under review

வரதர்: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "தி.ச.வரதராசன் என்ற இயற்பெயர் கொண்ட வரதர், யாழ்ப்பாணத்திலுள்ள பொன்னாலை என்ற கிராமத்தில் 01-07-1924 அன்று பிறந்தார். இவரது தந்தை பெயர் தியாகர் சண்முகம். தாய்பெயர் சின்னத்தங்கம். இவர்...")
 
(Added First published date)
 
(29 intermediate revisions by 6 users not shown)
Line 1: Line 1:
தி.ச.வரதராசன் என்ற இயற்பெயர் கொண்ட வரதர்,
[[File:வரதர்.jpg|thumb|வரதர்]]
வரதர் (தி.ச.வரதராசன்) (ஜூலை 1, 1924 - டிசம்பர் 21, 2006)  இலங்கையின் தமிழ் நவீன எழுத்தாளர். சிறுகதையாசிரியர், புதுக்கவிதை ஆசிரியர், இதழாளர், அச்சுத்தொழில் நிபுணர். ஈழத்தில் நவீன இலக்கியத்தின் தொடக்கத்தை உருவாக்கிய 'மறுமலர்ச்சி' என்னும் இதழின் நிறுவனர், ஆசிரியர்.
== பிறப்பு, கல்வி  ==
தி.ச.வரதராசன் என்ற இயற்பெயர் கொண்ட வரதர் யாழ்ப்பாணத்திலுள்ள பொன்னாலை என்ற கிராமத்தில்  ஜூலை 1, 1924- ல்  தியாகர் சண்முகம் - சின்னத்தங்கம் இணையருக்குப் பிறந்தார். பொன்னாலை அமெரிக்க மிஷன் தமிழ்ப்பாடசாலை, மூளாய் சைவப்பிரகாச வித்தியாசாலை, சுழிபுரம் ஐக்கிய சங்க வித்தியாசாலை, காரைநகர் சுப்பிரமணிய வித்தியாசாலை ஆகியவற்றில் கல்விபயின்றார்
== தனிவாழ்க்கை ==
வரதரின் மனைவிபெயர் மகாதேவியம்மா. இவர்களுக்கு செந்தாமரை, தேன்மொழி, மலர்விழி ஆகியோர் புதல்விகள். வரதர் அச்சுத்தொழிலும் நூல்வெளியீடும் செய்துவந்தார். ஓவியராகையால் அச்சுத்தொழிலை கலையுணர்வுடன் செய்துவந்தார்
[[File:Varathar 003 (1).jpg|thumb|வரதர் மலர்]]
== பதிப்புப்பணி ==
வரதரின் வெளியீட்டகத்தின் மூலம் 33 நூல்கள் வெளிவந்தன. அவற்றுள் பண்டிதமணி [[சி. கணபதிப்பிள்ளை]]யின் 'இலக்கியவழி', பேராசிரியர் கைலாசபதியின் 'இலக்கியமும் திறனாய்வும்', [[செங்கை ஆழியான்|செங்கை ஆழியானின்]] 'ஈழத்துச்சிறுகதை வரலாறு' மற்றும் 'மஹாகவி', சாந்தன், முருகையன். சோமகாந்தன் ஆகியோரின் நூல்கள் முக்கியமானவை. 
== இதழியல் ==
வரதர் இளமையில் பொன்னாலையில் இருந்த சமூகத்தொண்டு நிலையம் வெளியிட்ட 'சமூகத்தொண்டன் கையெழுத்து' இதழின் ஆசிரியராக இருந்தார். பின்னர் அவர் மாணவராய் இருந்த மூளாய் சைவப்பிரகாச வித்தியாசாலையின் மாணவர் தேர்ச்சிச் சங்கம் வெளியிட்ட கையெழுத்து இதழின் ஆசிரியராகவும் பணியாற்றினார். இந்தக் கையெழுத்து இதழ்களில் ஓவியங்களையும் வரைந்தார்


