பூமணி: Difference between revisions
SathishKorea (talk | contribs) |
|||
Line 1: | Line 1: | ||
{{being created}} | |||
[[File:பூமணி.jpg|thumb|பூமணி ]] | [[File:பூமணி.jpg|thumb|பூமணி ]] | ||
பூமணி (மே 12, 1947) சாகித்திய அகாதெமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர். கரிசல் வட்டாரத்து வாழ்க்கையின் நுட்பங்களை அதன் முழுமையோடு தனது எழுத்தில் கலைப்படுத்த முற்பட்ட படைப்பாளி. அங்காடி நாவலுக்காக 2014 ல் சாகித்ய அகாதெமி விருது பெற்றார். இவரது படைப்புகள் வறண்ட கரிசல் நிலத்தில் வாழும் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையோடு, ஒன்றாக பரவி கிடக்கும் கதைகளை அடிநாதமாக கொண்டவைகள். | |||
பிறப்பு, கல்வி | |||
பூமணி, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்த இளையரசனேந்தல் அருகேயுள்ள ஆண்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர். இவரது இயற்பெயர் பூ.மாணிக்கவாசகம். பெற்றோர் பூலித்துறை, தேனம்மாள். | |||
பூமணி, இளையரசனேந்தலில் தன் தொடக்ககால பள்ளிப்படிப்பையும், விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரியில் இளநிலை இயற்பியல் பட்டபடிப்பையும் பயின்றார். | |||
பூமணி, இளையரசனேந்தலில் தன் தொடக்ககால பள்ளிப்படிப்பையும், விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரியில் இளநிலை இயற்பியல் பட்டபடிப்பையும் பயின்றார். | பூமணி, இளையரசனேந்தலில் தன் தொடக்ககால பள்ளிப்படிப்பையும், விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரியில் இளநிலை இயற்பியல் பட்டபடிப்பையும் பயின்றார். | ||
== தனிவாழ்க்கை == | == தனிவாழ்க்கை == | ||
பூமணியின் மனைவியின் பெயர் செல்லம். இவருக்கு 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். எழுத்தாளர் [[சோ. தர்மன்]] இவரின் மருமகன். தமிழ்நாடு அரசு கூட்டுறவு துறையில் முதுநிலை ஆய்வாளராக பணியில் சேர்ந்த இவர், சென்னையில் கூட்டுறவு துறை துணைப் பதிவாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பணி ஓய்வுக்கு பிறகு இப்போது கோவில்பட்டியில் வசித்து வருகிறார். | |||
== இலக்கியவாழ்க்கை == | == இலக்கியவாழ்க்கை == | ||
பூமணி கல்வி அறிவும் இலக்கிய அறிவும் பெற்றதற்கு அவர் அம்மாவே முதன்மை காரணம். சிறு வயதில் தன் அம்மாவிடம் கேட்டறிந்த நூற்றுக்கணக்காண மாயமந்திர கதைகள்தான் அவரின் கற்பனையை வளர்த்து இலக்கியத்திற்கு ஆட்படுத்தின. எது சாராம்சமானதோ, எது | பூமணி கல்வி அறிவும் இலக்கிய அறிவும் பெற்றதற்கு அவர் அம்மாவே முதன்மை காரணம். சிறு வயதில் தன் அம்மாவிடம் கேட்டறிந்த நூற்றுக்கணக்காண மாயமந்திர கதைகள்தான் அவரின் கற்பனையை வளர்த்து இலக்கியத்திற்கு ஆட்படுத்தின. எது சாராம்சமானதோ, எது சுவாரஸ்யமானதோ அதையே கதையாக சொல்லவேண்டும் என்ற தெளிவை தன் அம்மாவிடமிருந்தே கற்றடைந்தார். நிகழ்ச்சிகளை சிறிய சிறிய தகவல்களாகக் கோர்த்து கதையை கட்டமைக்கும் கலையை அம்மாவிடமிருந்து கற்று அதையே தன் இலக்கிய அழகியலாக அமைத்துக்கொண்டார். | ||
