புலமைப்பித்தன்
புலமைப்பித்தன் (ராமசாமி)(அக்டோபர் 6, 1935 –செப்டம்பர் 8, 2021) தமிழ்க் கவிஞர், பாடலாசிரியர். 700-க்கும் மேற்பட்ட திரைப்பாடல்கள் எழுதினார். தமிழக சட்டப் பேரவையின் முன்னாள் துணைத்தலைவர். தமிழக சட்டப்பேரவையின் முன்னாள் அவைக்கவிஞர்.
பிறப்பு, கல்வி
புலமைப்பித்தனின் இயற்பெயர் ராமசாமி. கோவை மாவட்டம், பள்ளப்பாளையத்தில் கருப்பண்ணத் தேவருக்கும் தெய்வானையம்மாளுக்கும் அக்டோபர் 6, 1935 அன்று மகனாகப் பிறந்தார். பள்ளிக்கல்வியை பள்ளிபாளையத்தில் முடித்தார். கோவை சூலூர் பகுதியில் ஒரு நூற்பாலையில் வேலைபார்த்துக் கொண்டே தமிழ்ப் புலவர் படிப்பை முடித்தார். பள்ளியில் படிக்கும்போதே தமிழ்ப் புலமையில் பித்துக் கொண்டவன்' என்ன்று பொருள்தர 'புலமைப்பித்தன்' என்று புனைபெயர் சூட்டிக் கொண்டார்.
தனி வாழ்க்கை
புலமைப்பித்தனின் மனைவி தமிழரசி. மகன் புகழேந்தி, மகள் கண்ணகி. இருவரும் புலமைப்பித்தனுக்கு முன்பே இறந்து விட்டனர். மகள் வழிப்பேரன் திலீபன் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
திரைத்துறை
புலமைப்பித்தன் 1966-ல் சாந்தோம் உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்துகொண்டிருந்தபோது இயக்குநர் கே. சங்கர் மூலம் 'குடியிருந்த கோவில்' திரைப்படத்துக்கு பாடல் எழுத வாய்ப்புக் கிடத்தது. 'நான் யார் நீ யார்' என்ற பாடலை எழுதினார். அடிமைப்பெண் திரைப்படத்தில் 'ஆயிரம் நிலவே வா' பாடலை எழுதினார். தொடர்ந்து ஏறக்குறைய அரை நூற்றாண்டுகாலம் 320-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் . 700-க்கும் அதிகமான பாடல்கள் எழுதினார்.
அக்கினிப் பிரவேசம்’, ‘ராஜராஜேஸ்வரி’, ‘சொர்க்கத்தின் திறப்பு விழா’ ஆகிய படங்களுக்கு வசனமும் எழுதியிருக்கிறார். ‘சொர்க்கத்தின் திறப்பு விழா’ அவரது சொந்தத் தயாரிப்பு.
நாயகன்' படத்தில் இடம்பெற்றுள்ள 'தென்பாண்டிச் சீமையிலே தேரோடும் வீதியிலே', சிவகுமாரின் 100-வது படமான 'ரோசாப்பூ ரவிக்கைக்காரி' படத்தில் இடம் பெற்ற 'உச்சி வகுந்தெடுத்து பிச்சிப் பூ வச்ச கிளி', 'உன்னால் முடியும் தம்பி' திரைப்படத்தில் 'புஞ்சை உண்டு நஞ்சை உண்டு' போன்ற பல பாடல்கள் பிரபலமானவை. வடிவேலு நடித்த 'எலி' (2015) படத்தில் தனது கடைசிப் பாடல்களை எழுதினார்.
இலக்கிய வாழ்க்கை
பாரதிதாசனுக்குப் பிள்ளைத்தமிழ் பாடியவர் புலமைப்பித்தன். பெரியாரைக் குறித்து அவர் எழுதிய ‘அள்ளற் பழுத்த அழகு முகத்தின்’ என்ற கவிதை, பாரதிதாசனின் ‘தொண்டுசெய்து பழுத்த பழம்’ போலவே மேடைகளில் முழங்கப்பட்டு பிரபலமானது.
அரசியல் வாழ்க்கை
எம்ஜிஆரின் காலத்தில் சட்டமன்ற மேலவையின் துணைத் தலைவராகவும் அரசவைக் கவிஞராகவும் பதவி வகித்த புலமைப்பித்தன், ஜெயலலிதா காலத்தில் அதிமுகவின் அவைத்தலைவராகவும் பதவி வகித்தார். 1999 மக்களவைத் தேர்தலில் திமுக-பாஜக கூட்டணியை எதிர்த்து திராவிடர் கழகம் ஒருங்கிணைத்த பிரச்சார மேடைகளில் கி.வீரமணியுடன் புலமைப்பித்தனும் கலந்துகொண்டு பேசினார்.
