under review

ம.இலெ. தங்கப்பா: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 5: Line 5:
இலெ. தங்கப்பா (M.L. Thangappa) ( மார்ச் 8,1934 - மே 31, 2018) எழுத்தாளர், தமிழ்ப் பேராசிரியர், தனித்தமிழ்வாதி, மரபிலக்கிய அறிஞர். சங்க இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த தமிழறிஞர். இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்றவர்.  
இலெ. தங்கப்பா (M.L. Thangappa) ( மார்ச் 8,1934 - மே 31, 2018) எழுத்தாளர், தமிழ்ப் பேராசிரியர், தனித்தமிழ்வாதி, மரபிலக்கிய அறிஞர். சங்க இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த தமிழறிஞர். இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்றவர்.  
==பிறப்பு, கல்வி==
==பிறப்பு, கல்வி==
மதனபாண்டியன் இலெனின் தங்கப்பா என்னும் ம.இலெ. தங்கப்பா மார்ச் 8, 1934-ல் திருநெல்வேலி மாவட்டம், குறும்பலாப்பேரியில் புலவர் ஆ. மதனபாண்டியன்,-ம. இரத்தினமணி இணையரின் மகனாகப் பிறந்தார். பாரம்பரிய விவசாயக் குடும்பம். தந்தை விருதுநகர் சத்திரிய வித்யாசாலையிலும் அருப்புக்கோட்டையிலும் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார். ம.இலெ. தங்கப்பா இளவயதிலேயே தந்தையிடமிருந்து கம்பராமாயணம், வில்லிபாரதம், தனிப்பாடல் திரட்டு ஆகியவற்றைக் கற்றுத் தேர்ந்தார்.  
மதனபாண்டியன் இலெனின் தங்கப்பா என்னும் ம.இலெ. தங்கப்பா மார்ச் 8, 1934-ல் திருநெல்வேலி மாவட்டம், குறும்பலாப்பேரியில் புலவர் ஆ. மதனபாண்டியன் - ம. இரத்தினமணி இணையரின் மகனாகப் பிறந்தார். பாரம்பரிய விவசாயக் குடும்பம். தந்தை விருதுநகர் சத்திரிய வித்யாசாலையிலும் அருப்புக்கோட்டையிலும் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார். ம.இலெ. தங்கப்பா இளவயதிலேயே தந்தையிடமிருந்து கம்பராமாயணம், வில்லிபாரதம், தனிப்பாடல் திரட்டு ஆகியவற்றைக் கற்றுத் தேர்ந்தார்.  


