under review

சின்னம்மை கதை

From Tamil Wiki

சின்னம்மை கதை (சின்னணைஞ்சி கதை) சிவனணைஞ்ச பெருமாள் கதையில் வரும் வண்ணான் பெண்ணான சின்னணைஞ்சியை மைய கதாபாத்திரமாக கொண்ட நாட்டார் கதைப் பாடல்.

கதைச் சுருக்கம்

தென்காசி மன்னன் சீவிலமாறனின் தங்கை மகனான சிவனணைஞ்ச பெருமாள் திருமணமான சின்னணைஞ்சி மேல் காதல் கொண்டான். அவள் அவனை மறுக்கவே சிவனணைஞ்ச பெருமாள் சின்னணைஞ்சி சாப்பிடும் வெற்றிலையில் வசிய மருந்து கலந்து கொடுத்தான்.

சின்னணைஞ்சி சிவனணைஞ்ச பெருமாளுடன் வந்தாள். இதனை அறிந்த மன்னன் சீவிலமாறன் இருவரையும் கொன்றதாகவும் பின் இருவரும் தெய்வமானதும் கதைப் பாட்டில் உள்ளது.

பார்க்க: சிவனணைஞ்ச பெருமாள் கதை


✅Finalised Page