கணபதிக் குருக்கள்
From Tamil Wiki
கணபதிக் குருக்கள் (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து சைவ அறிஞர், சைவ குருக்கள்.
வாழ்க்கைக் குறிப்பு
கணபதிக் குருக்கள் இந்தியாவிலுள்ள வேதாரணியத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிறந்தார். சைவக்குருக்கள். 'பஞ்சலக்கணக் கணபதிக் குருக்கள்' என்று அழைக்கப்பட்டார். யாழ்ப்பாணம், மாதகலில் வாழ்ந்தார். ஆண்டுதோறும் வேதாரணியம் சென்று திரும்பினார்.
இலக்கிய வாழ்க்கை
தோணிக்காரருக்குப் பயன்படத்தக்கக் கப்பற்பாட்டுக்கள் சிலவற்றைப் பாடினார். சிற்றம்பலப் புலவர் இவரது மாணவர்.
நூல் பட்டியல்
- கப்பற்பாட்டுக்கள்
உசாத்துணை
- ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள், தென் புலோலியூர் மு. கணபதிப் பிள்ளை, 1967, பாரி நிலையம் வெளியீடு
- ஆளுமை:கணபதிக் குருக்கள்: noolaham
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
07-Feb-2023, 06:16:11 IST