பிரபஞ்சன்: Difference between revisions
No edit summary |
No edit summary |
||
Line 3: | Line 3: | ||
Work in progress by [[User:Muthu_kalimuthu]] | Work in progress by [[User:Muthu_kalimuthu]] | ||
[[File:prabhanjan.jpeg|alt=பிரபஞ்சன்|thumb|பிரபஞ்சன்]] | [[File:prabhanjan.jpeg|alt=பிரபஞ்சன்|thumb|பிரபஞ்சன்]] | ||
பிரபஞ்சன் (ஏப்ரல் 27, 1945 - டிசம்பர் 21, 2018) தமிழ் எழுத்தாளர் மற்றும் விமர்சகர். வார இதழ்களில் பணியாற்றியவர் | பிரபஞ்சன் (ஏப்ரல் 27, 1945 - டிசம்பர் 21, 2018) தமிழ் எழுத்தாளர் மற்றும் விமர்சகர். வார இதழ்களில் பணியாற்றியவர். தமிழுக்கான சாகித்ய அகாதமி விருது 1995 ஆம் ஆண்டு பெற்றவர். | ||
== வாழ்க்கைக் குறிப்பு == | == வாழ்க்கைக் குறிப்பு == |
Revision as of 02:05, 31 January 2022
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.
Work in progress by User:Muthu_kalimuthu
பிரபஞ்சன் (ஏப்ரல் 27, 1945 - டிசம்பர் 21, 2018) தமிழ் எழுத்தாளர் மற்றும் விமர்சகர். வார இதழ்களில் பணியாற்றியவர். தமிழுக்கான சாகித்ய அகாதமி விருது 1995 ஆம் ஆண்டு பெற்றவர்.
வாழ்க்கைக் குறிப்பு
பிறப்பு, கல்வி
பிரபஞ்சன் பிறந்த ஊர் புதுச்சேரி. இவரது இயற்பெயர் சாரங்கபாணி வைத்தியலிங்கம். புதுச்சேரியில் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு, கரந்தை கல்லூரியில் புலவர் பட்டம் பெற்றார்.
தனி வாழ்க்கை
இவரது மனைவியின் பெயர் பிரமிளா ராணி. மூன்று மகன்கள் உள்ளனர். சென்னையிலும் புதுச்சேரியிலும் வசித்து வந்தார். சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார். தமிழகத்தின் எழுத்தாளர்கள் மட்டுமின்றி வாசகர்கள், அரசியல், திரை ஆளுமைகள் என்ப பலரும் பிரபஞ்சனுடனான, அவரின் எழுத்துகளுடனான தங்கள் நினைவுகளை பகிர்ந்துள்ளனர். அனைவரையும் ஏதோவொரு விதத்தில் பிரபஞ்சன் பாதித்திருக்கிறார்.
பங்களிப்பு
இதழியல்
1980-1982ல் குங்குமம் வார இதழிலும், 1985-1987ல் குமுதம் வார இதழிலும் பின்னர் 1989-1990ல் ஆனந்த விகடன் வார இதழிலும் பணியாற்றினார். அதன்பின்னர், முழுநேர எழுத்தாளரானார்.
இலக்கியம்
1961ல், இவரது முதல் சிறுகதை ‘என்ன உலகமடா’, ‘பரணி’ என்ற இதழில் வெளியானது. 46 புத்தகங்களுக்கும் கூடுதலாக எழுதியுள்ளார்.
1995ல் இவரது வரலாற்று நாவல் ‘வானம் வசப்படும்’ தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றது. ஆனந்தரங்கம் பிள்ளையின் காலத்தைக் களமாகக் கொண்டுள்ளது.
இவரது படைப்புகள் இந்தி, தெலுங்கு, கன்னடம், ஜெர்மன், பிரெஞ்சு, ஆங்கிலம் மற்றும் சுவீடிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவரது நாடகமான ‘முட்டை’ தில்லி பல்கலைக்கழகப் பாடத்திட்டத்திலுள்ளது.
இவரது சிறுகதைத் தொகுப்பான ‘நேற்று மனிதர்கள்’ பல கல்லூரிகளில் பாடப்புத்தகமாக உள்ளது. புதுச்சேரியின் சுதந்திர வரலாற்றை `கண்ணீரால் காப்போம்' எனும் நூலில் விளக்கியிருப்பார்.
