under review

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "'''விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்''' தமிழ் எழுத்தாளர் ஜெயமோகனின் வாசகர்களாலும், அவரது நண்பர்களாலும் உருவாக்கப்பட்ட இலக்கிய அமைப்பாகும். அவரது குறிப்பிடத்தக்க படைப்பான “...")
 
(Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
 
(28 intermediate revisions by 7 users not shown)
Line 1: Line 1:
'''விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்''' தமிழ் எழுத்தாளர் [[ஜெயமோகன்|ஜெயமோகனின்]] வாசகர்களாலும், அவரது நண்பர்களாலும் உருவாக்கப்பட்ட இலக்கிய அமைப்பாகும். அவரது குறிப்பிடத்தக்க படைப்பான “[[விஷ்ணுபுரம் (புதினம்)|விஷ்ணுபுரம்]]” புதினத்தின் பெயரே இதற்கு இடப்பட்டுள்ளது. இதன் தலைமை இடம் தற்போது [[கோவை]]. 2009 ஆகத்து மாதம் உருவாக்கப்பட்ட இவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கே. வி. அரங்கசாமி. இப்போது கோவையை மையமாக்கி செயல்படுகிறது. ஆண்டுதோறும் [[விஷ்ணுபுரம் விருது|விஷ்ணுபுரம் இலக்கிய விருதினை]] வழங்கி வருகிறது.
{{Read English|Name of target article=Vishnupuram Literary Circle|Title of target article=Vishnupuram Literary Circle}}
 
[[File:விஷ்ணுபுரம் இலக்கியவட்டம்.jpg|thumb|விஷ்ணுபுரம் இலக்கியவட்டம்]]
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் தமிழ் எழுத்தாளர் ஜெயமோகனின் வாசகர்களாலும், அவரது நண்பர்களாலும் உருவாக்கப்பட்ட இலக்கிய அமைப்பாகும். ஜெயமோகனின் குறிப்பிடத்தக்க படைப்பான "விஷ்ணுபுரம்" நாவலின் பெயரே இதற்கு இடப்பட்டுள்ளது. 2010-ல் உருவாக்கப்பட்ட இவ்வமைப்பின் பொது ஒருங்கிணைப்பாளர் கே.வி.அரங்கசாமி. விஷ்ணுபுரம் விருது விழா ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார். கோவை நகரை மையமாக்கி செயல்படுகிறது. அமெரிக்காவில் இவ்வமைப்பின் இணையமைப்பு உள்ளது. அதை வி.சௌந்தர்ராஜன் ஒருங்கிணைக்கிறார்.
== நோக்கம்==
== நோக்கம்==
விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் சீரிய இலக்கியத்தை பரப்பும் நோக்கம் கொண்டது. நல்ல எழுத்துக்களையும் எழுத்தாளர்களையும் கவனப்படுத்துவதும் ஆராய்வதும்தான் இலக்குகள். அதன்பொருட்டு கருத்தரங்கங்களையும் ஆய்வரங்கங்களையும் நடத்துகிறது.
எழுத்தாளர் [[ஜெயமோகன்|ஜெயமோகனின்]] நண்பர்கள் அடங்கிய விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் சீரிய இலக்கியத்தை பரப்பும் நோக்கம் கொண்டது.நல்ல எழுத்துக்களையும் எழுத்தாளர்களையும் கவனப்படுத்துவதும் ஆராய்வதும்தான் இலக்குகள்.அதன்பொருட்டு கருத்தரங்கங்களையும் ஆய்வரங்கங்களையும் நடத்துகிறது.
 
