ஊர் நேரிசை
From Tamil Wiki
Revision as of 05:39, 15 November 2023 by Tamizhkalai (talk | contribs)
To read the article in English: Oor Nerisai.
ஊர் நேரிசை தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். பாட்டுடைத் தலைவனின் பெயரைத் தொண்ணூறு, எழுபது அல்லது ஐம்பது நேரிசை வெண்பாக்களால் பாடுவது ஊர் நேரிசை
இன்னிசை போல இறைவன் பெயர்ஊர்
தன்னின் இயல்வதுதான் நேரிசையே
- இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 830
பாட்டுடைத் தலைவன் பெயரைச் சார
நேரிசை வெண்பாத் தொண்ணூ றேனும்
எழுப தேனும் ஐம்ப தேனும்
அறைவது பெயர்நே ரிசையா கும்மே
முத்துவீரியம் - யாப்பிலக்கணம் - பாடல் 133
உசாத்துணை
- நவநீத நடனார், எஸ். கலியாண சுந்தரையரும் எஸ், ஜி. கணபதி ஐயரும் (பதிப்பாசிரியர்கள்), கலித்துறைப் பாட்டியல் என்னும் நவநீதப் பாட்டியல்
- கோபாலையர், தி. வே. (பதிப்பாசிரியர்), வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், திருவையாறு.
- சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), முத்துவீரியம்
இதர இணைப்புகள்
✅Finalised Page