under review

பி. கிருஷ்ணன்: Difference between revisions

From Tamil Wiki
(changed single quotes)
(Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
 
(25 intermediate revisions by 2 users not shown)
Line 1: Line 1:
[[File:பி.கிருஷ்ணன்1.png|thumb|பி.கிருஷ்ணன்]]
[[File:P.Krishnan 1.jpg|thumb|பி. கிருஷ்ணன்]]
[[File:P.Krishnan 1.jpg|thumb|பி. கிருஷ்ணன்]]
[[File:பி.கிருஷ்ணன்9.png|thumb|பி.கிருஷ்ணன் பாராட்டுவிழா கூலிம்]]
பி. கிருஷ்ணன் (பிறப்பு: 1932) சிங்கப்பூரின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவர். புதுமைதாசன் என்ற பெயரில் எழுதும் இவர் குறிப்பிடத்தக்க சிறுகதைகளை எழுதியுள்ளார். வானொலி நாடகங்களாலும் ஆங்கில இலக்கிய மொழி பெயர்ப்புகளாலும் பிரபலமானார்.  
பி. கிருஷ்ணன் (பிறப்பு: 1932) சிங்கப்பூரின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவர். புதுமைதாசன் என்ற பெயரில் எழுதும் இவர் குறிப்பிடத்தக்க சிறுகதைகளை எழுதியுள்ளார். வானொலி நாடகங்களாலும் ஆங்கில இலக்கிய மொழி பெயர்ப்புகளாலும் பிரபலமானார்.  
==பிறப்பு,கல்வி==
==பிறப்பு,கல்வி==
பி. கிருஷ்ணன் மலேசியாவின் ஜோகூரில் 1932-ஆம் ஆண்டு பிறந்தார். தந்தையின் பெயர் பெருமாள். தாயாரின் பெயர் செல்லம்மாள். இளம் வயதில் பெற்றோரை இழந்த அவரது கல்வியும் ஜப்பானிய ஆட்சிக் காலத்தில் தடைப்பட்டது.  இளமையில் விபத்தொன்றுக்கு ஆளாகி கால் ஒடிந்து 1941-ல் இரண்டு ஆண்டுக்காலம் மருத்துவமனையில் இருந்தார். போர்க்காலமாகையால் முறையான சிகிச்சை கிடைக்காமல் கால் வளைந்து போயிற்று. மருத்துவமனையில் இருந்து அங்கு வேலைசெய்த தாதியான மருதம்மாள் அவரை அழைத்துச்சென்று தன் இல்லத்தில் தங்கவைத்தார். 1943 முதல் ஒன்றரை ஆண்டுக்காலம் அவர் இல்லத்தில் இருந்தார். ஜோகூரில் இருந்த சிரஞ்சீவி ஸ்டோர் என்னும் கடையில் பி.கிருஷ்ணன் சில ஆண்டுக்காலம் வேலைபார்த்தார். அங்கிருந்த கடுமையான கண்டிப்புகள் பிடிக்காமல் ஆறுமுகம் பிள்ளை என்பவரின் அழைப்பின் பேரில் 1947-ஆம் ஆண்டு சிங்கப்பூருக்கு வந்த பி.கிருஷ்ணன் ராமசாமி நாடார் ஜவுளிக்கடையில் சிலகாலம் வேலைபார்த்தார். அதன்பின் ராசுப் பிள்ளை என்பவர் நடத்திவந்த மளிகைக்கடையில் பணியாற்றினார். 1952 வரை அந்தக்கடையில் பணியாற்றினார்.
பி. கிருஷ்ணன் மலேசியாவின் ஜோகூரில் 1932-ம் ஆண்டு பிறந்தார். தந்தையின் பெயர் பெருமாள். தாயாரின் பெயர் செல்லம்மாள். இளம் வயதில் பெற்றோரை இழந்த அவரது கல்வியும் ஜப்பானிய ஆட்சிக் காலத்தில் தடைப்பட்டது. இளமையில் விபத்தொன்றுக்கு ஆளாகி கால் ஒடிந்து 1941-ல் இரண்டு ஆண்டுக்காலம் மருத்துவமனையில் இருந்தார். போர்க்காலமாகையால் முறையான சிகிச்சை கிடைக்காமல் கால் வளைந்து போயிற்று. மருத்துவமனையில் இருந்து அங்கு வேலைசெய்த தாதியான மருதம்மாள் அவரை அழைத்துச்சென்று தன் இல்லத்தில் தங்கவைத்தார். 1943 முதல் ஒன்றரை ஆண்டுக்காலம் அவர் இல்லத்தில் இருந்தார். ஜோகூரில் இருந்த சிரஞ்சீவி ஸ்டோர் என்னும் கடையில் பி.கிருஷ்ணன் சில ஆண்டுக்காலம் வேலைபார்த்தார். அங்கிருந்த கடுமையான கண்டிப்புகள் பிடிக்காமல் ஆறுமுகம் பிள்ளை என்பவரின் அழைப்பின் பேரில் 1947-ம் ஆண்டு சிங்கப்பூருக்கு வந்த பி.கிருஷ்ணன் ராமசாமி நாடார் ஜவுளிக்கடையில் சிலகாலம் வேலைபார்த்தார். அதன்பின் ராசுப் பிள்ளை என்பவர் நடத்திவந்த மளிகைக்கடையில் பணியாற்றினார். 1952 வரை அந்தக்கடையில் பணியாற்றினார்.


பி.கிருஷ்ணன் கடையில் முழு நேர வேலை பார்த்துக்கொண்டே கிடைக்கும் நேரத்திலெல்லாம் புத்தகங்கள் வாசிப்பார்.  சிங்கப்பூர் திராவிடக் கழகத்தில் இருந்த நூல் நிலையம், தமிழ் நாடு புத்தக நிலையம் போன்றவையும், பொது நூலகமும் மற்ற புத்தக் கடைகளும் அவருடைய தற்கல்விக்கு உதவின. பி.கிருஷ்ணன் தன் முயற்சியால் தமிழ் இலக்கிய, இலக்கண நூல்களையும் படித்தார். பல தமிழ் ஆசிரியர்களிடம் தமிழ் பயின்றார். ச.சா.சின்னையாவிடம் யாப்பிலக்கணம் பயின்றார்.  
பி.கிருஷ்ணன் கடையில் முழு நேர வேலை பார்த்துக்கொண்டே கிடைக்கும் நேரத்திலெல்லாம் புத்தகங்கள் வாசிப்பார். சிங்கப்பூர் திராவிடக் கழகத்தில் இருந்த நூல் நிலையம், தமிழ் நாடு புத்தக நிலையம் போன்றவையும், பொது நூலகமும் மற்ற புத்தக் கடைகளும் அவருடைய தற்கல்விக்கு உதவின. பி.கிருஷ்ணன் தன் முயற்சியால் தமிழ் இலக்கிய, இலக்கண நூல்களையும் படித்தார். பல தமிழ் ஆசிரியர்களிடம் தமிழ் பயின்றார். ச.சா.சின்னையாவிடம் யாப்பிலக்கணம் பயின்றார்.  
== தனிவாழ்க்கை ==
== தனிவாழ்க்கை ==
[[File:1968-chandran.jpg|thumb|சிங்கப்பூர் தமிழ் வானொலியில் இருந்து தமிழ்த் தொலைக்காட்சித் தமிழ்ப் பிரிவுக்குத் தலைவரான ஈஎஸ்ஜே.சந்திரனுடன் (வலம்) பி. கிருஷ்ணன் (இடம்), 1968.]]
[[File:1968-chandran.jpg|thumb|சிங்கப்பூர் தமிழ் வானொலியில் இருந்து தமிழ்த் தொலைக்காட்சித் தமிழ்ப் பிரிவுக்குத் தலைவரான ஈஎஸ்ஜே.சந்திரனுடன் (வலம்) பி. கிருஷ்ணன் (இடம்), 1968.]]
1956-ல் பி.கிருஷ்ணன் மணமுடித்தார்.  மனைவி முனியம்மாள் 2021-ல் 80 வயதில் காலமானார். இரண்டு ஆண்கள், இரண்டு பெண் பிள்ளைகள், ஆறு  பேரப் பிள்ளைகள், இரண்டு கொள்ளுப் பேரப் பிள்ளைகள்  உள்ளனர்.
1956-ல் பி.கிருஷ்ணன் மணமுடித்தார். மனைவி முனியம்மாள் 2021-ல் 80 வயதில் காலமானார். இரண்டு ஆண்கள், இரண்டு பெண் பிள்ளைகள், ஆறு பேரப் பிள்ளைகள், இரண்டு கொள்ளுப் பேரப் பிள்ளைகள் உள்ளனர்.


