நீலகேசி அம்மன்
நீலகேசி அம்மன் : கன்யாகுமரி மாவட்டத்திலும் கேரளத்திலும் வழிபடப்படும் ஒரு நாட்டார்த்தெய்வம். இத்தெய்வத்தின் பல வடிவங்கள் புழக்கத்திலுள்ளன. இத்தெய்வத்தின் ஒரு வடிவம் சமணச் சார்புடையது என ஊகிக்கப்படுகிறது.
பின்னணி
நீலகேசி தமிழின் ஐஞ்சிறு காப்பியங்களிலொன்று. இது ஏழாம் நூற்றாண்டு அல்லது பத்தாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சமணக் காவியம். இந்தக் கதையில் கணவனால் கொல்லப்பட்ட ஒரு பெண் பேயாகி, சமணமுனிவர் ஒருவரால் நல்வழிப்படுத்தப்பட்டு, ஞானசபைகளில் மறுதரப்புகளை வென்று சமண மதத்தை நிலைநாட்டுகிறாள். இக்கதை பழையன்னூர் நீலி கதை, கள்ளியங்காட்டு நீலி கதை என்னும் பெயர்களில் தமிழகத்தில் புழக்கத்திலுள்ளது. தமிழகத்தில் புழக்கத்தில் இருந்த ஒரு நாட்டார்க்கதையை சமணம் எடுத்தாண்டிருக்கலாம். அல்லது சமணத் தெய்வம் ஒன்று தமிழ்நாட்டு நாட்டார்த்தெய்வமாக ஆகியிருக்கலாம். பார்க்க நீலகேசி