under review

லோகேஷ் ரகுராமன்

From Tamil Wiki
Revision as of 19:56, 1 January 2024 by Logamadevi (talk | contribs)
லோகேஷ் ரகுராமன்

லோகேஷ் ரகுராமன் (பிறப்பு: மே 23, 1999) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர். இணைய இதழ்களில் தொடர்ச்சியாக சிறுகதைகள், கட்டுரைகள் எழுதிவருகிறார்.

பிறப்பு, கல்வி

லோகேஷ் ரகுராமன் திருவாரூர் மாவட்டம் எரவாஞ்சேரியில் என்.எஸ். நடேசன், வேதாம்பாள் இணையருக்கு மே 23, 1999-ல் பிறந்தார். தங்கை மதுமதி. அரசர் மேல்நிலைப்பள்ளி தஞ்சாவூரில் பள்ளிக்கல்வி பயின்றார். மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் பொறியியலில் (CSE) இளங்கலைப் பட்டம் பெற்றார்.

தனிவாழ்க்கை

லோகேஷ் ரகுராமன் டிசம்பர் 15, 2019-ல் ஜெயசுகந்தியை திருமணம் செய்து கொண்டார். மகன் அத்வைத். தகவல் தொழில்நுட்பத் துறையில் (நெட்வொர்க்கிங் டொமைன்) பணியாற்றுகிறார். குடும்பத்துடன் பெங்களூரில் வசிக்கிறார்.

இலக்கிய வாழ்க்கை

லோகேஷ் ரகுராமனின் முதல் சிறுகதை 'திருஷ்டி' சொல்வனம் இதழில் வெளியானது. முதல் சிறுகதைத்தொகுப்பு 'விஷ்ணு வந்தார்' சால்ட் பதிப்பகம் வழியாக 2023-ல் வெளியானது. தன் இலக்கிய ஆதர்சங்களாக புதுமைப்பித்தன், தி.ஜானகிராமன், ஜெயமோகன், யுவன் சந்திரசேகர் ஆகியோரைக் குறிப்பிடுகிறார்.

நூல் பட்டியல்

சிறுகதைத்தொகுப்பு
  • விஷ்ணு வந்தார் (2023)

இணைப்புகள்


✅Finalised Page