சிவசங்கரி: Difference between revisions
(Corrected text format issues) |
(Corrected text format issues) |
||
Line 12: | Line 12: | ||
==இலக்கிய வாழ்க்கை== | ==இலக்கிய வாழ்க்கை== | ||
சிவசங்கரியின் முதல் சிறுகதை ’அவர்கள் பேசட்டும்’ மே 121968- அன்று [[கல்கி (வார இதழ்)|கல்கி]] இதழில் பிரசுரமாகியது. இச்சிறுகதை, குழந்தை இல்லாத தம்பதியினரின் மெல் உணர்வுகளைப் பேசுவதாக அமைந்தது. இரண்டாவது சிறுகதை "உனக்குத் தெரியுமா?" - ஒரு குடி அடிமையின் வாழ்க்கையைப் பற்றியது. 'ஆனந்த விகடன்' இதழில் வெளியான இக்கதையின் தொடர்ச்சி போல 1980-ஆம் ஆண்டு ஆனந்த விகடன் பத்திரிக்கையில் தொடராக வெளி வந்த '[[ஒரு மனிதனின் கதை]]' குடிபோதையின் சீரழிவுகளையும் அதிலிருந்து கதாநாயகன் மீள்வதைப் பற்றியும் பேசுகிறது. சிவசங்கரியின் முதல் சிறுகதைத் தொகுதி ஜெயகாந்தன் முன்னுரையுடன் வெளிவந்தது. | சிவசங்கரியின் முதல் சிறுகதை ’அவர்கள் பேசட்டும்’ மே 121968- அன்று [[கல்கி (வார இதழ்)|கல்கி]] இதழில் பிரசுரமாகியது. இச்சிறுகதை, குழந்தை இல்லாத தம்பதியினரின் மெல் உணர்வுகளைப் பேசுவதாக அமைந்தது. இரண்டாவது சிறுகதை "உனக்குத் தெரியுமா?" - ஒரு குடி அடிமையின் வாழ்க்கையைப் பற்றியது. 'ஆனந்த விகடன்' இதழில் வெளியான இக்கதையின் தொடர்ச்சி போல 1980-ஆம் ஆண்டு ஆனந்த விகடன் பத்திரிக்கையில் தொடராக வெளி வந்த '[[ஒரு மனிதனின் கதை]]' குடிபோதையின் சீரழிவுகளையும் அதிலிருந்து கதாநாயகன் மீள்வதைப் பற்றியும் பேசுகிறது. சிவசங்கரியின் முதல் சிறுகதைத் தொகுதி ஜெயகாந்தன் முன்னுரையுடன் வெளிவந்தது. | ||
சிவசங்கரி எழுதிய ஆனந்த விகடன் இதழில் 1983-ஆம் ஆண்டு வெளியான [[பாலங்கள்]] தொடர் தமிழ்ப் பிராமண சமூகத்தில் மாறிவரும் பழக்க வழக்கங்களையும், பெண்களின் உளவியல் மாற்றங்களையும் மூன்று தலைமுறையைச் சார்ந்த பெண்கள் மூலம் சொன்னது. | சிவசங்கரி எழுதிய ஆனந்த விகடன் இதழில் 1983-ஆம் ஆண்டு வெளியான [[பாலங்கள்]] தொடர் தமிழ்ப் பிராமண சமூகத்தில் மாறிவரும் பழக்க வழக்கங்களையும், பெண்களின் உளவியல் மாற்றங்களையும் மூன்று தலைமுறையைச் சார்ந்த பெண்கள் மூலம் சொன்னது. | ||
=====இந்தியாவை இணைத்துக்கட்டு===== | =====இந்தியாவை இணைத்துக்கட்டு===== | ||
Line 47: | Line 46: | ||
==இலக்கிய இடம்== | ==இலக்கிய இடம்== | ||
தமிழில் மூன்றாவது தலைமுறையைச் சேர்ந்த பெண் எழுத்தாளர் சிவசங்கரி. முதல் தலைமுறையைச் சேர்ந்த [[வை.மு.கோதைநாயகி அம்மாள்]] போன்றவர்கள் பெண்கல்விக்காக போராடியவர்கள். இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்த [[ஆர்.சூடாமணி|ஆர். சூடாமணி]] போன்றவர்கள் குடும்பத்தில் பெண்ணின் இடம் சார்ந்து எழுதியவர்கள். சிவசங்கரி பெண்ணின் வெளியுலகம் பற்றி எழுதியவர். வேலைக்குப் போகும் பெண்கள், தனக்கான ஆணை தேர்வுசெய்யும் பெண்கள், உறவுகளை மாற்றிக்கொள்ளும் பெண்களைப் பற்றி எழுதினார். ஆகவே பெண்களால் விரும்பப்பட்ட எழுத்தாளராக இருந்தார். | தமிழில் மூன்றாவது தலைமுறையைச் சேர்ந்த பெண் எழுத்தாளர் சிவசங்கரி. முதல் தலைமுறையைச் சேர்ந்த [[வை.