ம.இலெ. தங்கப்பா குறும்பலாப்பேரியில் திருநெல்வேலி மறைமாவட்ட ஆசிரியர்சங்கம் நடத்திவந்த தொடக்கப்பள்ளியில் பயின்றார். ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை ஏ.வி,. பள்ளியில் பயின்றார். கோபாலசமுத்திரம் அரசுப்பள்ளியில் உயர்நிலைப்படிப்பை முடித்தார். 1950ல் பள்ளியிறுதிப்படிப்பை முடித்து பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரியில் இடைநிலை படிப்பில் சேஎர்ந்தார். 1951 ல் பொருளியலில் இளங்கலைப் படிப்பில் சேர்ந்து 1954 ல் பட்டம்பெற்றார். ம.இலெ. தங்கப்பா சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சிப்பள்ளியில் ஆசிரியர் பயிற்சி பெற்றார். தனித்தேர்வுமுறையில் தமிழில் முதுகலைப் பட்டம்பெற்றார்.  
ம.இலெ. தங்கப்பா குறும்பலாப்பேரியில் திருநெல்வேலி மறைமாவட்ட ஆசிரியர்சங்கம் நடத்திவந்த தொடக்கப்பள்ளியில் பயின்றார். ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை ஏ.வி,. பள்ளியில் பயின்றார். கோபாலசமுத்திரம் அரசுப்பள்ளியில் உயர்நிலைப்படிப்பை முடித்தார். 1950-ல் பள்ளியிறுதிப்படிப்பை முடித்து பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரியில் இடைநிலை படிப்பில் சேஎர்ந்தார். 1951-ல் பொருளியலில் இளங்கலைப் படிப்பில் சேர்ந்து 1954-ல் பட்டம்பெற்றார். ம.இலெ. தங்கப்பா சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சிப்பள்ளியில் ஆசிரியர் பயிற்சி பெற்றார். தனித்தேர்வுமுறையில் தமிழில் முதுகலைப் பட்டம்பெற்றார்.  
== கல்விப்பணி ==
== கல்விப்பணி ==
பட்டம் பெற்றதும் ம.இலெ. தங்கப்பாவுக்கு பாளையங்கோட்டை தூய யோவான் உயர்நிலைப்பள்ளியில் பயிற்சிபெறாத ஆசிரியராகப் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. ஓராண்டுக்குப்பின் பரமக்குடி அரசர் சேதுபதி அரசு உயநிலைப்பள்ளியிலும் பயிற்சிபெறாத ஆசிரியராகப் பணியாற்றினார். 1956ல் சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சிக்கல்லூரியில் சேர்ந்து பட்டம்பெற்ரார். சென்னைக்கு அருகிலுள்ள திருநின்றவூரில் தாசர் உயர்நிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணியில் சேர்தார். 1959ல் பாண்டிசேரி அரசினர் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் கிடைத்தது. பாண்டிசேரி மாநிலத்தில் காரைக்காலுக்கு அருகே உள்ள திருமலைராயன் பட்டினத்தில் பணிக்கு சேர்ந்தார். இரண்டு ஆண்டுகளுக்குப்பின் புதுச்சேரியில் புராணசிங்கம் உயர்நிலைப் பள்ளி ஆசிரியராக 1961 முதல் 1968 வரை பணியாற்றினார்.
பட்டம் பெற்றதும் ம.இலெ. தங்கப்பாவுக்கு பாளையங்கோட்டை தூய யோவான் உயர்நிலைப்பள்ளியில் பயிற்சிபெறாத ஆசிரியராகப் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. ஓராண்டுக்குப்பின் பரமக்குடி அரசர் சேதுபதி அரசு உயர்நிலைப்பள்ளியிலும் பயிற்சிபெறாத ஆசிரியராகப் பணியாற்றினார். 1956-ல் சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சிக்கல்லூரியில் சேர்ந்து பட்டம்பெற்ரார். சென்னைக்கு அருகிலுள்ள திருநின்றவூரில் தாசர் உயர்நிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணியில் சேர்தார். 1959-ல் பாண்டிசேரி அரசினர் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் கிடைத்தது. பாண்டிசேரி மாநிலத்தில் காரைக்காலுக்கு அருகே உள்ள திருமலைராயன் பட்டினத்தில் பணிக்கு சேர்ந்தார். இரண்டு ஆண்டுகளுக்குப்பின் புதுச்சேரியில் புராணசிங்கம் உயர்நிலைப் பள்ளி ஆசிரியராக 1961 முதல் 1968 வரை பணியாற்றினார்.
ம.இலெ. தங்கப்பா 1968 முதல் புதுச்சேரி தாகூர் கலைக் கல்லூரியில் இருபது வருடங்கள் பணியாற்றினார். நடுவே நான்காண்டுகாலம் காரைக்காலில் அறிஞர் அண்ணா கலைக்கல்லூரியில் பணியாற்றிய பின்னர் பாரதிதாசன் மகளிர் கல்லூரியில் ஐந்து வருடங்கள் தமிழ் விரிவுரையாளராகவும், பேராசிரியராகவும் பணியாற்றி 1994-ல் ஓய்வு பெற்றார். ம.இலெ. தங்கப்பா ஏறத்தாழ நாற்பதாண்டுக்காலம் ஆசிரியராகப் பணியாற்றிய அனுபவம்  
ம.இலெ. தங்கப்பா 1968 முதல் புதுச்சேரி தாகூர் கலைக் கல்லூரியில் இருபது வருடங்கள் பணியாற்றினார். நடுவே நான்காண்டுகாலம் காரைக்காலில் அறிஞர் அண்ணா கலைக்கல்லூரியில் பணியாற்றிய பின்னர் பாரதிதாசன் மகளிர் கல்லூரியில் ஐந்து வருடங்கள் தமிழ் விரிவுரையாளராகவும், பேராசிரியராகவும் பணியாற்றி 1994-ல் ஓய்வு பெற்றார். ம.இலெ. தங்கப்பா ஏறத்தாழ நாற்பதாண்டுக்காலம் ஆசிரியராகப் பணியாற்றிய அனுபவம்.
==தனிவாழ்க்கை==
==தனிவாழ்க்கை==
பாண்டிச்சேரியில் ம.இலெ. தங்கப்பா வசித்த வீட்டுக்கு வானகம் என்று பெயர். இந்தி ஆசிரியையாக இருந்த விசாலாட்சியை காதலித்து மணம்புரிந்துகொண்டார். தங்கப்பா கிறிஸ்தவப் பின்னணி கொண்டவர். விசாலாட்சி பிராமண பின்னணியில் இருந்து வந்தவர், ஆகவே அவர்களின் திருமணத்திற்கு எதிர்ப்பு இருந்தது. 16 மார்ச் 1959ல் இருவரும் கோவேந்தன் முன்னிலையில் பதிவுத்திருமணம் செய்துகொண்டனர். மூன்றாண்டுக்கு பிறகே அவர்கள் தங்கள் திருமணத்தை பெருஞ்சித்திரனார் தலைமையில் நிகழ்ந்த விழாவில் அறிவித்தனர்.  
பாண்டிச்சேரியில் ம.இலெ. தங்கப்பா வசித்த வீட்டுக்கு வானகம் என்று பெயர். இந்தி ஆசிரியையாக இருந்த விசாலாட்சியை காதலித்து மணம்புரிந்துகொண்டார். தங்கப்பா கிறிஸ்தவப் பின்னணி கொண்டவர். விசாலாட்சி பிராமண பின்னணியில் இருந்து வந்தவர், ஆகவே அவர்களின் திருமணத்திற்கு எதிர்ப்பு இருந்தது. மார்ச் 16, 1959-ல் இருவரும் கோவேந்தன் முன்னிலையில் பதிவுத்திருமணம் செய்துகொண்டனர். மூன்றாண்டுக்கு பிறகே அவர்கள் தங்கள் திருமணத்தை பெருஞ்சித்திரனார் தலைமையில் நிகழ்ந்த விழாவில் அறிவித்தனர்.  