==தொடக்கம்==
விஷ்ணுபுரம் 2010 முதல் இலக்கியவட்டம் வருடம்தோறும் இலக்கியவிருதுகளை வழங்கிவருகிறது
ஜனவரி 26, 2010 அன்று ஜெயமோகனின் வாசகர்கள் மற்றும் நண்பர்களால் கோவையில் ஜெயமோகனுடன் ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. கே.வி.அரங்கசாமி, அருண், மரபின் மைந்தன் முத்தையா ஆகியோரின் முயற்சியால் அந்தச் சந்திப்பு ஒருங்கிணைக்கப்பட்டது. கோவை அன்னலட்சுமி உணவகத்தில் நண்பர்கள் கூட்டம் நிகழ்ந்தது. மாலையில் கோவை சன்மார்க்க சங்கத்தில் பொதுச்சந்திப்பும் உரையாடலும் நடைபெற்றது. இச்சந்திப்பில் கலந்துகொண்ட வாசகர்களின் எண்ணிக்கையும் வந்து சேர்ந்த நிதியின் அளவும் எதிர்பார்த்ததை விட மிகுதியாக இருந்தது. எஞ்சிய பணத்தைக் கொண்டு ஓர் இலக்கிய அமைப்பை உருவாக்குவது என முடிவெடுக்கப்பட்டது. ஜெயமோகன் எழுதிய [[விஷ்ணுபுரம்]] நாவலின் பெயரால் அந்த அமைப்பை உருவாக்கலாமென்று முடிவாகியது. அமைப்புக்கு ஓர் இடம் சார்ந்த அடையாளம் வரக்கூடாது என்பதனாலும், அது வாசகர் கூட்டமைப்பு என்பது தெளிவாக தெரியவேண்டும் என்பதனாலும் விஷ்ணுபுரம் நாவலின் பெயர் தெரிவு செய்யப்பட்டது.
 
== நிகழ்ச்சிகள் ==
=== விஷ்ணுபுரம் விருது விழா ===
* விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழா 2010 [ கோவை ] ஆ.மாதவன்<ref>{{cite news|title=A. Madhavan selected for Vishnupuram Literary Award|url=http://www.thehindu.com/arts/books/article950673.ece|accessdate=29 December 2012|newspaper=The Hindu}}</ref>
* விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழா 2011 [கோவை] [பூமணி]
*விஷ்ணுபுரம் விருதுவழங்கும் விழா 2012 [தேவதேவன்] [ஊட்டி]<ref>{{cite web|title=மனதை அமைதிப்படுத்தும் தேவதேவனின் கவிதைகள்|url=http://dinamani.com/edition_coimbatore/coimbatore/article1391138.ece|accessdate=28 December 2012}}</ref><ref>{{cite news|title=In the stillness of poetry|url=http://www.thehindu.com/life-and-style/metroplus/in-the-stillness-of-poetry/article4235002.ece|accessdate=29 December 2012|newspaper=The Hindu}}</ref>
*விஷ்ணுபுரம் விருதுவழங்கும் விழா 2013 [கோவை][தெளிவத்தை ஜோசப்]<ref>[http://www.thehindu.com/news/national/tamil-nadu/vishnupuram-award-for-sri-lankan-tamil-writer/article5314697.ece Vishnupuram Award for Srilankan Tamil Writer]</ref>
*விஷ்ணுபுரம் விருது ஞானக்கூத்தனுக்கு 2014 டிசம்பர்
*விஷ்ணுபுரம் விருது தேவதச்சனுக்கு 2015 டிசம்பர்
*விஷ்ணுபுரம் விருது வண்ணதாசனுக்கு வழங்கப்பட்டது 2016
*விஷ்ணுபுரம் விருது சீ.முத்துசாமிக்கு  வழங்கப்பட்டது 2017<ref>{{cite web|title=வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது|url=http://tamil.thehindu.com/general/literature/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81/article9223229.ece|accessdate=23 October 2016}}</ref>
*2017 - [[சீ. முத்துசாமி]]<ref>{{cite web|title=Writer C. Muthusamy honoured with Vishnu puram Award -2017|url=https://simplicity.in/coimbatore/english/news/20130/Writer-C-Muthusamy-honoured-with-amp039Vishnupuram---2017amp039-award}}</ref>
*விஷ்ணுபுரம் விருது எழுத்தாளர் ராஜ் கௌதமனுக்கு வழங்கப்பட்டது 2018<ref>{{cite web|title=Vishnupuram award presented |url=https://www.thehindu.com/news/cities/Coimbatore/vishnupuram-award-presented/article25854633.ece}}</ref>
*விஷ்ணுபுரம் விருது கவிஞர் அபிக்கு வழங்கப்பட்டது 2019<ref>{{cite web|title=Vishnupuram award to be conferred to Tamil Teacher and poet B M Habibulla |url=https://simplicity.in/coimbatore/english/news/60909/Vishnupuram-award-to-be-conferred-to-Tamil-Teacher-and-Poet-B-M-Abhibulla}}</ref>
*விஷ்ணுபுரம் விருது எழுத்தாளர் சுரேஷ்குமார இந்திரஜித்துக்கு வழங்கப்பட்டது 2020<ref>{{cite web|title=எழுத்தாளர் சுரேஷ்குமார இந்திரஜித்க்கு விஷ்ணுபுரம் விருது அறிவிப்பு |url=https://www.covaimail.com/?p=34623}}</ref>
*விஷ்ணுபுரம் விருது கவிஞர் விக்ரமாதித்யனுக்கு வழங்கப்படுகிறது (அறிவிப்பு) 2021<ref>{{cite web|title=Wanderer poet Vikramadityan wins Vishnupuram Award|url=https://thefederal.com/news/wanderer-poet-vikramadityan-wins-vishnupuram-award/}}</ref><ref>{{cite web |title=டிச.26-ல் கவிஞர் விக்ரமாதித்யனுக்கு விஷ்ணுபுரம் விருது: கோவை விழாவில் கவுரவம் |url=https://www.hindutamil.in/news/tamilnadu/749138-in-dec-26-vishnupuram-award-for-poet-vikramaditya-on-the-26th-honor-at-the-coimbatore-festival.html |website=Hindu Tamil Thisai |language=ta}}</ref><ref>{{cite web |title=Cong leader Jairam Ramesh to felicitate Vishnupuram awardee on December 26 {{!}} Entertainment |url=https://mynews24x7.in/cong-leader-jairam-ramesh-to-felicitate-vishnupuram-awardee-on-december-26-entertainment/ |website=MyNews 24x7 |date=20 December 2021}}</ref>
 
