கல்கி (எழுத்தாளர்): Difference between revisions
No edit summary |
mNo edit summary |
||
Line 2: | Line 2: | ||
{{Ready for review}} | {{Ready for review}} | ||
கல்கி (ரா. கிருஷ்ணமூர்த்தி ) (செப்டம்பர் 9, 1899 - டிசம்பர் 5, 1954) தமிழில் பொதுவாசகர்களுக்கான பெரும்புகழ்பெற்ற கற்பனாவாதக் கதைகளை எழுதிய எழுத்தாளர். இந்திய தேசிய இயக்கத்தில் இருந்து உருவாகி வந்த படைப்பாளி. சுதந்திரப்போராட்ட வீரர். தமிழிசை இயக்கத்தை முன்னெடுத்தவர். தமிழ் இதழியல் முன்னோடிகளில் ஒருவர். தமிழ் உரைநடையின் உருவாக்கத்தில் பெரும்பங்காற்றியவர். கல்கி எழுதிய பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் போன்ற வரலாற்றுக் கற்பனாவாத நாவல்கள் தமிழ் பொதுவாசிப்புத்தளத்தைச் சேர்ந்த பெரும் செவ்வியல்படைப்புகள். | கல்கி (ரா. கிருஷ்ணமூர்த்தி ) (செப்டம்பர் 9, 1899 - டிசம்பர் 5, 1954) தமிழில் பொதுவாசகர்களுக்கான பெரும்புகழ்பெற்ற கற்பனாவாதக் கதைகளை எழுதிய எழுத்தாளர். இந்திய தேசிய இயக்கத்தில் இருந்து உருவாகி வந்த படைப்பாளி. சுதந்திரப்போராட்ட வீரர். தமிழிசை இயக்கத்தை முன்னெடுத்தவர். தமிழ் இதழியல் முன்னோடிகளில் ஒருவர். தமிழ் உரைநடையின் உருவாக்கத்தில் பெரும்பங்காற்றியவர். கல்கி எழுதிய [[பொன்னியின் செல்வன்]], [[சிவகாமியின் சபதம்]] போன்ற வரலாற்றுக் கற்பனாவாத நாவல்கள் தமிழ் பொதுவாசிப்புத்தளத்தைச் சேர்ந்த பெரும் செவ்வியல்படைப்புகள் எனப்படுகின்றன. [[கல்கி (வார இதழ்)|கல்கி]] வார இதழை நிறுவியவர். தமிழில் கேளிக்கைசார்ந்த வாசிப்பையும் அதற்கான எழுத்துமுறையையும் உருவாக்கி நிறுவனப்படுதியவர் என்று அறியப்படுகிறார். | ||
==பிறப்பு, கல்வி== | ==வாழ்க்கைக்குறிப்பு== | ||
===பிறப்பு, கல்வி=== | |||
கல்கி பழைய தஞ்சாவூர் மாவட்டத்தில் மயிலாடுதுறை அருகே உள்ள புத்தமங்கலம் என்னும் ஊரில் செப்டெம்பர் 9, 1899 அன்று பிறந்தார். இவரது தந்தை ராமசாமி அய்யர், தாயார் தையல்நாயகி. ஆரம்பப்பள்ளிப் படிப்பைத் தனது கிராமத்தில் முடித்த பின்னர் மாயூரம் முனிசிபல் உயர்நிலைப் பள்ளியில் படித்தார். பிறகு திருச்சி தேசிய உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்தார். இளமையிலேயே தேசிய இயக்கத்தில் இணைந்து சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்டமையால் பள்ளிப்படிப்பை முடிக்கவில்லை. | கல்கி பழைய தஞ்சாவூர் மாவட்டத்தில் மயிலாடுதுறை அருகே உள்ள புத்தமங்கலம் என்னும் ஊரில் செப்டெம்பர் 9, 1899 அன்று பிறந்தார். இவரது தந்தை ராமசாமி அய்யர், தாயார் தையல்நாயகி. ஆரம்பப்பள்ளிப் படிப்பைத் தனது கிராமத்தில் முடித்த பின்னர் மாயூரம் முனிசிபல் உயர்நிலைப் பள்ளியில் படித்தார். பிறகு திருச்சி தேசிய உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்தார். இளமையிலேயே தேசிய இயக்கத்தில் இணைந்து சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்டமையால் பள்ளிப்படிப்பை முடிக்கவில்லை. | ||
==தனி வாழ்க்கை== | ===தனி வாழ்க்கை=== | ||
[[File:Kalki2 (1).jpg|thumb|கல்கி இளமையில்]] | [[File:Kalki2 (1).jpg|thumb|கல்கி இளமையில்]] | ||
கல்கி | கல்கி 1924-ல் ருக்மணி என்பவரை மணந்தார். மகன் ராஜேந்திரன், மகள் ஆனந்தி. சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்ட கல்கி [[திரு.வி. கல்யாணசுந்தரனார்|திரு.வி. கல்யாணசுந்தரனாரின்]] நவசக்தி இதழிலும் பின்னர் [[ஆனந்த விகடன்|ஆனந்த விகடனி]]லும் இதழாளராகப் பணியாற்றினார். கல்கி என தன் பெயரிலேயே ஓர் இதழை தொடங்கி வெற்றிகரமாக நடத்தினார் | ||
== | == அரசியல்வாழ்க்கை == | ||
நீண்ட அரசியல்வாழ்க்கை கொண்டவர் கல்கி. | நீண்ட அரசியல்வாழ்க்கை கொண்டவர் கல்கி. 1921-ல் காந்தி ஒத்துழையாமை இயக்கத்தைத் துவங்கிய போது, அவரது கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். 1922-ல் சுதந்திரப் போராட்டத்தில் பங்குபெற்று ஓராண்டு சிறைத் தண்டனை அனுபவித்தார். விடுதலையானதும் அப்போது திருச்சியில் இருந்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைமையகத்தில் வேலையில் சேர்ந்தார். அதன் பின்னர் சிலகாலம் ஈரோடு கதர் அலுவலகத்தில் வேலை செய்தார். 1923-ல் [[திரு.வி. கல்யாணசுந்தரனார்]] நடத்தி வந்த நவசக்தி என்னும் பத்திரிக்கையின் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். | ||