சாலாட்சி தலைமையாசிரியராகப் பணியாற்றினார். தனித்தமிழ் ஆர்வம் கொண்டிருந்த அவர் இந்தி ஆசிரியை பணியை விடுத்து வரலாற்றில் பட்டம் பெற்று வரலாற்றாசிரியை ஆனார். நல்லாசிரியர் விருது பெற்ற விசாலாட்சி பணி ஒய்விற்குப்பின் புதுவை தாய்த்தமிழ்ப்பள்ளியில் ஊதியம் பெறாத ஆசிரியராகப் பணியாற்றினார். தன் பெயரை தனித்தமிழில் தடங்கண்ணி என்று மாற்றிக்கொண்டார்.  
சாலாட்சி தலைமையாசிரியராகப் பணியாற்றினார். தனித்தமிழ் ஆர்வம் கொண்டிருந்த அவர் இந்தி ஆசிரியை பணியை விடுத்து வரலாற்றில் பட்டம் பெற்று வரலாற்றாசிரியை ஆனார். நல்லாசிரியர் விருது பெற்ற விசாலாட்சி பணி ஒய்விற்குப்பின் புதுவை தாய்த்தமிழ்ப்பள்ளியில் ஊதியம் பெறாத ஆசிரியராகப் பணியாற்றினார். தன் பெயரை தனித்தமிழில் தடங்கண்ணி என்று மாற்றிக்கொண்டார்.  
Line 27: Line 27:
ம.இலெ.தங்கப்பா சந்தத்தில் ஈடுபாடு கொண்டவர். ஆகவே பாடல்கள் எழுதுவதிலேயே முதன்மை ஆர்வம் கொண்டிருந்தார். பாரதிதாசன் நடத்திய [[குயில்]] இதழில் ம.இலெனின் என்னும் பெயரில் எழுதத் தொடங்கினார். பாரதிதாசன், பெருஞ்சித்திரனார், கண்ணதாசன், கோவேந்தன் உள்ளிட்ட தமிழ்ப்பற்றாளர்களுடன் தொடர்புகொண்டிருந்தார். தங்கப்பாவின் படைப்புகள் தொடக்கத்தில் தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தென்றல், வானம்பாடி, பூஞ்சோலை, இனமுழக்கம், தமிழகம், உரிமை வேட்கை, கைகாட்டி, கவிஞன், மீட்போலை, அரும்பு, விருந்து, கவியுகம், பொதுமை, தெளிதமிழ், வெல்லும் தூயதமிழ், கண்ணியம் முதலான இதழ்களில் வெளிவந்தன.  
ம.இலெ.தங்கப்பா சந்தத்தில் ஈடுபாடு கொண்டவர். ஆகவே பாடல்கள் எழுதுவதிலேயே முதன்மை ஆர்வம் கொண்டிருந்தார். பாரதிதாசன் நடத்திய [[குயில்]] இதழில் ம.இலெனின் என்னும் பெயரில் எழுதத் தொடங்கினார். பாரதிதாசன், பெருஞ்சித்திரனார், கண்ணதாசன், கோவேந்தன் உள்ளிட்ட தமிழ்ப்பற்றாளர்களுடன் தொடர்புகொண்டிருந்தார். தங்கப்பாவின் படைப்புகள் தொடக்கத்தில் தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தென்றல், வானம்பாடி, பூஞ்சோலை, இனமுழக்கம், தமிழகம், உரிமை வேட்கை, கைகாட்டி, கவிஞன், மீட்போலை, அரும்பு, விருந்து, கவியுகம், பொதுமை, தெளிதமிழ், வெல்லும் தூயதமிழ், கண்ணியம் முதலான இதழ்களில் வெளிவந்தன.  
====== குறுங்காவியங்கள் ======
====== குறுங்காவியங்கள் ======
சி.சுப்ரமணிய பாரதியாரின் குயில்பாட்டு அளித்த தூண்டுதலில் ம.இலெ.தங்கப்பா ஆந்தையுடன் பாவலர் ஒருவர் பேசுவதாக உருவகித்து 1955ல் எழுதிய ஆந்தைப்பாட்டு அவர் எழுதிய முதல் குறும்பாவியம். ஆயிரம் வரிகளுக்கு மேலே அமைந்த அந்த நீள்கவிதை சமூகவிமர்சனத் தன்மை கொண்டது. பதினெட்டு ஆண்டுகளுக்குப்பின் 1983 ல்தான் அது அச்சேறியது. 1955ல் பரமக்குடியில் பணியாற்றும்போது அடித்த புயல் ஒரு குறுங்காவியத்தை எழுதினார். பரணியின் வடிவில் இருந்த அந்நூலுக்கு கிரணி என தலைப்பிட்டிருந்தார். அந்நூலை இரண்டாம் பகுதியை எழுதிச்சேர்த்து நாற்பத்தைந்து ஆண்டுகளுக்குப்பின்னர் 2000 த்தில் புயற்பாட்டு என்னும் தலைப்பில் வெளியிட்டார்.
சி.சுப்ரமணிய பாரதியாரின் குயில்பாட்டு அளித்த தூண்டுதலில் ம.இலெ.தங்கப்பா ஆந்தையுடன் பாவலர் ஒருவர் பேசுவதாக உருவகித்து 1955-ல் எழுதிய ஆந்தைப்பாட்டு அவர் எழுதிய முதல் குறும்பாவியம். ஆயிரம் வரிகளுக்கு மேலே அமைந்த அந்த நீள்கவிதை சமூகவிமர்சனத் தன்மை கொண்டது. பதினெட்டு ஆண்டுகளுக்குப்பின் 1983-ல் தான் அது அச்சேறியது. 1955-ல் பரமக்குடியில் பணியாற்றும்போது அடித்த புயல் ஒரு குறுங்காவியத்தை எழுதினார். பரணியின் வடிவில் இருந்த அந்நூலுக்கு கிரணி என தலைப்பிட்டிருந்தார். அந்நூலை இரண்டாம் பகுதியை எழுதிச்சேர்த்து நாற்பத்தைந்து ஆண்டுகளுக்குப்பின்னர் 2000-த்தில் புயற்பாட்டு என்னும் தலைப்பில் வெளியிட்டார்.
====== மொழியாக்கங்கள் ======
====== மொழியாக்கங்கள் ======
ம.இலெ.தங்கப்பா டக்ளஸ் மலோக் Douglas Malloch என்னும் அமெரிக்கக் கவிஞர் எழுதிய Be the Best என்னும் கவிதையை ஒரு மாணவி வாசிக்கக் கேட்டு கவரப்பட்டு அதை மொழியாக்கம் செய்தார். தங்கப்பாவின் மொழியாக்க முயற்சிகளுக்கு அவரை தன் ஆசிரியராக கருதிய ஆ.இரா.வேங்கடாசலபதி ஒரு தூண்டுதலாக இருந்தார். கோவேந்தன் அவரிடம் சங்கப்பாடல்களை மொழியாக்கம் செய்யும்படி கோரிக்கொண்டிருந்தார். ஆனால் ஓய்வுபெற்றபின்னரே தங்கப்பா அப்பணியில் இறங்கினார் Hues and Harmonies from an Ancinet Land என்ற தலைப்பில் சங்கப்பாடல்களின் மொழியாக்கத்தை அவரே வெளியிட்டார்.
ம.இலெ.தங்கப்பா டக்ளஸ் மலோக் Douglas Malloch என்னும் அமெரிக்கக் கவிஞர் எழுதிய Be the Best என்னும் கவிதையை ஒரு மாணவி வாசிக்கக் கேட்டு கவரப்பட்டு அதை மொழியாக்கம் செய்தார். தங்கப்பாவின் மொழியாக்க முயற்சிகளுக்கு அவரை தன் ஆசிரியராக கருதிய ஆ.இரா.வேங்கடாசலபதி ஒரு தூண்டுதலாக இருந்தார். கோவேந்தன் அவரிடம் சங்கப்பாடல்களை மொழியாக்கம் செய்யும்படி கோரிக்கொண்டிருந்தார். ஆனால் ஓய்வுபெற்றபின்னரே தங்கப்பா அப்பணியில் இறங்கினார் Hues and Harmonies from an Ancinet Land என்ற தலைப்பில் சங்கப்பாடல்களின் மொழியாக்கத்தை அவரே வெளியிட்டார்.
Line 35: Line 35:
புதுச்சேரி அரசு ஆட்சிமொழி தமிழ் என்று சட்டம் இயற்றினாலும் அதைக் கடைப்பிடிக்கவில்லை எனக்கூறி அரசு வழங்கிய தமிழ்மாமணி விருதைத் ம.இலெ. தங்கப்பா திருப்பி அளித்தார்.
புதுச்சேரி அரசு ஆட்சிமொழி தமிழ் என்று சட்டம் இயற்றினாலும் அதைக் கடைப்பிடிக்கவில்லை எனக்கூறி அரசு வழங்கிய தமிழ்மாமணி விருதைத் ம.இலெ. தங்கப்பா திருப்பி அளித்தார்.
==மறைவு==
==மறைவு==
ம.இலெ. தங்கப்பா உடல்நலக்குறைவால் மே 31, 2018 அன்று தன் 84-ஆவது வயதில் புதுச்சேரியில் மறைந்தார். கண்தானமும் உடற்கொடையும் அளித்துள்ளமையால் தங்கப்பாவின் உடல் ஜவஹர்லால் பட்டமேற்படிப்பு மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன (JIPMER-ஜிப்மர்) மருத்துவமனைக்கு அளிக்கப்பட்டது.
ம.இலெ. தங்கப்பா உடல்நலக்குறைவால் மே 31, 2018 அன்று தன் 84-வது வயதில் புதுச்சேரியில் மறைந்தார். கண்தானமும் உடற்கொடையும் அளித்துள்ளமையால் தங்கப்பாவின் உடல் ஜவஹர்லால் பட்டமேற்படிப்பு மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன (JIPMER-ஜிப்மர்) மருத்துவமனைக்கு அளிக்கப்பட்டது.
== வாழ்க்கை வரலாறு ==
== வாழ்க்கை வரலாறு ==
ம.இலெ.தங்கப்பா - பாவண்ணன் (சாகித்ய அக்காதமி)
 
