under review

காப்புமாலை

From Tamil Wiki

To read the article in English: Kappumalai. ‎


காப்புமாலை தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். இறைவன் காக்கவேண்டி மூன்று, ஐந்து அல்லது ஏழு பாடல்களால் பாடுவது காப்புமாலை[1][2][3][4].

அடிக்குறிப்புகள்

  1. காப்புமூன்று ஐந்துஏழ் காப்பு மாலையாம் - இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 832
  2. மூன்றுஐந்து ஏழ்பாத் தெய்வம் காக்கக் காப்புமாலை - நவநீதப் பாட்டியல் - பாடல் 6
  3. அரிய தெய்வம் காத்தலாக மூன்றுஐந்து ஏழின்
    அறை செய்யுள் காப்பு மாலை

    - பிரசாந்த தீபிகை - பாடல் 13
  4. கடவுள் காத்த லாக ஒருமூன்று
    ஐந்துஏ ழானும் அறைவது காப்பு
    மாலை எனப்பெயர் வைக்கப்படுமே

    - முத்துவீரியம் - யாப்பிலக்கணம் - பாடல் 100

உசாத்துணை

இதர இணைப்புகள்


✅Finalised Page