being created

நற்றிணை

From Tamil Wiki
Revision as of 08:25, 14 July 2023 by Madhusaml (talk | contribs)

நற்றிணை என்பது தமிழ் இலக்கியத்தில் எட்டுத்தொகை என்ற சங்க இலக்கிய வகைப்பாட்டினுள் காணப்படும் முதல் நூலாகும். நற்றிணை 175 புலவர்களால் பாடப்பட்ட 400 பாடல்கள் கொண்டதாகும்.

நூல் அமைப்பு

நற்றிணை தனிப்பாடல்களாகப் பலராலும் பாடப்பட்டுப் பின்னர் தொகுக்கப்பட்டது. எட்டுத்தொகை நூல்கள் இவையெனக் குறிப்பிடும் பழைய வெண்பாவில் முதலிடம் பெற்றுத்திகழ்வது நற்றிணை ஆகும். எட்டுத்தொகை நூல்களில் 'நல்' என்ற அடைமொழி பெற்ற நூல் (நல்+திணை) இதுவேயாகும். இதனை நற்றிணை நானூறு என்றும் கூறுவர். நற்றிணை நூலில் கடவுள் வாழ்த்தோடு 401 பாடல்கள் ஆசிரியப்பாவில் அமைந்துள்ளன.

அடி அளவுகள்

நற்றிணை நூலின் பாடல்களில் 7 அடி சிற்றெல்லையாகவும் 13 அடி பேரெல்லையாகவும் அமைந்துள்ளன. பெரும்பான்மையானவை 9 அடி முதல் 12 அடிகள் கொண்ட பாடல்களாக உள்ளன.

  • 7 அடிகளில் அமைந்த பாடல்கள் - 1
  • 8 அடிகளில் அமைந்த பாடல்கள் - 1
  • 9 அடிகளில் அமைந்த பாடல்கள் - 106
  • 10 அடிகளில் அமைந்த பாடல்கள் - 96
  • 11 அடிகளில் அமைந்த பாடல்கள் - 110
  • 12 அடிகளில் அமைந்த பாடல்கள் - 77
  • 13 அடிகளில் அமைந்த பாடல்கள் - 8
  • 234-ஆவது பாடல் கிடைக்கவில்லை.

நற்றிணைப் பாடல்கள் அனைத்தும் அகப்பொருள் அமையப் பெற்ற பாடல்களாம்.

பாடியோர்

நற்றிணையில் உள்ள 401 பாடல்களை 175 புலவர்கள் பாடியுள்ளனர். குறுந்தொகைப் புலவர்கள் போலவே நற்றிணைப் புலவர்களில் சிலரும் பாடலில் இடம்பெற்றுள்ள தொடர்களால் பெயர் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அவர்கள் கீழ்காணும் எழுவராவர்;

  • வண்ணப்புறக் கந்தத்தனார்
  • மலையனார்
  • தனிமகனார்,
  • விழிக்கட் பேதைப் பெருங்கண்ணனார்
  • தும்பிசேர்க்கீரனார்
  • தேய்புரிப் பழங்கயிற்றினார்
  • மடல் பாடிய மாதங்கீரனார்

மேலும் 59 பாடல்களைப் பாடிய புலவர்களின் பெயர்கள் காணப்படவில்லை. இந்நூலில் உள்ள நானூறு பாடல்களில் 234-ஆம் பாடல் முழுமையாகவும், 385-ஆம் பாடலின் ஒரு பகுதியும் கிடைக்கப்பெறவில்லை.

வகைமை

நற்றிணை நூலின் பாடல்கள் திணை அடிப்படையில்;

  • குறிஞ்சித் திணைப் பாடல்கள்-132
  • பாலைத் திணைப் பாடல்கள்-104
  • நெய்தல் திணைப் பாடல்கள்-102
  • மருதத் திணைப் பாடல்கள்-32
  • முல்லைத் திணைப் பாடல்கள்-30

