108 சிவ தாண்டவ விளக்கம்-கடிப்பிராந்தம்
From Tamil Wiki
உயிர்களை அருளிக் காத்தலுக்காகச் சிவபெருமான் ஆடிய நடனங்கள் 108 சிவ தாண்டவங்களாகப் போற்றப்படுகின்றன. அவ்வகை நடனத்தின் போது செயல்படும் உடல் அசைவுகளான பல்வேறு வகை அங்ககாரங்களும், கரணங்களும் இணைந்ததே தாண்டவம் என அழைக்கப்படுகிறது.
108 சிவ தாண்டவ விளக்கம் - கடிப்பிராந்தம்
சிவபெருமான் ஆடிய 108 வகைச் சிவ தாண்டவங்களில் ஒன்று கடிப்பிராந்தம். தமிழில் இது 'கொட்டுதேள்' என்று அழைக்கப்படுகிறது. பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது நாற்பத்தி மூன்றாவது கரணம்.
சிவனின் ஆடல்
வளைந்த பாதத்தைத் தூக்கி முழந்தாளை மேல் நோக்கியதாகச் சிறிது உயர்த்தி, நிற்பதாகிய சூசிபாதத்துடன், ஒரே காலத்தில் இடுப்பை வளைத்து ஆடுவது கடிப்பிராந்தம் என அழைக்கப்படுகிறது. இடுப்பு வளைந்தாடும் போது கைகளும் அதனை ஒட்டிச் சுழல வேண்டும்.
உசாத்துணை
- 108 ஆடலியக்கத் தமிழ் பெயரீடும் அமைவுகளும், முனைவர் போ.தெய்வநாயகம், அ.வடிவுதேவி, சு.விசுவநாதன், பதிப்புத்துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், முதல் பதிப்பு, 2004.
- நாட்டியக் கலை விளக்கம்: சுத்தானந்த பாரதியார்
- 108 SHIVA THANDAVAM PHOTOS
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
09-Oct-2023, 09:11:48 IST