மு.கோதைநாயகி அம்மாள்]] போன்றவர்கள் பெண்கல்விக்காக போராடியவர்கள். இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்த [[ஆர்.சூடாமணி|ஆர். சூடாமணி]] போன்றவர்கள் குடும்பத்தில் பெண்ணின் இடம் சார்ந்து எழுதியவர்கள். சிவசங்கரி பெண்ணின் வெளியுலகம் பற்றி எழுதியவர். வேலைக்குப் போகும் பெண்கள், தனக்கான ஆணை தேர்வுசெய்யும் பெண்கள், உறவுகளை மாற்றிக்கொள்ளும் பெண்களைப் பற்றி எழுதினார். ஆகவே பெண்களால் விரும்பப்பட்ட எழுத்தாளராக இருந்தார். | ||
மெல்லுணர்ச்சிகளை முன்வைக்கும் நடையும் நிகழ்வுப்போக்குகளும் கொண்ட பொதுப்போக்கு எழுத்து சிவசங்கரி எழுதியது. அவை புகழ்மிக்க வார இதழ்களில் தொடராக வெளிவந்து லட்சக்கணக்கானவர்களால் வாசிக்கப்பட்டன. குடியின் தீமை பற்றி சிவசங்கரி எழுதிய 'ஒரு மனிதனின் கதை' ஒரு நல்லெண்ண எழுத்து. புனைவு என்னும் வகையில் பாலங்கள் அவருடைய சிறந்த ஆக்கம் என்று விமர்சகர்கள் சொல்கிறார்கள். மூன்று தலைமுறைப் பெண்களின் வாழ்க்கையின் விழுமிய மாறுதல்களைச் சொல்லும் நாவல் அது. சிவசங்கரியின் மேற் சொன்ன இரு நாவல்களையும், எழுத்தாளர் ஜெயமோகன் தன்னுடைய 'தமிழின் சிறந்த பொழுது போக்கு நாவல்கள்' பட்டியலில், சமூக மிகுகற்பனை படைப்புகள் வரிசையில் சேர்க்கிறார் | மெல்லுணர்ச்சிகளை முன்வைக்கும் நடையும் நிகழ்வுப்போக்குகளும் கொண்ட பொதுப்போக்கு எழுத்து சிவசங்கரி எழுதியது. அவை புகழ்மிக்க வார இதழ்களில் தொடராக வெளிவந்து லட்சக்கணக்கானவர்களால் வாசிக்கப்பட்டன. குடியின் தீமை பற்றி சிவசங்கரி எழுதிய 'ஒரு மனிதனின் கதை' ஒரு நல்லெண்ண எழுத்து. புனைவு என்னும் வகையில் பாலங்கள் அவருடைய சிறந்த ஆக்கம் என்று விமர்சகர்கள் சொல்கிறார்கள். மூன்று தலைமுறைப் பெண்களின் வாழ்க்கையின் விழுமிய மாறுதல்களைச் சொல்லும் நாவல் அது. சிவசங்கரியின் மேற் சொன்ன இரு நாவல்களையும், எழுத்தாளர் ஜெயமோகன் தன்னுடைய 'தமிழின் சிறந்த பொழுது போக்கு நாவல்கள்' பட்டியலில், சமூக மிகுகற்பனை படைப்புகள் வரிசையில் சேர்க்கிறார் | ||
==விருதுகள்== | ==விருதுகள்== | ||
Line 76: | Line 74: | ||
======நாவல்கள்====== | ======நாவல்கள்====== | ||
*எதற்காக? - 1970 | *எதற்காக? - 1970 | ||
*திரிவேணி சங்கமம் - 1971 | *திரிவேணி சங்கமம் - 1971 | ||
*ஏன்? - 1973 | *ஏன்? - 1973 | ||
Line 224: | Line 221: | ||
[[Category:எழுத்தாளர்கள்]] | [[Category:எழுத்தாளர்கள்]] | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:நாவலாசிரியர்கள்]] | [[Category:நாவலாசிரியர்கள்]] | ||
[[Category:சிறுகதையாசிரியர்கள்]] | [[Category:சிறுகதையாசிரியர்கள்]] |
Revision as of 14:41, 3 July 2023
To read the article in English: Sivasankari.
