பதிற்றந்தாதி
பதிற்றந்தாதி தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். பத்து வெண்பாக்களால் அல்லது பத்துக் கலித்துறைப் பாடல்களால் அந்தாதியாக பாடப்பாடுவது பதிற்றந்தாதி
வெண்பாப் பத்துக் கலித்துறை பத்துப்
பண்புற மொழிதல் பதிற்றந் தாதி
- இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 841
பிரபந்த தீபிகை:
பத்துவெண்பா கலித்துறை பத்துடன் பொருள்
. பற்றிடும் தன்மை தோன்றப்
பலசிறப் புற்ற அந்தாதியாய்ப் பாடுவது
. பண்பதிற் றந்தாதி யாம் (பிரபந்த தீபிகை 19)
நவநீதப் பாட்டியல் :
பத்துவெண் பாக்கலித்துறையான் தற்செயலாம் பதிற்றந்தாதி.
- நவநீதப் பாட்டியல் 7
பிரசாந்த தீபிகம்:
பலசிறப்புற்ற அந்தாதியாய்ப் பாடுவது பண்பதிற் றந்தாதியாம்-
- பிரசாந்த தீபிகம் 19
என பதிற்றந்தாதியின் இலக்கணத்தை இலக்கண நூல்கள் கூறுகின்றன.
சில பதிற்றந்தாதி நூல்கள்
- கொக்குவிற் சித்திவிநாயகர் பதிற்றந்தாதி
- கொக்குவிற் கிருபாகர சிவசுப்பிரமணியர் பதிற்றந்தாதி
உசாத்துணை
- நவநீத நடனார், எஸ். கலியாண சுந்தரையரும் எஸ், ஜி. கணபதி ஐயரும் (பதிப்பாசிரியர்கள்), கலித்துறைப் பாட்டியல் என்னும் நவநீதப் பாட்டியல்
- கோபாலையர், தி. வே. (பதிப்பாசிரியர்), வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், திருவையாறு.
- சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), முத்துவீரியம்
வெளி இணைப்புகள்
✅Finalised Page