under review

புகழ்ச்சி மாலை

From Tamil Wiki

புகழ்ச்சி மாலை தமிழ்ச் சிற்றிலக்கிய வகைமைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். அகவல் அடியும், கலிப்பா அடியும் கலந்துவர வஞ்சிப்பாவால் பெண்களைப் பாடுவது புகழ்ச்சி மாலை. ஆண்களைப் பாடுவது நாமமாலை.

இதன் இலக்கணத்தை கூறும் இலக்கண விளக்க நூற்பா:

மயக்க அடிபெறும் வஞ்சிப்பாவால்
வியத்தகு நல்லார் விழுச்சீர் உரைத்தல்
புகழ்ச்சி மாலை; புருடர்க்கு உரைப்பின்
நாம மாலை யாம் என நவில்வர்
                                       - இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 866

பன்னிரு பாட்டியல்

வெள்ளடி இயலான் புணர்ப்போன் குறிப்பின்
தள்ளா இயலது புகழ்ச்சி மாலை.’
                                      பன்னிரு பாட்டியல்-287

என்று புகழ்ச்சி மாலைக்கு இலக்கணம் கூறுகிறது.

உசாத்துணை

வெளி இணைப்புகள்


✅Finalised Page