முகம்மது காசீம்
From Tamil Wiki
முகம்மது காசீம் (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ்ப்புலவர்.
வாழ்க்கைக் குறிப்பு
முகம்மது காசீம் இலங்கை காலியைச் சேர்ந்த ஒரு புலவர்.
இலக்கிய வாழ்க்கை
முகம்மது காசீம் 'செய்கு முஸ்தபா ஒலியுல்லா காரண அலங்காரக் கும்மி’ என்னும் நூலை இயற்றினார். இந்நூல் இலங்கை வேர்விலையைச் சேர்ந்த செய்கு முஸ்தபா ஒலியுல்லாவின் வாழ்க்கை வரலாற்றையும் அவர் இயற்றிய நூல்களையும் பற்றி விளக்கிக் கூறும் நூல்.
நூல் பட்டியல்
- செய்கு முஸ்தபா ஒலியுல்லா காரண அலங்காரக் கும்மி
உசாத்துணை
- ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள், தென் புலோலியூர் மு. கணபதிப் பிள்ளை, 1967, பாரி நிலையம் வெளியீடு
- ஆளுமை:முகம்மது காசீம்: noolaham
✅Finalised Page