நற்றிணை காட்டும் வாழ்க்கை

நற்றிணைப் பாடல்கள் வாயிலாக அக்கால மக்களிடம் பரவிக்கிடந்த பழக்க வழக்கங்களை அறியலாம். தலைவன் பிரிவால் வாடும் தலைவி, தன் தலைவனின் வரவைச் சுவரில் கோடிட்டுக் கணக்கிடும் பழக்கமும், காதலன் வரவைப் பல்லி கத்தும் ஓசையை வைத்து சகுனம் பார்க்கும் வழக்கமும் அக்காலமக்களிடம் இருந்த நம்பிக்கையைக் காட்டுகிறது. மேலும் மகளிர் காற்பந்து விளையாடும் வழக்கமும் இருந்ததை அறியமுடிகிறது. பிற்காலத்தில் சிறந்து விளங்கிய "தூது" என்ற சிற்றிலக்கியத்திற்கு வழிகாட்டியாகக் குருவி, கிளி, நாரை ஆகியவற்றைத் தூதுவிடும் பாங்கையும் நற்றிணையில் காணலாம். மேலும் மன்னர்களின் ஆட்சி சிறப்பு, கொடைத்திறம், மன்னர்களைப் பின்பற்றி மக்கள் வாழ்ந்த அறவாழ்வு ஆகியவற்றையும் நற்றிணைப் பாடல்கள் காட்டுகின்றன.

பதிப்பு வரலாறு

நற்றிணை நூலைத் தொகுத்தவர் யாரென அறியப்படவில்லை என்றாலும் தொகுப்பித்தவன் "பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி" ஆவார்.

எட்டுத்தொகை நூல்களில் பழைய உரை இல்லாத ஒரே நூல் நற்றிணை ஆகும். நற்றிணை நூல் முற்காலத்தில் ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்டு பயன்பாட்டில் இருந்து வந்தது. பிற்காலத்தில் அழிந்துபோகும் நிலை எய்தியபோது பின்னத்தூர் அ.நாராயணசாமி ஐயர் என்னும் தமிழறிஞர் இந்நூலின் பல சுவடிகளைத் தேடிக் கண்டறிந்து, ஒப்பிட்டு ஆய்வுசெய்து முதன்முதலில் புத்துரையுடன் 1915-ஆம் ஆண்டு பதிப்பித்து வெளியிட்டார். இப்பதிப்பிற்கு பின்னர் வேறு பல தமிழ்ச் சான்றோரும் உரையுடன் பதிப்பித்து வெளியிட்டுள்ளனர்.

பாடியவர்களின் பெயர்கள்

நற்றிணை நூலிலுள்ள பாடல்களை பாடியவர்களின் பெயர்கள் அகர வரிசையில்; ( அடைப்புக் குறிக்குள் பாடல் எண்கள்)

அகம்பல்மால் ஆதனார் ( 81 )

அஞ்சில் அஞ்சியார் ( 90 )

அஞ்சில் ஆந்தையார் ( 233 )

அம்மள்ளனார் ( 82 ) அம்மூவனார் ( 4 , 35 , 38 ,275 , 307, 315, 327, 395,76, 397 ) அம்மெய்யன் நாகனார் ( 252 )

அல்லங் கீரனார் ( 245 )

அறிவுடைநம்பி ( 15 )

ஆலங்குடி வங்கனார் ( 230 , 330 , 400 )

ஆலம் பேரிசாத்தனார் ( 152 , 255 )

ஆவூர்க் காவிதிகள் சாதேவனார் ( 264 )

இடைக்காடனார் ( 142 , 221 ,316 )

இளங்கீரனார் ( 3 , 62 , 113 )

இளநாகனார் ( 151, 205, 231 )

இளந்திரையனார் ( 99, 94, 106 )

இளந்தேவனார் ( 41 )

இளம்புல்லூர்க்காவிதி ( 89 )

இளம்போதியார் ( 72 )

இளவெயினனார் ( 263 )

இளவேட்டனார் ( 33, 157 )

இனிச்சந்த நாகனார் ( 66 )

உக்கிரப்பெருவழுதி ( 98 )

உரோடகத்துக்கந்தரத்தனார் ( 306 )

உலோச்சனார் ( 11, 38, 63, 74, 131, 149, 191, 203, 223,

249, 254, 278, 287, 311, 331, 354, 363, 372, 398, 64 )

உறையூர்க் கதுவாய்ச் சாத்தனார் ( 370 )

