under review

மெய்யப்பன் பதிப்பகம்

From Tamil Wiki
தொல்காப்பியம் விளக்கவுரை (மெய்யப்பன் பதிப்பகம்)

மெய்யப்பன் பதிப்பகம் தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அமைந்துள்ள பதிப்பகம்.

பதிப்பகம் பற்றி

சிதம்பரத்திலுள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிய ச. மெய்யப்பன் என்பவரால் நிறுவப்பட்டது. தமிழ்நாட்டில் புத்தக வெளியீட்டில் முன்னனிப் பதிப்பகங்களுள் ஒன்றாக விளங்குகிறது. இப்பதிப்பகத்தின் சில வெளியீடுகள் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் பரிசுகளைப் பெற்றுள்ளன.

மெய்யப்பன் பதிப்பகம் வெளியிட்டுள்ள முனைவர் ச.வே. சுப்பிரமணியனாரின் தொல்காப்பிய விளக்கவுரை என்னும் நூலும், Tholkaappiyam in English Content and Cultural Translation (With short commentary) என்னும் ஆங்கில நூலும் தொல்காப்பியத்தைத் தொடக்க நிலையில் பயில்பவர்களுக்குப் பயன்படும் சிறந்த நூல்கள்.

  • உரிமையாளர்: ச. மீனாட்சி சோமசுந்தரம்
  • மேலாளர்: ராம. குருமூர்த்தி

வெளியீடுகள்

மெய்யப்பன் பதிப்பகம் 750 நூல்களை வெளியிட்டுள்ளது.

இணைப்புகள்

உசாத்துணை


✅Finalised Page