திருச்செங்கோட்டில் [[இராஜகோபாலாச்சாரி|ராஜாஜி]] பெப்ரவரி 6,1925 அன்று காந்தி | திருச்செங்கோட்டில் [[இராஜகோபாலாச்சாரி|ராஜாஜி]] பெப்ரவரி 6,1925 அன்று காந்தி ஆசிரமத்தை தொடங்கி அங்கிருந்து விமோசனம் என்னும் இதழையும் தொடங்கினார். கல்கி திருச்செங்கோடு சென்று ராஜாஜியுடன் தங்கி விமோசனம் இதழை பொறுப்பேற்று நடத்தினார். கல்கி தன் அரசியல் வழிகாட்டியாக ராஜாஜியை ஏற்றுக்கொண்டவர். ராஜாஜியின் அரசியலை தானும் மேற்கொண்டு இறுதிவரை உடனிருந்தார். ராஜாஜியின் போர்வாள் என அறியப்பட்டார். 1930ல் ராஜாஜி ஒருங்கிணைத்த உப்புசத்யாக்கிரகத்திலும் கலந்துகொண்டு கோபிசெட்டிப்பாளையத்தில் உப்பு காய்ச்சி சட்டத்தை மீறி சிறைசென்றார். ஆறுமாதம் சிறையில் இருந்தார். | ||
1940-ல் காந்தி வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை அறிவித்தபோது ஆனந்த விகடனில் ஆசிரியர் வேலையை உதறிவிட்டு அப்போராட்டத்தில் ஈடுபட்டார். மூன்றுமாதம் கடுங்காவல் தண்டனை பெற்றார். | |||
== இதழியல் == | == இதழியல் == | ||
[[File:Kalki3.jpg|thumb]] | [[File:Kalki3.jpg|thumb]] | ||
கல்கி 1923 முதல் தொடர்ச்சியாக இதழாளராகவே செயல்பட்டார். திரு.வி. கல்யாணசுந்தரனாரின் நவசக்தி இதழில் துணையாசிரியராகப் பணியாற்றினார். | கல்கி 1923 முதல் தொடர்ச்சியாக இதழாளராகவே செயல்பட்டார். திரு.வி. கல்யாணசுந்தரனாரின் நவசக்தி இதழில் துணையாசிரியராகப் பணியாற்றினார். 1931-ல் [[எஸ்.எஸ்.வாசன்]] தொடங்கி நடத்திய [[ஆனந்த விகடன்]] இதழில் துணைஆசிரியரானார். ஆனந்த விகடனை வெற்றிகரமான பொதுவாசிப்புக்குரிய இதழாக ஆக்கியவர் கல்கி. தமிழில் பொழுதுபோக்கு வாசிப்பை ஓர் இயக்கமாக, ஒரு பெரு வணிகமாக ஆக்கியது ஆனந்த விகடன் இதழ். கல்கி பொதுவாசகர்களுக்கு உகந்த வேடிக்கையும் நையாண்டியும் கொண்ட எளிமையான நடையை வளர்த்தெடுத்தார். அவரைப்போலவே எழுதும் [[தேவன்]], [[துமிலன்]] போன்ற எழுத்தாளர்களின் வரிசை ஒன்றை உருவாக்கினார். திரைப்பட விமர்சனம், அரசியல் விமர்சனம் என பல களங்களில் இதழியல் சார்ந்த எழுத்தை வளர்த்தெடுத்தார். | ||
1941-ல் கல்கி இதழை தன் நண்பர் சதாசிவம் உதவியுடன் நிறுவினார். கல்கி[[வெள்ளையனே வெளியேறு]] இயக்கத்தில் ஈடுபட்டு அரசாங்கத்திற்கு எதிராகச் செயல்பட்டதை எஸ்.எஸ்.வாசன் விரும்பாததே அதற்குக் காரணம் என்று சொல்லப்பட்டது. கல்கி இதழுக்கு ராஜாஜியின் வாழ்த்தும் இருந்தது. கல்கியில் அவர் எழுதிய வரலாற்றுச் சாகச்த் தொடர்கதைகளால் அது மிக வெற்றிகரமான இதழாக ஆகியது. கல்கியில் அவர் தன் முதல் வரலாற்றுக் கற்பனாவாத நாவலான [[பார்த்திபன் கனவு|பார்த்திபன் கனவை]] எழுதினார். அதன்பின் புகழ்பெற்ற [[சிவகாமியின் சபதம்]], [[பொன்னியின் செல்வன்]] நாவல்களை கல்கி இதழில் தொடராக வெளியிட்டார் | |||
கல்கி இதழில் கல்கி தன்னுடைய எழுத்துமுறையைச் சாராத எழுத்தாளர்களின் வரிசை ஒன்றை உருவாக்கினார். [[மாயாவி]], [[ | கல்கி இதழில் கல்கி தன்னுடைய எழுத்துமுறையைச் சாராத எழுத்தாளர்களின் வரிசை ஒன்றை உருவாக்கினார். உதாரணமாக [[மாயாவி]], [[பி.எம். கண்ணன்]] போன்றவர்கள். [[வி.எஸ். காண்டேகர்]], [[மு. வரதராசனார்]] போன்றவர்களின் பாணியில் எழுதும் [[நா. பார்த்தசாரதி]] (மணிவண்ணன்) போன்றவர்களும் கல்கி மூலமாக உருவானவர்களே. தமிழ் இதழியலிலும் தமிழ் வணிகக்கேளிக்கை புனைவெழுத்திலும் கல்கியே முதன்மைச் சாதனையாளரும் முன்னோடியுமாவார். | ||
==இலக்கிய வாழ்க்கை== | ==இலக்கிய வாழ்க்கை== | ||
[[File:Kalki2.jpg|thumb|கல்கி கிருஷ்ணமூர்த்தி, கல்கி சதாசிவம், நடுவே ராஜாஜி]] | [[File:Kalki2.jpg|thumb|கல்கி கிருஷ்ணமூர்த்தி, கல்கி சதாசிவம், நடுவே ராஜாஜி]] | ||