* ம.இலெ.தங்கப்பா - பாவண்ணன் (சாகித்ய அக்காதமி)
== விருதுகள் ==
== விருதுகள் ==
* கல்கத்தா தமிழ்ச்சங்கப் பரிசு: பாரதியார் பாடல்களைத் தமிழிலிருந்து ஆங்கிலத்திற்குப் பெயர்த்தமைக்கு
* கல்கத்தா தமிழ்ச்சங்கப் பரிசு: பாரதியார் பாடல்களைத் தமிழிலிருந்து ஆங்கிலத்திற்குப் பெயர்த்தமைக்கு
Line 51: Line 52:
* நேரு விருது புதுவை அரசு 2012
* நேரு விருது புதுவை அரசு 2012
==இலக்கிய இடம்==
==இலக்கிய இடம்==
ம.இலெ. தங்கப்பா தமிழ் மரபுக்கவிதை இயக்கத்தின் ஆளுமைகளில் ஒருவர். சந்தம் அமைந்த பாடல்களை எழுதியவர். தமிழ்ப்பற்று, சமூகசீர்திருத்த்த நோக்கம், பகுத்தறிவு அணுகுமுறை ஆகியவை அவருடைய பார்வையை வடிவமைத்தன. மரபுநெறி நின்று கவிதைகள் எழுதியவர். ம.இலெ.தங்கப்பா இயற்றிய பாடல்கள் கவிதைக்குரிய புத்தனுபவத் தன்மை அற்றவை, சந்தத்தாலும் சொல்லழகாலும் அழகு கொள்பவை. பெரும்பாலும் கருத்துக்களை யாப்பில் முன்வைப்பவையாகவே அவருடைய கவிதைகள் உள்ளன. ம.இலெ.தங்கப்பா எழுதிய குழந்தையிலக்கியப் படைப்புகள் குறிப்பிடத்தக்கவை.  
ம.இலெ. தங்கப்பா தமிழ் மரபுக்கவிதை இயக்கத்தின் ஆளுமைகளில் ஒருவர். சந்தம் அமைந்த பாடல்களை எழுதியவர். தமிழ்ப்பற்று, சமூகசீர்திருத்த நோக்கம், பகுத்தறிவு அணுகுமுறை ஆகியவை அவருடைய பார்வையை வடிவமைத்தன. மரபுநெறி நின்று கவிதைகள் எழுதியவர். ம.இலெ.தங்கப்பா இயற்றிய பாடல்கள் கவிதைக்குரிய புத்தனுபவத் தன்மை அற்றவை, சந்தத்தாலும் சொல்லழகாலும் அழகு கொள்பவை. பெரும்பாலும் கருத்துக்களை யாப்பில் முன்வைப்பவையாகவே அவருடைய கவிதைகள் உள்ளன. ம.இலெ.தங்கப்பா எழுதிய குழந்தையிலக்கியப் படைப்புகள் குறிப்பிடத்தக்கவை.  


