வானம்பாடி

From Tamil Wiki
Revision as of 00:13, 14 February 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "thumb|வானம்பாடி வானம்பாடி (1971-1982) கோவையில் இருந்து வெளிவந்த சிற்றிதழ். தெலுங்கு மொழியில் உருவான திகம்பர கவிதை இயக்கத்தின் சாயலில் உருவானது. இடதுசாரிக் கருத்துக்களையும் ப...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
வானம்பாடி

வானம்பாடி (1971-1982) கோவையில் இருந்து வெளிவந்த சிற்றிதழ். தெலுங்கு மொழியில் உருவான திகம்பர கவிதை இயக்கத்தின் சாயலில் உருவானது. இடதுசாரிக் கருத்துக்களையும் புரட்சி அறைகூவல் கவிதைகளையும் வெளியிட்டது. தமிழ்ப்புதுக்கவிதையை எளிமைப்படுத்தி ‘மக்கள்மயமாக்கியது’ வானம்பாடி இதழ். வானம்பாடி மரபு என ஒரு கவிதைப்போக்கு உருவானது.நேரடியான அரசியல்குரலும், அறைகூவும் தொனியும் கொண்டவை இக்கவிதைகள்.

வரலாறு

கோயம்புத்தூரில் புவியரசு, ஞானி, சிற்பி ஆகியோரின் முன்னெடுப்பில் தொடங்கப்பட்ட சிற்றிதழ் வானம்பாடி. நவம்பர் 1971 ல் முதல் இதழ் வெளியானது. புவியரசின் மருமகனின் மலர்விழி அச்சங்க்கதில் அச்சடிக்கப்பட்டு புவியரசின் வீட்டு முகவரியில் இருந்து வெளிவந்தது. நெடுக்கடிநிலை அறிவிக்கப்பட்டதும் 'வானம்பாடி’ கவிதை இதழ் நின்றது

1981ல் ’சிற்பி' பொள்ளாச்சியிலிருந்து வானம்பாடி இதழை மீண்டும் பிரசுரிக்க தொடங்கினார். மலையாளம், தெலுங்கு மற்றும் பிற மொழிக் கவிதைகள் அதில் மொழிபெயர்ப்பாகி வந்தன. 1981 ஜனவரியில் 'உலகத் தமிழ் மாநாட்டுச் சிறப்பிதழ்' என்று 'வானம்பாடி' உருவாயிற்று. கவிதை சம்பந்தமான கட்டுரைகளும் பல கவிதைகளும் இதில் வெளியாயின. டிசம்பர் 82இல் வெளிவந்த வானம்பாடியின் ஈழத்துக் கவிதைச் சிறப்பிதழ் வெளியாயிற்று. அதன் பின் இதழ்கள் வெளிவரவில்லை. மொத்தம் 21 இதழ்கள் வெளியாயின.

உள்ளடக்கம்

வானம்பாடி இதழுக்கு முன்னோடியான இதழ் என ஞானி நடத்திய புதிய தலைமுறை இதழையும் பின்னர் வந்த தொடர்ச்சி என வேள்வி, நிகழ் ஆகிய இதழ்களையும் சொல்வதுண்டு. வானம்பாடியின் முதல் இதழில் கூடுகள் திறக்கின்றன என்ற மூன்று பக்கத் தலையங்கம் மகாகவி பாரதிக்கு அஞ்சலி செலுத்தியது.இது பூமியின் பிரளயங்களாய், காலத்தின் வசந்தங்களாய், யுகத்தின் சுவடுகளாய், நிறங்களில் சிவப்பாய், மண்ணை வலம்வரும் பறவைகளாய், மானுடம் பாடிவரும் வானம்பாடிகளின், விலையிலாக் கவிமடல் என்னும் முழக்கம் முதல் இதழில் இருந்தது.

