under review

108 சிவ தாண்டவ விளக்கம்-அர்த்தமத்தல்லி

From Tamil Wiki
Revision as of 22:00, 8 October 2023 by Meenambigai (talk | contribs) (Spell Check done)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
அர்த்தமத்தல்லி (வீச்சு மத்தளிகை)

உயிர்களை அருளிக் காத்தலுக்காகச் சிவபெருமான் ஆடிய நடனங்கள் 108 சிவ தாண்டவங்களாகப் போற்றப்படுகின்றன. அவ்வகை நடனத்தின் போது செயல்படும் உடல் அசைவுகளான பல்வேறு வகை அங்ககாரங்களும், கரணங்களும் இணைந்ததே தாண்டவம் என அழைக்கப்படுகிறது.

அர்த்தமத்தல்லி- சிவ தாண்டவ விளக்கம்

சிவபெருமான் ஆடிய 108 வகைச் சிவ தாண்டவங்களில் ஒன்று அர்த்தமத்தல்லி. தமிழில் இது வீச்சு 'மத்தளிகை' என அழைக்கப்படுகிறது. பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது இருபத்தி எட்டாவது கரணம்.

சிவனின் ஆடல்

வலது கால் நுனியை ஊன்றி, இடதுக் காலைக் குறுக்காக அமைத்து, வலது கையைத் தொடைமேல் வைத்து, மத்தளக்காரன் போல் நின்று, இடது கையை மட்டும் வீசி நின்று ஆடுவது அர்த்தமத்தல்லி என அழைக்கப்படுகிறது.

உசாத்துணை


✅Finalised Page