பி.கிருஷ்ணன் 14-ஆவது வயதில் கடைச் சிப்பந்தியாக பணியைத் தொடங்கினார், கூடவே இரவுப் பள்ளியில் படித்தார்.இருபது வயதில் 1953-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் படைத்தளம் ஒன்றில் பொருள் கிடங்கின் துணைக் காப்பாளராகப் பணியில் சேர்ந்தார்.  இரவுப் பள்ளியில் கல்வியைத் தொடர்ந்து 1967-ல் சீனியர் கேம்ப்ரிட்ஜ் சான்றிதழ் பெற்றார். அந்தச் சமயம் ஆங்கில நூல்களையும் படிக்கத் தொடங்கினார். குறிப்பாக ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் இவருள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.
பி.கிருஷ்ணன் 14-ஆவது வயதில் கடைச் சிப்பந்தியாக பணியைத் தொடங்கினார், கூடவே இரவுப் பள்ளியில் படித்தார்.இருபது வயதில் 1953-ம் ஆண்டு பிரிட்டிஷ் படைத்தளம் ஒன்றில் பொருள் கிடங்கின் துணைக் காப்பாளராகப் பணியில் சேர்ந்தார். இரவுப் பள்ளியில் கல்வியைத் தொடர்ந்து 1967-ல் சீனியர் கேம்ப்ரிட்ஜ் சான்றிதழ் பெற்றார். அந்தச் சமயம் ஆங்கில நூல்களையும் படிக்கத் தொடங்கினார். குறிப்பாக ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் இவருள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.


1953-ஆம் ஆண்டிலிருந்து 1961-ஆம் ஆண்டுவரை சிங்கப்பூர் வானொலியின் இந்திய நிகழ்ச்சிகள் பகுதி (Indian Programmes Section) என்னும் பொதுப்பிரிவிலும் பள்ளிகள் ஒலிபரப்புப் பகுதி (Schools Broadcasts) என்னும் பிரிவிலும் பகுதிநேரக் கலைஞராய்ப் பணியாற்றினார். அந்தப் பகுதிகளுக்குச் சிறுகதைகள், நாடகங்கள் முதலியவற்றை எழுதியும் நடித்தும் வந்தார்.
1953-ம் ஆண்டிலிருந்து 1961-ம் ஆண்டுவரை சிங்கப்பூர் வானொலியின் இந்திய நிகழ்ச்சிகள் பகுதி (Indian Programmes Section) என்னும் பொதுப்பிரிவிலும் பள்ளிகள் ஒலிபரப்புப் பகுதி (Schools Broadcasts) என்னும் பிரிவிலும் பகுதிநேரக் கலைஞராய்ப் பணியாற்றினார். அந்தப் பகுதிகளுக்குச் சிறுகதைகள், நாடகங்கள் முதலியவற்றை எழுதியும் நடித்தும் வந்தார்.


1962-ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து சிங்கப்பூர் வானொலியின் இந்தியப்பகுதியில் உதவி ஒலிபரப்பாளராய்ச் சேர்ந்து பணியாற்றத் தொடங்கிய இவர், பல்வேறு பொறுப்புகளையும் ஏற்று இறுதியில் முதுநிலை நிர்வாகத் தயாரிப்பாளர்-படைப்பாளர் (Senior Executive Producer - Presenter) என்னும் நிலைக்கு உயர்ந்து 31 ஆண்டுகளுக்குப் பின்னர் 1992-ஆம் ஆண்டின் இறுதியில் பணி ஓய்வு பெற்றார்.[[File:P.Krishnan 3.jpg|thumb|நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 1963-ல் சிங்கப்பூர் வந்தபோது வானொலிக் கலைஞர்களுடன் பி.கிருஷ்ணன் (வலதுகோடி)]]
1962-ம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து சிங்கப்பூர் வானொலியின் இந்தியப்பகுதியில் உதவி ஒலிபரப்பாளராய்ச் சேர்ந்து பணியாற்றத் தொடங்கிய இவர், பல்வேறு பொறுப்புகளையும் ஏற்று இறுதியில் முதுநிலை நிர்வாகத் தயாரிப்பாளர்-படைப்பாளர் (Senior Executive Producer - Presenter) என்னும் நிலைக்கு உயர்ந்து 31 ஆண்டுகளுக்குப் பின்னர் 1992-ம் ஆண்டின் இறுதியில் பணி ஓய்வு பெற்றார்.
[[File:P.Krishnan 3.jpg|thumb|நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 1963-ல் சிங்கப்பூர் வந்தபோது வானொலிக் கலைஞர்களுடன் பி.கிருஷ்ணன் (வலதுகோடி)]]
==இலக்கிய வாழ்க்கை==
==இலக்கிய வாழ்க்கை==
பி.கிருஷ்ணனை எழுதத் தூண்டிய இரு நிகழ்வுகளை அவர் [[வல்லினம்]] பேட்டியில் குறிப்பிடுகிறார். அவர் கடையில் வேலைபார்க்கும்போது அவுலியா முகம்மது என்னும் இலக்கிய ஆர்வலர் அறிமுகமானார். அவர் [[அந்தகக்கவி வீரராகவ முதலியார்]] அரசனுக்கு அறம்பாடிய கதையைச் சொல்ல அதனால் கவரப்பட்டு பி.கிருஷ்ணன் ஒரு கட்டுரை எழுதி தமிழ் முரசு இதழுக்கு அனுப்பினார். அங்கே ஆசிரியராக இருந்த முருகையன் அதை திருத்தி வெளியிட்டார். பி.கிருஷ்ணன் எழுதிய முதல் படைப்பு அது.
பி.கிருஷ்ணனை எழுதத் தூண்டிய இரு நிகழ்வுகளை அவர் [[வல்லினம்]] பேட்டியில் குறிப்பிடுகிறார். அவர் கடையில் வேலைபார்க்கும்போது அவுலியா முகம்மது என்னும் இலக்கிய ஆர்வலர் அறிமுகமானார். அவர் [[அந்தகக்கவி வீரராகவ முதலியார்]] அரசனுக்கு அறம்பாடிய கதையைச் சொல்ல அதனால் கவரப்பட்டு பி.கிருஷ்ணன் ஒரு கட்டுரை எழுதி தமிழ் முரசு இதழுக்கு அனுப்பினார். அங்கே ஆசிரியராக இருந்த முருகையன் அதை திருத்தி வெளியிட்டார். பி.கிருஷ்ணன் எழுதிய முதல் படைப்பு அது.


பி.கிருஷ்ணன் தமிழக எழுத்தாளர் [[புதுமைப்பித்தன்|புதுமைப்பித்த]]னின் எழுத்தால் கவரப்பட்டார்.சிங்கப்பூரில் எழுத்தாளர் ஒருவர் புதுமைப்பித்தன் 'இலக்கிய மேதையா?’ என்ற கட்டுரையைத் தமிழ் முரசில் எழுதி அது ஒரு விவாதத்தை உருவாக்கியது. புதுமைப்பித்தனை ஆபாச எழுத்தாளராக சித்திரிப்பதாய் அமைந்த அக்கட்டுரைக்கு பி.கிருஷ்ணன் பதில் கட்டுரை எழுதினார். மா.ஜெகதீசன், எம்.கே.துரைசிங்கம், பா.சண்முகம், ரா.வெற்றிவேல், போன்றவர்கள் கலந்துகொண்ட அந்த விவாதம் 1951 முதல் 1952 வரை தமிழ் முரசில் எட்டு மாதங்கள் நீடித்தது. முனைவர் [[எம்.எஸ்.ஸ்ரீலட்சுமி]], '[[புதுமைப்பித்தன் இலக்கிய சர்ச்சை]]’ என்ற தலைப்பில் அதை தொகுத்திருக்கிறார்
பி.கிருஷ்ணன் தமிழக எழுத்தாளர் [[புதுமைப்பித்தன்|புதுமைப்பித்த]]னின் எழுத்தால் கவரப்பட்டார்.சிங்கப்பூரில் எழுத்தாளர் ஒருவர் புதுமைப்பித்தன் 'இலக்கிய மேதையா?’ என்ற கட்டுரையைத் [[தமிழ் முரசு]] இதழில் எழுதி அது ஒரு விவாதத்தை உருவாக்கியது. புதுமைப்பித்தனை ஆபாச எழுத்தாளராக சித்திரிப்பதாய் அமைந்த அக்கட்டுரைக்கு பி.கிருஷ்ணன் பதில் கட்டுரை எழுதினார். மா.ஜெகதீசன், எம்.கே.துரைசிங்கம், பா.சண்முகம், ரா.வெற்றிவேல், போன்றவர்கள் கலந்துகொண்ட அந்த விவாதம் 1951 முதல் 1952 வரை தமிழ் முரசில் எட்டு மாதங்கள் நீடித்தது. முனைவர் [[எம்.எஸ்.ஸ்ரீலக்ஷ்மி]], 'புதுமைப்பித்தன் இலக்கிய சர்ச்சை’ என்ற தலைப்பில் அதை தொகுத்திருக்கிறார் (பார்க்க [[புதுமைப்பித்தன் விவாதம்,மலேசியா]] )


தொடர்ந்து பி.கிருஷ்ணன் 'புதுமைதாசன்’ என்ற புனைபெயரில் எழுதத் தொடங்கினார்.1951-ஆம் ஆண்டில் தம்முடைய எழுத்துப் பணியைத் தொடங்கிய இவர் [[தமிழ் முரசு]], தமிழ் நேசன், புது யுகம், திரையொளி, இந்தியன் மூவிநியூஸ், இலக்கியச் சோலை, திராவிட முன்னேற்றக் கழகம் (சிங்கப்பூர்) ஆண்டுஇதழ்கள்  உள்ளிட்ட பல்வேறு சிங்கப்பூர், மலேசியா இதழ்களுக்கும் எழுதியுள்ளார்.
தொடர்ந்து பி.கிருஷ்ணன் 'புதுமைதாசன்’ என்ற புனைபெயரில் எழுதத் தொடங்கினார்.1951-ம் ஆண்டில் தம்முடைய எழுத்துப் பணியைத் தொடங்கிய இவர் [[தமிழ் முரசு]], தமிழ் நேசன், புது யுகம், திரையொளி, இந்தியன் மூவிநியூஸ், இலக்கியச் சோலை, திராவிட முன்னேற்றக் கழகம் (சிங்கப்பூர்) ஆண்டுஇதழ்கள் உள்ளிட்ட பல்வேறு சிங்கப்பூர், மலேசியா இதழ்களுக்கும் எழுதியுள்ளார்.


