லோகேஷ் ரகுராமன்
லோகேஷ் ரகுராமன் (பிறப்பு: மே 23, 1990) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர். இணைய இதழ்களில் தொடர்ச்சியாக சிறுகதைகள், கட்டுரைகள் எழுதிவருகிறார்.
பிறப்பு, கல்வி
லோகேஷ் ரகுராமன் திருவாரூர் மாவட்டம் எரவாஞ்சேரியில் என்.எஸ். நடேசன், வேதாம்பாள் இணையருக்கு மே 23, 1990-ல் பிறந்தார். அக்கா மதுமதி. அரசர் மேல்நிலைப்பள்ளி தஞ்சாவூரில் பள்ளிக்கல்வி பயின்றார். மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் பொறியியலில் (CSE) இளங்கலைப் பட்டம் பெற்றார்.
தனிவாழ்க்கை
லோகேஷ் ரகுராமன் டிசம்பர் 15, 2019-ல் ஜெயசுகந்தியை திருமணம் செய்து கொண்டார். மகன் அத்வைத். தகவல் தொழில்நுட்பத் துறையில் (நெட்வொர்க்கிங் டொமைன்) பணியாற்றுகிறார். குடும்பத்துடன் பெங்களூரில் வசிக்கிறார்.
இலக்கிய வாழ்க்கை
லோகேஷ் ரகுராமனின் முதல் சிறுகதை 'திருஷ்டி' சொல்வனம் இதழில் வெளியானது. முதல் சிறுகதைத்தொகுப்பு 'விஷ்ணு வந்தார்' சால்ட் பதிப்பகம் வழியாக 2023-ல் வெளியானது. தன் இலக்கிய ஆதர்சங்களாக புதுமைப்பித்தன், தி.ஜானகிராமன், ஜெயமோகன், யுவன் சந்திரசேகர் ஆகியோரைக் குறிப்பிடுகிறார்.
நூல் பட்டியல்
சிறுகதைத்தொகுப்பு
- விஷ்ணு வந்தார் (2023)
- அரோமா (2024)
இணைப்புகள்
- லோகேஷ் ரகுராமன்: வலைதளம்
- விழைவின் துயரமும் இசைவின் மகத்துவமும்: இவான் இலியிச்சின் மரணம்: லோகேஷ் ரகுராமன்: தமிழினி
- லோகேஷ் ரகுராமன் படைப்புகள்: தமிழினி
- லோகேஷ் ரகுராமன் ஏற்புரை - விஷ்ணு வந்தார் (சிறுகதைகள்): shrutitv
- ஒரு வட்டம் பல மையங்கள்: குள்ளச் சித்தன் சரித்திரம் நாவலை முன்வைத்து: லோகேஷ் ரகுராமன்: வல்லினம்
✅Finalised Page