யாழ்ப்பாணத்திலுள்ள பொன்னாலை என்ற கிராமத்தில்
ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் பெரும்பங்காற்றிய [[ஈழகேசரி]] நவீன இலக்கியத் துறையில் ஓரளவே அக்கறை காட்டியது. இதனால் நவீன இலக்கியத்துக்கான இதழ் ஒன்றை வெளியிடவேண்டும் என்ற எண்ணம் ஈழகேசரியில் இளம் எழுத்தாளர்களாக எழுதிக் கொண்டிருந்த வரதருக்கும் அவரது நண்பர்களான அ.செ. முருகானந்தன், நாவற்குழியூர் நடராசன், பண்டிதர் ச.பஞ்சாட்சர சர்மா போன்றோருக்கும தோன்றியது. அவர்கள் இணைந்து 'தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிச் சங்கம்' என்ற அமைப்பை ஜூன் 13,1943-அன்று உருவாக்கினார்கள். இச்சங்கத்தின் நிறுவனர் வரதர். இதுவே ஈழத்தின் முதலாவது தமிழ் எழுத்தாளர் கூட்டமைப்பு.  இலங்கை நவீனத் தமிழிலக்கியத்தின் வரலாற்றில் இலக்கியம் பற்றிய ஒரு குறிப்பிட்ட கருத்துநிலையோடு செயல்பட்ட அமைப்பு மறுமலர்ச்சி இயக்கம்
[[File:வரதர் கதைகள்.jpg|thumb|வரதர் கதைகள்]]
இச்சங்கத்தினர் [[மறுமலர்ச்சி]] என்ற இதழை வரதரை ஆசிரியராகக் கொண்டு நடத்தினர். ஆரம்பத்தில் மறுமலர்ச்சி கையெழுத்துப் பத்திரிகையாக வெளிவந்தது. மார்ச் 1946-லிருந்து அக்டோபர்,1948- வரை 23 இதழ்கள் அச்சு இதழ்களாக வெளிவந்த மறுமலர்ச்சி இதழ் ஈழத்தின் முதலாவது நவீன இலக்கியச் சிற்றிதழ் என்று கருதப்படுகிறது.


01-07-1924 அன்று பிறந்தார். இவரது தந்தை பெயர் தியாகர்
வரதர் மேலும் பல இதழ்களை நடத்தியிருக்கிறார்
* வரதர் புத்தாண்டு மலர் (1949)
* ஆனந்தன் (1952)
* தேன்மொழி (1955),
* வெள்ளி (1957)
* புதினம் (1961)
* அறிவுக்களஞ்சியம் (1992)
1955-லிருந்து மாதம் ஒருமுறை வந்த 'தேன்மொழி'  ஈழத்தின் முதலாவது தமிழ்க்கவிதை இதழ் எனப்படுகிறது.  இந்த இதழின் நிர்வாக ஆசிரியராக வரதரும் இணை ஆசிரியராக மஹாகவியும் விளங்கினர்.
== இலக்கிய வாழ்க்கை ==
[[File:Varathar malar gnanam jan2007.png|thumb|வரதர் மலர் ஞானம்]]
அச்சில் வரதரது முதலாவது கட்டுரை ஈழகேசரி பத்திரிகையின் 'கல்வி அனுபந்தம்' என்ற பகுதியில் 1939-ம் ஆண்டு வெளிவந்தது. அப்போது அவருக்கு வயது 15 .தொடர்ந்து 1940-ல் ஈழகேசரி ஆண்டு மலரில் இவரது முதலாவது சிறுகதை 'கல்யாணியின் காதல்" வெளிவந்தது. ஜூன் 13, 1943-ல் வரதர் எழுதிய முதலாவது கவிதை 'ஓர் இரவினிலே" ஈழகேசரியில் வெளியாகியது. இக்கவிதையே ஈழத்தில் வெளிவந்த முதலாவது புதுக்கவிதை


சண்முகம். தாய்பெயர் சின்னத்தங்கம்.
1996-ல் வரதர் எழுதி வீரகேசரியில் வெளிவந்த 'யாழ்ப்பாணத்தார் கண்ணீர்" (குறுங்காவியம்) பின்னர் நூலாகவும் வெளிவந்தது. அக்டோபர் 30, 1995-அன்று  வலிகாமம் மக்கள் இடம்பெயர்ந்ததே அக்கவிதையின் பேசுபொருள். வரதர் மொத்தம் 29 சிறுகதைகளை எழுதினார். வரதரின் தேர்ந்தெடுக்கப பட்ட சிறுகதைகள் அடங்கிய 'கயமைமயக்கம்' தொகுதி 1960-ல் வெளிவந்தது.  


