கார் முல்லை(பொதுவியல் திணை)
கார் முல்லைபொதுவியல் திணையின் துறைகளில் ஒன்று.பொதுவியல் திணையின் கணவன் மனைவி இருவரிடயே நிகழும் உறவைக் கூறும் முல்லை பொதுவியற்பால என்னும் பிரிவில் அடங்கும் துறை. போருக்குச் சென்ற தலைவன் வருமுன் கார்காலம் வருவதைக் குறிப்பது.
விளக்கம்
புறப்பொருள் வெண்பாமாலை
புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் காவலையுடைய பாசறையிலிருந்து தலைவன் வரும்முன் அவன் வரவை அறிவிப்பதைப் போலக் கார்கால மேகம் வந்தது என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.
அரும் திறல் கட்டுஉரவர் வாராமுன்
கரும்கடல் முகந்து கார் வந்தற்று(கொளு 13.2)
வெண்பா
புனையும் பொலம்படைப் பொங்கு உளைமான் திண்தேர்
துனையும் துனைபடைத்து உன்னார் - முனையுள்
அடல் முகந்த தானை அவர் வாரா முன்னம்
கடல் முகந்து வந்தன்று கார் (276)
பொருள்: தலையாட்டத்தினையுடைய குதிரை பூட்டிய தேர்ப் படை களையுடைய போரினை மேற்கொண்டிருந்த தலைவர் வரும் முன்னே அவர் வரவை அறிவிப்பதுபோல் கடல் நீரை முகந்துகொண்டு வந்தது மேகம்
உசாத்துணை
பொதுவியல் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 26-Jun-2025, 18:47:07 IST