மகாத்மா காந்தி | [[மகாத்மா காந்தி]] நவஜீவன் இதழில் 1925 முதல் 1929 வரைஎழுதி வந்த சுயசரிதையை கல்கி சுருக்கமாக மொழியாக்கம் செய்து ’நவசக்தி’யில் வெளியிட்டார். நவசக்தியில் கதைகளும் எழுதினார். 1928 பிப்ரவரியில் ’ஆனந்த விகடன்’ இதழ் தொடங்கப்பட்டபோது அதன் உரிமையாளராகிய எஸ்.எஸ்.வாசனிடம் [[சுப்ரமணிய பாரதி|சுப்ரமணிய பாரதியாரின்]] நண்பரான பரலி.சு. நெல்லையப்பர் கல்கியை அறிமுகப்படுத்தினார். ஏட்டிக்குப் போட்டி என்ற நகைச்சுவைக் கட்டுரையை கல்கி ஆனந்த விகடனில் எழுதினார். கல்கி என்ற புனைபெயரில் கிருஷ்ணமூர்த்தி எழுதிய முதல் கட்டுரை இதுதான். அதன்பின் தொடர்ந்து வந்த கட்டுரைகளின் தொகுப்பு ’ஏட்டிக்குப் போட்டி’ என்னும் பெயருடன் , சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் முன்னுரையுடன் 1927-ல் வெளியானது. கல்கி எழுதிய முதல் தொடர்கதை கள்வனின் காதலி ஆனந்த விகடனில் 1937-ம் ஆண்டு வெளியானது. கள்வனின் காதலிக்குப் பின் விகடனில் எழுதிய ‘தியாகபூமி’ கூடவே திரைப்படமாகவும் வெளிவந்தது. கல்கி இதழை தொடங்கியபின் எழுதிய ’பார்த்திபன் கனவு’ கல்கியின் முதல் வரலாற்றுக் கற்பனாவாத நாவல். அவருக்கு பெரும்புகழ் சேர்த்த சிவகாமியின் சபதம் பொன்னியின் செல்வன் போன்ற நாவல்கள் அதன்பின் அவர் நடத்திய கல்கி இதழில் வெளியாயின.1952-ல் அவர் எழுதத்தொடங்கிய பொன்னியின் செல்வன் அவருடைய முதன்மையான நாவல். பொன்னியின் செல்வன் தமிழின் முதன்மையான பொழுதுபோக்கு இலக்கியப் படைப்பு என்று ஏற்கப்பட்டுள்ளது. | ||
== தமிழிசை இயக்கம் == | == தமிழிசை இயக்கம் == | ||
[[File:25a.jpg|thumb|https://www.kalkibiography.com/]] | [[File:25a.jpg|thumb|https://www.kalkibiography.com/]] | ||
கல்கி தமிழ்நாட்டுச் செவ்வியல் இசை தமிழிலேயே பாடப்படவேண்டும் என்னும் கோரிக்கையுடன் தொடங்கப்பட்ட தமிழிசை இயக்கத்தின் முதன்மையான பிரச்சாரகர்களில் ஒருவர். தமிழிசை இயக்கத்தை ஆதரித்து ஏராளமான கட்டுரைகளை எழுதினார். கல்கி எழுதிய ’காற்றினிலே வரும் கீதம்’ என்னும் திரைப்படப் பாடல் தமிழிசையின் முதன்மையான | கல்கி, தமிழ்நாட்டுச் செவ்வியல் இசை தமிழிலேயே பாடப்படவேண்டும் என்னும் கோரிக்கையுடன் தொடங்கப்பட்ட, தமிழிசை இயக்கத்தின் முதன்மையான பிரச்சாரகர்களில் ஒருவர். தமிழிசை இயக்கத்தை ஆதரித்து ஏராளமான கட்டுரைகளை எழுதினார். கல்கி எழுதிய ’காற்றினிலே வரும் கீதம்’ என்னும் திரைப்படப் பாடல் தமிழிசையின் முதன்மையான பாடலாக கருதப்படுகிறது. 1941-ஆம் ஆண்டு சென்னையில் ராஜா அண்ணாமலை செட்டியார் முன்னெடுப்பில் நடந்த முதலாவது தமிழிசை மாநாட்டில் கலந்துகொண்டார். கல்கி தமிழிசை இயக்கத்தை ஆதரித்து எழுதிய கட்டுரைகள் ''சங்கீதயோகம்'' என்றபெயரில் நூலாக தொகுக்கப்பட்டுள்ளன. | ||
== பண்பாட்டுப்பணிகள் == | == பண்பாட்டுப்பணிகள் == | ||
* 1945ல் தமிழிசை மாநாட்டுக்காக கல்கி எட்டையபுரம் வந்திருந்தார். அவ்விழாவில் பாரதிக்கு எட்டையபுரத்தில் ஒரு மணிமண்டபம் கட்டப்படவேண்டும் என்னும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. கல்கி தன் இதழில் அதற்கான கோரிக்கையை விடுத்தார். 13- | * 1945ல் தமிழிசை மாநாட்டுக்காக கல்கி எட்டையபுரம் வந்திருந்தார். அவ்விழாவில் பாரதிக்கு எட்டையபுரத்தில் ஒரு மணிமண்டபம் கட்டப்படவேண்டும் என்னும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. கல்கி தன் இதழில் அதற்கான கோரிக்கையை விடுத்தார். அக்டோபர் 13,1947-ல் மணிமண்டபம் சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியாரால் திறந்துவைக்கப்பட்டது. | ||
*கல்கி 1945ல் பாரதியின் துணைவி செல்லம்மா பாரதிக்காக நிதி திரட்டி ஒரு வைப்புநிதியை உருவாக்கி அளித்தார் | *கல்கி 1945ல் பாரதியின் துணைவி செல்லம்மா பாரதிக்காக நிதி திரட்டி ஒரு வைப்புநிதியை உருவாக்கி அளித்தார். | ||
* கல்கியை கடுமையாக விமர்சனம் செய்தவரான புதுமைப்பித்தன் 1948 ல் மறைந்தபின் வறுமையில் வாடிய அவருடைய மனைவி கமலாவையும் மகளையும் காப்பாற்றுவதற்காக கல்கி நிதி திரட்டினார். குறிப்பிடத்தக்க ஒரு தொகை புதுமைப்பித்தன் மனைவியிடம் அளிக்கப்பட்டது | * கல்கியை கடுமையாக விமர்சனம் செய்தவரான புதுமைப்பித்தன் 1948-ல் மறைந்தபின், வறுமையில் வாடிய அவருடைய மனைவி கமலாவையும் மகளையும் காப்பாற்றுவதற்காக கல்கி நிதி திரட்டினார். குறிப்பிடத்தக்க ஒரு தொகை புதுமைப்பித்தன் மனைவியிடம் அளிக்கப்பட்டது. | ||