விருதுகள், பரிசுகள்
- 2001-ல் தமிழக அரசின் பெரியார் விருது
சிறந்த பாடலாசிரியருக்கான விருதுகள்
- 1977-1978 மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்
- 1980-1981 எங்கம்மா மகாராணி
- 1993- பத்தினிப் பெண்
மறைவு
புலமைப்பித்தன் செப்டம்பர் 8, 2021 அன்று காலமானார்.
மதிப்பீடு
புலமைப்பித்தன் அரை நூற்றாண்டுக்காலம் தமிழ்த் திரைத்துறையில் பல்வேறு இயக்குனர்கள், நடிகர்களுக்காக பல வகையான பாடல்கள் எழுதினார். எளிய எழுச்சிமிக்க நடையில் எழுதப்பட்ட, சீர்திருத்தக் கருத்துக்கள் கொண்ட அவரது பல பாடல்கள் மக்களிடையே பிரபலமடைந்தன.
பாடல்கள் இடம்பெற்ற திரைப்படங்கள்
- 1968- குடியிருந்த கோயில்
- 1969- அடிமைப் பெண்
- 1971- குமரிக்கோட்டம்
- 1972- நல்ல நேரம்
- 1972- இதய வீணை
- 1972- நான் ஏன் பிறந்தேன்
- 1973- உலகம் சுற்றும் வாலிபன்
- 1974- சிரித்து வாழ வேண்டும்
- 1974- சிவகாமியின் செல்வன்
- 1974- நேற்று இன்று நாளை
- 1975- நினைத்ததை முடிப்பவன்
- 1975- பல்லாண்டு வாழ்க
- 1975- இதயக்கனி
- 1976- ஊருக்கு உழைப்பவன்
- 1976- உழைக்கும் கரங்கள்
- 1976- நீதிக்கு தலைவணங்கு
- 1976- ரோஜாவின் ராஜா
- 1976- மதன மாளிகை
- 1976- வரப்பிரசாதம்
- 1977- தீபம்
- 1978- புண்ணிய பூமி
- 1978- மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்
- 1978- திரிபுரசுந்தரி
- 1978- சொன்னது நீதானா
- 1978- நாடோடி
- 1979 ரோசாப்பூ ரவிக்கைக்காரி
- 1979- பூந்தளிர்
- 1979- கன்னிப்பருவத்திலே
- 1979- நீயா
- 1979- திசை மாறிய பறவைகள்
- 1979- சக்களத்தி
- 1980களில்
- 1980- காதல் கிளிகள்
- 1980- விஸ்வரூபம்
- 1981- நெஞ்சினிலே நினைவிருந்தால்
- 1981- சொர்க்கத்தின் திறப்பு விழா
- 1981- ராணுவ வீரன்
- 1981- சங்கர்லால்
- 1981- நீதி பிழைத்தது
- 1981- கோயில் புறா
- 1981- சாதிக்கொரு நீதி
- 1981- ஆணிவேர்
- 1982- இளஞ்சோடிகள்
- 1982- ஆட்டோ ராஜா
- 1982- ஊரும் உறவும்
- 1982- டார்லிங், டார்லிங், டார்லிங்
- 1982- வாலிபமே வா வா
- 1982- பட்டணத்து ராஜாக்கள்
- 1982- துணை
- 1982- அதிசய பிறவிகள்
- 1982- மஞ்சள் நிலா
- 1983- மெல்லப் பேசுங்கள்
- 1983- ஆயிரம் நிலவே வா
- 1983- துடிக்கும் கரங்கள்
- 1983- முந்தானை முடிச்சு
- 1983- மிருதங்க சக்கரவர்த்தி
- 1983- சாட்சி
- 1983- தங்கமகன்
- 1983- காஷ்மீர் காதலி
- 1984- கடமை
- 1984- பௌர்ணமி அலைகள்
- 1984- நீங்கள் கேட்டவை
- 1984- குழந்தையேசு
- 1984- திருப்பம்
- 1984- வெற்றி
- 1984- வாழ்க்கை
- 1984- வீட்டுக்கு ஒரு கண்ணகி
- 1984- சத்தியம் நீயே
- 1984- குடும்பம்
- 1984- சிரஞ்சீவி
- 1984- நூறாவது நாள்
- 1984- 24 மணி நேரம்
- 1984- கை கொடுக்கும் கை
- 1984- எழுதாத சட்டங்கள்
- 1984- நிலவு சுடுவதில்லை
- 1984- ஒசை
- 1984- வம்ச விளக்கு
- 1984- தாவணிக் கனவுகள்
- 1985- நீதியின் மறுபக்கம்