=== விஷ்ணுபுரம் - குமரகுருபரன் விருது விழா ===
*2017 - சபரிநாதனுக்கு விஷ்ணுபுரம் - குமரகுருபரன் விருது வழங்கும் விழா
*2018 - கண்டராதித்தனுக்கு விஷ்ணுபுரம் - குமரகுருபரன் விருது வழங்கும் விழா
*2019 - ச. துரைக்கு விஷ்ணுபுரம் - குமரகுருபரன் விருது வழங்கும் விழா
*2020 - வேணு வெட்ராயனுக்கு விஷ்ணுபுரம் - குமரகுருபரன் விருது வழங்கும் விழா
*2021 - மதாருக்கு விஷ்ணுபுரம் - குமரகுருபரன் விருது வழங்கும் விழா


=== பிற விழாக்கள் ===
2010-ம் ஆண்டிலேயே மே 10 அன்று கவிஞர் [[கலாப்ரியா]]வுக்கு ஓர் இலக்கியச் சந்திப்பு விஷ்ணுபுரம் அமைப்பு சார்பில் கோவையில் ஒருங்கிணைக்கப்பட்டது. அது விஷ்ணுபுரம் அமைப்பின் முதல் இலக்கிய நிகழ்ச்சி. அவ்வாண்டே ஓர் இலக்கிய விருது அளிக்கப்படவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. 2010 டிசம்பரில் ஆ.மாதவனுக்கு முதல் விஷ்ணுபுரம் விருது அளிக்கப்பட்டது.
* [[நாஞ்சில் நாடன்]] விழா (2010) - சென்னை
==செயல்முறை==
* [[கலாப்ரியா]] படைப்புக் களம் (2010) - கோவை
விஷ்ணுபுரம் அமைப்பு திட்டவட்டமான எழுதப்பட்ட விதிகளோ, பொறுப்பாளர்களோ இல்லாத நண்பர்கள் கூட்டமைப்பாகவே இயங்கி வருகிறது. தலைவர்,செயலர்,பொருளாளர் என எவருமில்லை. நிதிப்பரிமாற்றத்துக்காக விஷ்ணுபுரம் அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளது.
* [[யுவன் சந்திரசேகர்]] கவிதையரங்கு (2011) - கன்னியாகுமரி
==பணிகள்==
* [[தேவதேவன்]] கவிதை அரங்கு (2011) - நாகர்கோயில்
விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் நான்கு வகைகளில் இலக்கியப் பணிகளை ஆற்றிவருகிறது. இலக்கிய விருதுகள், இலக்கியச்க் கருத்தரங்குகள், புதுவாசகர் சந்திப்புகள் மற்றும் தமிழ் விக்கி இணையக் கலைக்களஞ்சியம்
* கல்பற்றா நாராயணன் கவிதையரங்கு (2013) - ஆலப்புழா
* ராய் மாக்ஸம் விழா (2015) - சென்னை
* எம்..சுசீலா பாராட்டு விழா (2018) - சென்னை
* அரசன் பாரதம் நிறைவு விழா (2020) - கோவை
* [[புவியரசு]] 90 (2021) - கோவை