ம.இலெ.தங்கப்பா தன் இறுதிக்காலத்தில் தொடர்ச்சியாக செய்த மொழியாக்கங்களாலேயே தமிழிலக்கியத்தில் குறிப்பிடத்தக்க இடத்தை பெறுகிறார். அவருடைய மொழியாக்கத்தில் பெங்குவின் பதிப்பகம் வெளியிட்ட சங்கப்பாடல்களின் மொழிபெயர்ப்பான  ‘LOVE STANDS ALONE அவருடைய வாழ்நாள் சாதனை என [[ஜெயமோகன்]] எண்ணுகிறார். ம.இலெ தங்கப்பாவின் சங்க இலக்கிய மொழியாக்கத்தை பற்றி ‘இந்த நூலைப் படித்தபோது பல இடங்களில் ஆங்கில மொழிபெயர்ப்பில் பாடல்கள் இன்னொரு தளத்தில் இயங்குவது போன்ற ஒரு தோற்றம் எனக்கு கிட்டியது.’ என்று சொல்லும் [[அ. முத்துலிங்கம்]] மூலத்தை மிஞ்சிச்செல்லும் கவித்துவம் அவற்றில் உள்ளது என்று கூறுகிறார்.  
ம.இலெ.தங்கப்பா தன் இறுதிக்காலத்தில் தொடர்ச்சியாக செய்த மொழியாக்கங்களாலேயே தமிழிலக்கியத்தில் குறிப்பிடத்தக்க இடத்தை பெறுகிறார். அவருடைய மொழியாக்கத்தில் பெங்குவின் பதிப்பகம் வெளியிட்ட சங்கப்பாடல்களின் மொழிபெயர்ப்பான  ‘LOVE STANDS ALONE அவருடைய வாழ்நாள் சாதனை என [[ஜெயமோகன்]] எண்ணுகிறார். ம.இலெ தங்கப்பாவின் சங்க இலக்கிய மொழியாக்கத்தை பற்றி ‘இந்த நூலைப் படித்தபோது பல இடங்களில் ஆங்கில மொழிபெயர்ப்பில் பாடல்கள் இன்னொரு தளத்தில் இயங்குவது போன்ற ஒரு தோற்றம் எனக்கு கிட்டியது.’ என்று சொல்லும் [[அ. முத்துலிங்கம்]] மூலத்தை மிஞ்சிச்செல்லும் கவித்துவம் அவற்றில் உள்ளது என்று கூறுகிறார்.  
Line 57: Line 58:
’ஆங்கிலத்தில் தமிழ் இலக்கியங்களை மொழிபெயர்ப்பவர்கள் தமிழகத்து கலாசாரத்துக்கு அந்நியர்களாக இருக்கிறார்கள். ம.இலெ. தங்கப்பா தமிழகத்திலேயே வாழ்ந்து வருபவர். தமிழில் நல்ல புலமை உள்ளவர். அவரால் மிகச்சிறப்பாக ஆங்கிலத்தில் சங்கப்பாடல் தொகுப்பு மொழிபெயர்க்கப்பட்டுள்ளதை தமிழின் சாதனை என்றே சொல்வேன்’ என்று ஆ.இரா.வேங்கடாசலபதி சொல்கிறார்.  
’ஆங்கிலத்தில் தமிழ் இலக்கியங்களை மொழிபெயர்ப்பவர்கள் தமிழகத்து கலாசாரத்துக்கு அந்நியர்களாக இருக்கிறார்கள். ம.இலெ. தங்கப்பா தமிழகத்திலேயே வாழ்ந்து வருபவர். தமிழில் நல்ல புலமை உள்ளவர். அவரால் மிகச்சிறப்பாக ஆங்கிலத்தில் சங்கப்பாடல் தொகுப்பு மொழிபெயர்க்கப்பட்டுள்ளதை தமிழின் சாதனை என்றே சொல்வேன்’ என்று ஆ.இரா.வேங்கடாசலபதி சொல்கிறார்.  
== நூல்பட்டியல் ==
== நூல்பட்டியல் ==
=====கட்டுரை நூல்கள்=====
=====கட்டுரை நூல்கள்=====
*பாரதிதாசன் - ஓர் உலகப்பாவலர், 1987
*பாரதிதாசன் - ஓர் உலகப்பாவலர், 1987
Line 72: Line 72:
*மண்ணின் கனிகள், 1996
*மண்ணின் கனிகள், 1996
*கனவுகள், 2002 (ஆங்கிலப்பாடல்களின் தமிழாக்கம்)
*கனவுகள், 2002 (ஆங்கிலப்பாடல்களின் தமிழாக்கம்)
=====ஆங்கில மொழிபெயர்ப்பு =====
=====ஆங்கில மொழிபெயர்ப்பு =====
*Love Stands Alone: Selections from Tamil Sangam Poetry, 2010 (தேர்ந்தெடுக்கப்பட்ட சங்கப்பாடல்களின் மொழிபெயர்ப்பு - பெங்குவின் பதிப்பகம்)
*Love Stands Alone: Selections from Tamil Sangam Poetry, 2010 (தேர்ந்தெடுக்கப்பட்ட சங்கப்பாடல்களின் மொழிபெயர்ப்பு - பெங்குவின் பதிப்பகம்)
Line 119: Line 118:
*நானும் என் தமிழும் 2008
*நானும் என் தமிழும் 2008
*வாழ்க்கை அறிவியல் எல்லைகள் அற்ற வாழ்க்கை 2010
*வாழ்க்கை அறிவியல் எல்லைகள் அற்ற வாழ்க்கை 2010
=====நூல் தொகுப்பு=====
=====நூல் தொகுப்பு=====
* உயிர்ப்பின் அதிர்வுகள்-தங்கப்பா பாடல்கள் - 2006 (பத்து நூல்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்கள்) - தமிழினி  
* உயிர்ப்பின் அதிர்வுகள்-தங்கப்பா பாடல்கள் - 2006 (பத்து நூல்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்கள்) - தமிழினி  

Revision as of 21:26, 28 June 2022

ம.இலெ.தங்கப்பா
ம.இலெ. தங்கப்பா (1934 – 2018) .png
ம.இலெ.தங்கப்பா நூல்
ம.இலெ.தங்கப்பா, இல்லத்தில்(நன்றி விகடன்)

இலெ. தங்கப்பா (M.L. Thangappa) ( மார்ச் 8,1934 - மே 31, 2018) எழுத்தாளர், தமிழ்ப் பேராசிரியர், தனித்தமிழ்வாதி, மரபிலக்கிய அறிஞர். சங்க இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த தமிழறிஞர். இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்றவர்.  

பிறப்பு, கல்வி

மதனபாண்டியன் இலெனின் தங்கப்பா என்னும் ம.இலெ. தங்கப்பா மார்ச் 8, 1934-ல் திருநெல்வேலி மாவட்டம், குறும்பலாப்பேரியில் புலவர் ஆ. மதனபாண்டியன் - ம. இரத்தினமணி இணையரின் மகனாகப் பிறந்தார். பாரம்பரிய விவசாயக் குடும்பம். தந்தை விருதுநகர் சத்திரிய வித்யாசாலையிலும் அருப்புக்கோட்டையிலும் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார். ம.இலெ. தங்கப்பா இளவயதிலேயே தந்தையிடமிருந்து கம்பராமாயணம், வில்லிபாரதம், தனிப்பாடல் திரட்டு ஆகியவற்றைக் கற்றுத் தேர்ந்தார்.

ம.இலெ. தங்கப்பா குறும்பலாப்பேரியில் திருநெல்வேலி மறைமாவட்ட ஆசிரியர்சங்கம் நடத்திவந்த தொடக்கப்பள்ளியில் பயின்றார். ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை ஏ.வி,. பள்ளியில் பயின்றார். கோபாலசமுத்திரம் அரசுப்பள்ளியில் உயர்நிலைப்படிப்பை முடித்தார். 1950-ல் பள்ளியிறுதிப்படிப்பை முடித்து பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரியில் இடைநிலை படிப்பில் சேஎர்ந்தார். 1951-ல் பொருளியலில் இளங்கலைப் படிப்பில் சேர்ந்து 1954-ல் பட்டம்பெற்றார். ம.இலெ. தங்கப்பா சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சிப்பள்ளியில் ஆசிரியர் பயிற்சி பெற்றார். தனித்தேர்வுமுறையில் தமிழில் முதுகலைப் பட்டம்பெற்றார்.

