under review

தானைமாலை

From Tamil Wiki

தானைமாலை தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். அரசன் போருக்குச் செல்லும்போது முன்னே செல்லும் கொடிப்படையின் சிறப்பை எடுத்துக் கூறிப் பாடுவது தானைமாலை.[1].

அடிக்குறிப்புகள்

  1. ஆசுஅற உணர்ந்த அரசர் பாவால்
    தூசிப் படையைச் சொல்வது தானை
    மாலை ஆகும்; வரலாற்று வஞ்சி
    ஞாலம்மேல் தானை நடப்பது சொல்லின்;
    செருக்களம் கூறின் செருக்கள வஞ்சி;
    விரித்து ஒரு பொருளை விளம்பின் அப்பெயராம்

    - இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 869

உசாத்துணை

இதர இணைப்புகள்


✅Finalised Page