பி.கிருஷ்ணன் தன் 70 ஆண்டு எழுத்துப் பணியில் இதழ்கள், வானொலி, தொலைக்காட்சி, மேடை ஆகியவற்றுக்குச் சிறுகதைகள், கட்டுரைகள், இலக்கியப் பேச்சுகள், சிறப்பு ஒலிச்சித்திரங்கள், தனி நாடகங்கள், தொடர் நாடகங்கள் என 500-க்கும் மிகுதியான பல்வேறு இலக்கியப் படைப்புகளை எழுதியுள்ளார்
பி.கிருஷ்ணன் தன் 70 ஆண்டு எழுத்துப் பணியில் இதழ்கள், வானொலி, தொலைக்காட்சி, மேடை ஆகியவற்றுக்குச் சிறுகதைகள், கட்டுரைகள், இலக்கியப் பேச்சுகள், சிறப்பு ஒலிச்சித்திரங்கள், தனி நாடகங்கள், தொடர் நாடகங்கள் என 500-க்கும் மிகுதியான பல்வேறு இலக்கியப் படைப்புகளை எழுதியுள்ளார்
====== வானொலிப் படைப்புகள் ======
====== வானொலிப் படைப்புகள் ======
சிங்கப்பூரின் மூத்த படைப்பாளி [[ந.பழநிவேலு]] சிங்கப்பூர் வானொலியில் பொதுப் பிரிவில் துணைத் தலைவராய் பணியாற்றி வந்தபோது பூச்செண்டு என்கிற இலக்கிய நிகழ்ச்சியை தயாரித்து வந்தார். அதில் பி.கிருஷ்ணன் குரல் நடிகராக அறிமுகமானார். தமது பணிக்காலத்தில் கதம்ப நாடகங்கள், இலக்கிய நாடகங்கள்,  தொடர் நாடகங்கள், நகைச்சுவை நாடகங்கள், மர்ம நாடகங்கள், மொழி பெயர்ப்பு நாடகங்கள் என வானொலியில் மிக அதிகமான நாடகங்களை எழுதித் தயாரித்த பி. கிருஷ்ணன், சிறந்த நடிகராகவும் பாடகராவும் பெயர் பெற்றார். பி.கிருஷ்ணன் வானொலியில் எழுதிய நகைச்சுவை நாடகங்கள் புகழ்பெற்றவை. அவற்றில் வரும் மாடிவிட்டு மங்களம், அடுக்குவீட்டு அண்ணாசாமி ஆகிய கதாபாத்திரங்கள் அடுத்த தலைமுறையாலும் நினைவுகூரப்படுகின்றன.
சிங்கப்பூரின் மூத்த படைப்பாளி [[ந.பழநிவேலு]] சிங்கப்பூர் வானொலியில் பொதுப் பிரிவில் துணைத் தலைவராய் பணியாற்றி வந்தபோது பூச்செண்டு என்கிற இலக்கிய நிகழ்ச்சியை தயாரித்து வந்தார். அதில் பி.கிருஷ்ணன் குரல் நடிகராக அறிமுகமானார். தமது பணிக்காலத்தில் கதம்ப நாடகங்கள், இலக்கிய நாடகங்கள், தொடர் நாடகங்கள், நகைச்சுவை நாடகங்கள், மர்ம நாடகங்கள், மொழி பெயர்ப்பு நாடகங்கள் என வானொலியில் மிக அதிகமான நாடகங்களை எழுதித் தயாரித்த பி. கிருஷ்ணன், சிறந்த நடிகராகவும் பாடகராவும் பெயர் பெற்றார். பி.கிருஷ்ணன் வானொலியில் எழுதிய நகைச்சுவை நாடகங்கள் புகழ்பெற்றவை. அவற்றில் வரும் மாடிவிட்டு மங்களம், அடுக்குவீட்டு அண்ணாசாமி ஆகிய கதாபாத்திரங்கள் அடுத்த தலைமுறையாலும் நினைவுகூரப்படுகின்றன.


1968-ல் கோலாலம்பூரில் நடந்த தமிழ்மாநாட்டுக்காக வந்திருந்த [[கி. வா. ஜகந்நாதன்]], [[மு. வரதராசன்]] போன்றவர்களை நேர்காணல் செய்திருக்கிறார். 1971-ல் [[அகிலன்]] , 1975-ல் [[ஜெயகாந்தன்]] ஆகியோரையும் பேட்டி எடுத்திருக்கிறார்.
1968-ல் கோலாலம்பூரில் நடந்த தமிழ்மாநாட்டுக்காக வந்திருந்த [[கி. வா. ஜகந்நாதன்]], [[மு. வரதராசன்]] போன்றவர்களை நேர்காணல் செய்திருக்கிறார். 1971-ல் [[அகிலன்]] , 1975-ல் [[ஜெயகாந்தன்]] ஆகியோரையும் பேட்டி எடுத்திருக்கிறார்.
Line 29: Line 32:
இவர் 1953 முதல் 1993 வரையில் 40-க்கும் மேற்பட்ட சிறுகதைகளை இதழில்களில் எழுதியுள்ளபோதிலும் பல கதைகள் கிடைக்கவில்லை. கிடைக்கப்பெற்ற 10 கதைகள் 'புதுமைதாசன் கதைகள்' என்ற தொகுப்பாக வந்துள்ளதுன.
இவர் 1953 முதல் 1993 வரையில் 40-க்கும் மேற்பட்ட சிறுகதைகளை இதழில்களில் எழுதியுள்ளபோதிலும் பல கதைகள் கிடைக்கவில்லை. கிடைக்கப்பெற்ற 10 கதைகள் 'புதுமைதாசன் கதைகள்' என்ற தொகுப்பாக வந்துள்ளதுன.
====== நாடகங்கள் ======
====== நாடகங்கள் ======
ரா.நாகையன் அளித்த ஒரு சிறுகதையை 'இன்பம் எங்கே?’ என்ற தலைப்பில் மேடைநாடகமாக எழுதினார். 1954-இல் எழுதப்பட்ட அந்நாடகம் 1955-ல் அரங்கேறியது. அது பி.கிருஷ்ணனின் முதல் நாடகப்படைப்பு.  
ரா.நாகையன் அளித்த ஒரு சிறுகதையை 'இன்பம் எங்கே?’ என்ற தலைப்பில் மேடைநாடகமாக எழுதினார். 1954-ல் எழுதப்பட்ட அந்நாடகம் 1955-ல் அரங்கேறியது. அது பி.கிருஷ்ணனின் முதல் நாடகப்படைப்பு.  