== இலக்கிய முக்கியத்துவம் == | |||
== இலக்கிய | |||
[[File:Ajantha.jpg|thumb|கல்கி, அஜந்தா குகையில்.எல்லிஸ் ஆர் டங்கனுடன்]] | [[File:Ajantha.jpg|thumb|கல்கி, அஜந்தா குகையில்.எல்லிஸ் ஆர் டங்கனுடன்]] | ||
கல்கியின் இலக்கிய | கல்கியின் முதன்மையான இலக்கிய பங்களிப்பு தமிழ் உரைநடை உருவாக்கத்தில் அவர் ஆற்றிய பங்களிப்பே. பொழுதுபோக்கு நாவல்கள், இதழியல் கட்டுரைகள், சிறுகதைகள், பயணக்கட்டுரைகள், இசைவிமர்சனம், திரைப்பட விமர்சனம், அரசியல் விமர்சனம், நையாண்டிக்கட்டுரைகள் மற்றும் வாழ்க்கை வரலாற்று நூல்கள் என பல தளங்களிலும் தொடர்ச்சியாக எழுதி தமிழ் உரைநடையின் எல்லா சாத்தியங்களையும் விரிவுபடுத்தினார். அவரை முன்னோடியாகக்கொண்டு மூன்று தலைமுறை எழுத்தாளர்கள் உருவாகி வந்தனர். | ||
கல்கியின் தியாகபூமி போன்ற தொடக்ககால நாவல்கள் ரெயினால்ட்ஸ் போன்றவர்கள் எழுதிய பரபரப்பும் மெல்லுணர்ச்சியும் கலந்த பொதுவாசிப்புக்குரிய ஆக்கங்கள். கல்கியின் கதை சொல்லும் முறையில் [[வடுவூர் துரைசாமி அய்யங்கார்]] போன்ற முன்னோடிகளின் பாதிப்பும் இருந்தது. பின்னாளில் சரித்திர நாவல்களை எழுதினார். சர் வால்டர் ஸ்காட், அலெக்ஸாண்டர் டூமா போன்ற எழுத்தாளர்களைத் தனது முன்னோடிகளாக கல்கி குறிப்பிட்டிருக்கிறார். பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன் போன்ற நாவல்களை இலக்கியவரையறையின்படி கற்பனாவாத உணர்ச்சிக் கதைகள் (Romance) என விமர்சகர்கள் வரையறுக்கிறார்கள் | |||
கல்கியின் | ஆனால் தன் முன்னோடிகளைப் போல முற்றிலும் கேளிக்கை எழுத்தாக இல்லாமல் அன்று நிகழ்ந்து வந்த இந்திய தேசிய எழுச்சி, தமிழ்க் கலாசார மறுமலர்ச்சி, சமூக சீர்திருத்த நோக்கு ஆகியவற்றின் கூறுகள் கல்கியின் படைப்புகளில் இருந்தன. அவருடைய வரலாற்று நாவல்கள் தமிழர்களின் வரலாற்றுப் பொற்காலங்களை புனைந்து காட்டின. [[கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி]] போன்றவர்கள் வரலாற்றாய்வு வழியாக உருவாக்கிய பல்லவர், சோழர் காலத்து வரலாற்று வரைவை கல்கி தன் புனைவுகள் வழியாக மக்களிடம் கொண்டுசென்றார். அவை அப்போது உருவாகி வந்த தமிழ்த்தேசியப் பெருமிதத்தை வலுப்படுத்தின. | ||
கல்கியின் நாவல்களில் தமிழகத்தின் பண்பாட்டுப் பரிணாமத்தின் சித்திரம் உள்ளது. சிவகாமியின் சபதம் பொன்னியின் செல்வன் போன்ற நாவல்களில் பக்தி இயக்க நாயகர்களை புனைந்து காட்டுகிறார். அவருடைய சிவகாமியின் சபதம் ராமாயணத்தின் சாயலையும் பொன்னியின் செல்வன் மகாபாரதத்தின் சாயலையும் கொண்டது. பொன்னியின் செல்வனில் அலக்ஸாண்டர் டூமாவின் The Three Musketteers, The Man in the Iron Mask போன்ற நாவல்களின் செல்வாக்கு உண்டு. ’இந்தியக் காவிய மரபின் சாயலை மேற்கத்திய சாகசக் கதைகளின் சித்தரிப்புடன் இணைத்துத் தன் புனைவுத் தளத்தை உருவாக்கினார்’ என ‘நவீனத் தமிழிலக்கிய அறிமுகத்தில்’ எழுத்தாளர் [[ஜெயமோகன்]] குறிப்பிடுகிறார். | |||
==விவாதங்கள்== | ==விவாதங்கள்== | ||
* 1936-ல் [[சுப்ரமணிய பாரதியார்]] இந்தியாவின் மகாகவிகளின் பட்டியலில் வரமாட்டார் என்று கல்கி கருத்து தெரிவித்தார். அதற்கு கு.ப. ராஜகோபாலன் போன்றவர்கள் மறுப்பு தெரிவித்தனர். பாரதி மகாகவி விவாதம் என இது அழைக்கப்படுகிறது. இக்கட்டுரைகளை 1936-ல் கண்ணன் என் கவி என்ற பெயரில் கு.ப. ராஜகோபாலன் தொகுத்து வெளியிட்டார் | |||
* 1937-ல் கல்கியின் எழுத்துக்கள் வால்டர் ஸ்காட், அலக்ஸாண்டர் டூமாவின் நாவல்களை தழுவி எழுதியவை என்று [[புதுமைப்பித்தன்]] குற்றம்சாட்டினார். அதற்கு கல்கி மறுப்பு தெரிவித்தார். வெவ்வேறு இலக்கியவாதிகள் அதில் கருத்து தெரிவித்தனர். இது கல்கி - புதுமைப்பித்தன் தழுவல் விவாதம் என்ற பெயரில் அறியப்படுகிறது. | |||