இவர் தனது கல்வியை பொன்னாலை அமெரிக்க மி~ன்
’அறிவுக் களஞ்சியம்' என்ற இதழை மாணவர்களுக்காகவே தொடங்கினார். குறைந்த விலையில் அறிவுத் தகவல்களை உள்ளடக்கிய இது மாணவர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றது. 'வரதர் கதை மலர்' தொடரில் சிறுவர்களுக்கான 5- நூல்களை வெளியிட்டார். 'வரதரின் பல குறிப்பு' என்ற தலைப்பில் பல்வேறு விஷயங்கள் குறித்து தான் எழுதிய கட்டுரைகளை 4- தொகுதிகளாக வெளியிட்டார். 'நாவலர்', 'மலரும் நினைவுகள்', 'பாரதக் கதை'  உள்ளிட்ட பல நூல்களை எழுதினார்.
== விருதுகள் ==
இலங்கையின் சாகித்ய ரத்னா விருதை முதலில் பெற்றவர் வரதர். செப்டெம்பர் 30, 2002 அன்று இவ்விருது வழங்கப்பட்டது
== மறைவு ==
வரதர்  டிசம்பர் 21, 2006-ல் மறைந்தார்.
[[File:Varathar.jpg|thumb|வரதர்]]
== இலக்கிய இடம் ==
வரதர் நவீன இலக்கியத்தை இலங்கைத் தமிழ்ச்சூழலில் நிறுவிய முன்னோடிகளில் ஒருவர். தமிழகத்தில் [[சி.சு. செல்லப்பா|சி.சு.செல்லப்பா]]வுக்கு இருக்கும் இடம் அவருக்கு அச்சூழலில் உண்டு. பதிப்பாளர், அமைப்பாளர், ஒருங்கிணைப்பாளர் என்னும் நிலைகளில் சலிக்காமல் அரைநூற்றாண்டுக்காலம் பணியாற்றியவர். வரதரின் கவிதைகள் [[ந. பிச்சமூர்த்தி|ந.பிச்சமூர்த்தி]] காலகட்டத்தைச் சேர்ந்தவை.நேரடியாக அனுபவங்களை முன்வைக்கும் வசனகவிதைகள். அவருடைய சிறுகதைகள் சமூகவியல் கருத்துக்களை கதைமாந்தர் மற்றும் கதைநிகழ்வுகள் வழியாக முன்வைப்பவை. அவை பொதுவாசிப்புக்குரிய மொழியும் அமைப்பும் கொண்டவையாக இருந்தாலும் நவீன இலக்கியத்திற்குரிய நுண்ணிய அவதானிப்புகள் கொண்டவை.
== நூல்கள் ==
===== குறுநாவல்கள் =====
* வென்றுவிட்டாயடி இரத்தினா
* உணர்ச்சி ஓட்டம்
* தையலம்மா
===== கவிதை =====
* யாழ்பாணத்தார் கண்ணீர்
===== சிறுகதைத் தொகுப்பு =====
* கயமை மயக்கம்
===== நாவல் =====
* காவோலையின் பசுமை
== பிறநூல்கள் ==
* நாவலர்
* வாழ்கநீ
* சங்கிலி மன்னா
* மலரும் நினைவுகள்
* பாரதக்கதை
* சிறுகதைப் பட்டறிவுக்குறிப்புகள்
== உசாத்துணை ==
* [https://noolaham.net/project/724/72302/72302.pdf சரித்திரம் பேசும் சாகித்ய விருதாளர்கள். தி.ஞானசேகரன்]
*[http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=259 தென்றல் இதழ்-பிப்ரவரி,2007-மூத்தவரும் முன்னோடியுமான வரதர்(1924-2006)]
*[https://www.hindutamil.in/news/blogs/206429-10.html தி.ச.வரதராசன் 10 | தி.ச.வரதராசன் 10 - hindutamil.in]
*[http://www.vaasal.kanapraba.com/?p=4769 வரதர் என்ற எழுத்தாணி ஓய்ந்தது – மடத்துவாசல்]
*[https://ourjaffna.com/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D/ வரதர் ஜாஃப்னா குறிப்பு/]


தமிழ்ப்பாடசாலை, மூளாய் சைவப்பிரகாச வித்தியாசாலை,


சுழிபுரம் ஐக்கிய சங்க வித்தியாசாலை, காரைநகர்


சுப்பிரமணிய வித்தியாசாலை ஆகியவற்றில் பெற்றுள்ளார்.
{{Finalised}}


வரதரது மனைவிபெயர் மகாதேவியம்மா. இவர்களுக்கு
{{Fndt|11-Sep-2023, 03:54:08 IST}}


செந்தாமரை, தேன்மொழி, மலர்விழி ஆகியோர் புதல்விகள்.இவர் இளமையிலே


பொன்னாலையில் இருந்த சமூகத்தொண்டு நிலையம்
[[Category:Tamil Content]]
 
[[Category:எழுத்தாளர்கள்]]
வெளியிட்ட சமூகத்தொண்டன் கையெழுத்து இதழின்
[[Category:நாவலாசிரியர்கள்]]
 