- 1985- ஒரு நல்லவன் ஒரு வல்லவன்
- 1985- அமுதகானம்
- 1985- காக்கிசட்டை
- 1985- பந்தம்
- 1985- அன்பின் முகவரி
- 1985- மண்ணுக்கேத்த பொண்ணு
- 1985- ராஜரிஷி
- 1985- நான் சிகப்பு மனிதன்
- 1985- மங்கம்மா சபதம்
- 1985- நேர்மை
- 1985- தண்டனை
- 1985- மனக்கணக்கு
- 1987- குடும்பம் ஒரு கோயில்
- 1986- விடிஞ்சா கல்யாணம்
- 1986- கண்ணத் தொறக்கணும் சாமி
- 1986- விடுதலை
- 1986- மருமகள்
- 1986- மனிதனின் மறுபக்கம்
- 1986- மௌனம் கலைகிறது
- 1986- வசந்த ராகம்
- 1986- சாதனை
- 1986- ஆனந்த கண்ணீர்
- 1986- நம்பினார் கெடுவதில்லை
- 1986- எனக்கு நானே நீதிபதி
- 1986- மிஸ்டர் பாரத்
- 1986- மகாசக்தி மாரியம்மன்
- 1986- மீண்டும் பல்லவி
- 1986- பன்னீர் நதிகள்
- 1986- கோடை மழை
- 1987- வைராக்கியம்
- 1987- காதல் பரிசு
- 1987- நாயகன்
- 1987- சட்டம் ஒரு விளையாட்டு
- 1987- ஊர்க்காவலன்
- 1987- முப்பெரும் தேவியர்
- 1987- பேர் சொல்லும் பிள்ளை
- 1987- தாலிதானம்
- 1988- கலியுகம்
- 1988- இது நம்ம ஆளு
- 1988- உன்னால் முடியும் தம்பி
- 1988- தம்பி தங்கக் கம்பி
- 1988- அண்ணாநகர் முதல் தெரு
- 1989- சிவா
- 1989- திருப்புமுனை
- 1989- ராஜநடை
- 1989- ராஜா ராஜாதான்
- 1990களில்
- 1990- சீதா
- 1990- முதலாளி அம்மா
- 1990- தைமாசம் பூவாசம்
- 1990- அதிசயப் பிறவி
- 1990- பணக்காரன்
- 1990- வாழ்க்கைச் சக்கரம்
- 1990- நடிகன்
- 1990- மௌனம் சம்மதம்
- 1990- ராஜா கைய வைச்சா
- 1990- சிறையில் பூத்த சின்ன மலர்
- 1991- நான் புடிச்ச மாப்பிள்ளை
- 1991- அழகன்
- 1991- ஈரமான ரோஜாவே
- 1991- தந்துவிட்டேன் என்னை
- 1991- இதய வாசல்
- 1992- ஒண்ணா இருக்க கத்துக்கணும்
- 1992- எல்லைச்சாமி
- 1992- முதல் குரல்
- 1993- காத்திருக்க நேரமில்லை
- 1993- எங்க தம்பி
- 1993- பாரம்பரியம்
- 1993- உள்ளே வெளியே
- 1993- தர்மசீலன்
- 1993- தாலாட்டு
- 1993- வள்ளி
- 1993- பத்தினிப் பெண்
- 1994- வியட்நாம் காலனி
- 1994- வீட்ல விசேஷங்க
- 1994- அமைதிப்படை
- 1995- தேடிவந்த ராசா
- 1996- ஞானப்பழம்
- 1996- சபாஷ்
- 1998- தர்மா
- 1998- செந்தூரம்
- 1999- ஊட்டி
- 1999- சின்னத்துரை
- 2000த்தில்
- 2000- இளையவன்
- 2000- பாரதி
- 2001- சீறிவரும் காளை
- 2001- காசி
- 2001- நந்தா
- 2002- ஜெயம்
- 2006- இம்சை அரசன் 23-ம் புலிகேசி
- 2008- இந்திரலோகத்தில் நா. அழகப்பன்
- 2008- இனிவரும் காலம்
- 2008- நேற்று இன்று நாளை
- 2013- சித்திரையில் நிலாச்சோறு
- 2013- வாலிபன்
- 2014- தெனாலிராமன்
- 2014- அரிமா நம்பி
- 2015- எலி
உசாத்துணை
- கவிஞர் புலமைப்பித்தன்: அஞ்சலி-தமிழ்ஹிந்து
- புலமைப்பித்தன் சங்கத் தமிழ்ப் பாச்சரம்
- புலமைப்பித்தன் -Tamilnation
- புலவர் புலமைப்பித்தன், மக்கள் ஓசை
- புலமைப்பித்தன் பாடல்கள், யூடியூப்.காம்
- காலத்தால் அழியாத புலமைப்பித்தன் பாடல்கள், யூடியூப்.காம்
✅Finalised Page