108 சிவ தாண்டவ விளக்கம்-விருச்சிகரேசிதம்
From Tamil Wiki
Revision as of 03:11, 27 October 2023 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Changed incorrect text: )
உயிர்களை அருளிக் காத்தலுக்காகச் சிவபெருமான் ஆடிய நடனங்கள் 108 சிவ தாண்டவங்களாகப் போற்றப்படுகின்றன. அவ்வகை நடனத்தின் போது செயல்படும் உடல் அசைவுகளான பல்வேறு வகை அங்ககாரங்களும், கரணங்களும் இணைந்ததே தாண்டவம் என அழைக்கப்படுகிறது.
108 சிவ தாண்டவ விளக்கம் - விருச்சிகரேசிதம்
சிவபெருமான் ஆடிய 108 வகைச் சிவ தாண்டவங்களில் ஒன்று விருச்சிகரேசிதம். தமிழில் இது 'தேள் எழுச்சி' என்று அழைக்கப்படுகிறது. பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது நாற்பத்தி ஆறாவது கரணம்.
சிவனின் ஆடல்
காலைத் தேள் போல வைத்து இருகைகளையும் ஸ்வஸ்திகமாக அமைத்து, இருமருங்கும் நீட்டி நின்று ஆடுவது விருச்சிகரேசிதம் என அழைக்கப்படுகிறது.
உசாத்துணை
- 108 ஆடலியக்கத் தமிழ் பெயரீடும் அமைவுகளும், முனைவர் போ.தெய்வநாயகம், அ.வடிவுதேவி, சு.விசுவநாதன், பதிப்புத்துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், முதல் பதிப்பு, 2004.
- நாட்டியக் கலை விளக்கம்: சுத்தானந்த பாரதியார்
- 108 SHIVA THANDAVAM PHOTOS
✅Finalised Page