=== ஆய்வரங்குகள் ===
இரண்டு இலக்கியவிருதுகள் விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் சார்பில் அளிக்கப்படுகின்றன. [[விஷ்ணுபுரம் இலக்கிய விருது]] ஆண்டுதோறும் மூத்த இலக்கியப்படைப்பாளி ஒருவருக்கு அவருடைய ஒட்டுமொத்தமான பங்களிப்புக்காக வழங்கப்படுகிறது. இந்த விருதுவிழா கோவையில் டிசம்பர் மாதம் நிகழ்கிறது. 2010 முதல் இவ்விருது வழங்கப்படுகிறது . [[விஷ்ணுபுரம்- குமரகுருபரன் விருது]] மறைந்த கவிஞர் குமரகுருபரன் நினைவாக வளர்ந்துவரும் இளங்கவிஞருக்கு வழங்கப்படுகிறது. விருதுவிழா சென்னையில் ஜூன்மாதம் நிகழ்கிறது.
*[[கலாப்ரியா|கலாப்பிரியா]] படைப்புக்களம் (2010) - கோவை (படைப்புகள் மீதான விமர்சன அரங்கம்)
*உதகை கவிதையரங்கு (2010) - நாராயணகுருகுலம் - உதகை
*[[தேவதேவன்]] கவிதையரங்கு (2011) - திற்பரப்பு
*உதகை காவிய அரங்கு (2011) - நாராயணகுருகுலம் - உதகை
*[[யுவன் சந்திரசேகர்|யுவன்]] கவிதையரங்கு (2011) - கன்னியாகுமரி
*விஷ்ணுபுரம் நாவல் வாசிப்பரங்கு [2012 ]காரைக்குடி
*இலக்கியவிவாத அரங்கு ஊட்டி 2012
*கல்பற்றா நாராயணன் கவிதையரங்கு[ 2012] ஆலப்புழா
*இலக்கிய விவாத அரங்கு ஏற்காடு [2013]
*வெண்முரசு விவாத அரங்கு மூணாறு 2014
*இலக்கிய விவாத அரங்கு ஊட்டி [2014]


=== வாசகர் சந்திப்புகள் ===
விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் தொடர்ச்சியாக இலக்கியக் கூட்டங்களை நிகழ்த்தி வருகிறது. ஆண்டுதோறும் ஊட்டி நாராயணகுருகுலத்தில் [[குரு நித்யா காவிய அரங்கு]] நிகழ்கிறது. குரு நித்ய சைதன்ய யதி நினைவாக இது நிகழ்கிறது. இதைத்தவிர படைப்பாளிகளை கௌரவிக்கும்பொருட்டு இலக்கியக்கூட்டங்களும் கருத்தரங்குகளும் ஒருங்கிணைக்கப்படுகின்றன.
*ஊட்டி இலக்கியச் சந்திப்பு மே 2015
*இளையவாசகர் சந்திப்பு ஈரோடு பெப்ருவரி 2016
*இளையவாசகர் சந்திப்பு கொல்லிமலை மார்ச் 2016
*இளையவாசகர் சந்திப்பு கோவை மார்ச் 2016
*இளையவாசகர் சந்திப்பு ஊட்டி ஏப்ரல் 2016
*சிங்கப்பூர் இலக்கியச் சந்திப்பு செப்டெம்பர் 2016


=== இணைய உரையாடல்கள் ===
விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் சார்பில் புதியவாசகர்கள் சந்திப்புகள் ஆண்டுக்கு மூன்றுமுறை தமிழ்நாட்டில் வெவ்வேறு ஊர்களில் நடத்தப்படுகின்றன. புதிய வாசகர்கள் எழுத்தாளர் ஜெயமோகனையும் பிறரையும் சந்திக்கவும், தங்கள் படைப்புகளை முன்வைத்து விவாதிக்கவும் வாய்ப்பளிக்கப்படுகிறது.
*[[அ. முத்துலிங்கம்]] (25.07.2020)
*[[நாஞ்சில் நாடன்]] (15.08.2020)
*[[தியோடர் பாஸ்கரன்]] (12.09.2020)
*[[மணிரத்னம்]] (27.09.2020)
*[[அ. கா. பெருமாள்]] (17.10.2020)
*[[கி. ராஜநாராயணன்]] (06.12.2020)


