நாஞ்சில்நாடன் விருது
From Tamil Wiki
Revision as of 06:45, 14 January 2024 by Tamizhkalai (talk | contribs)
நாஞ்சில்நாடன் விருது, கோவை சிறுவாணி வாசகர் மையம் இலக்கிய அமைப்பு வழங்கும் விருது. 2018 முதல் இவ்விருது வழங்கப்படுகிறது.
நாஞ்சில்நாடன் விருது
கலை, இலக்கியம் சமூகம் ஆகிய துறைகளில் நேர்மையாகவும் துணிச்சலாகவும் தொடர்ந்து செயல்படுபவர்களுக்கு சிறுவாணி வாசகர் மையம், 2018 -ஆம் ஆண்டு முதல் எழுத்தாளர் நாஞ்சில்நாடன் பெயரில் விருதுகளை வழங்கி வருகிறது.
இவ்விருது, பரிசுத் தொகை ரூபாய் 50,000/-, கேடயம் மற்றும் சான்றிதழ் கொண்டது.
நாஞ்சில்நாடன் விருது பெற்றவர்கள்
ஆண்டு | விருதாளர் | இலக்கியச் செயல்பாடு |
---|---|---|
2018 | ஜீவா | ஓவியர், வடிவமைப்பாளர், எழுத்தாளர் |
2019 | முனைவர் ப. சரவணன் | எழுத்தாளர், ஆய்வாளர் |
2020 | கா.சு. வேலாயுதன் | எழுத்தாளர், இதழாளர் |
2021 | மணல்வீடு ஹரிகிருஷ்ணன் | எழுத்தாளர், இதழாளர், நாட்டுப்புறக் கலைஞர், ஆய்வாளர் |
2022 | 'கௌசிகா' செல்வராஜ் | சமூகசேவகர், களச் செயல்பாட்டாளர் |
2023 | அருட்செல்வப் பேரரசன் | எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், வடிவமைப்பாளர் |
உசாத்துணை
- சிறுவாணி வாசகர் மையம் இணையதளம்
- சிறுவாணி வாசகர் மைய ஒருங்கிணைப்பாளர் ஜி.ஆர். பிரகாஷ் நேர்காணல்: தென்றல் இதழ்
✅Finalised Page