சங்க இலக்கியங்கள், சங்கம் மருவிய கால இலக்கியங்கள், இடைக்கால இலக்கியங்கள், பிற்கால இலக்கியங்கள் முதலியவற்றின் அடிப்படையில் இலக்கிய நாடகங்களை எழுதினார். மேனாட்டு இலக்கியப் பேரறிஞர்களாகிய ஷேக்ஸ்பியர், பைரன், கீட்ஸ், ஜார்ஜ் ஆர்வெல் முதலியோர்தம் படைப்புகளின் மொழியாக்கங்கள், உலகப் புகழ்பெற்ற சிறுகதை இலக்கிய மேதைகளின் சிறுகதைகளின் மாற்றுப் படைப்புருவாக்க நாடகங்கள் என ஏராளமான நாடகங்கள் வானொலியில் நடிக்கப்பட்டுள்ளன. [[File:1975-Mohanam-Akilan-palanivel.jpg|thumb|299x299px|எழுத்தாளர் அகிலன் 1975-ஆம் ஆண்டு சிங்கப்பூர் வந்திருந்தபோது. இடமிருந்து தி.சு.மோகனம், பி.கிருஷ்ணன், அகிலன், ந.பழநிவேலு.]]
சங்க இலக்கியங்கள், சங்கம் மருவிய கால இலக்கியங்கள், இடைக்கால இலக்கியங்கள், பிற்கால இலக்கியங்கள் முதலியவற்றின் அடிப்படையில் இலக்கிய நாடகங்களை எழுதினார். மேனாட்டு இலக்கியப் பேரறிஞர்களாகிய ஷேக்ஸ்பியர், பைரன், கீட்ஸ், ஜார்ஜ் ஆர்வெல் முதலியோர்தம் படைப்புகளின் மொழியாக்கங்கள், உலகப் புகழ்பெற்ற சிறுகதை இலக்கிய மேதைகளின் சிறுகதைகளின் மாற்றுப் படைப்புருவாக்க நாடகங்கள் என ஏராளமான நாடகங்கள் வானொலியில் நடிக்கப்பட்டுள்ளன.  
[[File:1975-Mohanam-Akilan-palanivel.jpg|thumb|299x299px|எழுத்தாளர் அகிலன் 1975-ம் ஆண்டு சிங்கப்பூர் வந்திருந்தபோது. இடமிருந்து தி.சு.மோகனம், பி.கிருஷ்ணன், அகிலன், ந.பழநிவேலு.]]
====== ஏற்பு ======
====== ஏற்பு ======
பி.கிருஷ்ணன் எழுதிய படைப்புகள் பலவும் சிங்கப்பூர்ப் புனைகதைகள் (The Fiction of Singapore), சிங்கப்பூர்த் தமிழ்ச் சிறுகதைகள், சிங்கப்பூர்ப் பல்கலைக்கழகக் கலை மன்றம் (The Centre for the Arts - Nus) என்னும் அமைப்பின் வெளியீடாகிய சிங்கா (Singa), இக்கால ஆசியான் நாடகங்கள்-சிங்கப்பூர் (Modern Asian Plays  Singapore), சிங்கப்பூர்க் கல்வியமைச்சின் துணைப்பாட நூல்கள், இந்திய சாகித்திய அகாதெமியின் அயலகத் தமிழ் இலக்கியம் (Anthology of Tamil Short Stories and Poems From Sri Lanka, Malaysia and Singapore), தென்கிழக்காசிய எழுத்து விருது 30 ஆண்டு நிறைவுத் தொகுப்பு (An Anthology on 30th Anniversary of SEA Write Awards) முதலிய பல்வேறு தொகுப்புகளிலும் இடம் பெற்றிருக்கின்றன. இவற்றுள் சில ஆங்கிலத்தில் மொழியாக்கமும் செய்யப்பெற்றிருக்கின்றன.சிங்கப்பூர் தேசிய நூலக வாரியம், சிங்கப்பூர் இலக்கிய முன்னோடிகள் என்னும் தொடரில் 2012-ஆம் ஆண்டு மார்ச் 10 முதல் ஏப்ரல் 22 வரை நடத்திய பி.கிருஷ்ணன் (புதுமைதாசன்) பல்துறை வித்தகர் என்னும் கண்காட்சியையும் கருத்தரங்கும் நடத்தியது. பி.கிருஷ்ணனின் (புதுமைதாசன்) இலக்கியப் படைப்புகள் - ஓர் ஆய்வு என்னும் தொகுப்பு நூலும் வெளியிடப்பெற்றது.
பி.கிருஷ்ணன் எழுதிய படைப்புகள் பலவும் சிங்கப்பூர்ப் புனைகதைகள் (The Fiction of Singapore), சிங்கப்பூர்த் தமிழ்ச் சிறுகதைகள், சிங்கப்பூர்ப் பல்கலைக்கழகக் கலை மன்றம் (The Centre for the Arts - Nus) என்னும் அமைப்பின் வெளியீடாகிய சிங்கா (Singa), இக்கால ஆசியான் நாடகங்கள்-சிங்கப்பூர் (Modern Asian Plays Singapore), சிங்கப்பூர்க் கல்வியமைச்சின் துணைப்பாட நூல்கள், இந்திய சாகித்திய அகாதெமியின் அயலகத் தமிழ் இலக்கியம் (Anthology of Tamil Short Stories and Poems From Sri Lanka, Malaysia and Singapore), தென்கிழக்காசிய எழுத்து விருது 30 ஆண்டு நிறைவுத் தொகுப்பு (An Anthology on 30th Anniversary of SEA Write Awards) முதலிய பல்வேறு தொகுப்புகளிலும் இடம் பெற்றிருக்கின்றன. இவற்றுள் சில ஆங்கிலத்தில் மொழியாக்கமும் செய்யப்பெற்றிருக்கின்றன.சிங்கப்பூர் தேசிய நூலக வாரியம், சிங்கப்பூர் இலக்கிய முன்னோடிகள் என்னும் தொடரில் 2012-ம் ஆண்டு மார்ச் 10 முதல் ஏப்ரல் 22 வரை நடத்திய பி.கிருஷ்ணன் (புதுமைதாசன்) பல்துறை வித்தகர் என்னும் கண்காட்சியையும் கருத்தரங்கும் நடத்தியது. பி.கிருஷ்ணனின் (புதுமைதாசன்) இலக்கியப் படைப்புகள் - ஓர் ஆய்வு என்னும் தொகுப்பு நூலும் வெளியிடப்பெற்றது.