பூமணியின் இலக்கிய வாழ்க்கையின் இரண்டாவது வழிகாட்டி, கல்லூரியில் அவருக்கு ஆசிரியராக வந்த [[ | பூமணியின் இலக்கிய வாழ்க்கையின் இரண்டாவது வழிகாட்டி, கல்லூரியில் அவருக்கு ஆசிரியராக வந்த விமர்சகர் [[சி. கனகசபாபதி]]. பூமணி, விமர்சகர் சி. கனகாபதியுடன் தொடர் உரையாடலில் ஈடுபட்டு இலக்கிய அடிப்படைகளையும், நவீன இலக்கியத்தையும், யதார்த்த இலக்கிய அழகியலையும் கற்றுக்கொண்டார். | ||
[[File:Poomani 2.jpg|thumb|பூமணி]] | [[File:Poomani 2.jpg|thumb|பூமணி]] | ||
பூமணியின் இலக்கிய வாழ்க்கையில் [[ | பூமணியின் இலக்கிய வாழ்க்கையில் எழுத்தாளர் [[கி. ராஜநாராயணன்]] மூன்றாவது பெரிய ஆளுமை. கி.ராஜநாராயணனின் கதைகள் அளித்த கொந்தளிப்பை பலமுறை பலவகைகளில் பூமணி பதிவு செய்திருக்கிறார். கி.ராஜநாராயணனின் கதைகளால் தான் நான் ஊக்கம் பெற்று எழுந்து வந்தேன் என்று கூறும் பூமணி அவரை தன்னுடைய கட்டுரை ஒன்றில் ’முன்னத்தி ஏர்’ என்றே குறிப்பிடுகிறார். பூமணி வாழ்ந்த நிலம், அவர் அறிந்த வாழ்க்கை ஆகியவற்றை மிக நேர்த்தியாக கலைப்படுத்தியதன் மூலம் பூமணியின் வாழ்க்கையில் பெரும்பாதிப்பை ஏற்படுத்தியவர் எழுத்தாளர் கி. ராஜநாராயணன். கி.ராஜநாராயணனின் கதாபாத்திரங்கள் பலவற்றைப் பூமணி உண்மை மனிதர்களுக்கும் மேலாகவே உண்மையானவர்களாக உணர்ந்திருப்பதாக தெரிவித்திருக்கிறார். கி.ராஜநாராயணனுடன் தொடர் உரையாடலில் இருந்த பூமணி, அவரால் சிறுகதைகள் எழுத ஊக்குவிக்கப்பட்டார். 1971இல் பூமணியின் முதல் சிறுகதை ‘அறுப்பு’ தாமரை இதழில் வெளிவந்தது. அதன் பிறகு தாமரை இதழின் ஆசிரியராக இருந்த [[தி. க. சிவசங்கரன்]] பூமணியை தொடர்ந்து எழுத ஊக்குவித்தார். | ||
== இலக்கிய இடம் == | == இலக்கிய இடம் == | ||
[[File:Poomani .jpg|thumb|பூமணி, சாகித்ய அகாதெமி விருது]] | [[File:Poomani .jpg|thumb|பூமணி, சாகித்ய அகாதெமி விருது]] | ||
பூமணி தமிழின் இயல்பு வாத [naturalist] இலக்கியத்துக்குப் பெருமை சேர்த்த படைப்பாளிகளுள் முக்கியமானவர். அவரது ‘பிறகு’, ‘வெக்கை’ ஆகிய இரு நாவல்களும் ‘ ரீதி ‘ என்ற சிறுகதைத் தொகுப்பும் அவ்வகையில் முன்னோடியான ஆக்கங்கள். இன்றைய தலித் இலக்கியங்கள் பலவற்றிலும் உள்ள ஓங்கிய பிரச்சாரக் குரலோ, பிரச்சினைகளை எளிமைப் படுத்தும் போக்கோ இல்லாத சமநிலை கொண்ட கலைப் படைப்புகள் அவை. அவரது நாவல்கள் ஒரு வகையில் இயல்பு வாதத்தின் உச்சங்களைத் தொட்டமையினால்தான் தமிழில் தொடர்ந்து அடுத்த கட்ட எழுத்துக்களான யதார்த்தத்தையும் மீமெய்மையையும் பிணைக்கும் படைப்புகள் பிறக்க