[[Category:இதழாளர்கள்]]
ஆசிரியராக இருந்தார். பின்னர் அவர் மாணவராய் இருந்த
[[Category:சிறுகதையாசிரியர்கள்]]
 
மூளாய் சைவப்பிரகாச வித்தியாசாலையின் மாணவர் தேர்ச்சிச்
 
சங்கம் வெளியிட்ட கையெழுத்து இதழின் ஆசிரியராகவும்
 
பணியாற்றினார். அதுமட்டுமன்றி கையெழுத்து இதழ்களின்
 
ஓவியராகவும் விளங்கினார.;
 
அச்சில் வெளிவந்த வரதரது முதலாவது கட்டுரை
 
ஈழகேசரி பத்திரிகையின் கல்வி அனுபந்தம் என்ற பகுதியில்
 
1939ஆம் ஆண்டு வெளிவந்தது. அப்போது அவருக்கு
 
வயது 15 மட்டுமே. தொடர்ந்து 1940இல் ஈழகேசரி ஆண்டு
 
மலரில் இவரது முதலாவது சிறுகதை 'கல்யாணியின்
 
காதல்" வெளிவந்தது.
 
13-06-1943இல் வரதர் எழுதிய முதலாவது கவிதை 'ஓர்
 
இரவினிலே" ஈழகேசரியில் வெளியாகியது. இக்கவிதையே
 
ஈழத்தில் வெளிவந்த முதலாவது புதுக்கவிதை ஆகும்.
 
ஈழத்து நவீன இலக்கிய வளர்ச்சியில் ஈழகேசர
 
புதிய இலக்கியத் துறையில் ஓரளவே அக்கறை
 
காட்டியது. இதனால் நவீன இலக்கியத்துக்கான சஞ்சிகை
 
ஒன்றை வெளியிடவேண்டும் என்ற எண்ணம் ஈழகேசரியில்
 
இளம் எழுத்தாளர்களாக எழுதிக் கொண்டிருந்த வரதருக்கும்
 
அவரது நண்பர்களான அ.செ. முருகானந்தன், நாவற்குழியூர்
 
நடராசன், பண்டிதர் ச.பஞ்சாட்சர சர்மா போன்றோருக்கும
 
சிலர் இணைந்து தமிழ்
 
இலக்கிய மறுமலர்ச்சிச் சங்கம் என்ற அமைப்பை 13-06-1943
 
அன்று உருவாக்கினார்கள். இச்சங்கத்தின் பிதாமகர் வரதர்
 
ஆவார். இதுவே ஈழத்தின் முதலாவது தமிழ் எழுத்தாளர்
 
சங்கமாகும். நவீனத் தமிழிலக்கியத்தின் வரலாற்றில் ஓர்
 
இலக்கியம்பற்றிய ஒரு குறிப்பிட்ட கருத்துநிலையோடு
 
தொழிற்பட்டுவந்த முதலாவது இயக்கம் மறுமலர்ச்சி
 
இயக்கமாகும்.
 
இச்சங்கத்தினால் மறுமலர்ச்சி என்ற சஞ்சிகையை
 
நடத்தவும் தீர்மானித்து அதற்கு ஆசிரியராக வரதரைத்
 
தேர்ந்தெடுத்தார்கள். அப்போது வரதருக்கு வயது 19.
 
ஆரம்பத்தில் மறுமலர்ச்சி கையெழுத்துப் பத்திரிகையாக
 
வெளிவந்தது. அதனை அச்சு இதழாக்க வேண்டும் என்ற
 
கனவு வரதருக்கு இருந்தது. 1946 மார்ச் மாதத்திலிருந்து
 
1948 ஒக்டோபர் மாதம் வரை 23 இதழ்கள் அச்சு இதழ்களாக
 
வெளிவந்தன. மறுமலர்ச்சி இதழ் ஈழத்தின் முதலாவது நவீன
 
இலக்கியச் சிற்றிதழ் என்ற பெருமையைப் பெற்றுக்கொண்டது.
 
மறுமலர்ச்சி இதழின் இணை ஆசிரியர்களாக முதலில்
 
வரதரும். அ.செ. முருகானந்தனும் இருந்தனர். 1948இன்
 
ஆறாவது இதழிலிருந்து இணை ஆசிரியர்களாக வரதரும்
 
பண்டிதர் ச. பஞ்சாட்சர சர்மாவும் விளங்கினர்.
 
