under review

களத்தூர்க்கிழார்

From Tamil Wiki

களத்தூர்க்கிழார் சங்ககாலப்புலவர்களில் ஒருவர். திருவள்ளுவமாலையில் இவருடைய பாடல் ஒன்று உள்ளது.

வாழ்க்கைக் குறிப்பு

மதுரைக்கு அருகிலுள்ள களத்தூரில் பிறந்தார். தமிழ் புளூட்டாக் நூலில் இவரின் பெயர் உள்ளது. ஆனால் சங்கப் புலவர் பட்டியலில் இவர் பெயர் இல்லை.

இலக்கிய வாழ்க்கை

களத்தூர்க்கிழாரின் பாடல் ஒன்று திருவள்ளுவமாலையில் உள்ளது.

பாடல் நடை

ஒருவ ரிருகுறளே முப்பாலி னேதுஞ்
தரும முதனான்குஞ் சாலும் அருமறைகள்
ஐந்துஞ் சமயநூ லாறுநம் வள்ளுவனார்
புந்தி மொழிந்த பொருள்

உசாத்துணை


✅Finalised Page