கங்கைகொண்டான், சிற்பி, தமிழ்நாடன், அக்கினிப்புத்திரன், சக்திக்கனல், பா.செயப்பிரகாசம், பிரபஞ்சன், பாலா, கோ.இராஜாராம், மீரா, மு. மேத்தா, அப்துல் ரகுமான், ஈரோடு தமிழன்பன்,ஜன. சுந்தரம், முல்லை ஆதவன், இளமுருகு, தேனரசன், சி. ஆர். ரவீந்திரன், ஜீவ ஒளி, நித்திலன், அபி, இன்குலாப், கல்யாண்ஜி, கலாப்ரியா, பிரமிள், பிரபஞ்சன், மீரா, வண்ணநிலவன், விக்ரமாதித்யன் போன்றோரும் அதில் கவிதைகள் எழுதியுள்ளனர். பிரமிள், லா. ச. ராமாமிர்தம் பேட்டிகளும் வெளியியாகின.

இலக்கிய இடம்

வானம்பாடி விட்டு விட்டு குறைந்த இதழ்களே வெளிவந்தாலும் தமிழ்ப்பு துக்கவிதையில் ஒரு உடைவை உருவாக்கியது. சி.சுப்ரமணிய பாரதி வசனகவிதையை எழுதியபோது அதை கவிதை என அன்றைய தமிழ்க்கவிஞர்கள் ஏற்கவில்லை. ந.பிச்சமூர்த்தி அம்மரபை பின்பற்றி வசன கவிதைகள் எழுதினார். க. நா.சுப்ரமணியம் அதற்கு புதுக்கவிதை என்று பெயரிட்டு அதற்கான அழகியல்வடிவம் ஒன்றை முன்வைத்தார். அதைத்தொடர்ந்து எழுத்து சிற்றிதழில் புதுக்கவிதை இயக்கம் உருவாகியது. பிரமிள்,பசுவய்யா (சுந்தர ராமசாமி) , நகுலன், சி.மணி ஆகியோர் புதுக்கவிதை இயக்கத்தை முன்னெடுத்தனர். மரபான தமிழறிஞர்களும், கல்வித்துறையினரும் அவ்வியக்கத்தை கடுமையாக எதிர்த்தனர். இடதுசாரி இயக்கத்தவரும் எதிர்த்தனர். தீவிரமான விவாதங்களும் நிகழ்ந்தன. ஆனால் வானம்பாடி இதழில் எழுதியவர்கள் பெரும்பாலானவர்கள் கல்வித்துறை சார்ந்தவர்கள், அனைவருமே இடதுசாரிகள். அவர்கள் புதுக்கவிதையை ஏற்றுக்கொண்டனர். அது தமிழ் நவீனக்கவிதையில் ஒரு பெரிய மாற்றம்.

எழுத்து உருவாக்கிய நவீனக் கவிதைகள் வாசகனே கவிதையின் உட்பொருளை தன் கற்பனையில் உணர்ந்துகொள்ள இடம்விட்டன. இறைச்சி, உள்ளுறை என மரபுக்கவிதையின் இலக்கணத்தால் கூறப்படும் மறைந்திருக்கும் பொருளை முன்வைத்தன. ஆனால் வானம்பாடி கவிதைகள் அரசியல் நோக்கம் கொண்டவையாக இருந்தன. ஆகவே அவை அரசியல்மேடைகளில் பேசப்படும் உரத்த குரலையும், அணிகளும் அலங்காரங்களும் நிறைந்த மொழிநடையையும் கவிதைக்குள் கொண்டுவந்தன. கற்பனாவாத அம்சம் மேலோங்கிய, ஆணைகளையும் அறைகூவல்களையும் அறிவிப்புகளையும் முன்வைக்கும் கவிதைகளை வானம்பாடி இயக்கம் உருவாக்கியது. கலீல் கிப்ரான், ரூமி ,பாப்லோ நெரூதா ஆகியோரின் கவிதைகள்

உசாத்துணை