நீதிவெண்பா
நீதி வெண்பா (பொ.யு.16-ஆம் நூற்றாண்டு) ஒரு தமிழ் நீதி நூல். எளிய நடையைக் கொண்ட நூறு வெண்பாக்களால் இயற்றப்பட்டது.
ஆசிரியர்
நீதி வெண்பாவை இயற்றியவர் யார் என்று அறியவரவில்லை. 1931-ல் இந்நூலைப் பதிப்பித்த கா. நமச்சிவாயம் பிள்ளை "நீதி வெண்பா என்னும் இந்நூலை இயற்றிய ஆசிரியர் இன்னார் என்று விளங்கவில்லை. இவர் வடமொழியிலுள்ள 'நீதிசாஸ்திரம்' என்னும் தொகைநூல் முதலானவற்றைக் கொண்டு இதனைச் செய்தனர் என்பது தெளிவாகின்றது. சில செய்யுட்கள் மொழிபெயர்ப்பாகவே காண்கின்றன' என்று குறிப்பிட்டார்.
காப்புச் செய்யுளில்
மூதுணர்ந்தோர் ஓது சில மூதுரையைப் பேதையேன்
நீதி வெண்பாவாக நிகழ்த்துவேன் - ஆதிபரன்
வாமன் கருணை மணி உதரம் பூத்த முதல்
கோமான்பெருங்கருணை கொண்டு
என்று உமையின் மைந்தன் என்று விநாயகப் பெருமானைத் துதிப்பதால் இவர் சைவ சமயத்தவர் என அறியலாம்.
நூல் அமைப்பு
நீதி வெண்பா மகடூஉ முன்னிலையாக இயற்றப்பட்டுள்ளது. ஆசிரியர் சைவ நெறியினர் என்பதால் பல சைவநெறி கருத்துகள் இடம்பெறுகின்றன. உவமைகளும், உருவகங்களும் பாடல்களில் இடம்பெறுகின்றன. பழமொழிகளும் எடுத்தாளப்பட்டுள்ளன. நூலில் பல வடமொழிச் சொற்களும் இடம்பெறுகின்றன.
பாடல் நடை
உசாத்துணை
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.