அள்ளன்
From Tamil Wiki
அள்ளன் சங்ககாலத்தில் வாழ்ந்த சீறூர் மன்னர்களில் ஒருவன். அகநானுற்றில் இவனைப் பற்றிய செய்திகள் உள்ளன.
வாழ்க்கைக்குறிப்பு
அள்ளன் அதியனின் நாட்டைக் கைப்பற்றிக்கொண்டபின் வெற்றிப் பெருமிதத்துடன் இருந்தான். அதியன் அள்ளனைத் தாக்கிப் பணியவைத்தான். அப்போது அதியன் வெற்றி முழக்கம் செய்யவில்லை. அவனது ஊதுகொம்பும், முரசும் முழக்கப்படாமல் செயலற்றுக் கிடந்தன. அள்ளனின் வீரத்தால் மகிழ்ந்து அதியன் அவ்வாறு செய்ததாக நம்பப்படுகிறது.அதன்பின் அள்ளன் படைத்துணையாய் இருந்து அதியனுக்கு வெற்றி பெற உதவினான். இவன் எந்த ஊரைச் சேர்ந்தவன் என்பது தெரியவில்லை. இவனைப்பாடியவர் மாமூலனார்.
உசாத்துணை
இணைப்புகள்
✅Finalised Page