தேசிய நூலகத்தில் 2005 முதல் 2019 வரை அமைந்திருந்த சிங்கப்பூரின் நான்கு மொழி இலக்கிய முன்னோடிகள் காட்சிக்கூடத்தில் சிறப்பிக்கப்பெற்றிருந்த ஆறு தமிழ் எழுத்தாளர்களில் பி.கிருஷ்ணனும் ஒருவர்.
தேசிய நூலகத்தில் 2005 முதல் 2019 வரை அமைந்திருந்த சிங்கப்பூரின் நான்கு மொழி இலக்கிய முன்னோடிகள் காட்சிக்கூடத்தில் சிறப்பிக்கப்பெற்றிருந்த ஆறு தமிழ் எழுத்தாளர்களில் பி.கிருஷ்ணனும் ஒருவர்.
== இதழியல் ==
== இதழியல் ==
1954 - 1955-ஆம் ஆண்டுகளில் ரெ.வெற்றிவேல் நடத்திய முன்னேற்றம் மாத இதழிலும், 1954-ல் சிங்கை முகிலனின் சிந்தனை இலக்கிய இதழிலும் துணையாசிரியராகப் பணியாற்றியுள்ளார்.
1954 - 1955-ம் ஆண்டுகளில் ரெ.வெற்றிவேல் நடத்திய முன்னேற்றம் மாத இதழிலும், 1954-ல் சிங்கை முகிலனின் சிந்தனை இலக்கிய இதழிலும் துணையாசிரியராகப் பணியாற்றியுள்ளார்.
== அமைப்புப் பணிகள் ==
== அமைப்புப் பணிகள் ==
பி.கிருஷ்ணன் 1953-இல் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் என்னும் அமைப்பை தன் இலக்கிய நண்பரும் எழுத்தாளருமான ரா.நாகையனுடன் சேர்ந்து தொடங்கினார். அதில் பி.கிருஷ்ணன் துணைச்செயலாளராகவும், ச.கிருஷ்ணமூர்த்தி என்பவர் செயலாளராகவும், ரெ.வெற்றிவேல் தலைவராகவும் பணியாற்றினர். அக்கழகம் ஓராண்டு மட்டுமே இருந்தது. அதன் பிறகு செயல்படவில்லை.[[File:P.Krishnan 4.jpg|thumb|சிங்கப்பூரின் முன்னாள் கலாசார அமைச்சர் ஜார்ஜ் இயோவிடம் இருந்து 1992-ஆம் ஆண்டு தேசிய நாள் செயற்திறன் விருதைப் பெறுகிறார் பி.கிருஷ்ணன்,]]
பி.கிருஷ்ணன் 1953-ல் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் என்னும் அமைப்பை தன் இலக்கிய நண்பரும் எழுத்தாளருமான ரா.நாகையனுடன் சேர்ந்து தொடங்கினார். அதில் பி.கிருஷ்ணன் துணைச்செயலாளராகவும், ச.கிருஷ்ணமூர்த்தி என்பவர் செயலாளராகவும், ரெ.வெற்றிவேல் தலைவராகவும் பணியாற்றினர். அக்கழகம் ஓராண்டு மட்டுமே இருந்தது. அதன் பிறகு செயல்படவில்லை.
== இலக்கிய இடம் ==
[[File:P.Krishnan 4.jpg|thumb|சிங்கப்பூரின் முன்னாள் கலாசார அமைச்சர் ஜார்ஜ் இயோவிடம் இருந்து 1992-ம் ஆண்டு தேசிய நாள் செயற்திறன் விருதைப் பெறுகிறார் பி.கிருஷ்ணன்,]]
சிங்கப்பூரின் தொடக்க கால எழுத்தாளர்கள் பெரும்பாலும் திராவிட இயக்கச் சார்பு அல்லது இடதுசாரிச் சார்பு கொண்டு சமூகசீர்திருத்த நோக்கம் கொண்ட படைப்புகளை எழுதியவர்கள். அவர்களில் பி.கிருஷ்ணன் தனித்தன்மை பெறுவது அவர் அன்று தமிழகத்தில் உருவாகி வந்த நவீன இலக்கியத்தின் தொடர்ச்சியாக தன்னை நிறுத்திக் கொண்டமையால்தான். புதுமைப்பித்தனின் தீவிரமான செல்வாக்கு பி.கிருஷ்ணனில் உண்டு என்றாலும் அவருடைய கதைகள் தனித்தன்மை கொண்டவை, சிங்கப்பூர் வாழ்க்கையின் சித்திரங்களை கலையழகுடன் வெளிப்படுத்துபவை. 'பி.கிருஷ்ணன் கதைகளில் உண்மையும் மக்களைநோக்கும் விழிகளும் விலகல்கொண்ட நிலைபாடும் உள்ளது. இயல்பான மொழியில் அவை வெளிப்படுகின்றன. ஆகவே சிங்கப்பூரின் முக்கியமான சிறுகதை முன்னோடி என அவரைச் சொல்ல எனக்குத்தயக்கமில்லை." என இவரை [[ஜெயமோகன்]] குறிப்பிட்டுள்ளார்.
[[File:P.Krishnan 6.jpg|thumb|2008-ம் ஆண்டு சிங்கப்பூரின் அன்றைய அதிபர் எஸ்.ஆர்.நாதனிடம் கலாசார பதக்க விருதைப் பெறுகிறார் பி.கிருஷ்ணன்.]]
[[File:P.Krishnan 6.jpg|thumb|2008-ஆம் ஆண்டு சிங்கப்பூரின் அன்றைய அதிபர் எஸ்.ஆர்.நாதனிடம் கலாசார பதக்க விருதைப் பெறுகிறார் பி.கிருஷ்ணன்.]]
[[File:P.Krishnan 4c.jpg|thumb|2005-ம் ஆண்டு பாங்காக்கில் தாய்லாந்து இளவரசியாரிடமிருந்து தென்கிழக்காசிய எழுத்து விருதைப் பெறும் பி. கிருஷ்ணன்]]
[[File:P.Krishnan 4c.jpg|thumb|2005-ஆம் ஆண்டு பாங்காக்கில் தாய்லாந்து இளவரசியாரிடமிருந்து தென்கிழக்காசிய எழுத்து விருதைப் பெறும் பி. கிருஷ்ணன்]]
==விருதுகள்==
==விருதுகள்==
*சிங்கப்பூரின் மிக உயரின கலைகள் இலக்கிய விருதாகிய கலாசாரப் பதக்கம் (Cultural Medallion - 2008)
*சிங்கப்பூரின் மிக உயரின கலைகள் இலக்கிய விருதாகிய கலாசாரப் பதக்கம் (Cultural Medallion - 2008)
Line 55: Line 58:
*சிங்கப்பூர்த் தமிழர் சங்கத்தின் மொழி, இலக்கிய விருது (2002)
*சிங்கப்பூர்த் தமிழர் சங்கத்தின் மொழி, இலக்கிய விருது (2002)
*கவிமாலை கணையாழி இலக்கிய விருது (2003)
*கவிமாலை கணையாழி இலக்கிய விருது (2003)
*மிர்ரர் நாடக மன்றத்தின் ஒளவை விருது (2005)  
*மிர்ரர் நாடக மன்றத்தின் ஒளவை விருது (2005)  
*சிங்கப்பூர்த் தமிழ்மொழி பண்பாட்டுக் கழகத்தின் திருவள்ளுவர் விருது (2006)  
*சிங்கப்பூர்த் தமிழ்மொழி பண்பாட்டுக் கழகத்தின் திருவள்ளுவர் விருது (2006)  
*பூன்லே சமூக நிலைய இந்திய நற்பணி மன்றத்தின் சாதனை விருது (2009)
*பூன்லே சமூக நிலைய இந்திய நற்பணி மன்றத்தின் சாதனை விருது (2009)
*தேசிய நூலக வாரியத்தின் பல்துறை வித்தகர் (2012)
*தேசிய நூலக வாரியத்தின் பல்துறை வித்தகர் (2012)
*சிங்கப்பூர் வாசகர் வட்டத்தின் முன்னோடி எழுத்தாளர் விருது (2018)
*சிங்கப்பூர் வாசகர் வட்டத்தின் முன்னோடி எழுத்தாளர் விருது (2018)
*ஜார்ஜ்டவுன் இலக்கிய விழாவும் வல்லினம் அமைப்பும் இணைந்து 26 நவம்பர் 2022 ல் கூலிம் பிரம்மவித்யாரண்யத்தில் பி.கிருஷ்ணனுக்கு பாராட்டுவிழா நடத்தினர். ஜார்ஜ் டவுன் இலக்கிய விழாவில் பி.கிருஷ்ணன் மொழியாக்கம் செய்த ஷேக்ஸ்பியர் நாடகங்கள் வெளியிடப்பட்டன.
== இலக்கிய இடம் ==
சிங்கப்பூரின் தொடக்க கால எழுத்தாளர்கள் பெரும்பாலும் திராவிட இயக்கச் சார்பு அல்லது இடதுசாரிச் சார்பு கொண்டு சமூகசீர்திருத்த நோக்கம் கொண்ட படைப்புகளை எழுதியவர்கள். அவர்களில் பி.கிருஷ்ணன் தனித்தன்மை பெறுவது அவர் அன்று தமிழகத்தில் உருவாகி வந்த நவீன இலக்கியத்தின் தொடர்ச்சியாக தன்னை நிறுத்திக் கொண்டமையால்தான். புதுமைப்பித்தனின் தீவிரமான செல்வாக்கு பி.கிருஷ்ணனில் உண்டு என்றாலும் அவருடைய கதைகள் தனித்தன்மை கொண்டவை, சிங்கப்பூர் வாழ்க்கையின் சித்திரங்களை கலையழகுடன் வெளிப்படுத்துபவை. 'பி.கிருஷ்ணன் கதைகளில் உண்மையும் மக்களைநோக்கும் விழிகளும் விலகல்கொண்ட நிலைபாடும் உள்ளது. இயல்பான மொழியில் அவை வெளிப்படுகின்றன. ஆகவே சிங்கப்பூரின் முக்கியமான சிறுகதை முன்னோடி என அவரைச் சொல்ல எனக்குத்தயக்கமில்லை." என இவரை [[ஜெயமோகன்]] குறிப்பிட்டுள்ளார்.
==நூல்கள்==
==நூல்கள்==
புதுமைதாசன் என்ற பெயரில் 22 நூல்கள் எழுதியிருக்கிறார்.
புதுமைதாசன் என்ற பெயரில் 22 நூல்கள் எழுதியிருக்கிறார்.
Line 69: Line 75:
====== புதுமைதாசனின் ஷேக்ஸ்பியர் படைப்புகள் (மொழியாக்கம்) ======
====== புதுமைதாசனின் ஷேக்ஸ்பியர் படைப்புகள் (மொழியாக்கம்) ======
* மெக்பெத் (1996, Macbeth)
* மெக்பெத் (1996, Macbeth)
* [[File:SWF 92.jpg|thumb|சிங்கப்பூர் எழுத்தாளர் விழா 1993-ல். இடமிருந்து அசோகமித்திரன், பேராசிரியர் க.சிவத்தம்பி, பி.கிருஷ்ணன், க.து.மு.இக்பால், இளங்கோவன்.]]ஹேம்லெட்  (2021, Hamlet)
[[File:SWF 92.jpg|thumb|சிங்கப்பூர் எழுத்தாளர் விழா 1993-ல். இடமிருந்து அசோகமித்திரன், பேராசிரியர் க.சிவத்தம்பி, பி.கிருஷ்ணன், க.து.மு.இக்பால், இளங்கோவன்.]]
* ஹேம்லெட் (2021, Hamlet)
* ஒதெல்லோ (2021, Othello)
* ஒதெல்லோ (2021, Othello)
* மன்னன் லியர்  (2021, King Lear)
* மன்னன் லியர் (2021, King Lear)
* ஜூலியஸ் சீஸர் 2021, (Julius Caesar)
* ஜூலியஸ் சீஸர் 2021, (Julius Caesar)
* சூறாவளி (2021, The Tempest)
* சூறாவளி (2021, The Tempest)
* ரோமியோ ஜூலியட் (2021, Romeo and Juliet)
* ரோமியோ ஜூலியட் (2021, Romeo and Juliet)
====== நாடகங்கள் ======
====== நாடகங்கள் ======
[[File:Kanaiyali-2003.jpg|thumb|கவிமாலை அமைப்பின் கணையாழி விருதை 2003-ஆம் ஆண்டில் அமரர் வை.திருநாவுக்கரசு பி.கிருஷ்ணனுக்கு அணிவிக்கிறார்.]]
[[File:Kanaiyali-2003.jpg|thumb|கவிமாலை அமைப்பின் கணையாழி விருதை 2003-ம் ஆண்டில் அமரர் வை.திருநாவுக்கரசு பி.கிருஷ்ணனுக்கு அணிவிக்கிறார்.]]
* நல்ல வீடு
* நல்ல வீடு
* ஐடியா ஐயாக்கண்ணு
* ஐடியா ஐயாக்கண்ணு
Line 85: Line 92:
* எதிர்நீச்சல்
* எதிர்நீச்சல்
* மாடிவீட்டு மர்மம்
* மாடிவீட்டு மர்மம்
* [[File:P.Krishnan 5.jpg|thumb|2000-ஆம் ஆண்டு சிங்கப்பூர் வந்திருந்த ஜெயகாந்தனுடன் பி. கிருஷ்ணன்]]இரட்டை மனிதன்
[[File:P.Krishnan 5.jpg|thumb|2000-ம் ஆண்டு சிங்கப்பூர் வந்திருந்த ஜெயகாந்தனுடன் பி. கிருஷ்ணன்]]
* இரட்டை மனிதன்
* கதாகாலட்சேபம்
* கதாகாலட்சேபம்
==உசாத்துணை==
== உசாத்துணை ==
* [https://www.esplanade.com/offstage/arts/p-krishnan-puthumaithasan P. Krishnan (Puthumaithasan)- A prolific writer, poet, playwright, and radio producer-presenter, esplanade.com, Nov 2021]
* [https://www.esplanade.com/offstage/arts/p-krishnan-puthumaithasan P. Krishnan (Puthumaithasan)- A prolific writer, poet, playwright, and radio producer-presenter, esplanade.com, Nov 2021]
* [https://artshouselimited.sg/ourcmstory-recipients/p-krishnan P. Krishnan, Cultural Medallion 2008, artshouselimited.sg]
* [https://artshouselimited.sg/ourcmstory-recipients/p-krishnan P. Krishnan, Cultural Medallion 2008, artshouselimited.sg]
Line 99: Line 107:
* https://www.youtube.com/watch?v-IiikxqJbpQ0
* https://www.youtube.com/watch?v-IiikxqJbpQ0
* [https://www.worldcat.org/title/p-krishnans-puthumaithasan-radio-dramas/oclc/768064623 P. Krishnan's (Puthumaithasan) radio dramas (Music, 2011) [WorldCat.org]]
* [https://www.worldcat.org/title/p-krishnans-puthumaithasan-radio-dramas/oclc/768064623 P. Krishnan's (Puthumaithasan) radio dramas (Music, 2011) [WorldCat.org]]
{{finalised}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:சிங்கப்பூர் ஆளுமைகள்]]
[[Category:சிங்கப்பூர் ஆளுமைகள்]]
[[Category:எழுத்தாளர்கள்]]
[[Category:சிறுகதையாசிரியர்கள்]]

