நற்றிணை: Difference between revisions
Tamizhkalai (talk | contribs) No edit summary |
Tamizhkalai (talk | contribs) No edit summary |
||
Line 1: | Line 1: | ||
நற்றிணை தமிழ் இலக்கியத்தில் எட்டுத்தொகை என்ற சங்க இலக்கியத் தொகுப்பின் முதல் நூல். நற்றிணை 175 புலவர்களால் பாடப்பட்ட 400 பாடல்கள் கொண்ட அகத்திணை நூல். | நற்றிணை தமிழ் இலக்கியத்தில் எட்டுத்தொகை என்ற சங்க இலக்கியத் தொகுப்பின் முதல் நூல். நற்றிணை 175 புலவர்களால் பாடப்பட்ட 400 பாடல்கள் கொண்ட அகத்திணை நூல். | ||
== தொகுப்பு == | |||
. 'இதனைத் தொகுப்பித்தான் பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி' என்பது பழங் குறிப்பு. தொகுத்தாரது பெயர் தெரியவில்லை. நற்றிணைப் பாடல்களில் 234-ஆம் பாடல் முற்றும் கிடைக்கவில்லை. 385-ஆம் பாடலின் பிற்பகுதியும் மறைந்து போயிற்று. 56 பாடல்களின் ஆசிரியர் பெயர் காணப்பெறவில்லை. ஏனைய பாடல்களைப் பாடியவர்களின் தொகை 192. | |||
== நூல் அமைப்பு == | == நூல் அமைப்பு == | ||
நற்றிணை தனிப்பாடல்களாகப் பலராலும் பாடப்பட்டுப் பின்னர் தொகுக்கப்பட்டது. எட்டுத்தொகை நூல்களில் 'நல்' என்ற அடைமொழி பெற்ற நூல் (நல்+திணை) இது ஒன்றே. இதனை நற்றிணை நானூறு என்றும் கூறுவர். | நற்றிணை தனிப்பாடல்களாகப் பலராலும் பாடப்பட்டுப் பின்னர் தொகுக்கப்பட்டது. எட்டுத்தொகை நூல்களில் 'நல்' என்ற அடைமொழி பெற்ற நூல் (நல்+திணை) இது ஒன்றே. இதனை நற்றிணை நானூறு என்றும் கூறுவர். ஒன்பது முதல் பன்னிரண்டு அடி வரையிலுள்ள நானூறு அகவற் பாக்களின் தொகுதி. கடவுள் வாழ்த்துடன் சேர்த்து 401 ஆசிரியப்பாக்களால் ஆனது. குறுந்தொகை, நெடுந்தொகை, இரண்டிற்கும் இடைப் பட்டு, அளவான அடிகளை உடைமையினால், இது 'நற்றிணை' என வழங்கப்பட்டிருக்க்லம் என அறிஞர்கள் கருதுகின்றனர். . | ||
====== அடி அளவுகள் ====== | ====== அடி அளவுகள் ====== |
Revision as of 08:35, 30 October 2023
நற்றிணை தமிழ் இலக்கியத்தில் எட்டுத்தொகை என்ற சங்க இலக்கியத் தொகுப்பின் முதல் நூல். நற்றிணை 175 புலவர்களால் பாடப்பட்ட 400 பாடல்கள் கொண்ட அகத்திணை நூல்.
தொகுப்பு
. 'இதனைத் தொகுப்பித்தான் பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி' என்பது பழங் குறிப்பு. தொகுத்தாரது பெயர் தெரியவில்லை. நற்றிணைப் பாடல்களில் 234-ஆம் பாடல் முற்றும் கிடைக்கவில்லை. 385-ஆம் பாடலின் பிற்பகுதியும் மறைந்து போயிற்று. 56 பாடல்களின் ஆசிரியர் பெயர் காணப்பெறவில்லை. ஏனைய பாடல்களைப் பாடியவர்களின் தொகை 192.
