108 சிவ தாண்டவ விளக்கம்-அபவித்தம்
உயிர்களை அருளிக் காத்தலுக்காகச் சிவபெருமான் ஆடிய நடனங்கள், 108 சிவ தாண்டவங்களாகப் போற்றப்படுகின்றன. அவ்வகை நடனத்தின் போது செயல்படும் உடல் அசைவுகளான பல்வேறு வகை அங்ககாரங்களும், கரணங்களும் இணைந்ததே தாண்டவம் என அழைக்கப்படுகிறது.
108 சிவ தாண்டவ விளக்கம் - அபவித்தம்
சிவபெருமான், ஆடிய 108 வகைச் சிவ தாண்டவங்களில் ஒன்று அபவித்தம். தமிழில் இது கிளிக்கை நுடக்கம் என்று அழைக்கப்படுகிறது. பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது நான்காவது கரணமாகும்.
சிவனின் ஆடல்
சதுஸ்ரமாக நின்று, கைகளைத் திருப்பிக் கொண்டு சமகாலத்தில் எடுத்து வைக்கப்பெற்ற சாரியைச்செய்து, கையையும் சுகதுண்டமாகச் செய்து தொடையின் முன்புறம் வைப்பதும், இடது கையைக் கடகாமுகமாகச் செய்து மார்பின் மேல் வைப்பதுமான நிலைக்கு அபவித்தம் - தமிழில் கிளிக்கை நுடக்கம் - என்று பெயர்.
உசாத்துணை
- 108 ஆடலியக்கத் தமிழ் பெயரீடும் அமைவுகளும், முனைவர் போ.தெய்வநாயகம், அ.வடிவுதேவி, சு.விசுவநாதன், பதிப்புத்துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், முதல் பதிப்பு, 2004.
- நாட்டியக் கலை விளக்கம்: சுத்தானந்த பாரதியார்
- 108 SHIVA THANDAVAM PHOTOS
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.