Latest revision as of 10:12, 24 February 2024

பி.கிருஷ்ணன்
பி. கிருஷ்ணன்
பி.கிருஷ்ணன் பாராட்டுவிழா கூலிம்

பி. கிருஷ்ணன் (பிறப்பு: 1932) சிங்கப்பூரின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவர். புதுமைதாசன் என்ற பெயரில் எழுதும் இவர் குறிப்பிடத்தக்க சிறுகதைகளை எழுதியுள்ளார். வானொலி நாடகங்களாலும் ஆங்கில இலக்கிய மொழி பெயர்ப்புகளாலும் பிரபலமானார்.

பிறப்பு,கல்வி

பி. கிருஷ்ணன் மலேசியாவின் ஜோகூரில் 1932-ம் ஆண்டு பிறந்தார். தந்தையின் பெயர் பெருமாள். தாயாரின் பெயர் செல்லம்மாள். இளம் வயதில் பெற்றோரை இழந்த அவரது கல்வியும் ஜப்பானிய ஆட்சிக் காலத்தில் தடைப்பட்டது. இளமையில் விபத்தொன்றுக்கு ஆளாகி கால் ஒடிந்து 1941-ல் இரண்டு ஆண்டுக்காலம் மருத்துவமனையில் இருந்தார். போர்க்காலமாகையால் முறையான சிகிச்சை கிடைக்காமல் கால் வளைந்து போயிற்று. மருத்துவமனையில் இருந்து அங்கு வேலைசெய்த தாதியான மருதம்மாள் அவரை அழைத்துச்சென்று தன் இல்லத்தில் தங்கவைத்தார். 1943 முதல் ஒன்றரை ஆண்டுக்காலம் அவர் இல்லத்தில் இருந்தார். ஜோகூரில் இருந்த சிரஞ்சீவி ஸ்டோர் என்னும் கடையில் பி.கிருஷ்ணன் சில ஆண்டுக்காலம் வேலைபார்த்தார். அங்கிருந்த கடுமையான கண்டிப்புகள் பிடிக்காமல் ஆறுமுகம் பிள்ளை என்பவரின் அழைப்பின் பேரில் 1947-ம் ஆண்டு சிங்கப்பூருக்கு வந்த பி.கிருஷ்ணன் ராமசாமி நாடார் ஜவுளிக்கடையில் சிலகாலம் வேலைபார்த்தார். அதன்பின் ராசுப் பிள்ளை என்பவர் நடத்திவந்த மளிகைக்கடையில் பணியாற்றினார். 1952 வரை அந்தக்கடையில் பணியாற்றினார்.

பி.கிருஷ்ணன் கடையில் முழு நேர வேலை பார்த்துக்கொண்டே கிடைக்கும் நேரத்திலெல்லாம் புத்தகங்கள் வாசிப்பார். சிங்கப்பூர் திராவிடக் கழகத்தில் இருந்த நூல் நிலையம், தமிழ் நாடு புத்தக நிலையம் போன்றவையும், பொது நூலகமும் மற்ற புத்தக் கடைகளும் அவருடைய தற்கல்விக்கு உதவின. பி.கிருஷ்ணன் தன் முயற்சியால் தமிழ் இலக்கிய, இலக்கண நூல்களையும் படித்தார். பல தமிழ் ஆசிரியர்களிடம் தமிழ் பயின்றார். ச.சா.சின்னையாவிடம் யாப்பிலக்கணம் பயின்றார்.

தனிவாழ்க்கை

சிங்கப்பூர் தமிழ் வானொலியில் இருந்து தமிழ்த் தொலைக்காட்சித் தமிழ்ப் பிரிவுக்குத் தலைவரான ஈஎஸ்ஜே.சந்திரனுடன் (வலம்) பி. கிருஷ்ணன் (இடம்), 1968.

1956-ல் பி.கிருஷ்ணன் மணமுடித்தார். மனைவி முனியம்மாள் 2021-ல் 80 வயதில் காலமானார். இரண்டு ஆண்கள், இரண்டு பெண் பிள்ளைகள், ஆறு பேரப் பிள்ளைகள், இரண்டு கொள்ளுப் பேரப் பிள்ளைகள் உள்ளனர்.

பி.கிருஷ்ணன் 14-ஆவது வயதில் கடைச் சிப்பந்தியாக பணியைத் தொடங்கினார், கூடவே இரவுப் பள்ளியில் படித்தார்.இருபது வயதில் 1953-ம் ஆண்டு பிரிட்டிஷ் படைத்தளம் ஒன்றில் பொருள் கிடங்கின் துணைக் காப்பாளராகப் பணியில் சேர்ந்தார். இரவுப் பள்ளியில் கல்வியைத் தொடர்ந்து 1967-ல் சீனியர் கேம்ப்ரிட்ஜ் சான்றிதழ் பெற்றார். அந்தச் சமயம் ஆங்கில நூல்களையும் படிக்கத் தொடங்கினார். குறிப்பாக ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் இவருள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.

1953-ம் ஆண்டிலிருந்து 1961-ம் ஆண்டுவரை சிங்கப்பூர் வானொலியின் இந்திய நிகழ்ச்சிகள் பகுதி (Indian Programmes Section) என்னும் பொதுப்பிரிவிலும் பள்ளிகள் ஒலிபரப்புப் பகுதி (Schools Broadcasts) என்னும் பிரிவிலும் பகுதிநேரக் கலைஞராய்ப் பணியாற்றினார். அந்தப் பகுதிகளுக்குச் சிறுகதைகள், நாடகங்கள் முதலியவற்றை எழுதியும் நடித்தும் வந்தார்.