== வெளி இணைப்புகள் ==
7 மே 2022 முதல் [[தமிழ் விக்கி இணையக் கலைக்களஞ்சியம்]] விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் அமைப்பின் முன்னெடுப்பில் தொடங்கி நடைபெறுகிறது. தமிழ் விக்கி தொடக்க விழாவில் தமிழறிஞர்கள், தமிழக ஆய்வாளர்களுக்கு '[[தமிழ் விக்கி- தூரன் விருது|தமிழ் விக்கி தூரன் விருது]]’ அறிவிக்கப்பட்டது. முதல் விருது மானுடவியல் ஆய்வாளர் [[கரசூர் பத்மபாரதி|கரசூர் பத்மபாரதிக்கு]] ஈரோட்டில் வழங்கப்பட்டது.
*[https://vishnupuramvattam.in/ விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் இணையதளம்]
== உசாத்துணை ==
* [https://vishnupuramvattam.in/ விஷ்ணுபுரம் வட்டம் இணையதளம்]
* https://www.youtube.com/channel/UCupjLl0G0Wx_WizehL-LWTw
* [https://www.jeyamohan.in/141213/ விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் (அமெரிக்கா) – கடிதம்]
* [https://www.jeyamohan.in/159733/ விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் என்னும் இயக்கம்]
* [https://www.jeyamohan.in/7255/ விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் யாருடையது?]
* [https://www.jeyamohan.in/71148/ விஷ்ணுபுரம் அமைப்பு- இனியவை]
* [https://www.jeyamohan.in/157878/ நன்கொடை அளிப்பது பற்றி]
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:இலக்கிய அமைப்புகள்]]

Latest revision as of 11:11, 24 February 2024

To read the article in English: Vishnupuram Literary Circle. ‎

விஷ்ணுபுரம் இலக்கியவட்டம்

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் தமிழ் எழுத்தாளர் ஜெயமோகனின் வாசகர்களாலும், அவரது நண்பர்களாலும் உருவாக்கப்பட்ட இலக்கிய அமைப்பாகும். ஜெயமோகனின் குறிப்பிடத்தக்க படைப்பான "விஷ்ணுபுரம்" நாவலின் பெயரே இதற்கு இடப்பட்டுள்ளது. 2010-ல் உருவாக்கப்பட்ட இவ்வமைப்பின் பொது ஒருங்கிணைப்பாளர் கே.வி.அரங்கசாமி. விஷ்ணுபுரம் விருது விழா ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார். கோவை நகரை மையமாக்கி செயல்படுகிறது. அமெரிக்காவில் இவ்வமைப்பின் இணையமைப்பு உள்ளது. அதை வி.சௌந்தர்ராஜன் ஒருங்கிணைக்கிறார்.

நோக்கம்

எழுத்தாளர் ஜெயமோகனின் நண்பர்கள் அடங்கிய விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் சீரிய இலக்கியத்தை பரப்பும் நோக்கம் கொண்டது.நல்ல எழுத்துக்களையும் எழுத்தாளர்களையும் கவனப்படுத்துவதும் ஆராய்வதும்தான் இலக்குகள்.அதன்பொருட்டு கருத்தரங்கங்களையும் ஆய்வரங்கங்களையும் நடத்துகிறது.

தொடக்கம்

ஜனவரி 26, 2010 அன்று ஜெயமோகனின் வாசகர்கள் மற்றும் நண்பர்களால் கோவையில் ஜெயமோகனுடன் ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. கே.வி.அரங்கசாமி, அருண், மரபின் மைந்தன் முத்தையா ஆகியோரின் முயற்சியால் அந்தச் சந்திப்பு ஒருங்கிணைக்கப்பட்டது. கோவை அன்னலட்சுமி உணவகத்தில் நண்பர்கள் கூட்டம் நிகழ்ந்தது. மாலையில் கோவை சன்மார்க்க சங்கத்தில் பொதுச்சந்திப்பும் உரையாடலும் நடைபெற்றது. இச்சந்திப்பில் கலந்துகொண்ட வாசகர்களின் எண்ணிக்கையும் வந்து சேர்ந்த நிதியின் அளவும் எதிர்பார்த்ததை விட மிகுதியாக இருந்தது. எஞ்சிய பணத்தைக் கொண்டு ஓர் இலக்கிய அமைப்பை உருவாக்குவது என முடிவெடுக்கப்பட்டது. ஜெயமோகன் எழுதிய விஷ்ணுபுரம் நாவலின் பெயரால் அந்த அமைப்பை உருவாக்கலாமென்று முடிவாகியது. அமைப்புக்கு ஓர் இடம் சார்ந்த அடையாளம் வரக்கூடாது என்பதனாலும், அது வாசகர் கூட்டமைப்பு என்பது தெளிவாக தெரியவேண்டும் என்பதனாலும் விஷ்ணுபுரம் நாவலின் பெயர் தெரிவு செய்யப்பட்டது.