'மஹாகவி பாரதியாருக்குப்பின் தமிழகத்i'மறுமலர்ச்சி இதழுடன் இலக்கியப்பணி தொடங்கிய
 
வரதர், இதழ்கள் இலக்கிய வளர்ச்சிக்கு உதவுவன என்பதை
 
உணர்ந்து பலவற்றை வெளியிட்டு வந்துள்ளார். அவை, வரதர்
 
புத்தாண்டு மலர்(1949), ஆனந்தன்(1952), தேன்மொழி(1955),
 
வெள்ளி (1957), புதினம்(1961), அறிவுக்களஞ்சியம்(1992)
 
என்பனவாம்.
 
இவற்றுள் கவிதைக்காக வரதர் நடத்திய இதழ்
 
தேன்மொழி என்பதாகும். 1955 இலிருந்து மாதம் ஒருமுறை
 
வந்த இந்த இதழ் ஈழத்தின் முதலாவது தமிழ்க்கவிதை இதழ்
 
என்ற பெருமைக்குரியது. இந்த இதழின் நிர்வாக ஆசிரியராக
 
வரதரும் இணை ஆசிரியராக மஹாகவியும் விளங்கினர்.
 
1996இல் வரதர் எழுதி வீரகேசரியில் வெளிவந்த
 
'யாழ்ப்பாணத்தார் கண்ணீர்" (குறுங்காவியம்) பின்னர்
 
நூலாகவும் வெளிவந்தது. 1995 ஒக்ரோபர் 30ஆம் திகதி
 
வலிகாமம் மக்கள் அனைவரும் தாம் வாழ்ந்த வீடுகளையும்
 
தேடிய தேட்டங்களையும் கைவிட்டு எதிலிகளாக
 
இடம்பெயர்ந்த சோகவரலாறு வரதரின் நீண்ட கவிதையாக
 
 
வரதர் எல்லாமாக 29 சிறுகதைகளை எழுதினார்.
 
அவற்றுள் அவருக்கு அதிக புகழைத் தந்தது கற்பு என்ற
 
சிறுகதை. இக்கதை ஐம்பது வருடங்களுக்கு முன்னரே
 
வெளிவந்த பெண்ணியச் சிந்தனைகொண்ட கதையாகும்.
 
வரதரின் தேர்ந்தெடுக்கப ;பட்ட சிறுகதைகள் அடங்கிய
 
தொகுதி கயமைமயக்கம் 1960இல் வெளிவந்தது.
 
வரதர் மூன்று குறுநாவல்களை எழுதியுள்ளார். அவை
 
(1) வென்றுவிட்டாயடி இரத்தினா (2)உணர்ச்சி ஓட்டம் (3)
 
தையலம்மா என்பனவாம்.
 
வரதர் ஒரு நாவலையும் எழுதியுள்ளார். காவோலையின்
 
பசுமை என்ற அவர் எழுதிய நாவல் ஞாயிறு தினகரன்
 
இதழில் 1998இல் தொடர்கதையாக வெளிவந்தது.
 
வரதரின் நூல்களாக பின்வரும் ஏழு நூல்கள்
 
வெளிவந்துள்ளன. அவையாவன (1) நாவலர் (2) வாழ்கநீ
 
சங்கிலி மன்னா (3) கயமை மயக்கம் (4) மலரும் நினைவுகள்
 
(5) பாரதக்கதை (6) யாழ்பாணத்தார் கண்ணீர் (7) சிறுகதைப்
 
பட்டறிவுக்குறிப்புகள் என்பனவாம்.
 
வரதரின் சுயசரிதை போன்று அமைந்த மலரும் நினைவுகள்
 
நூல் பற்றி பேராசிரியர் சிவலிங்கராஜா குறிப்பிடுகையில்,
 
'40, 50களின் யாழ்ப்பாணச் சமூகத்தின் வரலாற்றுக்
 
கோலங்களை மலரும் நினைவுகளாக ஆக்கித் தந்திருக்கிறார்
 
வரதர். பண்பாட்டு விழுமியங்களைப் பகுத்தாய்வு செய்யும்
 
சமூகவியல் ஆய்வாளர்களுக்கு ஒரு கையேடாக மலரும்
 
நினைவுகள் அமைந்துள்ளது எனலாம்" என்கிறார்.
 