சிவசங்கரி (பிறப்பு:அக்டோபர் 14, 1942) தமிழில் பொது வாசிப்புக்கான சமூக நாவல்களை எழுதிய எழுத்தாளர். இவர் மத்திய தர மக்களின் வாழ்க்கையை கதைக்களனாகக் கொண்டு பல சிறுகதைகள், நாவல்கள், குறு நாவல்கள் எழுதியிருக்கிறார். பெண்களின் உரிமைகள் மற்றும் பாலியல் சுதந்திரம் ஆகியவற்றைக் கருக்களாகக் கொண்டு எழுதியவர். குடி முதலிய சமூகத்தீங்குகளை எதிர்த்தும் எழுதியிருக்கிறார். இந்திய இலக்கியத்தை ஒட்டுமொத்தமாக தொகுத்துப்பார்க்கும் இலக்கிய முயற்சியான 'இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு’ தமிழுக்கு இவருடைய கொடை.
பிறப்பு, கல்வி
சிவசங்கரி அக்டோபர் 14, 1942-ல் சூர்யநாராயணன், ராஜலெக்ஷ்மி இணையருக்கு நான்காவது குழந்தையாக சென்னையில் பிறந்தார். சென்னை ராமகிருஷ்ணா மிஷன் சாரதா வித்யாலயத்தில் கல்வி கற்றார். பின் சென்னை, SIET மகளிர் கல்லூரியில் விலங்கியலில் இளநிலைப் பட்டம் பெற்றார். சிவசங்கரியின் அன்னை ராஜலெக்ஷ்மி சிறந்த வாசகர், நிறையக் கதைகள் எழுதுபவர் என சிவசங்கரி குறிப்பிடுகிறார். தாய் எழுதுவதை தந்தையின் அன்னை விரும்பவில்லை, எனவே அவை பிரசுரமாகவில்லை. தன் எழுத்துக்கு ஆதர்சமானவர் அன்னையே என சிவசங்கரி சொல்கிறார்.சிவசங்கரி இளமையிலேயே மரபிசையும் நடனமும் கற்றவர். நடன அரங்கேற்றம் செய்தவர்.
தனி வாழ்க்கை
சிவசங்கரி 1963-ல் பொறியாளர் சந்திரசேகரனை மணந்தார். சிவசங்கரி நேஷனல் சிட்டி வங்கியில் மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றினார். சிவசங்கரியின் கணவர் சந்திரசேகரன் பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல்ஸ் மண்டல மேலாளராகப் பணியாற்றியவர். சிவசங்கரியின் மாமனார் விழுப்புரம் மாவட்டம் வழுதரெட்டி என்னும் சிற்றூரில் தொடங்கிய தொழிற்சாலையை நிர்வாகம் செய்வதற்காக சிவசங்கரியும் அவர் கணவரும் தங்கள் வேலைகளைத் துறந்துவிட்டு அவ்வூருக்குச் சென்று வாழ்ந்தனர். சிவசங்கரிக்கு ஒரு மகள்.