2010-ம் ஆண்டிலேயே மே 10 அன்று கவிஞர் கலாப்ரியாவுக்கு ஓர் இலக்கியச் சந்திப்பு விஷ்ணுபுரம் அமைப்பு சார்பில் கோவையில் ஒருங்கிணைக்கப்பட்டது. அது விஷ்ணுபுரம் அமைப்பின் முதல் இலக்கிய நிகழ்ச்சி. அவ்வாண்டே ஓர் இலக்கிய விருது அளிக்கப்படவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. 2010 டிசம்பரில் ஆ.மாதவனுக்கு முதல் விஷ்ணுபுரம் விருது அளிக்கப்பட்டது.

செயல்முறை

விஷ்ணுபுரம் அமைப்பு திட்டவட்டமான எழுதப்பட்ட விதிகளோ, பொறுப்பாளர்களோ இல்லாத நண்பர்கள் கூட்டமைப்பாகவே இயங்கி வருகிறது. தலைவர்,செயலர்,பொருளாளர் என எவருமில்லை. நிதிப்பரிமாற்றத்துக்காக விஷ்ணுபுரம் அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளது.

பணிகள்

விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் நான்கு வகைகளில் இலக்கியப் பணிகளை ஆற்றிவருகிறது. இலக்கிய விருதுகள், இலக்கியச்க் கருத்தரங்குகள், புதுவாசகர் சந்திப்புகள் மற்றும் தமிழ் விக்கி இணையக் கலைக்களஞ்சியம்

இரண்டு இலக்கியவிருதுகள் விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் சார்பில் அளிக்கப்படுகின்றன. விஷ்ணுபுரம் இலக்கிய விருது ஆண்டுதோறும் மூத்த இலக்கியப்படைப்பாளி ஒருவருக்கு அவருடைய ஒட்டுமொத்தமான பங்களிப்புக்காக வழங்கப்படுகிறது. இந்த விருதுவிழா கோவையில் டிசம்பர் மாதம் நிகழ்கிறது. 2010 முதல் இவ்விருது வழங்கப்படுகிறது . விஷ்ணுபுரம்- குமரகுருபரன் விருது மறைந்த கவிஞர் குமரகுருபரன் நினைவாக வளர்ந்துவரும் இளங்கவிஞருக்கு வழங்கப்படுகிறது. விருதுவிழா சென்னையில் ஜூன்மாதம் நிகழ்கிறது.

விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் தொடர்ச்சியாக இலக்கியக் கூட்டங்களை நிகழ்த்தி வருகிறது. ஆண்டுதோறும் ஊட்டி நாராயணகுருகுலத்தில் குரு நித்யா காவிய அரங்கு நிகழ்கிறது. குரு நித்ய சைதன்ய யதி நினைவாக இது நிகழ்கிறது. இதைத்தவிர படைப்பாளிகளை கௌரவிக்கும்பொருட்டு இலக்கியக்கூட்டங்களும் கருத்தரங்குகளும் ஒருங்கிணைக்கப்படுகின்றன.

விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் சார்பில் புதியவாசகர்கள் சந்திப்புகள் ஆண்டுக்கு மூன்றுமுறை தமிழ்நாட்டில் வெவ்வேறு ஊர்களில் நடத்தப்படுகின்றன. புதிய வாசகர்கள் எழுத்தாளர் ஜெயமோகனையும் பிறரையும் சந்திக்கவும், தங்கள் படைப்புகளை முன்வைத்து விவாதிக்கவும் வாய்ப்பளிக்கப்படுகிறது.

7 மே 2022 முதல் தமிழ் விக்கி இணையக் கலைக்களஞ்சியம் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் அமைப்பின் முன்னெடுப்பில் தொடங்கி நடைபெறுகிறது. தமிழ் விக்கி தொடக்க விழாவில் தமிழறிஞர்கள், தமிழக ஆய்வாளர்களுக்கு 'தமிழ் விக்கி தூரன் விருது’ அறிவிக்கப்பட்டது. முதல் விருது மானுடவியல் ஆய்வாளர் கரசூர் பத்மபாரதிக்கு ஈரோட்டில் வழங்கப்பட்டது.

உசாத்துணை


✅Finalised Page