under review

108 சிவ தாண்டவ விளக்கம்-கங்காவதாரணம்

From Tamil Wiki
Revision as of 08:28, 23 November 2023 by Meenambigai (talk | contribs) (Spell Check done)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
கங்காவதாரணம் ( பூவருகங்கை)

உயிர்களை அருளிக் காத்தலுக்காகச் சிவபெருமான் ஆடிய நடனங்கள் 108 சிவ தாண்டவங்களாகப் போற்றப்படுகின்றன. அவ்வகை நடனத்தின் போது செயல்படும் உடல் அசைவுகளான பல்வேறு வகை அங்ககாரங்களும் கரணங்களும் இணைந்ததே தாண்டவம் என அழைக்கப்படுகிறது.

108 சிவ தாண்டவ விளக்கம் - கங்காவதாரணம்

சிவபெருமான் ஆடிய 108 வகைச் சிவ தாண்டவங்களில் ஒன்று கங்காவதாரணம். தமிழில் இது 'பூவருகங்கை' என்று அழைக்கப்படுகிறது. பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது நூற்றி எட்டாவது கரணம்.

சிவனின் ஆடல்

ஆகாயத்தில் இருந்து கங்கை கீழே இறங்குவது போல இரு கைகளையும் பூமியில் ஊன்றி, உடலைப் பின்புறமாக வளைத்து, கால்களை இடுப்பு வரை நேரே தூக்கி ஆடுவது கங்காவதாரணம்.

உசாத்துணை


✅Finalised Page