* 1939-ல் காந்தி ஆலயநுழைவுப் போராட்டம் அறிவித்தபோது காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகர சரஸ்வதி எதிர்ப்பு தெரிவித்தார். அதற்கு கல்கி ‘நீங்கள் ஒரு சாதியின் தலைவர்தான், ஜகத்குருவெல்லாம் அல்ல’ என கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். அவருடைய அந்த மறுப்பு விவாதமாக ஆகியது. | |||
==படைப்புகள்== | |||
== படைப்புகள் == | |||
===நாவல்கள்=== | ===நாவல்கள்=== | ||
Line 85: | Line 71: | ||
* அமரதாரா (1954) | * அமரதாரா (1954) | ||
====வரலாற்று நாவல்கள்==== | |||
* பார்த்திபன் கனவு (1941 - 1943) | * பார்த்திபன் கனவு (1941 - 1943) | ||
Line 100: | Line 86: | ||
===மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள்=== | ===மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள்=== | ||
பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு, அலை ஒசை போன்ற நாவல்கள் பலரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. | பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு, அலை ஒசை போன்ற நாவல்கள் பலரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. | ||
==== திரைப்படம் ==== | |||
* கல்கி எழுதிய கள்வனின் காதலி வி.எஸ்.ராகவன் 1955ல் இயக்கத்தில் திரைப்படமாக வெளிவந்தது | |||
* கல்கி எழுதிய தியாகபூமி கே.சுப்ரமணியம் இயக்கத்தில் 1939ல் திரைப்படமாகியது | |||
* கல்கி எழுதி எம்.எஸ்.சுப்புலட்சுமி நடித்த மீரா திரைப்படம் 1945ல் வெளிவந்தது. படத்திற்கான கதை மற்றும் உரையாடலையும், ஐந்து பாடல்களையும் கல்கி எழுதினார். படம் வெற்றியடைந்து அந்த செல்வம் கல்கி இதழுக்கு முதலீடாக அமைந்தது | |||
* கல்கி எழுதிய பார்த்திபன் கனவு யோகநாத் இயக்கத்தில் 1960 ல் திரைப்படமாகியது | |||
==விருதுகள்== | ==விருதுகள்== | ||
Line 105: | Line 97: | ||
சங்கீத கலாசிகாமணி விருது, 1953, தி இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி | சங்கீத கலாசிகாமணி விருது, 1953, தி இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி | ||
==மறைவு== | |||
கல்கி 1954 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் நாள் தனது 55 ஆம் வயதில் காலமானார். அவர் ஐந்தாண்டுகளாக காசநோயால் அவதிப்பட்டுக்கொண்டிருந்தார். | |||
== வழ்க்கை வரலாறு == | |||
*கல்கியின் வாழ்க்கை வரலாற்றை சுந்தா (மீனாட்சிசுந்தரம்) ''பொன்னியின் புதல்வர்'' என்ற பெயரில் எழுதியிருக்கிறார். இது கல்கி இதழில் தொடராக வெளிவந்தது | |||
== உசாத்துணை == | == உசாத்துணை == |
Revision as of 22:03, 23 January 2022
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.
கல்கி (ரா. கிருஷ்ணமூர்த்தி ) (செப்டம்பர் 9, 1899 - டிசம்பர் 5, 1954) தமிழில் பொதுவாசகர்களுக்கான பெரும்புகழ்பெற்ற கற்பனாவாதக் கதைகளை எழுதிய எழுத்தாளர். இந்திய தேசிய இயக்கத்தில் இருந்து உருவாகி வந்த படைப்பாளி. சுதந்திரப்போராட்ட வீரர். தமிழிசை இயக்கத்தை முன்னெடுத்தவர். தமிழ் இதழியல் முன்னோடிகளில் ஒருவர். தமிழ் உரைநடையின் உருவாக்கத்தில் பெரும்பங்காற்றியவர். கல்கி எழுதிய பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் போன்ற வரலாற்றுக் கற்பனாவாத நாவல்கள் தமிழ் பொதுவாசிப்புத்தளத்தைச் சேர்ந்த பெரும் செவ்வியல்படைப்புகள் எனப்படுகின்றன. கல்கி வார இதழை நிறுவியவர். தமிழில் கேளிக்கைசார்ந்த வாசிப்பையும் அதற்கான எழுத்துமுறையையும் உருவாக்கி நிறுவனப்படுதியவர் என்று அறியப்படுகிறார்.
வாழ்க்கைக்குறிப்பு
பிறப்பு, கல்வி
கல்கி பழைய தஞ்சாவூர் மாவட்டத்தில் மயிலாடுதுறை அருகே உள்ள புத்தமங்கலம் என்னும் ஊரில் செப்டெம்பர் 9, 1899 அன்று பிறந்தார். இவரது தந்தை ராமசாமி அய்யர், தாயார் தையல்நாயகி. ஆரம்பப்பள்ளிப் படிப்பைத் தனது கிராமத்தில் முடித்த பின்னர் மாயூரம் முனிசிபல் உயர்நிலைப் பள்ளியில் படித்தார். பிறகு திருச்சி தேசிய உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்தார். இளமையிலேயே தேசிய இயக்கத்தில் இணைந்து சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்டமையால் பள்ளிப்படிப்பை முடிக்கவில்லை.