கல்விப்பணி

பட்டம் பெற்றதும் ம.இலெ. தங்கப்பாவுக்கு பாளையங்கோட்டை தூய யோவான் உயர்நிலைப்பள்ளியில் பயிற்சிபெறாத ஆசிரியராகப் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. ஓராண்டுக்குப்பின் பரமக்குடி அரசர் சேதுபதி அரசு உயர்நிலைப்பள்ளியிலும் பயிற்சிபெறாத ஆசிரியராகப் பணியாற்றினார். 1956-ல் சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சிக்கல்லூரியில் சேர்ந்து பட்டம்பெற்ரார். சென்னைக்கு அருகிலுள்ள திருநின்றவூரில் தாசர் உயர்நிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணியில் சேர்தார். 1959-ல் பாண்டிசேரி அரசினர் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் கிடைத்தது. பாண்டிசேரி மாநிலத்தில் காரைக்காலுக்கு அருகே உள்ள திருமலைராயன் பட்டினத்தில் பணிக்கு சேர்ந்தார். இரண்டு ஆண்டுகளுக்குப்பின் புதுச்சேரியில் புராணசிங்கம் உயர்நிலைப் பள்ளி ஆசிரியராக 1961 முதல் 1968 வரை பணியாற்றினார். ம.இலெ. தங்கப்பா 1968 முதல் புதுச்சேரி தாகூர் கலைக் கல்லூரியில் இருபது வருடங்கள் பணியாற்றினார். நடுவே நான்காண்டுகாலம் காரைக்காலில் அறிஞர் அண்ணா கலைக்கல்லூரியில் பணியாற்றிய பின்னர் பாரதிதாசன் மகளிர் கல்லூரியில் ஐந்து வருடங்கள் தமிழ் விரிவுரையாளராகவும், பேராசிரியராகவும் பணியாற்றி 1994-ல் ஓய்வு பெற்றார். ம.இலெ. தங்கப்பா ஏறத்தாழ நாற்பதாண்டுக்காலம் ஆசிரியராகப் பணியாற்றிய அனுபவம்.

தனிவாழ்க்கை

பாண்டிச்சேரியில் ம.இலெ. தங்கப்பா வசித்த வீட்டுக்கு வானகம் என்று பெயர். இந்தி ஆசிரியையாக இருந்த விசாலாட்சியை காதலித்து மணம்புரிந்துகொண்டார். தங்கப்பா கிறிஸ்தவப் பின்னணி கொண்டவர். விசாலாட்சி பிராமண பின்னணியில் இருந்து வந்தவர், ஆகவே அவர்களின் திருமணத்திற்கு எதிர்ப்பு இருந்தது. மார்ச் 16, 1959-ல் இருவரும் கோவேந்தன் முன்னிலையில் பதிவுத்திருமணம் செய்துகொண்டனர். மூன்றாண்டுக்கு பிறகே அவர்கள் தங்கள் திருமணத்தை பெருஞ்சித்திரனார் தலைமையில் நிகழ்ந்த விழாவில் அறிவித்தனர்.

சாலாட்சி தலைமையாசிரியராகப் பணியாற்றினார். தனித்தமிழ் ஆர்வம் கொண்டிருந்த அவர் இந்தி ஆசிரியை பணியை விடுத்து வரலாற்றில் பட்டம் பெற்று வரலாற்றாசிரியை ஆனார். நல்லாசிரியர் விருது பெற்ற விசாலாட்சி பணி ஒய்விற்குப்பின் புதுவை தாய்த்தமிழ்ப்பள்ளியில் ஊதியம் பெறாத ஆசிரியராகப் பணியாற்றினார். தன் பெயரை தனித்தமிழில் தடங்கண்ணி என்று மாற்றிக்கொண்டார்.

தங்கப்பா விசாலாட்சி இணையருக்கு இரு மகன்கள் செங்கதிர், விண்மீன். இரு மகள்கள் இளம்பிறை, மின்னல்.

அமைப்புப் பணிகள்

தங்கப்பா புதுவை இயற்கைக் கழகத்தைத் தோற்றுவித்தவர். ஞாயிறுதோறும் பாண்டிச்சேரி மற்றும் தமிழக எல்லையில் உள்ள ஊசுட்டேரிக்கு மாணவர்களை அழைத்துச்சென்று பறவைகளையும், தாவரங்களையும் அறிமுகப்படுத்திவந்தார்.

இதழியல்

பெருஞ்சித்திரனார் நடத்திவந்த ’தென்மொழி’ இதழின் (1962-1967) உறுப்பாசிரியராகப் பணியாற்றினார்.திருமுருகனாரின் ’தெளிதமிழ்’ இதழின் துணையாசிரியராகவும், ஆசிரியராகவும் செயல்பட்டார்.

இலக்கிய வாழ்க்கை

தொடக்க காலம்

ம.இலெ. தங்கப்பா தனது பதினேழாவது வயதில் பாடல் எழுதத் தொடங்கினார். கல்லூரியில் பாடமாக இருந்த ஆங்கிலத்தில் மாத்யூ ஆர்னால்டு எழுதிய பாடலான ‘The forsaken Merman’ என்பதை “கைவிடப்பட்ட கடல் மகன்’ என தமிழில் மொழிபெயர்த்தார். இது தங்கப்பா செய்த முதல் மொழிபெயர்ப்புப் பாடல். கண்ணதாசன் நடத்திவந்த தென்றல் இதழ் நடத்திய வெண்பாப்போட்டியில் ம.இலெ..தங்கப்பா எழுதிய வெண்பா வெளியீட்டுக்கு தேர்வாகியது. தொடர்ந்து பாண்டிச்சேரியில் இருந்து பிரசுரமான த.கோவேந்தனின் ’வானம்பாடி’ இதழில் வெளிவந்தன.

பாடல்கள்

ம.இலெ.தங்கப்பா சந்தத்தில் ஈடுபாடு கொண்டவர். ஆகவே பாடல்கள் எழுதுவதிலேயே முதன்மை ஆர்வம் கொண்டிருந்தார். பாரதிதாசன் நடத்திய குயில் இதழில் ம.இலெனின் என்னும் பெயரில் எழுதத் தொடங்கினார். பாரதிதாசன், பெருஞ்சித்திரனார், கண்ணதாசன், கோவேந்தன் உள்ளிட்ட தமிழ்ப்பற்றாளர்களுடன் தொடர்புகொண்டிருந்தார். தங்கப்பாவின் படைப்புகள் தொடக்கத்தில் தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தென்றல், வானம்பாடி, பூஞ்சோலை, இனமுழக்கம், தமிழகம், உரிமை வேட்கை, கைகாட்டி, கவிஞன், மீட்போலை, அரும்பு, விருந்து, கவியுகம், பொதுமை, தெளிதமிழ், வெல்லும் தூயதமிழ், கண்ணியம் முதலான இதழ்களில் வெளிவந்தன.

