பா. திருச்செந்தாழை: Difference between revisions
(Standardised) |
(Moved to Standardised) |
||
Line 1: | Line 1: | ||
[[File:Paa thirusenthazhai 1280 x 738.jpeg|thumb|பா. திருச்செந்தாழை (Image Credit: Mohan Tanisk)]] | [[File:Paa thirusenthazhai 1280 x 738.jpeg|thumb|பா. திருச்செந்தாழை (Image Credit: Mohan Tanisk)]] | ||
பா. திருச்செந்தாழை (செப்டம்பர் 27, 1981) தமிழில் சிறுகதைகளும் கவிதைகளும் எழுதிவரும் எழுத்தாளர். இவர் மதுரையில் நவதானிய வணிக நிறுவனம் நடத்தி வருகிறார். | பா. திருச்செந்தாழை (செப்டம்பர் 27, 1981) தமிழில் சிறுகதைகளும் கவிதைகளும் எழுதிவரும் எழுத்தாளர். இவர் மதுரையில் நவதானிய வணிக நிறுவனம் நடத்தி வருகிறார். | ||
Line 26: | Line 25: | ||
* [https://tamizhini.in/2021/12/24/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%ae%a4%e0%af%88-%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%aa%e0%ae%95-3/ எம். கோபாலகிருஷ்ணன் பதிவு] | * [https://tamizhini.in/2021/12/24/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%ae%a4%e0%af%88-%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%aa%e0%ae%95-3/ எம். கோபாலகிருஷ்ணன் பதிவு] | ||
{{Standardised}} [[Category:Tamil Content]] | |||
[[Category:Tamil Content]] |
Revision as of 20:02, 9 February 2022
பா. திருச்செந்தாழை (செப்டம்பர் 27, 1981) தமிழில் சிறுகதைகளும் கவிதைகளும் எழுதிவரும் எழுத்தாளர். இவர் மதுரையில் நவதானிய வணிக நிறுவனம் நடத்தி வருகிறார்.
பிறப்பு, கல்வி
பா. திருச்செந்தாழை விருதுநகர் மாவட்டம் கள்ளிக்குடியில் செப்டம்பர் 27, 1981 அன்று பிறந்தவர். பெற்றோர் ம. பாலசுப்ரமணியம், நவமணி அம்மாள். குடும்பத்தினருடன் மதுரையில் வசித்து வருகிறார். ஆறாம் வகுப்பு வரை சத்திரக்குடி, ராமநாதபுரம் மாவட்டத்திலும், பிறகு உயர்நிலைக்கல்வியை சௌராஷ்ட்ரா உயர்நிலை பள்ளி, மதுரையிலும் படித்தார்.
தனிவாழ்க்கை
திருமணமான ஆண்டு 2009. மனைவி பெயர் காமாட்சி, மகன் அகிலேஷ் பாண்டியன்.
இலக்கிய வாழ்க்கை
இவரின் ஆரம்ப கால சிறுகதைகள் 2006 பிற்பகுதியில் செம்மலர், தாமரை போன்ற இதழ்களில் பிரசுரமாயின. தனது இலக்கியப் பங்களிப்பில் முன்னோடிகளாக வண்ணதாசன், வண்ணநிலவன், ஜெயமோகன் ஆகியோரை கொண்டவர்.
இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு 'வெயில் நண்பன் பிரார்த்தனை ஒரு பிரதேசம்' 2008-ல் காலச்சுவடு பதிப்பகத்தின் வாயிலாக வெளியாகியது. இரண்டாவது தொகுப்பு 'விலாஸம்' 2021-ல் எதிர் பதிப்பகத்தின் மூலம் வெளியாகி உள்ளது.
இலக்கிய இடம்
பா. திருச்செந்தாழையின் நுட்பமான தகவல்களுடன் கச்சிதமான விவரணைகளுடன் கூடிய கதை மொழி கனிந்து கதைகளுக்கு தனித்த அடையாளத்தைத் தருகின்றன. சொற்களின் வழியாக கதை மாந்தர்களின் தோற்றத்தை உருவாக்கிக் காட்டுவதைக் காட்டிலும் அவர்களது குணவிசேஷங்களை வெளிப்படுத்தவே அதிகமும் முனைகின்றன திருச்செந்தாழையின் கதைகள் என்று விமர்சகர் எம். கோபாலகிருஷ்ணன் குறிப்பிடுகிறார்.
நூல் பட்டியல்
சிறுகதைகள்
- வெயில் நண்பன் பிரார்த்தனை ஒரு பிரதேசம் (2008)
- விலாஸம் (2021)
உசாத்துணை
⨮ Standardised
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.