தனி வாழ்க்கை
கல்கி 1924-ல் ருக்மணி என்பவரை மணந்தார். மகன் ராஜேந்திரன், மகள் ஆனந்தி. சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்ட கல்கி திரு.வி. கல்யாணசுந்தரனாரின் நவசக்தி இதழிலும் பின்னர் ஆனந்த விகடனிலும் இதழாளராகப் பணியாற்றினார். கல்கி என தன் பெயரிலேயே ஓர் இதழை தொடங்கி வெற்றிகரமாக நடத்தினார்
அரசியல்வாழ்க்கை
நீண்ட அரசியல்வாழ்க்கை கொண்டவர் கல்கி. 1921-ல் காந்தி ஒத்துழையாமை இயக்கத்தைத் துவங்கிய போது, அவரது கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். 1922-ல் சுதந்திரப் போராட்டத்தில் பங்குபெற்று ஓராண்டு சிறைத் தண்டனை அனுபவித்தார். விடுதலையானதும் அப்போது திருச்சியில் இருந்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைமையகத்தில் வேலையில் சேர்ந்தார். அதன் பின்னர் சிலகாலம் ஈரோடு கதர் அலுவலகத்தில் வேலை செய்தார். 1923-ல் திரு.வி. கல்யாணசுந்தரனார் நடத்தி வந்த நவசக்தி என்னும் பத்திரிக்கையின் துணை ஆசிரியராகப் பணியாற்றினார்.
திருச்செங்கோட்டில் ராஜாஜி பெப்ரவரி 6,1925 அன்று காந்தி ஆசிரமத்தை தொடங்கி அங்கிருந்து விமோசனம் என்னும் இதழையும் தொடங்கினார். கல்கி திருச்செங்கோடு சென்று ராஜாஜியுடன் தங்கி விமோசனம் இதழை பொறுப்பேற்று நடத்தினார். கல்கி தன் அரசியல் வழிகாட்டியாக ராஜாஜியை ஏற்றுக்கொண்டவர். ராஜாஜியின் அரசியலை தானும் மேற்கொண்டு இறுதிவரை உடனிருந்தார். ராஜாஜியின் போர்வாள் என அறியப்பட்டார். 1930ல் ராஜாஜி ஒருங்கிணைத்த உப்புசத்யாக்கிரகத்திலும் கலந்துகொண்டு கோபிசெட்டிப்பாளையத்தில் உப்பு காய்ச்சி சட்டத்தை மீறி சிறைசென்றார். ஆறுமாதம் சிறையில் இருந்தார்.
1940-ல் காந்தி வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை அறிவித்தபோது ஆனந்த விகடனில் ஆசிரியர் வேலையை உதறிவிட்டு அப்போராட்டத்தில் ஈடுபட்டார். மூன்றுமாதம் கடுங்காவல் தண்டனை பெற்றார்.
இதழியல்
கல்கி 1923 முதல் தொடர்ச்சியாக இதழாளராகவே செயல்பட்டார். திரு.வி. கல்யாணசுந்தரனாரின் நவசக்தி இதழில் துணையாசிரியராகப் பணியாற்றினார். 1931-ல் எஸ்.எஸ்.வாசன் தொடங்கி நடத்திய ஆனந்த விகடன் இதழில் துணைஆசிரியரானார். ஆனந்த விகடனை வெற்றிகரமான பொதுவாசிப்புக்குரிய இதழாக ஆக்கியவர் கல்கி. தமிழில் பொழுதுபோக்கு வாசிப்பை ஓர் இயக்கமாக, ஒரு பெரு வணிகமாக ஆக்கியது ஆனந்த விகடன் இதழ். கல்கி பொதுவாசகர்களுக்கு உகந்த வேடிக்கையும் நையாண்டியும் கொண்ட எளிமையான நடையை வளர்த்தெடுத்தார். அவரைப்போலவே எழுதும் தேவன், துமிலன் போன்ற எழுத்தாளர்களின் வரிசை ஒன்றை உருவாக்கினார். திரைப்பட விமர்சனம், அரசியல் விமர்சனம் என பல களங்களில் இதழியல் சார்ந்த எழுத்தை வளர்த்தெடுத்தார்.
1941-ல் கல்கி இதழை தன் நண்பர் சதாசிவம் உதவியுடன் நிறுவினார். கல்கிவெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் ஈடுபட்டு அரசாங்கத்திற்கு எதிராகச் செயல்பட்டதை எஸ்.எஸ்.வாசன் விரும்பாததே அதற்குக் காரணம் என்று சொல்லப்பட்டது. கல்கி இதழுக்கு ராஜாஜியின் வாழ்த்தும் இருந்தது. கல்கியில் அவர் எழுதிய வரலாற்றுச் சாகச்த் தொடர்கதைகளால் அது மிக வெற்றிகரமான இதழாக ஆகியது. கல்கியில் அவர் தன் முதல் வரலாற்றுக் கற்பனாவாத நாவலான பார்த்திபன் கனவை எழுதினார். அதன்பின் புகழ்பெற்ற சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன் நாவல்களை கல்கி இதழில் தொடராக வெளியிட்டார்
கல்கி இதழில் கல்கி தன்னுடைய எழுத்துமுறையைச் சாராத எழுத்தாளர்களின் வரிசை ஒன்றை உருவாக்கினார். உதாரணமாக மாயாவி, பி.எம். கண்ணன் போன்றவர்கள். வி.எஸ். காண்டேகர், மு. வரதராசனார் போன்றவர்களின் பாணியில் எழுதும் நா. பார்த்தசாரதி (மணிவண்ணன்) போன்றவர்களும் கல்கி மூலமாக உருவானவர்களே. தமிழ் இதழியலிலும் தமிழ் வணிகக்கேளிக்கை புனைவெழுத்திலும் கல்கியே முதன்மைச் சாதனையாளரும் முன்னோடியுமாவார்.