எயினந்தை மகன் இளங்கீரனார் ( 269, 308, 346 )

எயினந்தையார் ( 43 )

ஐயூர் முடவனார் ( 206, 334 )

ஒருசிறைப்பெரியனார் ( 121 ) ஓரம்போகியார் ( 20, 360 ) ஒளவையார் ( 129, 187, 295, 390, 371, 381, 394 ) கச்சிப்பேட்டு இளந்தச்சனார் ( 266 )

கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார் ( 144, 213 )

கடுவன் இளமள்ளனார் ( 150 )

கணக்காயனார் ( 23 ) கணியன் பூங்குன்றனார் ( 226 ) கண்ணகனார் ( 79 )

கண்ணகாரன் கொற்றனார் ( 143, 156 )

கண்ணம்புல்லனார் ( 159 )

கதப்பிள்ளையார் ( 135 )

கந்தரத்தனார் ( 238, 116, 146 ) கபிலர் ( 1, 13, 32, 65, 77, 217, 222, 225, 253, 309, 336, 353, 359, 373, 376, 368, 59, 267, 291, 320 )

கயமனார் ( 12, 198, 279, 293, 305 )

கருவூர்க் கதப்பிள்ளைச் சாத்தனார் ( 343 )

கருவூர்க் கோசனார் ( 214 )

கழார்க் கீரன் எயிற்றியனார் ( 281, 312 )

கள்ளம்பாளனார் ( 148 )

கள்ளிக்குடிப்பூதம் புல்லனார் ( 333 )

காசிபன் கீரனார் ( 248 )

காஞ்சிப் புலவனார் ( 123 )

காப்பியஞ் சேந்தனார் ( 246 )

காமக்கணி நப்பசலையார் ( 243 )

காரிக்கண்ணனார் ( 237 )

காவன்முல்லைப் பூதனார் ( 274 )

காவிரிப் பூம்பட்டினத்துச் செங்கண்ணனார் ( 389 )

கிடங்கில் காவிதிக் கீரங்கண்ணனார் ( 218 )

கிடங்கில் காவிதிப் பெருங்கொற்றனார் ( 364 )

கிள்ளிமங்கலக்கிழார் மகனார் சோ கோவனார் (365)

கீரங்கீரனார் ( 78 )

கீரத்தனார் ( 27, 42 )

குடவாயிற் கீரத்தனார் ( 212, 379 )

குண்டுகட் பாலியாதனார்( 220 )

குதிரைத் தறியனார் ( 296 )

குளம்பனார் ( 288 )

குறமகள் குறிஎயினி ( 357 )

குன்றியனார் ( 117, 239 )

குன்றூர் கிழார் மகன் கண்ணத்தனார் ( 332 )

கூடலூர்ப் பல்கண்ணனார் ( 200, 380 )

கூற்றங் குமரனார் ( 244 )

கொள்ளம் பக்கனார் ( 147 )

கொற்றங் கொற்றனார் ( 259 )

கொற்றனார் ( 30 )

கோட்டம்பலவனார் ( 95 )

கோக்குளமுற்றனார் ( 96 )

கோட்டியூர் நல்லந்தையார் ( 211 )

கோண்மா நெடுங்கோட்டனார் ( 40 )

கோவூர் கிழார் ( 393 )

கோளியூர்கிழார் மகனார் செழியனார் ( 383 )

சல்லியங்குமரனார் ( 141 )

சாத்தந்தையார் ( 26 )

சிறுமோலிகனார் ( 61 )

சிறைக்குடி ஆந்தையார் ( 16 )

சீத்தலைச் சாத்தனார் ( 36, 339, 127 )

செங்கண்ணனார் ( 122 )

செம்பியனார் ( 102 )

சேந்தம் பூதனார் ( 69 )

சேந்தங்கண்ணனார் ( 54 )

சேந்தண் பூதனார் ( 261 )

தங்கால் ஆத்திரேயன் செங்கண்ணனார் ( 386 )

தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார் ( 313 )

தனிமகனார் ( 153 )

தாயங்கண்ணனார் ( 229 )

தும்பி சேர்கீரனார் ( 277 )

துறைக்குறுமாவிற் பாலங்கொற்றனார் ( 286 )