வரதர் தொழில் முறையில் அச்சக முகாமையாளராகவும்,
 
நூல் வெளியீட்டாளராகவும் பணிபுரிந்தவர். அவர் அச்சு
 
இயந்திரப் பயன்பாட்டை அச்சுத் தொழிலாகக் கருதாதுஅச்சுக் கலையாகப் பயன்படுத்தும் மனநிலையைக்
 
கொண்டிருந்தார். அவரது வெளியீட்டகத்தின் மூலம்
 
33 நூல்கள் வெளிவந்தன. அவற்றுள் பண்டிதமணி
 
சி. கணபதிப்பிள்ளையின் இலக்கியவழி, பேராசிரியர்
 
கைலாசபதியின் இலக்கியமும் திறனாய்வும், செங்கை
 
ஆழியானின் ஈழத்துச்சிறுகதை வரலாறு மற்றும் மஹாகவி,
 
சாந்தன், முருகையன். சோமகாந்தன் ஆகியோரின்
 
நூல்கள் உட்பட பல தரம்மிக்க எழுத்தாளர்களின் நூல்களை
 
அவர் வெளியிட்டுள்ளார். பதினைந்து வயதுக்கு உட்பட்ட
 
சிறார்களுக்கு வரதர் கதைமலர் தொடரில் தொடர்ந்து
 
ஐந்து நூல்களை வெளியிட்டார். வரதரின் பலகுறிப்பு
 
தமிழ் மக்களுக்குத் தேவையான பலவித விடயங்களைத்
 
தொகுத்துத் தந்தது. இதனை ஆண்டுக்கு ஒன்றாக நான்கு
 
பதிப்புகளை அவர் வெளியிட்டார்.
 
வரதரின் மறுமலர்ச்சி சஞ்சிகையில் வெளிவந்த 64
 
சிறுகதைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 25 சிறுகதைகளை,
 
செங்கை ஆழியான் மறுமலர்ச்சிச் சிறுகதைகள் என்ற
 
மகுடத்தில் தொகுத்து நூலாக்கியுள்ளார் (1997).
 
அதேபோன்று 51 கவிதைகள் அனைத்தையும் தொகுத்து
 
செல்லத்துரை சுதர்சன் அவர்கள் மறுமலர்ச்சிக் கவிதைகள்
 
என்ற மகுடத்தில் நூலாக்கியுள்ளார் (2006);. மறுமலர்ச்சி
 
சஞ்சிகையின் இணை ஆசிரியர் பஞ்சாட்சர சர்மா அவர்களது
 
புத்திரர் கோப்பாய் சிவம் அவர்களும் திரு. செல்லத்துரை
 
சுதர்சனும் இணைந்து மறுமலர்ச்சி இதழ்களின் தொகுப்பினை
 
வெளிக்கொணர்துள்ளனர் (2016). இம்முயற்சிகள் யாவும்
 
மறுமலர்ச்சி சஞ்சிகையின் முக்கியத்துவத்தை எடுத்தியம்
 
புவனவாக உள்ளன.
 
ஈழத்தின் முதலாவது தமிழ் எழுத்தாளர் சங்கத்தை
 
அமைத்து இலக்கியம் பற்றிய ஒரு குறிப்பிட்ட கருத்து
 
நிலையோடு தொழிற்பட்ட முதலாவது இலக்கிய இயக்கமாக 21-12-2006 அன்று அமரரானார். ஈழத்து
 
இலக்கிய உலகில் அவரது நாமம் என்றும் நிலைத்திருக்கும

Latest revision as of 16:19, 13 June 2024

வரதர்

வரதர் (தி.ச.வரதராசன்) (ஜூலை 1, 1924 - டிசம்பர் 21, 2006) இலங்கையின் தமிழ் நவீன எழுத்தாளர். சிறுகதையாசிரியர், புதுக்கவிதை ஆசிரியர், இதழாளர், அச்சுத்தொழில் நிபுணர். ஈழத்தில் நவீன இலக்கியத்தின் தொடக்கத்தை உருவாக்கிய 'மறுமலர்ச்சி' என்னும் இதழின் நிறுவனர், ஆசிரியர்.

பிறப்பு, கல்வி

தி.ச.வரதராசன் என்ற இயற்பெயர் கொண்ட வரதர் யாழ்ப்பாணத்திலுள்ள பொன்னாலை என்ற கிராமத்தில் ஜூலை 1, 1924- ல் தியாகர் சண்முகம் - சின்னத்தங்கம் இணையருக்குப் பிறந்தார். பொன்னாலை அமெரிக்க மிஷன் தமிழ்ப்பாடசாலை, மூளாய் சைவப்பிரகாச வித்தியாசாலை, சுழிபுரம் ஐக்கிய சங்க வித்தியாசாலை, காரைநகர் சுப்பிரமணிய வித்தியாசாலை ஆகியவற்றில் கல்விபயின்றார்

