புகழ்ச்சி மாலை
From Tamil Wiki
Revision as of 09:24, 5 November 2023 by Tamizhkalai (talk | contribs)
புகழ்ச்சி மாலை தமிழ்ச் சிற்றிலக்கிய வகைமைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். அகவல் அடியும், கலிப்பா அடியும் கலந்துவர வஞ்சிப்பாவால் பெண்களைப் பாடுவது புகழ்ச்சி மாலை. ஆண்களைப் பாடுவது நாமமாலை.
இதன் இலக்கணத்தை கூறும் இலக்கண விளக்க நூற்பா:
மயக்க அடிபெறும் வஞ்சிப்பாவால்
வியத்தகு நல்லார் விழுச்சீர் உரைத்தல்
புகழ்ச்சி மாலை; புருடர்க்கு உரைப்பின்
நாம மாலை யாம் என நவில்வர்
- இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 866
பன்னிரு பாட்டியல்
வெள்ளடி இயலான் புணர்ப்போன் குறிப்பின்
தள்ளா இயலது புகழ்ச்சி மாலை.’
பன்னிரு பாட்டியல்-287
என்று புகழ்ச்சி மாலைக்கு இலக்கணம் கூறுகிறது.
உசாத்துணை
- நவநீத நடனார், எஸ். கலியாண சுந்தரையரும் எஸ், ஜி. கணபதி ஐயரும் (பதிப்பாசிரியர்கள்), கலித்துறைப் பாட்டியல் என்னும் நவநீதப் பாட்டியல்
- கோபாலையர், தி. வே. (பதிப்பாசிரியர்), வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், திருவையாறு.
- சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), முத்துவீரியம்
வெளி இணைப்புகள்
✅Finalised Page