under review

செயலூர்க் கொடுஞ்செங்கண்ணனார்

From Tamil Wiki

செயலூர்க் கொடுஞ்செங்கண்ணனார் கடைச்சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று திருவள்ளுவமாலையில் உள்ளது.

வாழ்க்கைக் குறிப்பு

செயலூர்க் கொடுஞ்செங்கண்ணனார் மதுரை கடைச்சங்காலப் புலவர்கள் நாற்பத்தி ஒன்பது பேர்களில் ஒருவர்.

இலக்கிய வாழ்க்கை

செயலூர்க் கொடுஞ்செங்கண்ணனார் பாடிய வெண்பா ஒன்று திருவள்ளுவமாலையில் உள்ளது.

பாடல் நடை

  • திருவள்ளுவமாலை

வேதப் பொருளை விரகால் விரித்துலகோர்
ஒதத் தமிழா லுரைசெய்தார் - ஆதலால்
உள்ளுந ருள்ளும் பொருளெல்லா முண்டென்ப
வள்ளுவர் வாய்மொழி மாட்டு

உசாத்துணை


✅Finalised Page