நூல் அமைப்பு
நற்றிணை தனிப்பாடல்களாகப் பலராலும் பாடப்பட்டுப் பின்னர் தொகுக்கப்பட்டது. எட்டுத்தொகை நூல்களில் 'நல்' என்ற அடைமொழி பெற்ற நூல் (நல்+திணை) இது ஒன்றே. இதனை நற்றிணை நானூறு என்றும் கூறுவர். ஒன்பது முதல் பன்னிரண்டு அடி வரையிலுள்ள நானூறு அகவற் பாக்களின் தொகுதி. கடவுள் வாழ்த்துடன் சேர்த்து 401 ஆசிரியப்பாக்களால் ஆனது. குறுந்தொகை, நெடுந்தொகை, இரண்டிற்கும் இடைப் பட்டு, அளவான அடிகளை உடைமையினால், இது 'நற்றிணை' என வழங்கப்பட்டிருக்க்லம் என அறிஞர்கள் கருதுகின்றனர். .
அடி அளவுகள்
நற்றிணை நூலின் பாடல்களில் 7 அடி சிற்றெல்லையாகவும் 13 அடி பேரெல்லையாகவும் அமைந்துள்ளன. பெரும்பான்மையானவை 9 அடி முதல் 12 அடிகள் கொண்ட பாடல்களாக உள்ளன.
- 7 அடிகளில் அமைந்த பாடல்கள் - 1
- 8 அடிகளில் அமைந்த பாடல்கள் - 1
- 9 அடிகளில் அமைந்த பாடல்கள் - 106
- 10 அடிகளில் அமைந்த பாடல்கள் - 96
- 11 அடிகளில் அமைந்த பாடல்கள் - 110
- 12 அடிகளில் அமைந்த பாடல்கள் - 77
- 13 அடிகளில் அமைந்த பாடல்கள் - 8
- 234-ஆவது பாடல் கிடைக்கவில்லை.
பாடியோர்
நற்றிணையில் உள்ள 401 பாடல்களை 175 புலவர்கள் பாடியுள்ளனர். பார்க்க : நற்றிணைப் புலவர்கள் இப்பாடல்களைத் தொகுத்தவர் யாரென அறியப்படவில்லை என்றாலும் தொகுப்பித்தவன் 'பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி'. குறுந்தொகைப் புலவர்கள் போலவே நற்றிணைப் புலவர்களில் சிலரும் பாடலில் இடம்பெற்றுள்ள தொடர்களால் பெயர் பெற்றுள்ளனர்.
- வண்ணப்புறக் கந்தத்தனார்
- மலையனார்
- தனிமகனார்,
- விழிக்கட் பேதைப் பெருங்கண்ணனார்
- தும்பிசேர்க்கீரனார்
- தேய்புரிப் பழங்கயிற்றினார்
- மடல் பாடிய மாதங்கீரனார்
மேலும் 59 பாடல்களைப் பாடிய புலவர்களின் பெயர்கள் காணப்படவில்லை. இந்நூலில் உள்ள நானூறு பாடல்களில் 234-ஆம் பாடல் முழுமையாகவும், 385-ஆம் பாடலின் ஒரு பகுதியும் கிடைக்கப்பெறவில்லை.
திணை
நற்றிணை நூலின் பாடல்கள் திணை அடிப்படையில்;
- குறிஞ்சித் திணைப் பாடல்கள்-132
- பாலைத் திணைப் பாடல்கள்-104
- நெய்தல் திணைப் பாடல்கள்-102
- மருதத் திணைப் பாடல்கள்-32
- முல்லைத் திணைப் பாடல்கள்-30
நற்றிணை காட்டும் வாழ்க்கை
நற்றிணைப் பாடல்கள் வாயிலாக அக்கால மக்களிடம் பரவிக்கிடந்த பழக்க வழக்கங்களை அறியலாம். தலைவன் பிரிவால் வாடும் தலைவி, தன் தலைவனின் வரவைச் சுவரில் கோடிட்டுக் கணக்கிடும் பழக்கமும், காதலன் வரவைப் பல்லி கத்தும் ஓசையை வைத்து சகுனம் பார்க்கும் வழக்கமும் அக்காலமக்களிடம் இருந்த நம்பிக்கையைக் காட்டுகிறது. மேலும் மகளிர் காற்பந்து விளையாடும் வழக்கமும் இருந்ததை அறியமுடிகிறது. பிற்காலத்தில் சிறந்து விளங்கிய "தூது" என்ற சிற்றிலக்கியத்திற்கு வழிகாட்டியாகக் குருவி, கிளி, நாரை ஆகியவற்றைத் தூதுவிடும் பாங்கையும் நற்றிணையில் காணலாம். மேலும் மன்னர்களின் ஆட்சி சிறப்பு, கொடைத்திறம், மன்னர்களைப் பின்பற்றி மக்கள் வாழ்ந்த அறவாழ்வு ஆகியவற்றையும் நற்றிணைப் பாடல்கள் காட்டுகின்றன.
