சீத்தலைச்சாத்தனார் (மணிமேகலை)
- சீத்தலைச்சாத்தனார் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: சீத்தலைச்சாத்தனார் (பெயர் பட்டியல்)
சீத்தலைச்சாத்தனார் (மணிமேகலை) (மதுரை கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்) தமிழ்ப் புலவர். மணிமேகலை எனும் காப்பியத்தை இயற்றினார்.
வாழ்க்கைக் குறிப்பு
சீத்தலைச்சாத்தனார் மதுரையில் கூலவணிகம் (கூலம்-தானியங்கள்) செய்து வாழ்ந்து வாழ்ந்தார். இதனால் அறிஞர்கள் மதுரை கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் என்ற முன்னொட்டோடு அழைக்கின்றனர். திருச்சியில் உள்ள சீத்தலை என்ற ஊரில் பிறந்தவராக இருக்கலாம். புத்த சமயக் கொள்கையைக் கொண்டிருந்த 'சாது' என்பதால் சாத்தன் என்று அழைக்கப்பட்டிருக்கலாம். சீத்தலைச் சாத்தனார் 'நன்னூற் புலவன்', 'தண்டமிழ்ச் சாத்தன்' என்ற சிறப்புப் பெயர்களால் அழைக்கப்பட்டார். இளங்கோவடிகள் இவரின் நண்பர்.
இலக்கிய வாழ்க்கை
சீத்தலைச்சாத்தனார் மணிமேகலை எனும் காப்பியத்தை இயற்றினார். இது பெளத்த சமயத்தைச் சார்ந்த கருத்துக்களைக் கொண்ட நூல்.
நூல் பட்டியல்
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
17-Oct-2023, 19:05:58 IST