ. சாண்டர்ஸ் [[மதுரை அமெரிக்கன் கல்லூரி]]யில் பணியாற்றியபோது இந்த நூலகத்தை நிறுவினார். ரெவெ டேனியல் பூரின் பேத்தி திருமதி சாமுவேல் ஏ மோர்மன் (Mrs. Samuel A Morman) 1926 ஜனவரி 26 -ஆம் நாளன்று அமெரிக்க மிஷனரிகள் வாரியத்திற்கு $ 25,000- நன்கொடை அளித்து நூலக கட்டிடத்தை கட்ட முன்வந்தார். ஜே.ஏ.சாண்டர்ஸ் இதன் முதல் நூலகர். இங்குள்ள அரிய நூல்சேகரிப்புகள் அவரால் செய்யப்பட்டவை | ||
இந்தக் கட்டிடம் முதலில் ஒரு தரை தளம் மட்டும் கொண்டு அமையும் வகையில் திட்டமிடப்பட்டது, இதில் சுமார் 50,000- தொகுதிகளை வைப்பதற்கான ஒரு இருப்பு அறை, ஒரு சிறிய அருங்காட்சியகம் மற்றும் ஒரு ஆசிரியர் அறை ஆகியவற்றைக் கொண்டிருக்கும் அளவு திட்டமிடப்பட்டது. முதல் தளத்தில் ஒரு நூலக ஆய்வு அறை மற்றும் இரண்டு விரிவுரையாற்றலுக்கான அறைகள் இருந்தன. தற்போது இந்த கட்டிடத்தில் ஒரு இருப்பு அறை, ஒரு குறிப்பு பிரிவு, ஒரு வாசிப்பு அறை, தொழில்நுட்ப பிரிவு மற்றும் கணினிமயமாக்கப்பட்ட மாணவர் அணுகல் அட்டவணை அமைப்பு ஆகிய வசதிகள் உள்ளன. நூலகத்தில் உள்ள இருப்பறையில் 76,000- க்கும் மேற்பட்ட நூல்தொகுதிகள் உள்ளன. | இந்தக் கட்டிடம் முதலில் ஒரு தரை தளம் மட்டும் கொண்டு அமையும் வகையில் திட்டமிடப்பட்டது, இதில் சுமார் 50,000- தொகுதிகளை வைப்பதற்கான ஒரு இருப்பு அறை, ஒரு சிறிய அருங்காட்சியகம் மற்றும் ஒரு ஆசிரியர் அறை ஆகியவற்றைக் கொண்டிருக்கும் அளவு திட்டமிடப்பட்டது. முதல் தளத்தில் ஒரு நூலக ஆய்வு அறை மற்றும் இரண்டு விரிவுரையாற்றலுக்கான அறைகள் இருந்தன. தற்போது இந்த கட்டிடத்தில் ஒரு இருப்பு அறை, ஒரு குறிப்பு பிரிவு, ஒரு வாசிப்பு அறை, தொழில்நுட்ப பிரிவு மற்றும் கணினிமயமாக்கப்பட்ட மாணவர் அணுகல் அட்டவணை அமைப்பு ஆகிய வசதிகள் உள்ளன. நூலகத்தில் உள்ள இருப்பறையில் 76,000- க்கும் மேற்பட்ட நூல்தொகுதிகள் உள்ளன. |
Revision as of 09:06, 15 April 2022
டேனியல் பூர் நினைவு நூலகம் : மதப்பணியாளரும் கல்வியாளருமான டேனியல் பூர் நினைவாக அமைந்துள்ள நூலகக் கட்டிடம். தமிழ்நாட்டில் மதுரை அமெரிக்கன் கல்லூரியின் வளாகத்தில் அமைந்துள்ள ஒரு நூற்றாண்டு பழமையான கல்லூரி மையநூலகம் இது. சுருக்கமாக இது டிபிஎம் நூலகம் என்று அழைக்கப்படுகிறது. இது ஜூன் 28, 1915 - ஆம் நாளன்று அதிகாரப்பூர்வமாக அதன் செயல்பாடுகளைத் தொடங்கியது.
வரலாறு
அமெரிக்க மிஷன் அமைப்பைச் சேர்ந்த மதப்பரப்புநரும் கல்வியாளருமான டேனியல் பூர் 1816- ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் அமெரிக்க இலங்கை மிஷன் சார்பில் கல்விநிலையங்களை உருவாக்கியவர். புகழ்பெற்ற வட்டுக்கோட்டை குருமடம் அமைப்பின் தலைமை ஆசிரியர். 1835- ஆம் ஆண்டில் மதுரைக்கு அமெரிக்க மதுரா மிஷனின் நிர்வாகியாக வந்தார். மதுரை பகுதிகளில் கல்விப்பணிகளை ஒருங்கிணைத்தார்.
