under review

108 சிவ தாண்டவ விளக்கம்-கிராந்தகம்

From Tamil Wiki
Revision as of 20:11, 2 December 2023 by Tamizhkalai (talk | contribs)
கிராந்தகம் (ஒருக்களிப்பு)

உயிர்களை அருளிக் காத்தலுக்காகச் சிவபெருமான் ஆடிய நடனங்கள் 108 சிவ தாண்டவங்களாகப் போற்றப்படுகின்றன. அவ்வகை நடனத்தின் போது செயல்படும் உடல் அசைவுகளான பல்வேறு வகை அங்ககாரங்களும், கரணங்களும் இணைந்ததே தாண்டவம் என அழைக்கப்படுகிறது.

108 சிவ தாண்டவ விளக்கம் - கிராந்தகம்

சிவபெருமான் ஆடிய 108 வகைச் சிவ தாண்டவங்களில் ஒன்று கிராந்தகம். தமிழில் இது 'ஒருக்களிப்பு' என்று அழைக்கப்படுகிறது. பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது ஐம்பத்தியோராவது கரணம்.

சிவனின் ஆடல்

பின் பக்கம் சாய்ந்து நின்று, வளைந்த காலைத் தூக்கி முன்பக்கம் விசிறி நின்று காற்படத்தைத் தரையில் தட்டுதலாகிய அதிகிராந்த சாரியில் நின்று, கைகளை மார்புக்கு நேராக அமைத்து நின்று ஆடுவது கிராந்தகம் என அழைக்கப்படுகிறது.

உசாத்துணை


✅Finalised Page