இலக்கிய வாழ்க்கை
சிவசங்கரியின் முதல் சிறுகதை ’அவர்கள் பேசட்டும்’ மே 121968- அன்று கல்கி இதழில் பிரசுரமாகியது. இச்சிறுகதை, குழந்தை இல்லாத தம்பதியினரின் மெல் உணர்வுகளைப் பேசுவதாக அமைந்தது. இரண்டாவது சிறுகதை "உனக்குத் தெரியுமா?" - ஒரு குடி அடிமையின் வாழ்க்கையைப் பற்றியது. 'ஆனந்த விகடன்' இதழில் வெளியான இக்கதையின் தொடர்ச்சி போல 1980-ஆம் ஆண்டு ஆனந்த விகடன் பத்திரிக்கையில் தொடராக வெளி வந்த 'ஒரு மனிதனின் கதை' குடிபோதையின் சீரழிவுகளையும் அதிலிருந்து கதாநாயகன் மீள்வதைப் பற்றியும் பேசுகிறது. சிவசங்கரியின் முதல் சிறுகதைத் தொகுதி ஜெயகாந்தன் முன்னுரையுடன் வெளிவந்தது. சிவசங்கரி எழுதிய ஆனந்த விகடன் இதழில் 1983-ஆம் ஆண்டு வெளியான பாலங்கள் தொடர் தமிழ்ப் பிராமண சமூகத்தில் மாறிவரும் பழக்க வழக்கங்களையும், பெண்களின் உளவியல் மாற்றங்களையும் மூன்று தலைமுறையைச் சார்ந்த பெண்கள் மூலம் சொன்னது.
இந்தியாவை இணைத்துக்கட்டு
சிவசங்கரி இந்தியாவை இணைத்துக்கட்டு (KNIT INDIA THROUGH LITERATURE, in June 2009) என்னும் திட்டத்தை 1993-ல் தொடங்கினார். இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட 18 மொழிகளில் எழுதும் வெவ்வேறு தலைமுறையைச் சேர்ந்த எழுத்தாளர்களையும் கவிஞர்களையும் நேரில் கண்டு பேட்டி எடுத்து அவர்களின் படைப்பு ஒன்றையும் மொழியாக்கம் செய்து வெளியிட்டார். தினமணி கதிர் இதழில் வெளியான அந்த தொடர் பின்னர் நூல்களாக வெளிவந்தது. தமிழிலும் ஆங்கிலத்திலுமாக தெற்கு, கிழக்கு, மேற்கு, வடக்கு என்னும் நான்கு தொகுதிகளாக அந்நூல்கள் 1998, 2000, 2004, 2009-ஆம் ஆண்டுகளில் வெளிவந்தன.
குழந்தை இலக்கியம்
சிவசங்கரி குழந்தைகளுக்கான கதைகளை எழுதியிருக்கிறார். 1996-ஆம் ஆண்டு 'அம்மா சொன்ன கதைகள்' என்ற தலைப்பில் குழந்தைகளுக்கான பேசும் புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
வாழ்க்கை வரலாறுகள்
- முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி, ஜி.டி.நாயுடு மற்றும் ஜி.கே.மூப்பனார் ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகளை எழுதியுள்ளார்.
- இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, அன்னை தெரசா ஆகிய தலைவர்களுடன் விரிவான நேர்காணல் நிகழ்ச்சியை நடத்தி வெளியிட்டுள்ளார்.
பயணக்கட்டுரைகள்
சிவசங்கரியின் பயணக்கட்டுரைகள் புகழ்பெற்றவை. தமிழ் வார இதழ்களில் பயணக்கட்டுரைகள் ஆண்களில் பார்வையிலேயே பெரும்பாலும் வெளிவந்துகொண்டிருந்தன. சிவசங்கரியின் பயணக்கட்டுரைகள் உலகை அறியவிரும்பும் பெண்களின் ஆவலை நோக்கிப் பேசியவை என்பதனால் முக்கியமானவை. அவ்வகையில் அவர் குமுதினியின் தொடர்ச்சி. நான்கு தொகுதிகளாக வெளிவந்த புதுப்புது அனுபவங்கள், பிரதமருடன் பயணங்கள், பாரத தரிசனம் ஆகியவை முக்கியமான நூல்கள்.