முடிந்தது. | பூமணி தமிழின் இயல்பு வாத [naturalist] இலக்கியத்துக்குப் பெருமை சேர்த்த படைப்பாளிகளுள் முக்கியமானவர். அவரது ‘பிறகு’, ‘வெக்கை’ ஆகிய இரு நாவல்களும் ‘ ரீதி ‘ என்ற சிறுகதைத் தொகுப்பும் அவ்வகையில் முன்னோடியான ஆக்கங்கள். இன்றைய தலித் இலக்கியங்கள் பலவற்றிலும் உள்ள ஓங்கிய பிரச்சாரக் குரலோ, பிரச்சினைகளை எளிமைப் படுத்தும் போக்கோ இல்லாத சமநிலை கொண்ட கலைப் படைப்புகள் அவை. அவரது நாவல்கள் ஒரு வகையில் இயல்பு வாதத்தின் உச்சங்களைத் தொட்டமையினால்தான் தமிழில் தொடர்ந்து அடுத்த கட்ட எழுத்துக்களான யதார்த்தத்தையும் மீமெய்மையையும் பிணைக்கும் படைப்புகள் பிறக்க முடிந்தது. | ||
Line 34: | Line 35: | ||
== பங்களிப்பு == | == பங்களிப்பு == | ||
=== சிறுகதைத் | === சிறுகதைத் தொகுப்புகள் === | ||
* வயிறுகள் | * வயிறுகள் | ||
Line 41: | Line 42: | ||
* நல்லநாள் | * நல்லநாள் | ||
=== நாவல்கள் === | |||
* வெக்கை | * வெக்கை | ||
Line 50: | Line 51: | ||
* அஞ்ஞாடி | * அஞ்ஞாடி | ||
=== மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள் === | |||
வெக்கை நாவல் இந்தியில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. | வெக்கை நாவல் இந்தியில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. | ||
=== | === திரைப்படங்கள் === | ||
* கருவேலம்பூக்கள் | * கருவேலம்பூக்கள் (இயக்கம்) | ||
* அசுரன் (கதை) | * அசுரன் (கதை) | ||
Revision as of 08:04, 31 January 2022
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.
பூமணி (மே 12, 1947) சாகித்திய அகாதெமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர். கரிசல் வட்டாரத்து வாழ்க்கையின் நுட்பங்களை அதன் முழுமையோடு தனது எழுத்தில் கலைப்படுத்த முற்பட்ட படைப்பாளி. அங்காடி நாவலுக்காக 2014 ல் சாகித்ய அகாதெமி விருது பெற்றார். இவரது படைப்புகள் வறண்ட கரிசல் நிலத்தில் வாழும் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையோடு, ஒன்றாக பரவி கிடக்கும் கதைகளை அடிநாதமாக கொண்டவைகள்.
பிறப்பு, கல்வி பூமணி, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்த இளையரசனேந்தல் அருகேயுள்ள ஆண்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர். இவரது இயற்பெயர் பூ.மாணிக்கவாசகம். பெற்றோர் பூலித்துறை, தேனம்மாள்.
பூமணி, இளையரசனேந்தலில் தன் தொடக்ககால பள்ளிப்படிப்பையும், விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரியில் இளநிலை இயற்பியல் பட்டபடிப்பையும் பயின்றார். பூமணி, இளையரசனேந்தலில் தன் தொடக்ககால பள்ளிப்படிப்பையும், விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரியில் இளநிலை இயற்பியல் பட்டபடிப்பையும் பயின்றார்.