தூங்கலோரியார் ( 60 )

தேய்புரிப் பழங்கயிற்றினார் ( 284 )

தேவனார் ( 227 )

தொல் கபிலர் ( 114, 276, 328, 399 )

நக்கண்ணையார் ( 19, 87 )

நக்கீரனார் ( 340, 31, 258, 86, 197, 367 )

நப்பாலத்தனார் ( 240 )

நம்பிகுட்டுவனார் ( 145, 345, 236 )

நல்லந்துவனார் ( 88 )

நல்லாவூர்கிழார் ( 154 )

நல்லூர்ச் சிறுமேதாவியார் ( 282 )

நல்விளக்கனார் ( 85 )

நல்வெள்ளியார் ( 7, 47 )

நல்வேட்டனார் ( 53, 292 )

நற்சேந்தனார் ( 128 )

நற்றங்கொற்றனார் ( 136 )

நற்றமனார் ( 133 )

நிகண்டன் கலைக்கோட்டுத் தண்டனார் ( 382 )

நெய்தல் தத்தனார் ( 49, 130 )

நொச்சிநியமங்கிழார் ( 17, 209, 208 )

பரணர் ( 6, 201, 247, 265, 356, 100, 260, 310, 280, 300, 350, 270 )

பராயனார் ( 155 )

பாண்டியன் மாறன் வழுதி ( 301 )

பாரதம் பாடிய பெருந்தேவனார்

பாலத்தனார் ( 52 )

பாலை பாடிய பெருங்கடுங்கோ( 9, 202, 224, 256, 318, 337, 384, 391, 48,118 )

பிசிராந்தையார் ( 91 )

பிரமசாரி ( 34 )

பிரான் சாத்தனார் ( 68 )

புதுக்கயத்து வண்ணக்கன் கம்பூர்கிழான் ( 294 )

பூதங்கண்ணனார் ( 140 )

பூதன் தேவனார் ( 80 )

பூதனார் ( 29 )

பெருங்கண்ணனார் ( 137 )

பெருங்குன்றூர் கிழார் ( 5, 112, 119, 347 )

பெருங்கௌசிகனார் ( 44, 139 )

பெருந்தலைச் சாத்தனார் ( 262 )

பெருங்தேவனார் ( 83 )

பெரும்பதுமனார் ( 2 )

பெருவழுதி ( 55, 56 )

பேராலவாயர் ( 51 )

பேரிசாத்தனார் ( 25, 104, 37, 67, 199 )

பொதும்பில் கிழார் ( 57, 387 )

பொதும்பில் கிழார் மகன் வெண்கண்ணியார் ( 375 )

பொய்கையார் ( 18 )

போதனார் ( 110 )

மடல் பாடிய மாதங்கீரனார் ( 377 )

மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார் ( 297, 321 )

மதுரை ஆருலவிய நாட்டு ஆலம்பேரி சாத்தனார் ( 303, 338 )

மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் ( 344 )

மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார் ( 273 )

மதுரை ஈழத்துப் பூதன் தேவனார் ( 366 )

மதுரை ஓலைக்கடையத்தார் நல்வெள்ளையார் ( 250, 369 )

மதுரைக் கண்ணத்தனார் ( 351 )

மதுரைக் காருலவியங் கூத்தனார் ( 325 )

மதுரைக் கொல்லன் வெண்ணாகனார் ( 285 )

மதுரைச் சுள்ளம்போதனார் ( 225 )

மதுரைப் பள்ளி மருதங்கிழார் மகனார் சொகுத்தனார் ( 352 )

மதுரைப் பாலாசிரியன் சேந்தன் கொற்றனார் ( 322 )

மதுரைப் பூவண்ட நாகன் வேட்டனார் ( 317 )

மதுரைப் பெருமருதனார் ( 241 )

மதுரைப் பெருமருதன் இளநாகனார் ( 251 )

மதுரைப் பேராலவாயர் ( 361 )

மதுரை மருதங்கிழார் மகனார் சொகுத்தனார் ( 329 )

மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார் ( 388 )

மதுரை மருதன் இளநாகனார் ( 21, 39, 194, 326, 341, 103, 302, 362, 216, 290, 283, 392 )