குறுங்காவியங்கள்

சி.சுப்ரமணிய பாரதியாரின் குயில்பாட்டு அளித்த தூண்டுதலில் ம.இலெ.தங்கப்பா ஆந்தையுடன் பாவலர் ஒருவர் பேசுவதாக உருவகித்து 1955-ல் எழுதிய ஆந்தைப்பாட்டு அவர் எழுதிய முதல் குறும்பாவியம். ஆயிரம் வரிகளுக்கு மேலே அமைந்த அந்த நீள்கவிதை சமூகவிமர்சனத் தன்மை கொண்டது. பதினெட்டு ஆண்டுகளுக்குப்பின் 1983-ல் தான் அது அச்சேறியது. 1955-ல் பரமக்குடியில் பணியாற்றும்போது அடித்த புயல் ஒரு குறுங்காவியத்தை எழுதினார். பரணியின் வடிவில் இருந்த அந்நூலுக்கு கிரணி என தலைப்பிட்டிருந்தார். அந்நூலை இரண்டாம் பகுதியை எழுதிச்சேர்த்து நாற்பத்தைந்து ஆண்டுகளுக்குப்பின்னர் 2000-த்தில் புயற்பாட்டு என்னும் தலைப்பில் வெளியிட்டார்.

மொழியாக்கங்கள்

ம.இலெ.தங்கப்பா டக்ளஸ் மலோக் Douglas Malloch என்னும் அமெரிக்கக் கவிஞர் எழுதிய Be the Best என்னும் கவிதையை ஒரு மாணவி வாசிக்கக் கேட்டு கவரப்பட்டு அதை மொழியாக்கம் செய்தார். தங்கப்பாவின் மொழியாக்க முயற்சிகளுக்கு அவரை தன் ஆசிரியராக கருதிய ஆ.இரா.வேங்கடாசலபதி ஒரு தூண்டுதலாக இருந்தார். கோவேந்தன் அவரிடம் சங்கப்பாடல்களை மொழியாக்கம் செய்யும்படி கோரிக்கொண்டிருந்தார். ஆனால் ஓய்வுபெற்றபின்னரே தங்கப்பா அப்பணியில் இறங்கினார் Hues and Harmonies from an Ancinet Land என்ற தலைப்பில் சங்கப்பாடல்களின் மொழியாக்கத்தை அவரே வெளியிட்டார்.

தொடர்ந்து தங்கப்பாவின் படைப்புகள் Caravan, Modern Rationalist, Youth age, New Times, Observer போன்ற இதழ்களில் வெளிவந்துள்ளன. முத்தொள்ளாயிர மொழிபெயர்ப்பான ‘Red lilies and frightened birds', தேர்ந்தெடுக்கப்பட்ட சங்கப்பாடல்களின் மொழிபெயர்ப்புகளான ‘Love Stands Alone' (குறுந்தொகைப் பாடல்கள்), ‘Hues and Harmonies from an ancient Land'  ஆகியவைக் குறிப்பிடத்தகுந்தவை. ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும் பலவற்றை மொழிபெயர்த்துள்ளார். டெல்லி சாகித்திய அகாடமி மொழிபெயர்ப்பாளராகவும், புதுவை அரசின் தமிழ் வளர்ச்சிக்குழு தலைவராகவும், இயற்கை கழகத் தலைவராகவும், மொழிபெயர்ப்புக் குழு உறுப்பினராகவும் பங்காற்றியுள்ளார்.

விவாதங்கள்

புதுச்சேரி அரசு ஆட்சிமொழி தமிழ் என்று சட்டம் இயற்றினாலும் அதைக் கடைப்பிடிக்கவில்லை எனக்கூறி அரசு வழங்கிய தமிழ்மாமணி விருதைத் ம.இலெ. தங்கப்பா திருப்பி அளித்தார்.

மறைவு

ம.இலெ. தங்கப்பா உடல்நலக்குறைவால் மே 31, 2018 அன்று தன் 84-வது வயதில் புதுச்சேரியில் மறைந்தார். கண்தானமும் உடற்கொடையும் அளித்துள்ளமையால் தங்கப்பாவின் உடல் ஜவஹர்லால் பட்டமேற்படிப்பு மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன (JIPMER-ஜிப்மர்) மருத்துவமனைக்கு அளிக்கப்பட்டது.

வாழ்க்கை வரலாறு

  • ம.இலெ.தங்கப்பா - பாவண்ணன் (சாகித்ய அக்காதமி)

விருதுகள்

  • கல்கத்தா தமிழ்ச்சங்கப் பரிசு: பாரதியார் பாடல்களைத் தமிழிலிருந்து ஆங்கிலத்திற்குப் பெயர்த்தமைக்கு
  • அரவிந்தர் ஆசிரமத்தின் பரிசு - 1972: அரவிந்தர் பாடல்களைத் தமிழிற்குப் பெயர்த்தமைக்கு
  • தமிழ் நாடு அரசின் பாவேந்தர் விருது - 1991
  • பகுத்தறிவாளர் கழகத்தின் பெரியார் விருது - 1998
  • தமிழர் தேசிய இயக்கத்தின் தமிழ்த்தேசியச் செம்மல் - 2002
  • சிற்பி இலக்கிய விருது - 2007
  • இனமானக்குரிசில் விருது 2009
  • குழந்தை இலக்கியத்துக்கான சாகித்ய அகாடமி விருது - 2010: ‘சோளக் கொல்லை பொம்மை’ நூலுக்காக
  • மொழிபெயர்ப்பு நூலுக்கான சாகித்ய அகாடமி விருது - 2012: தமிழ்ச் சங்க இலக்கியக் கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பான ‘“Love stands Alone”
  • நேரு விருது புதுவை அரசு 2012

இலக்கிய இடம்

ம.இலெ. தங்கப்பா தமிழ் மரபுக்கவிதை இயக்கத்தின் ஆளுமைகளில் ஒருவர். சந்தம் அமைந்த பாடல்களை எழுதியவர். தமிழ்ப்பற்று, சமூகசீர்திருத்த நோக்கம், பகுத்தறிவு அணுகுமுறை ஆகியவை அவருடைய பார்வையை வடிவமைத்தன. மரபுநெறி நின்று கவிதைகள் எழுதியவர். ம.இலெ.தங்கப்பா இயற்றிய பாடல்கள் கவிதைக்குரிய புத்தனுபவத் தன்மை அற்றவை, சந்தத்தாலும் சொல்லழகாலும் அழகு கொள்பவை. பெரும்பாலும் கருத்துக்களை யாப்பில் முன்வைப்பவையாகவே அவருடைய கவிதைகள் உள்ளன. ம.இலெ.தங்கப்பா எழுதிய குழந்தையிலக்கியப் படைப்புகள் குறிப்பிடத்தக்கவை.