தனிவாழ்க்கை
பூமணியின் மனைவியின் பெயர் செல்லம். இவருக்கு 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். எழுத்தாளர் சோ. தர்மன் இவரின் மருமகன். தமிழ்நாடு அரசு கூட்டுறவு துறையில் முதுநிலை ஆய்வாளராக பணியில் சேர்ந்த இவர், சென்னையில் கூட்டுறவு துறை துணைப் பதிவாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பணி ஓய்வுக்கு பிறகு இப்போது கோவில்பட்டியில் வசித்து வருகிறார்.
இலக்கியவாழ்க்கை
பூமணி கல்வி அறிவும் இலக்கிய அறிவும் பெற்றதற்கு அவர் அம்மாவே முதன்மை காரணம். சிறு வயதில் தன் அம்மாவிடம் கேட்டறிந்த நூற்றுக்கணக்காண மாயமந்திர கதைகள்தான் அவரின் கற்பனையை வளர்த்து இலக்கியத்திற்கு ஆட்படுத்தின. எது சாராம்சமானதோ, எது சுவாரஸ்யமானதோ அதையே கதையாக சொல்லவேண்டும் என்ற தெளிவை தன் அம்மாவிடமிருந்தே கற்றடைந்தார். நிகழ்ச்சிகளை சிறிய சிறிய தகவல்களாகக் கோர்த்து கதையை கட்டமைக்கும் கலையை அம்மாவிடமிருந்து கற்று அதையே தன் இலக்கிய அழகியலாக அமைத்துக்கொண்டார்.
பூமணியின் இலக்கிய வாழ்க்கையின் இரண்டாவது வழிகாட்டி, கல்லூரியில் அவருக்கு ஆசிரியராக வந்த விமர்சகர் சி. கனகசபாபதி. பூமணி, விமர்சகர் சி. கனகாபதியுடன் தொடர் உரையாடலில் ஈடுபட்டு இலக்கிய அடிப்படைகளையும், நவீன இலக்கியத்தையும், யதார்த்த இலக்கிய அழகியலையும் கற்றுக்கொண்டார்.
பூமணியின் இலக்கிய வாழ்க்கையில் எழுத்தாளர் கி. ராஜநாராயணன் மூன்றாவது பெரிய ஆளுமை. கி.ராஜநாராயணனின் கதைகள் அளித்த கொந்தளிப்பை பலமுறை பலவகைகளில் பூமணி பதிவு செய்திருக்கிறார். கி.ராஜநாராயணனின் கதைகளால் தான் நான் ஊக்கம் பெற்று எழுந்து வந்தேன் என்று கூறும் பூமணி அவரை தன்னுடைய கட்டுரை ஒன்றில் ’முன்னத்தி ஏர்’ என்றே குறிப்பிடுகிறார். பூமணி வாழ்ந்த நிலம், அவர் அறிந்த வாழ்க்கை ஆகியவற்றை மிக நேர்த்தியாக கலைப்படுத்தியதன் மூலம் பூமணியின் வாழ்க்கையில் பெரும்பாதிப்பை ஏற்படுத்தியவர் எழுத்தாளர் கி. ராஜநாராயணன். கி.ராஜநாராயணனின் கதாபாத்திரங்கள் பலவற்றைப் பூமணி உண்மை மனிதர்களுக்கும் மேலாகவே உண்மையானவர்களாக உணர்ந்திருப்பதாக தெரிவித்திருக்கிறார். கி.ராஜநாராயணனுடன் தொடர் உரையாடலில் இருந்த பூமணி, அவரால் சிறுகதைகள் எழுத ஊக்குவிக்கப்பட்டார். 1971இல் பூமணியின் முதல் சிறுகதை ‘அறுப்பு’ தாமரை இதழில் வெளிவந்தது. அதன் பிறகு தாமரை இதழின் ஆசிரியராக இருந்த தி. க. சிவசங்கரன் பூமணியை தொடர்ந்து எழுத ஊக்குவித்தார்.