தன்னம்பிக்கை எழுத்து
சிவசங்கரி எழுதிய 'சின்ன நூற்கண்டா நம்மைச் சிறைப்படுத்துவது?' என்னும் நூல் புகழ்பெற்றது. இந்நூல் ராஜா சர் அண்ணாமலைச்செட்டியார் விருது பெற்றது
காட்சியூடகம்
திரைப்படங்கள்:
சிவசங்கரியின் ஐந்து நாவல்கள் தமிழில் திரைப்படமாக எடுக்கப்பட்டிருக்கின்றன.
- அவன் அவள் அது (ஒரு சிங்கம் முயலாகிறது நாவல்) - 1980
- 47 நாட்கள் - 1981
- நண்டு - 1981
- தியாகு 1990
- குட்டி - 2001
தொலைக்காட்சித்தொடர்கள்
- சிவசங்கரி எழுதிய ஒரு மனிதனின் கதை அவன் என்ற பெயரில் 1987-ல் தொலைக்காட்சித்தொடராக எடுக்கப்பட்டது. ரகுவரன் தியாகுவாக நடித்திருந்தார். 1990-ல் அத்தொடர் சினிமாவாக தியாகு என்ற பெயரில் வெளிவந்தது
- சிவசங்கரியின் கதையை 1987 இந்தியில் சுபா (Subah) என்னும் பெயரில் தூர்தர்சன் தொடராக தயாரித்தது. போதையடிமை மீட்பு பற்றிய கதை இது.
அமைப்புப் பணிகள்
சிவசங்கரி மாலனுடன் இணைந்து அக்னி (Awakened Groups for National Integration) என்னும் அமைப்பை உருவாக்கி சமூகப்பணிகளில் ஈடுபட்டார். ஏழைக்குழந்தைகளின் கல்விக்கு உதவும் அமைப்பு இது. தமிழில் கண் தானம் பற்றிய விழிப்புணர்வை உருவாக்கியதில் சிவசங்கரிக்கு முதன்மை இடம் உண்டு.
ஆன்மிகம்
சிவசங்கரி மதநம்பிக்கை கொண்டவர். சாய்பாபா மீது பற்று கொண்டவர். சாய் பாபா இன்னும் வாழ்கிறார் - ஜய வாஹி, ஸ்ரீ சாயி சரித்திர தரிசனம் ஆகியவற்றை மொழியாக்கம் செய்துள்ளார். சுவாமி சுத்தானந்தாவின் உரைகளை எண்ணம் வசப்படும், கடவுள் ஏன் சிறந்த நண்பர் ஆகிய தலைப்புகளில் மொழியாக்கம் செய்துள்ளார்
ஆய்வுகள், வாழ்க்கை வரலாறுகள்
- சிவசங்கரி சூரியவம்சம் என்னும் தன்வரலாற்று நூலை எழுதியிருக்கிறார்
- பூவை.எஸ்.ஆறுமுகம் ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை என்னும் நூலை எழுதியிருக்கிறார் (இணையநூலகம்)
இலக்கிய இடம்
தமிழில் மூன்றாவது தலைமுறையைச் சேர்ந்த பெண் எழுத்தாளர் சிவசங்கரி. முதல் தலைமுறையைச் சேர்ந்த வை.மு.கோதைநாயகி அம்மாள் போன்றவர்கள் பெண்கல்விக்காக போராடியவர்கள். இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்த ஆர். சூடாமணி போன்றவர்கள் குடும்பத்தில் பெண்ணின் இடம் சார்ந்து எழுதியவர்கள். சிவசங்கரி பெண்ணின் வெளியுலகம் பற்றி எழுதியவர். வேலைக்குப் போகும் பெண்கள், தனக்கான ஆணை தேர்வுசெய்யும் பெண்கள், உறவுகளை மாற்றிக்கொள்ளும் பெண்களைப் பற்றி எழுதினார். ஆகவே பெண்களால் விரும்பப்பட்ட எழுத்தாளராக இருந்தார். மெல்லுணர்ச்சிகளை