ம.இலெ.தங்கப்பா தன் இறுதிக்காலத்தில் தொடர்ச்சியாக செய்த மொழியாக்கங்களாலேயே தமிழிலக்கியத்தில் குறிப்பிடத்தக்க இடத்தை பெறுகிறார். அவருடைய மொழியாக்கத்தில் பெங்குவின் பதிப்பகம் வெளியிட்ட சங்கப்பாடல்களின் மொழிபெயர்ப்பான  ‘LOVE STANDS ALONE அவருடைய வாழ்நாள் சாதனை என ஜெயமோகன் எண்ணுகிறார். ம.இலெ தங்கப்பாவின் சங்க இலக்கிய மொழியாக்கத்தை பற்றி ‘இந்த நூலைப் படித்தபோது பல இடங்களில் ஆங்கில மொழிபெயர்ப்பில் பாடல்கள் இன்னொரு தளத்தில் இயங்குவது போன்ற ஒரு தோற்றம் எனக்கு கிட்டியது.’ என்று சொல்லும் அ. முத்துலிங்கம் மூலத்தை மிஞ்சிச்செல்லும் கவித்துவம் அவற்றில் உள்ளது என்று கூறுகிறார்.

’ஆங்கிலத்தில் தமிழ் இலக்கியங்களை மொழிபெயர்ப்பவர்கள் தமிழகத்து கலாசாரத்துக்கு அந்நியர்களாக இருக்கிறார்கள். ம.இலெ. தங்கப்பா தமிழகத்திலேயே வாழ்ந்து வருபவர். தமிழில் நல்ல புலமை உள்ளவர். அவரால் மிகச்சிறப்பாக ஆங்கிலத்தில் சங்கப்பாடல் தொகுப்பு மொழிபெயர்க்கப்பட்டுள்ளதை தமிழின் சாதனை என்றே சொல்வேன்’ என்று ஆ.இரா.வேங்கடாசலபதி சொல்கிறார்.

நூல்பட்டியல்

கட்டுரை நூல்கள்
  • பாரதிதாசன் - ஓர் உலகப்பாவலர், 1987
  • நுண்மையை நோக்கி, 1989
  • எது வாழ்க்கை, 1994
  • திருக்குறளும் வாழ்வியலும், 1995
  • வாழ்க்கை அறிவியல், 1998
  • பாட்டு வாழ்க்கை, 1994, 1999
  • மொழிமானம், 2000
  • கொடுத்தலே வாழ்க்கை, 2001
தமிழ் மொழிபெயர்ப்பு
  • புகழ்பெற்ற ஆங்கிலப் பாடல்கள் சிலவற்றின் தமிழாக்கம், 1959
  • மலைநாட்டு மலர்கள், 1975 (இரசுல் கம்சுதாவ் பாடல்கள்)
  • மண்ணின் கனிகள், 1996
  • கனவுகள், 2002 (ஆங்கிலப்பாடல்களின் தமிழாக்கம்)
ஆங்கில மொழிபெயர்ப்பு
  • Love Stands Alone: Selections from Tamil Sangam Poetry, 2010 (தேர்ந்தெடுக்கப்பட்ட சங்கப்பாடல்களின் மொழிபெயர்ப்பு - பெங்குவின் பதிப்பகம்)
  • Songs of Grace in St.Ramalingam, 1985 (வள்ளலாரின் திருவருட்பா)
  • Selected Poems of Bharathidasan, 1992 (பாரதிதாசன் பாடல்கள்)
  • House of Darkness, 1996 (இருண்ட வீடு)
  • Hues and Harmonies From Ancient Land, Part II (தேர்ந்தெடுக்கப்பட்ட சங்கப்பாடல்களின் மொழிபெயர்ப்பு)
  • Tamil Thoughts (தாகூர் பாடல்கள், பாம்பாட்டிச்சித்தர், பட்டினத்தார், தாயுமானவர், சிவவாக்கியார், நாலடியார், விவேகசிந்தாமணி போன்றவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்கள்)
  • Stories of Tamil Literature 2003
  • Red Lillies and Frieghtened Birds (Poems from Muthollayiram)
  • Pebbles (Poems of Meenakshi )
ஆங்கில நூல்கள்
  • This Question of Medium (Essay), 1996
  • Meadow Flowers (Poems), 1984
  • Poems in English 2007
  • The Prince who become a monk (2017)
கவிதை
  • பாடுகிறேன், 1973
  • தேடுகிறேன், 1980
  • ஆந்தைப்பாட்டு, 1983
  • அடிச்சுவடுகள், 1983
  • வேப்பங்கனிகள், 1985
  • கள்ளும் மொந்தையும், 1987
  • இயற்கையாற்றுப்படை, 1989
  • மயக்குறுமக்கள், 1990
  • அகமும் புறமும், 1991
  • பின்னிருந்து ஒரு குரல், 1992
  • பனிப்பாறை நுனிகள், 1998
  • புயற்பாட்டு, 2000
  • காரும் கூதிரும் 2016
  • வம்பனார் இயற்றிய வாழ்வியல் அறுபது 2017
  • பாட்டெனும் வாள் எடுப்பாய், 2004
குழந்தைகளுக்கான நூல்கள்
  • எங்கள் வீட்டுச்சேய்கள், 1973, 2003
  • மழலைப்பூக்கள், 1983
  • இயற்கை விருந்து, 1991
  • மழலை விருந்து 2010
  • பூம்பூம் மாட்டுக்காரன் 2016
  • சோளக்கொல்லைப் பொம்மை
பொது
  • வாழ்க்கை மேற் காதல்
  • மரபுப்பாடல் செத்துவிட்டதா?
  • இடித்துரைப் பாடல்கள்(வசையமுது)
  • நையாண்டிமாலை(பாட்டும் உரையும்)
  • வாழ்வியல் அறிவீர்
  • நானும் என் தமிழும் 2008
  • வாழ்க்கை அறிவியல் எல்லைகள் அற்ற வாழ்க்கை 2010
நூல் தொகுப்பு
  • உயிர்ப்பின் அதிர்வுகள்-தங்கப்பா பாடல்கள் - 2006 (பத்து நூல்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்கள்) - தமிழினி

உசாத்துணை


✅Finalised Page