இலக்கிய இடம்
பூமணி தமிழின் இயல்பு வாத [naturalist] இலக்கியத்துக்குப் பெருமை சேர்த்த படைப்பாளிகளுள் முக்கியமானவர். அவரது ‘பிறகு’, ‘வெக்கை’ ஆகிய இரு நாவல்களும் ‘ ரீதி ‘ என்ற சிறுகதைத் தொகுப்பும் அவ்வகையில் முன்னோடியான ஆக்கங்கள். இன்றைய தலித் இலக்கியங்கள் பலவற்றிலும் உள்ள ஓங்கிய பிரச்சாரக் குரலோ, பிரச்சினைகளை எளிமைப் படுத்தும் போக்கோ இல்லாத சமநிலை கொண்ட கலைப் படைப்புகள் அவை. அவரது நாவல்கள் ஒரு வகையில் இயல்பு வாதத்தின் உச்சங்களைத் தொட்டமையினால்தான் தமிழில் தொடர்ந்து அடுத்த கட்ட எழுத்துக்களான யதார்த்தத்தையும் மீமெய்மையையும் பிணைக்கும் படைப்புகள் பிறக்க முடிந்தது.
பூமணியின் படைப்பில் புறவுலகம் ஒரு புகைப்படக்கருவியில் தெரிவதுபோல அப்படியே பதிவாக்கப்படுகிறது. அக ஓட்டங்கள் அப்படியே சொல்லப்படுகின்றன. எதுவும் விளக்கப்படுவதில்லை. மையப்படுத்தப்படுவதில்லை. சுருக்கப்படுவதில்லை. இத்தகய இயல்புவாத எழுத்து, பண்பாட்டு நுட்பங்களை மிகச்சிறப்பாகக் காட்டக்கூடியது.. இதற்கு ஒரு முக்கியமான இலக்கிய இடம் உண்டு. தமிழில் எம்.கோபாலகிருஷ்ணன்[ மணற்கடிகை] கண்மணி குணசேகரன் [ அஞ்சலை] சு. வேணுகோபால் [ வெண்ணிலை- சிறுகதைகள்] போன்றவர்கள் இயல்புவாத எழுத்தின் சிறந்த உதாரணங்கள். பூமணியே அதன் தமிழ் முன்னோடி.
எழுதத் தொடங்கிய காலத்திலேயே தான் எழுதுவது தன்னால் உருவாக்கப்படும் ஒரு புனைவு யதார்த்தமே என்றும், அதற்குப் படைப்பின் அந்தரங்கத் தளத்திலேயே மதிப்பு என்றும் உணர்ந்து கொண்ட படைப்பாளி பூமணி. இலக்கியம் ஒருபோதும் அரசியல் செயல்பாடுகளின் நிழலாக இருக்காது என்று உணர்ந்தவர். தலைமைப் பொறுப்பை எந்நிலையிலும் அரசியல்வாதியிடம், அது எத்தனை புரட்சிகர அரசியலாக இருந்தாலும் கூடத் தந்து விட முன் வராதவர்.
பூமணியின் கதைகளில், குறிப்பாக மிகவிரிவான ஒரு சமூக சித்திரத்தை அளிக்கும் ’பிறகு’ போன்ற நாவல்களில் சாதிமுரண்பாடுகள் பெரிதாக சித்தரிக்கப்படவில்லை. பூமணி காட்டும் உலகில் சாதியின் ஏற்றத்தாழ்வும் சுரண்டலும் உள்ளது. ஆனால் அதைமீறி மானுட உறவுகளே அழுத்தமாக பதிவாகியுள்ளன. பூமணி சமூக மோதல்களைக்கூட மனித வாழ்க்கைக்குள் கொண்டுவந்து உறவுகளின் சிக்கலாக மட்டுமே காட்டுகிறார். அவரது கலையின் சிறப்பம்சமே இதுதான் எனலாம்.