தனிவாழ்க்கை

வரதரின் மனைவிபெயர் மகாதேவியம்மா. இவர்களுக்கு செந்தாமரை, தேன்மொழி, மலர்விழி ஆகியோர் புதல்விகள். வரதர் அச்சுத்தொழிலும் நூல்வெளியீடும் செய்துவந்தார். ஓவியராகையால் அச்சுத்தொழிலை கலையுணர்வுடன் செய்துவந்தார்

வரதர் மலர்

பதிப்புப்பணி

வரதரின் வெளியீட்டகத்தின் மூலம் 33 நூல்கள் வெளிவந்தன. அவற்றுள் பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளையின் 'இலக்கியவழி', பேராசிரியர் கைலாசபதியின் 'இலக்கியமும் திறனாய்வும்', செங்கை ஆழியானின் 'ஈழத்துச்சிறுகதை வரலாறு' மற்றும் 'மஹாகவி', சாந்தன், முருகையன். சோமகாந்தன் ஆகியோரின் நூல்கள் முக்கியமானவை.

இதழியல்

வரதர் இளமையில் பொன்னாலையில் இருந்த சமூகத்தொண்டு நிலையம் வெளியிட்ட 'சமூகத்தொண்டன் கையெழுத்து' இதழின் ஆசிரியராக இருந்தார். பின்னர் அவர் மாணவராய் இருந்த மூளாய் சைவப்பிரகாச வித்தியாசாலையின் மாணவர் தேர்ச்சிச் சங்கம் வெளியிட்ட கையெழுத்து இதழின் ஆசிரியராகவும் பணியாற்றினார். இந்தக் கையெழுத்து இதழ்களில் ஓவியங்களையும் வரைந்தார்

ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் பெரும்பங்காற்றிய ஈழகேசரி நவீன இலக்கியத் துறையில் ஓரளவே அக்கறை காட்டியது. இதனால் நவீன இலக்கியத்துக்கான இதழ் ஒன்றை வெளியிடவேண்டும் என்ற எண்ணம் ஈழகேசரியில் இளம் எழுத்தாளர்களாக எழுதிக் கொண்டிருந்த வரதருக்கும் அவரது நண்பர்களான அ.செ. முருகானந்தன், நாவற்குழியூர் நடராசன், பண்டிதர் ச.பஞ்சாட்சர சர்மா போன்றோருக்கும தோன்றியது. அவர்கள் இணைந்து 'தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிச் சங்கம்' என்ற அமைப்பை ஜூன் 13,1943-அன்று உருவாக்கினார்கள். இச்சங்கத்தின் நிறுவனர் வரதர். இதுவே ஈழத்தின் முதலாவது தமிழ் எழுத்தாளர் கூட்டமைப்பு. இலங்கை நவீனத் தமிழிலக்கியத்தின் வரலாற்றில் இலக்கியம் பற்றிய ஒரு குறிப்பிட்ட கருத்துநிலையோடு செயல்பட்ட அமைப்பு மறுமலர்ச்சி இயக்கம்

வரதர் கதைகள்

இச்சங்கத்தினர் மறுமலர்ச்சி என்ற இதழை வரதரை ஆசிரியராகக் கொண்டு நடத்தினர். ஆரம்பத்தில் மறுமலர்ச்சி கையெழுத்துப் பத்திரிகையாக வெளிவந்தது. மார்ச் 1946-லிருந்து அக்டோபர்,1948- வரை 23 இதழ்கள் அச்சு இதழ்களாக வெளிவந்த மறுமலர்ச்சி இதழ் ஈழத்தின் முதலாவது நவீன இலக்கியச் சிற்றிதழ் என்று கருதப்படுகிறது.

வரதர் மேலும் பல இதழ்களை நடத்தியிருக்கிறார்

  • வரதர் புத்தாண்டு மலர் (1949)
  • ஆனந்தன் (1952)
  • தேன்மொழி (1955),
  • வெள்ளி (1957)
  • புதினம் (1961)
  • அறிவுக்களஞ்சியம் (1992)

1955-லிருந்து மாதம் ஒருமுறை வந்த 'தேன்மொழி' ஈழத்தின் முதலாவது தமிழ்க்கவிதை இதழ் எனப்படுகிறது. இந்த இதழின் நிர்வாக ஆசிரியராக வரதரும் இணை ஆசிரியராக மஹாகவியும் விளங்கினர்.

