under review

108 சிவ தாண்டவ விளக்கம்-சர்ப்பிதம்

From Tamil Wiki
Revision as of 02:19, 27 October 2023 by Tamizhkalai (talk | contribs)
சர்ப்பிதம் (அரவியல்)

உயிர்களை அருளிக் காத்தலுக்காகச் சிவபெருமான் ஆடிய நடனங்கள் 108 சிவ தாண்டவங்களாகப் போற்றப்படுகின்றன. அவ்வகை நடனத்தின் போது செயல்படும் உடல் அசைவுகளான பல்வேறு வகை அங்ககாரங்களும் கரணங்களும் இணைந்ததே தாண்டவம் என அழைக்கப்படுகிறது.

108 சிவ தாண்டவ விளக்கம் - சர்ப்பிதம்

சிவபெருமான் ஆடிய 108 வகைச் சிவ தாண்டவங்களில் ஒன்று, சர்ப்பிதம். தமிழில் இது 'அரவியல்' என்று அழைக்கப்படுகிறது. பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது எண்பத்தி ஒன்றாவது கரணம்.

சிவனின் ஆடல்

வளைத்து வீசப்பட்ட கால்களுடன் தலையையும் சாய்த்து நின்று, அதற்குத் தக்கவாறு கைகளை ரேசிதமாக வைத்து மாறிமாறி அவ்வாறே இருமருங்கும் ஆடுவது சர்ப்பிதம்.

உசாத்துணை


✅Finalised Page