இயல்புவாதத்தின் நடை மண்ணாலும் இரும்பாலும் ஆக்கப்பட்டது என்று சொல்லப்படுவதுண்டு. பிரபலமான பல ருஷ்யநாவல்களை, குறிப்பாக அலெக்ஸி தல்ஸ்தோயின் சக்ரவர்த்தி பீட்டர் போன்ற நாவல்களை, இரும்பால் உருவாக்கப்பட்ட நாவல் என்று சொல்லலாம். பூமணியின் நாவல் மண்ணால் உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு கணத்திலும் மண்ணை நினைவுபடுத்திக்கொண்டே இருக்கும் நடை அது. மண்ணின் காட்சிகள், மண் சார்ந்த தகவல்கள், மண் சார்ந்த படிமங்கள். கரிசலில் சென்றுகொண்டிருக்கும்போது சிலசமயம் கரிய மண்ணில் நிற்கும் கரிய மரங்களும் வாழும் கரிய மக்களும் மண்ணைக்குழைத்துக்கட்டிய வீடுகளுமாக அங்கே எல்லாமே அந்தக்கரிய மண்ணால் ஆனவையோ என்ற பிரமையை உருவாக்கும். அந்த அனுபவத்தைப் பூமணியின் நடை எப்போதும் அளித்துக்கொண்டிருக்கிறது.தமிழில் அப்படி மண்ணால் ஆன நடை கொண்ட முதல் படைப்பாளிகள் என ஆர்.ஷண்முகசுந்தரம் , கி.ராஜநாராயணன் இருவரையும் சொல்லலாம்.
பூமணி நில அடிமைகளின் கதையை எழுதவில்லை. சிறு நில உடைமையாளர்களை, வறட்சியால் அல்லது வேறு காரணங்களால் கூலிவிவசாயத்துக்குச் செல்லும் மக்களையே தன் கதைகளில் காட்டுகிறார். அவரது கதைகளில் நில உடைமையாளாருக்கும் உழைப்பாளர்களுக்குமான நுட்பமான மோதல் மௌனமாக வெளிப்பட்டிருக்கும். ஆனால் பூமணியின் புனைவுலகில் அவர் எந்தத் தரப்பின் குரலாகவும் ஒலிப்பதில்லை. உள்ளது உள்ளபடி என்ற அவரது அழகியல்நோக்கு அதற்கு அனுமதிப்பதில்லை. ஒரு பற்றற்ற சாட்சி போல அவரது கண் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்கிறது. அவருக்குள் இருக்கும் கலைஞன் அவை எல்லாவற்றையும் ஆழ்ந்த சமநிலையுடன் விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டு பதிவுசெய்கிறது.
பங்களிப்பு
சிறுகதைத் தொகுப்புகள்
- வயிறுகள்
- ரீதி
- நொறுங்கல்கள்
- நல்லநாள்
நாவல்கள்
- வெக்கை
- நைவேத்தியம்
- வரப்புகள்
- வாய்க்கால்
- பிறகு
- அஞ்ஞாடி
மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள்
வெக்கை நாவல் இந்தியில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.
திரைப்படங்கள்
- கருவேலம்பூக்கள் (இயக்கம்)
- அசுரன் (கதை)
தேசிய திரைப்பட வளர்ச்சி நிறுவனத்துக்காக இவர் இயக்கிய கருவேலம்பூக்கள் திரைப்படம் பல முக்கிய உலகத் திரைப்பட விழாக்களில் பங்கு பெற்றது.
விருதுகள்
- இலக்கியச் சிந்தனை பரிசு
- அக்னி விருது
- திருவனந்தபுரம் தமிழ்ச் சங்க விருது
- விஷ்ணுபுரம் விருது - 2011
- சாகித்திய அகாதமி விருது- 2014 (அஞ்ஞாடி நாவல்)