இலக்கிய வாழ்க்கை

வரதர் மலர் ஞானம்

அச்சில் வரதரது முதலாவது கட்டுரை ஈழகேசரி பத்திரிகையின் 'கல்வி அனுபந்தம்' என்ற பகுதியில் 1939-ம் ஆண்டு வெளிவந்தது. அப்போது அவருக்கு வயது 15 .தொடர்ந்து 1940-ல் ஈழகேசரி ஆண்டு மலரில் இவரது முதலாவது சிறுகதை 'கல்யாணியின் காதல்" வெளிவந்தது. ஜூன் 13, 1943-ல் வரதர் எழுதிய முதலாவது கவிதை 'ஓர் இரவினிலே" ஈழகேசரியில் வெளியாகியது. இக்கவிதையே ஈழத்தில் வெளிவந்த முதலாவது புதுக்கவிதை

1996-ல் வரதர் எழுதி வீரகேசரியில் வெளிவந்த 'யாழ்ப்பாணத்தார் கண்ணீர்" (குறுங்காவியம்) பின்னர் நூலாகவும் வெளிவந்தது. அக்டோபர் 30, 1995-அன்று வலிகாமம் மக்கள் இடம்பெயர்ந்ததே அக்கவிதையின் பேசுபொருள். வரதர் மொத்தம் 29 சிறுகதைகளை எழுதினார். வரதரின் தேர்ந்தெடுக்கப பட்ட சிறுகதைகள் அடங்கிய 'கயமைமயக்கம்' தொகுதி 1960-ல் வெளிவந்தது.

’அறிவுக் களஞ்சியம்' என்ற இதழை மாணவர்களுக்காகவே தொடங்கினார். குறைந்த விலையில் அறிவுத் தகவல்களை உள்ளடக்கிய இது மாணவர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றது. 'வரதர் கதை மலர்' தொடரில் சிறுவர்களுக்கான 5- நூல்களை வெளியிட்டார். 'வரதரின் பல குறிப்பு' என்ற தலைப்பில் பல்வேறு விஷயங்கள் குறித்து தான் எழுதிய கட்டுரைகளை 4- தொகுதிகளாக வெளியிட்டார். 'நாவலர்', 'மலரும் நினைவுகள்', 'பாரதக் கதை' உள்ளிட்ட பல நூல்களை எழுதினார்.

விருதுகள்

இலங்கையின் சாகித்ய ரத்னா விருதை முதலில் பெற்றவர் வரதர். செப்டெம்பர் 30, 2002 அன்று இவ்விருது வழங்கப்பட்டது

மறைவு

வரதர் டிசம்பர் 21, 2006-ல் மறைந்தார்.

வரதர்

இலக்கிய இடம்

வரதர் நவீன இலக்கியத்தை இலங்கைத் தமிழ்ச்சூழலில் நிறுவிய முன்னோடிகளில் ஒருவர். தமிழகத்தில் சி.சு.செல்லப்பாவுக்கு இருக்கும் இடம் அவருக்கு அச்சூழலில் உண்டு. பதிப்பாளர், அமைப்பாளர், ஒருங்கிணைப்பாளர் என்னும் நிலைகளில் சலிக்காமல் அரைநூற்றாண்டுக்காலம் பணியாற்றியவர். வரதரின் கவிதைகள் ந.பிச்சமூர்த்தி காலகட்டத்தைச் சேர்ந்தவை.நேரடியாக அனுபவங்களை முன்வைக்கும் வசனகவிதைகள். அவருடைய சிறுகதைகள் சமூகவியல் கருத்துக்களை கதைமாந்தர் மற்றும் கதைநிகழ்வுகள் வழியாக முன்வைப்பவை. அவை பொதுவாசிப்புக்குரிய மொழியும் அமைப்பும் கொண்டவையாக இருந்தாலும் நவீன இலக்கியத்திற்குரிய நுண்ணிய அவதானிப்புகள் கொண்டவை.

நூல்கள்

குறுநாவல்கள்
  • வென்றுவிட்டாயடி இரத்தினா
  • உணர்ச்சி ஓட்டம்
  • தையலம்மா
கவிதை
  • யாழ்பாணத்தார் கண்ணீர்
சிறுகதைத் தொகுப்பு
  • கயமை மயக்கம்
நாவல்
  • காவோலையின் பசுமை

பிறநூல்கள்

  • நாவலர்
  • வாழ்கநீ
  • சங்கிலி மன்னா
  • மலரும் நினைவுகள்
  • பாரதக்கதை
  • சிறுகதைப் பட்டறிவுக்குறிப்புகள்

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 11-Sep-2023, 03:54:08 IST