இலக்கிய வாழ்க்கை
மகாத்மா காந்தி நவஜீவன் இதழில் 1925 முதல் 1929 வரைஎழுதி வந்த சுயசரிதையை கல்கி சுருக்கமாக மொழியாக்கம் செய்து ’நவசக்தி’யில் வெளியிட்டார். நவசக்தியில் கதைகளும் எழுதினார். 1928 பிப்ரவரியில் ’ஆனந்த விகடன்’ இதழ் தொடங்கப்பட்டபோது அதன் உரிமையாளராகிய எஸ்.எஸ்.வாசனிடம் சுப்ரமணிய பாரதியாரின் நண்பரான பரலி.சு. நெல்லையப்பர் கல்கியை அறிமுகப்படுத்தினார். ஏட்டிக்குப் போட்டி என்ற நகைச்சுவைக் கட்டுரையை கல்கி ஆனந்த விகடனில் எழுதினார். கல்கி என்ற புனைபெயரில் கிருஷ்ணமூர்த்தி எழுதிய முதல் கட்டுரை இதுதான். அதன்பின் தொடர்ந்து வந்த கட்டுரைகளின் தொகுப்பு ’ஏட்டிக்குப் போட்டி’ என்னும் பெயருடன் , சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் முன்னுரையுடன் 1927-ல் வெளியானது. கல்கி எழுதிய முதல் தொடர்கதை கள்வனின் காதலி ஆனந்த விகடனில் 1937-ம் ஆண்டு வெளியானது. கள்வனின் காதலிக்குப் பின் விகடனில் எழுதிய ‘தியாகபூமி’ கூடவே திரைப்படமாகவும் வெளிவந்தது. கல்கி இதழை தொடங்கியபின் எழுதிய ’பார்த்திபன் கனவு’ கல்கியின் முதல் வரலாற்றுக் கற்பனாவாத நாவல். அவருக்கு பெரும்புகழ் சேர்த்த சிவகாமியின் சபதம் பொன்னியின் செல்வன் போன்ற நாவல்கள் அதன்பின் அவர் நடத்திய கல்கி இதழில் வெளியாயின.1952-ல் அவர் எழுதத்தொடங்கிய பொன்னியின் செல்வன் அவருடைய முதன்மையான நாவல். பொன்னியின் செல்வன் தமிழின் முதன்மையான பொழுதுபோக்கு இலக்கியப் படைப்பு என்று ஏற்கப்பட்டுள்ளது.
தமிழிசை இயக்கம்
கல்கி, தமிழ்நாட்டுச் செவ்வியல் இசை தமிழிலேயே பாடப்படவேண்டும் என்னும் கோரிக்கையுடன் தொடங்கப்பட்ட, தமிழிசை இயக்கத்தின் முதன்மையான பிரச்சாரகர்களில் ஒருவர். தமிழிசை இயக்கத்தை ஆதரித்து ஏராளமான கட்டுரைகளை எழுதினார். கல்கி எழுதிய ’காற்றினிலே வரும் கீதம்’ என்னும் திரைப்படப் பாடல் தமிழிசையின் முதன்மையான பாடலாக கருதப்படுகிறது. 1941-ஆம் ஆண்டு சென்னையில் ராஜா அண்ணாமலை செட்டியார் முன்னெடுப்பில் நடந்த முதலாவது தமிழிசை மாநாட்டில் கலந்துகொண்டார். கல்கி தமிழிசை இயக்கத்தை ஆதரித்து எழுதிய கட்டுரைகள் சங்கீதயோகம் என்றபெயரில் நூலாக தொகுக்கப்பட்டுள்ளன.
பண்பாட்டுப்பணிகள்
- 1945ல் தமிழிசை மாநாட்டுக்காக கல்கி எட்டையபுரம் வந்திருந்தார். அவ்விழாவில் பாரதிக்கு எட்டையபுரத்தில் ஒரு மணிமண்டபம் கட்டப்படவேண்டும் என்னும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. கல்கி தன் இதழில் அதற்கான கோரிக்கையை விடுத்தார். அக்டோபர் 13,1947-ல் மணிமண்டபம் சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியாரால் திறந்துவைக்கப்பட்டது.
- கல்கி 1945ல் பாரதியின் துணைவி செல்லம்மா பாரதிக்காக நிதி திரட்டி ஒரு வைப்புநிதியை உருவாக்கி அளித்தார்.
- கல்கியை கடுமையாக விமர்சனம் செய்தவரான புதுமைப்பித்தன் 1948-ல் மறைந்தபின், வறுமையில் வாடிய அவருடைய மனைவி கமலாவையும் மகளையும் காப்பாற்றுவதற்காக கல்கி நிதி திரட்டினார். குறிப்பிடத்தக்க ஒரு தொகை புதுமைப்பித்தன் மனைவியிடம் அளிக்கப்பட்டது.
இலக்கிய முக்கியத்துவம்
கல்கியின் முதன்மையான இலக்கிய பங்களிப்பு தமிழ் உரைநடை உருவாக்கத்தில் அவர் ஆற்றிய பங்களிப்பே. பொழுதுபோக்கு நாவல்கள், இதழியல் கட்டுரைகள், சிறுகதைகள், பயணக்கட்டுரைகள், இசைவிமர்சனம், திரைப்பட விமர்சனம், அரசியல் விமர்சனம், நையாண்டிக்கட்டுரைகள் மற்றும் வாழ்க்கை வரலாற்று நூல்கள் என பல தளங்களிலும் தொடர்ச்சியாக எழுதி தமிழ் உரைநடையின் எல்லா சாத்தியங்களையும் விரிவுபடுத்தினார். அவரை முன்னோடியாகக்கொண்டு மூன்று தலைமுறை எழுத்தாளர்கள் உருவாகி வந்தனர்.
கல்கியின் தியாகபூமி போன்ற தொடக்ககால நாவல்கள் ரெயினால்ட்ஸ் போன்றவர்கள் எழுதிய பரபரப்பும் மெல்லுணர்ச்சியும் கலந்த பொதுவாசிப்புக்குரிய ஆக்கங்கள். கல்கியின் கதை சொல்லும் முறையில் வடுவூர் துரைசாமி அய்யங்கார் போன்ற முன்னோடிகளின் பாதிப்பும் இருந்தது. பின்னாளில் சரித்திர நாவல்களை எழுதினார். சர் வால்டர் ஸ்காட், அலெக்ஸாண்டர் டூமா போன்ற எழுத்தாளர்களைத் தனது முன்னோடிகளாக கல்கி குறிப்பிட்டிருக்கிறார். பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன் போன்ற நாவல்களை இலக்கியவரையறையின்படி கற்பனாவாத உணர்ச்சிக் கதைகள் (Romance) என விமர்சகர்கள் வரையறுக்கிறார்கள்
ஆனால் தன் முன்னோடிகளைப் போல முற்றிலும் கேளிக்கை எழுத்தாக இல்லாமல் அன்று நிகழ்ந்து வந்த இந்திய தேசிய எழுச்சி, தமிழ்க் கலாசார மறுமலர்ச்சி, சமூக சீர்திருத்த நோக்கு ஆகியவற்றின் கூறுகள் கல்கியின் படைப்புகளில் இருந்தன. அவருடைய வரலாற்று நாவல்கள் தமிழர்களின் வரலாற்றுப் பொற்காலங்களை புனைந்து காட்டின. கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி போன்றவர்கள் வரலாற்றாய்வு வழியாக உருவாக்கிய பல்லவர், சோழர் காலத்து வரலாற்று வரைவை கல்கி தன் புனைவுகள் வழியாக மக்களிடம் கொண்டுசென்றார். அவை அப்போது உருவாகி வந்த தமிழ்த்தேசியப் பெருமிதத்தை வலுப்படுத்தின.