1962-ம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து சிங்கப்பூர் வானொலியின் இந்தியப்பகுதியில் உதவி ஒலிபரப்பாளராய்ச் சேர்ந்து பணியாற்றத் தொடங்கிய இவர், பல்வேறு பொறுப்புகளையும் ஏற்று இறுதியில் முதுநிலை நிர்வாகத் தயாரிப்பாளர்-படைப்பாளர் (Senior Executive Producer - Presenter) என்னும் நிலைக்கு உயர்ந்து 31 ஆண்டுகளுக்குப் பின்னர் 1992-ம் ஆண்டின் இறுதியில் பணி ஓய்வு பெற்றார்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 1963-ல் சிங்கப்பூர் வந்தபோது வானொலிக் கலைஞர்களுடன் பி.கிருஷ்ணன் (வலதுகோடி)

இலக்கிய வாழ்க்கை

பி.கிருஷ்ணனை எழுதத் தூண்டிய இரு நிகழ்வுகளை அவர் வல்லினம் பேட்டியில் குறிப்பிடுகிறார். அவர் கடையில் வேலைபார்க்கும்போது அவுலியா முகம்மது என்னும் இலக்கிய ஆர்வலர் அறிமுகமானார். அவர் அந்தகக்கவி வீரராகவ முதலியார் அரசனுக்கு அறம்பாடிய கதையைச் சொல்ல அதனால் கவரப்பட்டு பி.கிருஷ்ணன் ஒரு கட்டுரை எழுதி தமிழ் முரசு இதழுக்கு அனுப்பினார். அங்கே ஆசிரியராக இருந்த முருகையன் அதை திருத்தி வெளியிட்டார். பி.கிருஷ்ணன் எழுதிய முதல் படைப்பு அது.

பி.கிருஷ்ணன் தமிழக எழுத்தாளர் புதுமைப்பித்தனின் எழுத்தால் கவரப்பட்டார்.சிங்கப்பூரில் எழுத்தாளர் ஒருவர் புதுமைப்பித்தன் 'இலக்கிய மேதையா?’ என்ற கட்டுரையைத் தமிழ் முரசு இதழில் எழுதி அது ஒரு விவாதத்தை உருவாக்கியது. புதுமைப்பித்தனை ஆபாச எழுத்தாளராக சித்திரிப்பதாய் அமைந்த அக்கட்டுரைக்கு பி.கிருஷ்ணன் பதில் கட்டுரை எழுதினார். மா.ஜெகதீசன், எம்.கே.துரைசிங்கம், பா.சண்முகம், ரா.வெற்றிவேல், போன்றவர்கள் கலந்துகொண்ட அந்த விவாதம் 1951 முதல் 1952 வரை தமிழ் முரசில் எட்டு மாதங்கள் நீடித்தது. முனைவர் எம்.எஸ்.ஸ்ரீலக்ஷ்மி, 'புதுமைப்பித்தன் இலக்கிய சர்ச்சை’ என்ற தலைப்பில் அதை தொகுத்திருக்கிறார் (பார்க்க புதுமைப்பித்தன் விவாதம்,மலேசியா )

தொடர்ந்து பி.கிருஷ்ணன் 'புதுமைதாசன்’ என்ற புனைபெயரில் எழுதத் தொடங்கினார்.1951-ம் ஆண்டில் தம்முடைய எழுத்துப் பணியைத் தொடங்கிய இவர் தமிழ் முரசு, தமிழ் நேசன், புது யுகம், திரையொளி, இந்தியன் மூவிநியூஸ், இலக்கியச் சோலை, திராவிட முன்னேற்றக் கழகம் (சிங்கப்பூர்) ஆண்டுஇதழ்கள் உள்ளிட்ட பல்வேறு சிங்கப்பூர், மலேசியா இதழ்களுக்கும் எழுதியுள்ளார்.

பி.கிருஷ்ணன் தன் 70 ஆண்டு எழுத்துப் பணியில் இதழ்கள், வானொலி, தொலைக்காட்சி, மேடை ஆகியவற்றுக்குச் சிறுகதைகள், கட்டுரைகள், இலக்கியப் பேச்சுகள், சிறப்பு ஒலிச்சித்திரங்கள், தனி நாடகங்கள், தொடர் நாடகங்கள் என 500-க்கும் மிகுதியான பல்வேறு இலக்கியப் படைப்புகளை எழுதியுள்ளார்

வானொலிப் படைப்புகள்

சிங்கப்பூரின் மூத்த படைப்பாளி ந.பழநிவேலு சிங்கப்பூர் வானொலியில் பொதுப் பிரிவில் துணைத் தலைவராய் பணியாற்றி வந்தபோது பூச்செண்டு என்கிற இலக்கிய நிகழ்ச்சியை தயாரித்து வந்தார். அதில் பி.கிருஷ்ணன் குரல் நடிகராக அறிமுகமானார். தமது பணிக்காலத்தில் கதம்ப நாடகங்கள், இலக்கிய நாடகங்கள், தொடர் நாடகங்கள், நகைச்சுவை நாடகங்கள், மர்ம நாடகங்கள், மொழி பெயர்ப்பு நாடகங்கள் என வானொலியில் மிக அதிகமான நாடகங்களை எழுதித் தயாரித்த பி. கிருஷ்ணன், சிறந்த நடிகராகவும் பாடகராவும் பெயர் பெற்றார். பி.கிருஷ்ணன் வானொலியில் எழுதிய நகைச்சுவை நாடகங்கள் புகழ்பெற்றவை. அவற்றில் வரும் மாடிவிட்டு மங்களம், அடுக்குவீட்டு அண்ணாசாமி ஆகிய கதாபாத்திரங்கள் அடுத்த தலைமுறையாலும் நினைவுகூரப்படுகின்றன.

1968-ல் கோலாலம்பூரில் நடந்த தமிழ்மாநாட்டுக்காக வந்திருந்த கி. வா. ஜகந்நாதன், மு. வரதராசன் போன்றவர்களை நேர்காணல் செய்திருக்கிறார். 1971-ல் அகிலன் , 1975-ல் ஜெயகாந்தன் ஆகியோரையும் பேட்டி எடுத்திருக்கிறார்.

சிறுகதைகள்

இவர் 1953 முதல் 1993 வரையில் 40-க்கும் மேற்பட்ட சிறுகதைகளை இதழில்களில் எழுதியுள்ளபோதிலும் பல கதைகள் கிடைக்கவில்லை. கிடைக்கப்பெற்ற 10 கதைகள் 'புதுமைதாசன் கதைகள்' என்ற தொகுப்பாக வந்துள்ளதுன.

நாடகங்கள்

ரா.நாகையன் அளித்த ஒரு சிறுகதையை 'இன்பம் எங்கே?’ என்ற தலைப்பில் மேடைநாடகமாக எழுதினார். 1954-ல் எழுதப்பட்ட அந்நாடகம் 1955-ல் அரங்கேறியது. அது பி.கிருஷ்ணனின் முதல் நாடகப்படைப்பு.

சங்க இலக்கியங்கள், சங்கம் மருவிய கால இலக்கியங்கள், இடைக்கால இலக்கியங்கள், பிற்கால இலக்கியங்கள் முதலியவற்றின் அடிப்படையில் இலக்கிய நாடகங்களை எழுதினார். மேனாட்டு இலக்கியப் பேரறிஞர்களாகிய ஷேக்ஸ்பியர், பைரன், கீட்ஸ், ஜார்ஜ் ஆர்வெல் முதலியோர்தம் படைப்புகளின் மொழியாக்கங்கள், உலகப் புகழ்பெற்ற சிறுகதை இலக்கிய மேதைகளின் சிறுகதைகளின் மாற்றுப் படைப்புருவாக்க நாடகங்கள் என ஏராளமான நாடகங்கள் வானொலியில் நடிக்கப்பட்டுள்ளன.

எழுத்தாளர் அகிலன் 1975-ம் ஆண்டு சிங்கப்பூர் வந்திருந்தபோது. இடமிருந்து தி.சு.மோகனம், பி.கிருஷ்ணன், அகிலன், ந.பழநிவேலு.
ஏற்பு

பி.கிருஷ்ணன் எழுதிய படைப்புகள் பலவும் சிங்கப்பூர்ப் புனைகதைகள் (The Fiction of Singapore), சிங்கப்பூர்த் தமிழ்ச் சிறுகதைகள், சிங்கப்பூர்ப் பல்கலைக்கழகக் கலை மன்றம் (The Centre for the Arts - Nus) என்னும் அமைப்பின் வெளியீடாகிய சிங்கா (Singa), இக்கால ஆசியான் நாடகங்கள்-சிங்கப்பூர் (Modern Asian Plays Singapore), சிங்கப்பூர்க் கல்வியமைச்சின் துணைப்பாட நூல்கள், இந்திய சாகித்திய அகாதெமியின் அயலகத் தமிழ் இலக்கியம் (Anthology of Tamil Short Stories and Poems From Sri Lanka, Malaysia and Singapore), தென்கிழக்காசிய எழுத்து விருது 30 ஆண்டு நிறைவுத் தொகுப்பு (An Anthology on 30th Anniversary of SEA Write Awards) முதலிய பல்வேறு தொகுப்புகளிலும் இடம் பெற்றிருக்கின்றன. இவற்றுள் சில ஆங்கிலத்தில் மொழியாக்கமும் செய்யப்பெற்றிருக்கின்றன.சிங்கப்பூர் தேசிய நூலக வாரியம், சிங்கப்பூர் இலக்கிய முன்னோடிகள் என்னும் தொடரில் 2012-ம் ஆண்டு மார்ச் 10 முதல் ஏப்ரல் 22 வரை நடத்திய பி.கிருஷ்ணன் (புதுமைதாசன்) பல்துறை வித்தகர் என்னும் கண்காட்சியையும் கருத்தரங்கும் நடத்தியது. பி.கிருஷ்ணனின் (புதுமைதாசன்) இலக்கியப் படைப்புகள் - ஓர் ஆய்வு என்னும் தொகுப்பு நூலும் வெளியிடப்பெற்றது.