நற்றிணை நூலைத் தொகுத்தவர் யாரென அறியப்படவில்லை என்றாலும் தொகுப்பித்தவன் "பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி" ஆவார்.
எட்டுத்தொகை நூல்களில் பழைய உரை இல்லாத ஒரே நூல் நற்றிணை ஆகும். நற்றிணை நூல் முற்காலத்தில் ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்டு பயன்பாட்டில் இருந்து வந்தது. பிற்காலத்தில் அழிந்துபோகும் நிலை எய்தியபோது பின்னத்தூர் அ.நாராயணசாமி ஐயர் என்னும் தமிழறிஞர் இந்நூலின் பல சுவடிகளைத் தேடிக் கண்டறிந்து, ஒப்பிட்டு ஆய்வுசெய்து முதன்முதலில் புத்துரையுடன் 1915-ஆம் ஆண்டு பதிப்பித்து வெளியிட்டார். இப்பதிப்பிற்கு பின்னர் வேறு பல தமிழ்ச் சான்றோரும் உரையுடன் பதிப்பித்து வெளியிட்டுள்ளனர்.
பாடியவர்களின் பெயர்கள்
நற்றிணை நூலிலுள்ள பாடல்களை பாடியவர்களின் பெயர்கள் அகர வரிசையில்; ( அடைப்புக் குறிக்குள் பாடல் எண்கள்)
|
|
பாடினோர் பெயர் காணப் பெறாத பாடல்கள் ( 8, 10, 22, 24, 45, 46, 84, 92, 107, 108, 111, 115, 125, 126, 132, 134, 160, 161, 162, 163, 164, 165, 166, 167, 168, 169, 170, 171, 172, 173, 174, 175, 176, 177, 178, 179, 180, 181, 182, 183, 184, 185, 186, 188, 189, 190, 192, 193, 195, 207, 229, 234, 235, 271,355,385,396 )
வரலாற்று மாந்தர்கள்
நற்றிணை நூலில் கீழ்காணும் வரலாற்று மாந்தர்களின் பெயர்கள் பயின்று வருகின்றன. ( அடைப்புக்குறிக்குள் பாடல் எண்கள்)
அதியமான் நெடுமான் அஞ்சி ( 381 )
அழிசி ( 87, 191 ) அருமன் ( 367 ) அன்னி ( 180 ) ஆய்அண்டிரன் ( 167, 237 ) உதியன் ( 113 ) ஓரி ( 6, 52, 265, 320 ) காரி ( 320 ) கிள்ளிவளவன் ( 141, 390 ) குட்டுவன் ( 14, 105, 395 ) கொங்கர் ( 10 ) கொல்லிப்பாவை ( 185, 192, 201 ) செம்பியன் ( 14 ) செழியன் ( 39, 298, 340, 387 ) சென்னி ( 265 ) சேந்தன் ( 190 ) சோழர் ( 10, 87, 281, 379, 400 ) தழும்பன் ( 300 ) தித்தன் ( 58 ) நன்னன் ( 270, 391 ) |
பசும்பூண்சோழர் ( 227 )
பசும்பூண் வழுதி ( 358 ) பழையன் ( 10 ) புல்லி ( 14 ) பூழியர் ( 192 ) பெரியன் ( 131 ) பொறையன் ( 346 ) மலையன் ( 77, 100, 170 ) மழவர் ( 52 ) மாயோன் ( 32 ) மிஞிலி ( 265 ) முடியன் ( 390 ) முள்ளூர் மன்னன் ( 291 ) மூவன் ( 18 ) வடுகர் ( 212 ) வழுதி ( 150 ) வாணன் ( 340 ) வாலியோன் ( 32 ) விராஅன் ( 350 ) வேளிர் ( 280 ) |
உசாத்துணை
- நற்றிணை, தமிழ் இணைய கல்விக் கழகம்
- நற்றிணை மூலமும் உரையும், வ.த. இராமசுப்பிரமணியம், திருமகள் நிலையம்
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.