108 சிவ தாண்டவ விளக்கம்-உபசிருதகம்
From Tamil Wiki
உயிர்களை அருளிக் காத்தலுக்காகச் சிவபெருமான் ஆடிய நடனங்கள் 108 சிவ தாண்டவங்களாகப் போற்றப்படுகின்றன. அவ்வகை நடனத்தின் போது செயல்படும் உடல் அசைவுகளான பல்வேறு வகை அங்ககாரங்களும் கரணங்களும் இணைந்ததே தாண்டவம் என அழைக்கப்படுகிறது.
108 சிவ தாண்டவ விளக்கம் - உபசிருதகம்
சிவபெருமான் ஆடிய 108 வகைச் சிவ தாண்டவங்களில் ஒன்று உபசிருதகம். தமிழில் இது சார்பியல் என்று அழைக்கப்படுகிறது. பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது தொண்ணூற்றி இரண்டாவது கரணம்.
சிவனின் ஆடல்
வளைந்த காலைத் தூக்கி ஆஷிப்தசாரியை அமைத்து, இடது பக்கமாகத் திரும்பி கைகளைத் திரும்புவதால், உடலை வணங்கச் செய்து கைகளையும் லதாஹஸ்தமாகத் தொங்க விட்டு நின்று ஆடுவது உபசிருதகம்.
உசாத்துணை
- 108 ஆடலியக்கத் தமிழ் பெயரீடும் அமைவுகளும், முனைவர் போ.தெய்வநாயகம், அ.வடிவுதேவி, சு.விசுவநாதன், பதிப்புத்துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், முதல் பதிப்பு, 2004.
- நாட்டியக் கலை விளக்கம்: சுத்தானந்த பாரதியார்
- 108 SHIVA THANDAVAM PHOTOS
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.