முன்வைக்கும் நடையும் நிகழ்வுப்போக்குகளும் கொண்ட பொதுப்போக்கு எழுத்து சிவசங்கரி எழுதியது. அவை புகழ்மிக்க வார இதழ்களில் தொடராக வெளிவந்து லட்சக்கணக்கானவர்களால் வாசிக்கப்பட்டன. குடியின் தீமை பற்றி சிவசங்கரி எழுதிய 'ஒரு மனிதனின் கதை' ஒரு நல்லெண்ண எழுத்து. புனைவு என்னும் வகையில் பாலங்கள் அவருடைய சிறந்த ஆக்கம் என்று விமர்சகர்கள் சொல்கிறார்கள். மூன்று தலைமுறைப் பெண்களின் வாழ்க்கையின் விழுமிய மாறுதல்களைச் சொல்லும் நாவல் அது. சிவசங்கரியின் மேற் சொன்ன இரு நாவல்களையும், எழுத்தாளர் ஜெயமோகன் தன்னுடைய 'தமிழின் சிறந்த பொழுது போக்கு நாவல்கள்' பட்டியலில், சமூக மிகுகற்பனை படைப்புகள் வரிசையில் சேர்க்கிறார்
விருதுகள்
சிவசங்கரி பெற்ற விருதுகள்
- கஸ்தூரி சீனிவாசன் விருது, பாலங்கள் நாவலுக்காக - 1983-1984
- ராஜா சர் அண்ணாமலைச்செட்டியார் விருது, சின்ன நூல்கண்டா நம்மை சிறைப்படுத்துவது கட்டுரைத்தொகுதிக்காக - 1988
- பாரதீய பாஷாபரிஷத் விருது, வேரில்லாத மரங்கள் நாவலுக்காக - 1989-1990
- தஞ்சை தமிழ்ப்பல்கலையின் தமிழன்னை விருது - 1989
- ராஜீவ் காந்தி தேசிய ஒருமைப்பாட்டு விருது, இந்தியாவை இணைத்துக்கட்டு நூல்களுக்காக
- திருப்பூர் தமிழ்ச்சங்க விருது, குழந்தை இலக்கியம், அம்மா சொன்ன கதைகள் நூலுக்காக - 1998
- ப்ரேம்சந்த் ராஷ்ட்ரீய சாகித்ய சம்மான் விருது - 2001
- நல்லி திசையெட்டும் விருது, மொழியாக்கம், நான் நானாக நூலின் தெலுங்கு வடிவம் - 2007
- கோபிசந்த் இலக்கிய விருது, யுவகலாவாணி, ஆந்திரா - 2008
- கே. சுவாமிநாதன் நினைவு விருது, கம்பன் கழகம், சென்னை - 2009
- வாழ்நாள் சாதனையாளர் விருது, ஜஸ்டிஸ் பஷீர் அகமது சையத் கல்லூரி - 2010
- பொற்றாமரை விருது, பொற்றாமரை கலையிலக்கிய கழகம் - 2013
- இலக்கியச்சிந்தனை வாழ்நாள் விருது - 2015
- கோவை தமிழ்க்கலாச்சாரக் கழக விருது - 2016
- பாரதியார் விருது, பாரதிசங்கம், சென்னை - 2017
- குலோத்துங்கன் தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை விருது, சென்னை - 2017
- தங்கத்தாரகை விருது, நியூஸ்7 ஊடகம் - 2018
- இந்திய வட்டமேஜை அமைப்பு, இந்தியாவின் பெருமிதம் விருது - 2018
- வாழ்நாள் சாதனை விருது, Tag Corporation - 2019
- பாரதி தேசிய விருது, தமிழ்நாடு அரசு - 2019
- கனடா இலக்கியத்தோட்ட விருது 2023 (இலக்கியம் வழியாக இந்திய இணைப்பு நூல்வரிசைக்காக)
நூல்கள்
சிவசங்கரி 150 சிறுகதைகள், 36 நாவல்கள், 48 குறு நாவல்கள் எழுதியுள்ளார்.