மருங்கூர்ப்பட்டினத்துச் சேந்தன் குமரனார் ( 289 )

மருதம் பாடிய இளங்கடுங்கோ ( 50 )

மலையனார் ( 93 )

மள்ளனார் ( 204 )

மாங்குடி கிழார் ( 120 )

மாமூலனார் ( 14, 75 )

மாறன்வழுதி ( 97 )

மாறோக்கத்து நப்பசலையார் ( 304 )

மிளைகிழான் நல்வேட்டனார் ( 210, 349 )

மீளிப் பெரும்பதுமனார் ( 109 )

முக்கல் ஆசான் நல்வெள்ளையார் ( 272 )

முடத்திருமாறனார் ( 105, 228 )

முது கூற்றனார் ( 28, 58 )

முதுவெங்கண்ணனார் ( 232 )

முப்பேர்நாகனார் ( 314 )

மூலங்கீரனார் ( 73 )

மோசி கண்ணத்தனார் ( 124 )

மோசி கீரனார் ( 342 )

வடம வண்ணக்கன் பேரி சாத்தனார் ( 299, 323, 378 )

வண்ணக்கன் சொரு மருங்குமரனார் ( 257 )

வண்ணப்புறக் கந்தரத்தனார் ( 71 )

வன்பரணர் ( 374 )

விழிக்கட் பேதைப் பெருங்கண்ணனார் ( 242 )

விற்றூற்று வண்ணக்கன் தத்தனார் ( 298 )

வினைத்தொழிற் சோகீரனார் ( 319 )

வெள்ளியந் திண்ணனார் ( 101 ) வெள்ளிவீதியார் ( 70, 335, 348 ) வெள்ளைக்குடி நாகனார் ( 158, 196 )

வெறிபாடிய காமக்கண்ணியார் ( 268 )

பாடினோர் பெயர் காணப் பெறாத பாடல்கள் ( 8, 10, 22, 24, 45, 46, 84, 92, 107, 108, 111, 115, 125, 126, 132, 134, 160, 161, 162, 163, 164, 165, 166, 167, 168, 169, 170, 171, 172, 173, 174, 175, 176, 177, 178, 179, 180, 181, 182, 183, 184, 185, 186, 188, 189, 190, 192, 193, 195, 207, 229, 234, 235, 271,355,385,396 )

வரலாற்று மாந்தர்கள்

நற்றிணை நூலில் கீழ்காணும் வரலாற்று மாந்தர்களின் பெயர்கள் பயின்று வருகின்றன. ( அடைப்புக்குறிக்குள் பாடல் எண்கள்)

அதியமான் நெடுமான் அஞ்சி ( 381 )

அழிசி ( 87, 191 )

அருமன் ( 367 )

அன்னி ( 180 )

ஆய்அண்டிரன் ( 167, 237 )

உதியன் ( 113 )

ஓரி ( 6, 52, 265, 320 )

காரி ( 320 )

கிள்ளிவளவன் ( 141, 390 )

குட்டுவன் ( 14, 105, 395 )

கொங்கர் ( 10 )

கொல்லிப்பாவை ( 185, 192, 201 )

செம்பியன் ( 14 )

செழியன் ( 39, 298, 340, 387 )

சென்னி ( 265 )

சேந்தன் ( 190 )

சோழர் ( 10, 87, 281, 379, 400 )

தழும்பன் ( 300 )

தித்தன் ( 58 )

நன்னன் ( 270, 391 )

பசும்பூண்சோழர் ( 227 )

பசும்பூண் வழுதி ( 358 )

பழையன் ( 10 )

புல்லி ( 14 )

பூழியர் ( 192 )

பெரியன் ( 131 )

பொறையன் ( 346 )

மலையன் ( 77, 100, 170 )

மழவர் ( 52 )

மாயோன் ( 32 )

மிஞிலி ( 265 )

முடியன் ( 390 )

முள்ளூர் மன்னன் ( 291 )

மூவன் ( 18 )

வடுகர் ( 212 )

வழுதி ( 150 )

வாணன் ( 340 )

வாலியோன் ( 32 )

விராஅன் ( 350 )

வேளிர் ( 280 )

உசாத்துணை



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.