நாஞ்சில்நாடன் விருது
From Tamil Wiki
நாஞ்சில்நாடன் விருது, கோவை சிறுவாணி வாசகர் மையம் இலக்கிய அமைப்பு வழங்கும் விருது. 2018 முதல் இவ்விருது வழங்கப்படுகிறது.
நாஞ்சில்நாடன் விருது
கலை, இலக்கியம் சமூகம் ஆகிய துறைகளில் நேர்மையாகவும் துணிச்சலாகவும் தொடர்ந்து செயல்படுபவர்களுக்கு சிறுவாணி வாசகர் மையம், 2018 -ஆம் ஆண்டு முதல் எழுத்தாளர் நாஞ்சில்நாடன் பெயரில் விருதுகளை வழங்கி வருகிறது.
இவ்விருது, பரிசுத் தொகை ரூபாய் 50,000/-, கேடயம் மற்றும் சான்றிதழ் கொண்டது.
நாஞ்சில்நாடன் விருது பெற்றவர்கள்
ஆண்டு | விருதாளர் | இலக்கியச் செயல்பாடு |
---|---|---|
2018 | ஜீவா | ஓவியர், வடிவமைப்பாளர், எழுத்தாளர் |
2019 | முனைவர் ப. சரவணன் | எழுத்தாளர், ஆய்வாளர் |
2020 | கா.சு. வேலாயுதன் | எழுத்தாளர், இதழாளர் |
2021 | மணல்வீடு ஹரிகிருஷ்ணன் | எழுத்தாளர், இதழாளர், நாட்டுப்புறக் கலைஞர், ஆய்வாளர் |
2022 | 'கௌசிகா' செல்வராஜ் | சமூகசேவகர், களச் செயல்பாட்டாளர் |
2023 | அருட்செல்வப் பேரரசன் | எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், வடிவமைப்பாளர் |
உசாத்துணை
- சிறுவாணி வாசகர் மையம் இணையதளம்
- சிறுவாணி வாசகர் மைய ஒருங்கிணைப்பாளர் ஜி.ஆர். பிரகாஷ் நேர்காணல்: தென்றல் இதழ்
✅Finalised Page