நாவல்கள்
- எதற்காக? - 1970
- திரிவேணி சங்கமம் - 1971
- ஏன்? - 1973
- சியாமா - 1973
- நண்டு - 1975
- நதியின் வேகத்தோடு - 1975
- மெள்ள மெள்ள - 1978
- 47 நாட்கள் - 1978
- அம்மா, ப்ளீஸ் எனக்காக - 1979
- ஆயுள் தண்டனை - 1979
- வளர்த்த கடா - 1979
- இரண்டு பேர் - 1979
- ஒரு மனிதனின் கதை - 1980
- பிராயச்சித்தம் - 1981
- போகப்போக - 1981
- நெருஞ்சி முள் - 1981
- தவம் - 1982
- திரிசங்கு சொர்க்கம் - 1982
- மாலையில் பூக்கும் மலர்கள் - 1982
- பறவை - 1982
- பாலங்கள் - 1983
- ஆயிரங்காலத்துப் பயிர் - 1983
- கருணைக் கொலை - 1984
- அவன் - 1985 ('சுபஹ்' என்ற ஹிந்தி தொலைக்காட்சித் தொடராக வெளியிடப்பட்டது)
- ஒற்றைப் பறவை - 1985
- அது சரி, அப்புறம்? - 1985
- நூலேணி - 1985
- அம்மா பிள்ளை - 1986
- மலையின் அடுத்த பக்கம் - 1987
- வேரில்லாத மரங்கள் - 1987
- வானத்து நிலா - 1989
- ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் - 1989
- நான் நானாக - 1990
- சுட்டமண் - 1991
- இன்னொருத்தி + இன்னொருத்தி - 1992
- இனி - 1993
குறுநாவல்கள்
- சந்தியா ஏன் அழுகிறாள்?
- காத்திருக்கிறேன்
- தனிமை
- எஃப்.பி.ஐ.
- சுறாமீன்கள்
- தப்புக்கணக்கு
- ராமனைப்போல் ஒரு பிள்ளை
- ஒரு சிங்கம் முயலாகிறது
- துள்ளமுடியாத புள்ளி மான்
- ஒருபகல் ஒரு இரவு
- வெட்கம் கெட்டவர்கள்
- அம்மா
- இவளும் அவளும்
- அவர்களுக்குப்புரியாது
- தான் தன் சுகம்
- பார்வை
- காளான்
- கடைசியில்
- கோழைகள்
- விமோசனம்
- மூக்கணாங்கயிறு
- அப்போதும் இப்போதும்
- நட்பு
- ஓவர்டோஸ்
- தகப்பன் சாமி
- காரணங்கள்
- அடிமாடுகள்
- கண்கெட்ட பிறகு
- இதுவும் தாஜ்மகால்தான்
- இன்னொரு காரணம்
- பயிரை மேயும் வேலிகள்
- தீர்வு
- மண்குதிரைகள்
- ருசிகண்ட பூனை
- இனி தொடராது
- இரட்டை நாக்குகள்
- அந்தம்மா ரொம்ப நல்லவங்க
- கிணற்றுத்தவளைகள்
- விலை
- பச்சோந்திகள்
- ஏரிக்கடியில்
- உயர்ந்தவர்கள்
- முதல்கோணன்
- குட்டி
- காதல் என்பது எதுவரை
- நப்பாசை
பயணக்கட்டுரைகள்
- புதுப்புது அனுபவங்கள் (நான்கு தொகுதிகள்)
- பாரத தரிசனம்
- பிரதமருடன் பயணங்கள்
- மனம் கவர்ந்த மலேசியா
- புதியசுவடுகள்
- ஹாங்காங் சைனா பாங்காக்
சிறுகதைகள்
- உண்மைக்கதைகள்
- குழப்பங்கள்
- டிரங்கால்
- கழுகு
- அணில்கள்
- புல்தடுக்கிப் பயில்வான்கள்
- நட்பு
- அரவிந்தர் சொல்கிறார்
- தெப்பக்குளம்
- அவர்கள் பேசட்டும்
