under review

108 சிவ தாண்டவ விளக்கம்-தலவிலஸிதம்

From Tamil Wiki
Revision as of 07:42, 15 October 2023 by Meenambigai (talk | contribs) (Spell Check done)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
தலவிலஸிதம் (அங்கால் விளக்கம்)

உயிர்களை அருளிக் காத்தலுக்காகச் சிவபெருமான் ஆடிய நடனங்கள் 108 சிவ தாண்டவங்களாகப் போற்றப்படுகின்றன. அவ்வகை நடனத்தின் போது செயல்படும் உடல் அசைவுகளான பல்வேறு வகை அங்ககாரங்களும் கரணங்களும் இணைந்ததே தாண்டவம் என அழைக்கப்படுகிறது.

108 சிவ தாண்டவ விளக்கம் - தலவிலஸிதம்

சிவபெருமான் ஆடிய 108 வகைச் சிவ தாண்டவங்களில் ஒன்று தலவிலஸிதம். தமிழில் இது 'அங்கால் விளக்கம்' என்று அழைக்கப்படுகிறது. பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது ஐம்பத்தி ஆறாவது கரணம்.

சிவனின் ஆடல்

உயரத் தூக்கிய வலது காலுடன், பதாகக் கையை இருபக்கங்களிலும் தோளுக்கு மேலாக உயர்த்தி நின்று ஆடுவது தலவிலஸிதம்.

உசாத்துணை


✅Finalised Page