under review

108 சிவ தாண்டவ விளக்கம்-அர்த்தரேசிதம்

From Tamil Wiki
Revision as of 18:10, 28 September 2023 by Meenambigai (talk | contribs) (Spell Check done)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
அர்த்தரேசிதம் (கையோச்சு)

உயிர்களை அருளிக் காத்தலுக்காகச் சிவபெருமான் ஆடிய நடனங்கள் 108 சிவ தாண்டவங்களாகப் போற்றப்படுகின்றன. அவ்வகை நடனத்தின் போது செயல்படும் உடல் அசைவுகளான பல்வேறு வகை அங்ககாரங்களும், கரணங்களும் இணைந்ததே தாண்டவம் என அழைக்கப்படுகிறது. சிவபெருமான், ஆடிய 108 வகைச் சிவ தாண்டவங்களில் ஒன்று அர்த்தரேசிதம்.

108 சிவ தாண்டவ விளக்கம் - அர்த்தரேசிதம்

108 வகைச் சிவ தாண்டவங்களில் ஒன்று அர்த்தரேசிதம். தமிழில் இது கையோச்சு என அழைக்கப்படுகிறது. பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது பன்னிரண்டாவது கரணம்.

சிவனின் ஆடல்

அலபத்ம முத்திரையோடு, இரு கைகளையும் சுழற்றி, இடது பக்கம் இடக்கையைச் சூசி ஹஸ்தமாக நீட்டி, கால்களைச் சிறிது பார்சுவமாக வளைத்து ஆடுவது அர்த்தரேசிதம்.

உசாத்துணை


✅Finalised Page