மற்ற எழுத்தாளர்களின் கதைகளையும் வெகுவாய் பாராட்டி ‘கதை மழை’ எனும் நூல் எழுதியுள்ளார். பிரபஞ்சனின் ‘மகாபாரதம்’ புதிய வாசகர்களை உருவாக்கியது.
நாவல்கள் மற்றும் சிறுகதைகளில் அவர் படைத்த பாத்திரங்கள் பலருக்கும் நெருக்கமானவை.
படைப்புகள்
நாவல்கள்
- வானம் வசப்படும்
- மகாநதி
- மானுடம் வெல்லும்
- சந்தியா
- காகித மனிதர்கள்
- கண்ணீரால் காப்போம்
- பெண்மை வெல்க
- பதவி
- ஈரோடு தமிழர் உயிரோடு
- அப்பாவின் வேஷ்டி
- முதல் மழை துளி
- மகாபாரத மாந்தர்கள்
சிறுகதை தொகுப்புகள்
- நேற்று மனிதர்கள்
- விட்டு விடுதலையாகி
- இருட்டு வாசல்
- ஒரு ஊரில் இரண்டு மனிதர்கள்
குறுநாவல்கள்
- ஆண்களும் பெண்களும்
நாடகங்கள்
- முட்டை
- அகல்யா
மொழிபெயர்ப்புகள்
கட்டுரைகள்
- மயிலிறகு குட்டி போட்டது
- அப்பாவின் வேஷ்டி
- தாழப்பறக்காத பரத்தையர் கொடி
நேர்காணல்கள்
விருதுகளும் பரிசுகளும்
- சாகித்திய அகாதமி விருது (1995)
- சாரல் விருது (2013)
- பாரதிய பாஷா பரிஷத் விருது
- கோயம்புத்தூர் கஸ்தூரி ரங்கம்மாள் விருது - மகாநதி
- இலக்கியச் சிந்தனை விருது - மானுடம் வெல்லும்
- சி. பா. ஆதித்தனார் விருது - சந்தியா
- தமிழக அரசின் பரிசு - நேற்று மனிதர்கள்
- தமிழக சிறந்த சிறுகதைத் தொகுப்பிற்கான பரிசு - ஒரு ஊரில் ரெண்டு மனிதர்கள்
இலக்கிய முக்கியத்துவம்
எழுத்தாளர் ஜெயமோகன் "பிரபஞ்சன் முறையாக தமிழ்படித்து வந்தவர். மு.வரதராசனார், நா.பார்த்தசாரதியை ஆதர்சமாகக் கொண்டு தொடங்கியவர். அந்த பாதிப்பு கதாபாத்திரங்களை கருத்துமாதிரிகளாகவும், உரையாடல்களை கட்டுரையின் பகுதிகளாகவும் ஆக்கும் வழக்கத்தை அவருக்கு அளித்தது.
அதேசமயம் அவரிடமிருந்த தனிமனித ஒழுக்கம், நேர்த்தியான தோற்றம், பண்பான அணுகுமுறை போன்ற பல நற்பண்புகளும் அந்த முன்னோடிகளிடமிருந்து கிடைத்தவையே. பிரபஞ்சனில் நா.பாவின் செல்வாக்கு மிக அதிகம்.
இரண்டாவது செல்வாக்கு அவர் எழுதவந்தபின் உருவானது. அவர் ஜெயகாந்தனால் கவரப்பட்டார். இடது சாரி கருத்துக்கள் மேல் இருந்த தீவிரம் படைப்பாளியாக செயல்படவிடாது தடுத்தன.
அவருள் இருந்த ஆழ்ந்த இன்னொரு செல்வாக்கு தி.ஜானகிராமன். தஞ்சையில் படித்தகாலத்தில் அவர் சங்கீதம், சீவல், காபி என ஒரு ஜானகிராம அழகியலை அடைந்தார். ஆனால் அதற்குள் ஆழ்ந்துசெல்ல அவரால் இயலவில்லை." என்று குறிப்பிடுகிறார்.
மறைவு
டிசம்பர் 21, 2018ல் மறைந்தார். பாண்டிச்சேரி அரசு, அரசு மரியாதையுடன் அவரை நல்லடக்கம் செய்தது.