1914 முதல் 1920 வரை ஜே.ஏ. சாண்டர்ஸ் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பணியாற்றியபோது இந்த நூலகத்தை நிறுவினார். ரெவெ டேனியல் பூரின் பேத்தி திருமதி சாமுவேல் ஏ மோர்மன் (Mrs. Samuel A Morman) 1926 ஜனவரி 26 -ஆம் நாளன்று அமெரிக்க மிஷனரிகள் வாரியத்திற்கு $ 25,000- நன்கொடை அளித்து நூலக கட்டிடத்தை கட்ட முன்வந்தார். ஜே.ஏ.சாண்டர்ஸ் இதன் முதல் நூலகர். இங்குள்ள அரிய நூல்சேகரிப்புகள் அவரால் செய்யப்பட்டவை
இந்தக் கட்டிடம் முதலில் ஒரு தரை தளம் மட்டும் கொண்டு அமையும் வகையில் திட்டமிடப்பட்டது, இதில் சுமார் 50,000- தொகுதிகளை வைப்பதற்கான ஒரு இருப்பு அறை, ஒரு சிறிய அருங்காட்சியகம் மற்றும் ஒரு ஆசிரியர் அறை ஆகியவற்றைக் கொண்டிருக்கும் அளவு திட்டமிடப்பட்டது. முதல் தளத்தில் ஒரு நூலக ஆய்வு அறை மற்றும் இரண்டு விரிவுரையாற்றலுக்கான அறைகள் இருந்தன. தற்போது இந்த கட்டிடத்தில் ஒரு இருப்பு அறை, ஒரு குறிப்பு பிரிவு, ஒரு வாசிப்பு அறை, தொழில்நுட்ப பிரிவு மற்றும் கணினிமயமாக்கப்பட்ட மாணவர் அணுகல் அட்டவணை அமைப்பு ஆகிய வசதிகள் உள்ளன. நூலகத்தில் உள்ள இருப்பறையில் 76,000- க்கும் மேற்பட்ட நூல்தொகுதிகள் உள்ளன.
இலக்கு
"திறன்கள், எதிர்பார்ப்புகளில் மாறுபட்ட பல்வேறு வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை வழங்குதல் மற்றும் அமெரிக்கன் கல்லூரியில் உள்ள அனைத்து உறுப்பினர்களிடையே நம்பிக்கை, ஆதரவு மற்றும் ஊக்கத்தின் சூழ்நிலையை உருவாக்குதல்". என்பது இதன் இலக்காக அமைந்தது. அமெரிக்கன் கல்லூரியில் உள்ள பயனர்களின் அறிவுசார் ஆர்வத்தையும் தகவல் தேவைகளையும் பூர்த்தி செய்ய உரிய தொகுப்புகள், சேவைகள், சூழலை உண்டாக்குதல் என்பது இதன் நோக்காக அமைந்தது.
பிந்தைய முன்னேற்றங்கள்
முதல் தளத்தில் தற்போதைய இதழ்கள், குறிப்பிட்ட கால இதழ்களின் முழுத்தொகுதிகள் மற்றும் ஒரு சிறிய அரிய நூலகத் தொகுப்புகள் ஆகியவை உள்ளன. 1987-1988 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட மெஸ்ஸானைன் தளம் மட்டுமே அக்காலகட்டத்தில் கட்டிடத்தில் சேர்க்கப்பட்ட ஒரே கட்டட அமைப்பு ஆகும். இந்த வசதியின் மூலமாக நூல்களை வைக்கும் இடம் இரு மடங்கு அதிகரித்துள்ளது. மேலும் வாசிப்பு அறைக்கான இடத்தை விரிவுபடுத்த உதவியது. இணைய உலாவல் மையம், பார்வை குன்றிய மாணவர்களுக்கான பேசும் புத்தக நூலகம், வாசகர்கள் கிளப், முழுமையாக வைஃபை இயக்கப்பட்ட மற்றும் சிசிடிவி உள்ளிட்ட பல வசதிகள் இங்கு தற்போது உள்ளன.
பார்வையாளர்கள்
டானியல் பூர் நினைவு நூலகத்திற்கு வந்து பார்வையிட்ட பிரபலமான பார்வையாளர்கள் ரவீந்திரநாத் தாகூர், ராபர்ட் ஏ. மில்லிகன் எஸ்.ஆர். ரங்கநாதன், கான் சாஹிப், சி.என். அண்ணாதுரை, வி.வி.கிரி, மு. கருணநிதி, கவிஞர் சுப்பிரமணிய பாரதி மற்றும் பலர் ஆவர்.
சேகரிப்புகள்
இந்த நூலகத்தில் அரிய பழமையான பொருட்கள், தொல்பொருள் கலைப்பொருட்கள் மற்றும் பாண்டியர் மற்றும் சோழர் காலங்களைச் சேர்ந்த பண்டைய நாணயங்கள் ஆகியவை உள்ளன. திருவாசகம், மணிமேகலை போன்றவற்றின் பல பண்டைய பனை ஓலைச்சுவடிகளின் கையெழுத்துப்படிகள் இங்கு அரிய காப்பகங்கள் பிரிவின் கீழ் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. இந்திய அரசாங்கத்துக்கும் அமெரிக்க மிஷனரிகளுக்கும் இடையிலான முக்கியமான கடிதங்கள் இங்கு பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. நாயக்கர் காலத்தைச் சேர்ந்த மரச் செதுக்கல்கள், விஷ்ணு மற்றும் பிற இந்து கடவுள்களின் ஐந்து உலோக வெண்கல சிலைகள், இந்தோனேசிய மரச் செதுக்கல்கள் மற்றும் 1000- ஆண்டுகளுக்கும் மேலான மர சிலைகள் போன்றவை இங்குள்ள சேகரிப்பில் சில .
உசாத்துணை
Library | The American College]
- [Daniel Poor Memorial Library, Madurai District, Tamil Nadu Daniel Poor Memorial Library, Madurai District, Tamil Nadu]