தேசிய நூலகத்தில் 2005 முதல் 2019 வரை அமைந்திருந்த சிங்கப்பூரின் நான்கு மொழி இலக்கிய முன்னோடிகள் காட்சிக்கூடத்தில் சிறப்பிக்கப்பெற்றிருந்த ஆறு தமிழ் எழுத்தாளர்களில் பி.கிருஷ்ணனும் ஒருவர்.

இதழியல்

1954 - 1955-ம் ஆண்டுகளில் ரெ.வெற்றிவேல் நடத்திய முன்னேற்றம் மாத இதழிலும், 1954-ல் சிங்கை முகிலனின் சிந்தனை இலக்கிய இதழிலும் துணையாசிரியராகப் பணியாற்றியுள்ளார்.

அமைப்புப் பணிகள்

பி.கிருஷ்ணன் 1953-ல் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் என்னும் அமைப்பை தன் இலக்கிய நண்பரும் எழுத்தாளருமான ரா.நாகையனுடன் சேர்ந்து தொடங்கினார். அதில் பி.கிருஷ்ணன் துணைச்செயலாளராகவும், ச.கிருஷ்ணமூர்த்தி என்பவர் செயலாளராகவும், ரெ.வெற்றிவேல் தலைவராகவும் பணியாற்றினர். அக்கழகம் ஓராண்டு மட்டுமே இருந்தது. அதன் பிறகு செயல்படவில்லை.

சிங்கப்பூரின் முன்னாள் கலாசார அமைச்சர் ஜார்ஜ் இயோவிடம் இருந்து 1992-ம் ஆண்டு தேசிய நாள் செயற்திறன் விருதைப் பெறுகிறார் பி.கிருஷ்ணன்,
2008-ம் ஆண்டு சிங்கப்பூரின் அன்றைய அதிபர் எஸ்.ஆர்.நாதனிடம் கலாசார பதக்க விருதைப் பெறுகிறார் பி.கிருஷ்ணன்.
2005-ம் ஆண்டு பாங்காக்கில் தாய்லாந்து இளவரசியாரிடமிருந்து தென்கிழக்காசிய எழுத்து விருதைப் பெறும் பி. கிருஷ்ணன்

விருதுகள்

  • சிங்கப்பூரின் மிக உயரின கலைகள் இலக்கிய விருதாகிய கலாசாரப் பதக்கம் (Cultural Medallion - 2008)
  • தாய்லாந்து அரசிய் தென்கிழக்காசிய எழுத்து விருது (2005)
  • சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் தமிழவேள் விருது (1998)
  • சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகத்தின் கலாரத்னா விருது (2018)
  • மீடியாகார்ப் வசந்தம் பிரதான விழா (2021) வாழ்நாள் சாதனையாளர் விருது
  • சிங்கப்பூர்க் குடியரசின் தேசிய நாள் செயல்திறன் விருது (National Day Efficiency Award -1992)
  • சிங்கப்பூர் தேசிய புத்தக மேம்பாட்டு மன்றத்தின் பாராட்டு விருது (National Book Development Council Commendation Award -1994)
  • சிங்கப்பூர் ஐக்கிய இந்திய முஸ்லிம் சங்கத்தின் கலை, இலக்கிய நற்சேவையாளர் விருது (2000)
  • சிங்கப்பூர்த் தமிழர் சங்கத்தின் மொழி, இலக்கிய விருது (2002)
  • கவிமாலை கணையாழி இலக்கிய விருது (2003)
  • மிர்ரர் நாடக மன்றத்தின் ஒளவை விருது (2005)
  • சிங்கப்பூர்த் தமிழ்மொழி பண்பாட்டுக் கழகத்தின் திருவள்ளுவர் விருது (2006)
  • பூன்லே சமூக நிலைய இந்திய நற்பணி மன்றத்தின் சாதனை விருது (2009)
  • தேசிய நூலக வாரியத்தின் பல்துறை வித்தகர் (2012)
  • சிங்கப்பூர் வாசகர் வட்டத்தின் முன்னோடி எழுத்தாளர் விருது (2018)
  • ஜார்ஜ்டவுன் இலக்கிய விழாவும் வல்லினம் அமைப்பும் இணைந்து 26 நவம்பர் 2022 ல் கூலிம் பிரம்மவித்யாரண்யத்தில் பி.கிருஷ்ணனுக்கு பாராட்டுவிழா நடத்தினர். ஜார்ஜ் டவுன் இலக்கிய விழாவில் பி.கிருஷ்ணன் மொழியாக்கம் செய்த ஷேக்ஸ்பியர் நாடகங்கள் வெளியிடப்பட்டன.

இலக்கிய இடம்

சிங்கப்பூரின் தொடக்க கால எழுத்தாளர்கள் பெரும்பாலும் திராவிட இயக்கச் சார்பு அல்லது இடதுசாரிச் சார்பு கொண்டு சமூகசீர்திருத்த நோக்கம் கொண்ட படைப்புகளை எழுதியவர்கள். அவர்களில் பி.கிருஷ்ணன் தனித்தன்மை பெறுவது அவர் அன்று தமிழகத்தில் உருவாகி வந்த நவீன இலக்கியத்தின் தொடர்ச்சியாக தன்னை நிறுத்திக் கொண்டமையால்தான். புதுமைப்பித்தனின் தீவிரமான செல்வாக்கு பி.கிருஷ்ணனில் உண்டு என்றாலும் அவருடைய கதைகள் தனித்தன்மை கொண்டவை, சிங்கப்பூர் வாழ்க்கையின் சித்திரங்களை கலையழகுடன் வெளிப்படுத்துபவை. 'பி.கிருஷ்ணன் கதைகளில் உண்மையும் மக்களைநோக்கும் விழிகளும் விலகல்கொண்ட நிலைபாடும் உள்ளது. இயல்பான மொழியில் அவை வெளிப்படுகின்றன. ஆகவே சிங்கப்பூரின் முக்கியமான சிறுகதை முன்னோடி என அவரைச் சொல்ல எனக்குத்தயக்கமில்லை." என இவரை ஜெயமோகன் குறிப்பிட்டுள்ளார்.

நூல்கள்

புதுமைதாசன் என்ற பெயரில் 22 நூல்கள் எழுதியிருக்கிறார்.

  • இலக்கியக் காட்சிகள் (1990, இலக்கிய நாடகங்கள்)
  • புதுமைதாசன் கதைகள் (1993, சிறுகதைத் தொகுப்பு, சிங்கப்பூர் புத்தக மேம்பாட்டு மன்றத்தின் பாராட்டு விருது பெற்றது)
  • அடுக்கு வீட்டு அண்ணாசாமி (2000, 2 தொகுப்பு - நாடகங்கள்)
  • சருகு (2006, உலகப்புகழ் பெற்ற இலக்கிய மேதைகள் படைத்த சிறுகதைகளின் மாற்றுருவாக்க நாடக வடிவம் - தொகுப்பு)
  • விலங்குப்பண்ணை (2008, ஜார்ஜ் ஆர்வெல் எழுதிய அங்கத நெடுங்கதையின் மாற்றுருவாக்க நாடக வடிவம்)
புதுமைதாசனின் ஷேக்ஸ்பியர் படைப்புகள் (மொழியாக்கம்)
  • மெக்பெத் (1996, Macbeth)
சிங்கப்பூர் எழுத்தாளர் விழா 1993-ல். இடமிருந்து அசோகமித்திரன், பேராசிரியர் க.சிவத்தம்பி, பி.கிருஷ்ணன், க.து.மு.இக்பால், இளங்கோவன்.
  • ஹேம்லெட் (2021, Hamlet)
  • ஒதெல்லோ (2021, Othello)
  • மன்னன் லியர் (2021, King Lear)
  • ஜூலியஸ் சீஸர் 2021, (Julius Caesar)
  • சூறாவளி (2021, The Tempest)
  • ரோமியோ ஜூலியட் (2021, Romeo and Juliet)
நாடகங்கள்
கவிமாலை அமைப்பின் கணையாழி விருதை 2003-ம் ஆண்டில் அமரர் வை.திருநாவுக்கரசு பி.கிருஷ்ணனுக்கு அணிவிக்கிறார்.
  • நல்ல வீடு
  • ஐடியா ஐயாக்கண்ணு
  • ஸ்கூட்டரோ ஸ்கூட்டர்!
  • விழிப்பு
  • மரணவலை
  • மர்ம மனிதன்
  • எதிர்நீச்சல்
  • மாடிவீட்டு மர்மம்
2000-ம் ஆண்டு சிங்கப்பூர் வந்திருந்த ஜெயகாந்தனுடன் பி. கிருஷ்ணன்
  • இரட்டை மனிதன்
  • கதாகாலட்சேபம்

உசாத்துணை


✅Finalised Page