கல்கியின் நாவல்களில் தமிழகத்தின் பண்பாட்டுப் பரிணாமத்தின் சித்திரம் உள்ளது. சிவகாமியின் சபதம் பொன்னியின் செல்வன் போன்ற நாவல்களில் பக்தி இயக்க நாயகர்களை புனைந்து காட்டுகிறார். அவருடைய சிவகாமியின் சபதம் ராமாயணத்தின் சாயலையும் பொன்னியின் செல்வன் மகாபாரதத்தின் சாயலையும் கொண்டது. பொன்னியின் செல்வனில் அலக்ஸாண்டர் டூமாவின் The Three Musketteers, The Man in the Iron Mask போன்ற நாவல்களின் செல்வாக்கு உண்டு. ’இந்தியக் காவிய மரபின் சாயலை மேற்கத்திய சாகசக் கதைகளின் சித்தரிப்புடன் இணைத்துத் தன் புனைவுத் தளத்தை உருவாக்கினார்’ என ‘நவீனத் தமிழிலக்கிய அறிமுகத்தில்’ எழுத்தாளர் ஜெயமோகன் குறிப்பிடுகிறார்.
விவாதங்கள்
- 1936-ல் சுப்ரமணிய பாரதியார் இந்தியாவின் மகாகவிகளின் பட்டியலில் வரமாட்டார் என்று கல்கி கருத்து தெரிவித்தார். அதற்கு கு.ப. ராஜகோபாலன் போன்றவர்கள் மறுப்பு தெரிவித்தனர். பாரதி மகாகவி விவாதம் என இது அழைக்கப்படுகிறது. இக்கட்டுரைகளை 1936-ல் கண்ணன் என் கவி என்ற பெயரில் கு.ப. ராஜகோபாலன் தொகுத்து வெளியிட்டார்
- 1937-ல் கல்கியின் எழுத்துக்கள் வால்டர் ஸ்காட், அலக்ஸாண்டர் டூமாவின் நாவல்களை தழுவி எழுதியவை என்று புதுமைப்பித்தன் குற்றம்சாட்டினார். அதற்கு கல்கி மறுப்பு தெரிவித்தார். வெவ்வேறு இலக்கியவாதிகள் அதில் கருத்து தெரிவித்தனர். இது கல்கி - புதுமைப்பித்தன் தழுவல் விவாதம் என்ற பெயரில் அறியப்படுகிறது.
- 1939-ல் காந்தி ஆலயநுழைவுப் போராட்டம் அறிவித்தபோது காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகர சரஸ்வதி எதிர்ப்பு தெரிவித்தார். அதற்கு கல்கி ‘நீங்கள் ஒரு சாதியின் தலைவர்தான், ஜகத்குருவெல்லாம் அல்ல’ என கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். அவருடைய அந்த மறுப்பு விவாதமாக ஆகியது.
படைப்புகள்
நாவல்கள்
- கள்வனின் காதலி (1937)
- தியாகபூமி (1938-1939)
- மகுடபதி (1942)
- அபலையின் கண்ணீர் (1947)
- சோலைமலை இளவரசி (1947)
- அலை ஓசை (1948)
- தேவகியின் கணவன் (1950)
- மோகினித்தீவு (1950)
- பொய்மான் கரடு (1951)
- புன்னைவனத்துப் புலி (1952)
- அமரதாரா (1954)
வரலாற்று நாவல்கள்
- பார்த்திபன் கனவு (1941 - 1943)
- சிவகாமியின் சபதம் (1944 – 1946)
- பொன்னியின் செல்வன் (1951 – 1954)
சிறுகதை தொகுதிகள்
கட்டுரைகள்
- ஏட்டிக்குப் போட்டி
- சங்கீதயோகம்
மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள்
பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு, அலை ஒசை போன்ற நாவல்கள் பலரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன.
திரைப்படம்
- கல்கி எழுதிய கள்வனின் காதலி வி.எஸ்.ராகவன் 1955ல் இயக்கத்தில் திரைப்படமாக வெளிவந்தது
- கல்கி எழுதிய தியாகபூமி கே.சுப்ரமணியம் இயக்கத்தில் 1939ல் திரைப்படமாகியது
- கல்கி எழுதி எம்.எஸ்.சுப்புலட்சுமி நடித்த மீரா திரைப்படம் 1945ல் வெளிவந்தது. படத்திற்கான கதை மற்றும் உரையாடலையும், ஐந்து பாடல்களையும் கல்கி எழுதினார். படம் வெற்றியடைந்து அந்த செல்வம் கல்கி இதழுக்கு முதலீடாக அமைந்தது
- கல்கி எழுதிய பார்த்திபன் கனவு யோகநாத் இயக்கத்தில் 1960 ல் திரைப்படமாகியது
விருதுகள்
சாகித்திய அகாதமி விருது, 1956 - அலை ஓசை
சங்கீத கலாசிகாமணி விருது, 1953, தி இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி
மறைவு
கல்கி 1954 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் நாள் தனது 55 ஆம் வயதில் காலமானார். அவர் ஐந்தாண்டுகளாக காசநோயால் அவதிப்பட்டுக்கொண்டிருந்தார்.
வழ்க்கை வரலாறு
- கல்கியின் வாழ்க்கை வரலாற்றை சுந்தா (மீனாட்சிசுந்தரம்) பொன்னியின் புதல்வர் என்ற பெயரில் எழுதியிருக்கிறார். இது கல்கி இதழில் தொடராக வெளிவந்தது
உசாத்துணை
https://www.kalkibiography.com/
சங்கீத யோகம் https://www.jmi.ac.in/upload/departments/history/drs/Cankita%20yokam.pdf