- பட்டாம்பூச்சியும் தூக்கமும்
- சிவசங்கரியின் 60 சிறுகதைகள் (இரு தொகுதிகள்)
குழந்தைகளுக்கான பேசும் புத்தகம்
- அம்மா சொன்ன கதைகள் (புத்தகமும் ஒலிநாடாவும் இணைந்தது) - 1996
வாழ்க்கை வரலாறு
- இந்திராவின் கதை (இந்திராகாந்தி)
- அப்பா(ஜி.டி. நாயுடு)
- அறியாத முகங்கள்( ஜி.கே. மூப்பனார் பற்றி)
- சூரியவம்சம் தன் வரலாறு
இலக்கிய ஆய்வு
- இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு - பாகம் 1 - தெற்கு - 1998
- இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு - பாகம் 2 - கிழக்கு - 2000
- இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு - பாகம் 3 - மேற்கு - 2004
- இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு - பாகம் 4 - வடக்கு - 2009
மொழியாக்கப்படைப்புகள்
- கடவுள் ஏன் சிறந்த நண்பர் (சுவாமி சுத்தானந்தா உரைகள்)
- எண்ணம் வசப்படும் (சுவாமி சுத்தானந்தா உரைகள்)
- ராவி நதியில் குல்ஸார் சிறுகதைகள்
- சாய் பாபா இன்னும் வாழ்கிறார் - ஜய வாஹி
- தீர்க்கதரிசி (டாக்டர் பி.சி. ரெட்டி வாழ்க்கை வரலாறு)
- ஸ்ரீ சாயி சரித்திர தரிசனம்
மொழியாக்கங்கள்
- The Betrayal and Other Stories (ஆங்கில மொழியாக்கம்: அமீதா அக்னிஹோத்ரி, கீதா ராதாகிருஷ்ணன்)
- Portable Roots (ஆங்கில மொழியாக்கம்: ரேகா ஷெட்டி)
- Deception (ஆங்கில மொழியாக்கம்: உமா கிரீஷ்)
- Bridges (ஆங்கில மொழியாக்கம்: எஸ். கிருஷ்ணன்)
- The Trip to Nowhere (ஆங்கில மொழியாக்கம்: ஷோபனா சுவாமிநாதன், ரேகா ஷெட்டி, ஜானகி விசுவநாதன்)
- Tyagu (ஆங்கில மொழியாக்கம்: உமா நாராயணன்)
உசாத்துணை
- Sivashankari – Sivashankari
- சிகரம் தொட்ட சிவசங்கரி
- பொழுது சிவசங்கரி கதை இணையநூலகம்
- வைராக்கியம் சிவசங்கரி சிறுகதை இணையநூலகம்
- அணில்கள் சிவசங்கரி சிறுகதை இணைய நூலகம்
- சிவசங்கரி படைப்புகள் ஆர்க்கைவ்ஸ் இணையப்பக்கம்
- சிவசங்கரி சிறுகதை யூடியூப்
- சிவசங்கரி பேட்டி யூடியூப்
- கதைக்களத்தில் சிவசங்கரி
- சிவசங்கரியின் நெடும்பயணம் தி ஹிந்து
- சிவசங்கரி பேட்டி- தினமணி
- சூரியவம்சம்- சிவசங்கரி நினைவலைகள் மதிப்புரை
- தொலைந்த வசந்தங்கள் திரும்பி வருகின்றன சிவசங்கரி.விகடன்
- நதியாய் வாழ்கிறேன். சிவசங்கரி பேட்டி தினமலர்
- ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை பூவை எஸ் ஆறுமுகம் இணையநூலகம்
✅Finalised Page