த. நா. சேனாபதி: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "த.நா.சேனாபதி ( ) தண்டலம் நாராயண சாஸ்திரி சேனாபதி. (த.நா.சேநாபதி) தமிழ் எழுத்தாளர். மொழிபெயர்ப்பாளர். வங்காள மொழியில் இருந்து தாகூர் உள்ளிட்ட படைப்பாளிகளை மொழியாக்கம் செய்தமைக்கா...")
 
No edit summary
Line 1: Line 1:
த.நா.சேனாபதி ( ) தண்டலம் நாராயண சாஸ்திரி சேனாபதி. (த.நா.சேநாபதி) தமிழ் எழுத்தாளர். மொழிபெயர்ப்பாளர். வங்காள மொழியில் இருந்து தாகூர் உள்ளிட்ட படைப்பாளிகளை மொழியாக்கம் செய்தமைக்காகப் புகழ்பெற்றவர். காந்தியின் நூல்களையும் மொழியாக்கம் செய்திருக்கிறார்.
த.நா.சேனாபதி (2 பிப்ரவரி 1914 ) தண்டலம் நாராயண சாஸ்திரி சேனாபதி. (த.நா.சேநாபதி) தமிழ் எழுத்தாளர். மொழிபெயர்ப்பாளர். வங்காள மொழியில் இருந்து தாகூர் உள்ளிட்ட படைப்பாளிகளை மொழியாக்கம் செய்தமைக்காகப் புகழ்பெற்றவர். காந்தியின் நூல்களையும் மொழியாக்கம் செய்திருக்கிறார்.
 
பிறப்பு, கல்வி
 
த. நா. சேனாபதி  தண்டலம் என்னும் கிராமத்தைச் சேர்ந்த நாராயண சாஸ்திரி - ராஜம்மாள் தம்பதியருக்கு 2 பிப்ரவரி 1914 ல் பிறந்தவர். த.நா.குமாரசாமியின் தந்தை நாராயண சாஸ்திரி தமிழ், ஆங்கிலம் , சம்ஸ்கிருதம் அறிந்த எழுத்தாளர். போஜ சாஸ்திரம் என்னும் நாடகத்தை எழுதியவர். மகத மன்னர்கள், ஆதிசங்கரரின் காலம் போன்ற நூல்களின் ஆசிரியர்.  புகழ்பெற்ற மொழிபெயர்ப்பு எழுத்தாளரான த.நா.குமாரசாமி இவருடைய மூத்த சகோதரர். [[பம்மல் சம்பந்த முதலியார்]], [[பரிதிமாற்கலைஞர்]] போன்றவர்கள் தண்டலம் நாராயண சாஸ்திரியின் நண்பர்கள். த.நா.சேனாபதி சிறுவராக இருக்கையிலேயே தந்தை மறைந்தார். குடும்பம் வறுமைவாய்ப்பட்டது. த.நா.குமாரசாமி ஆசிரியராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றி குடும்பத்தை காப்பாற்றினார்.
 
தந்தையிடமிருந்து தமிழ்,ஆங்கிலம்,சம்ஸ்கிருதம் ஆகியவற்றில் அடிப்படைக் கல்வி பெற்ற த.நா.சேனாபதி பின்னர் தமையன் த.நா.குமாரசாமியிடமிருந்து வங்கமொழி கற்றார். சென்னை முத்தியாலுப்பேட்டை உயர்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வி முடித்து சென்னை பல்கலைக் கழகத்தில் இளங்கலைப் பட்டப்படிப்பு (BOL) முடித்தார். த. நா. சேனாபதி இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்று பின்னர் தமிழிலக்கியம் பயின்று வித்வான் பட்டமும் ஒரிய மொழியில் முன்ஷி பட்டமும் பெற்றார்.
 
== தனிவாழ்க்கை ==
அன்னிபெசன்ட் தொடங்கிய பிரம்மஞான சபை (தியோசஃபிகல் சொசைட்டி) பள்ளியின் ஆசிரியராகப் பணியாற்றினார்.
 
== இதழியல் ==
1947 நவம்பரில் [[கலைமகள்]] நிறுவனம் தொடங்கிய [[மஞ்சரி]] என்னும் மொழிபெயர்ப்பு இதழுக்கு ஆசிரியராக த.நா.குமாரசாமி பொறுப்பேற்றார். 1948ல் த.நா.சேனாபதி அதில் துணையாசிரியராகப் பதவி ஏற்றார். இருவருமே கலைமகள் ஆசிரியர் [[கி. வா. ஜகந்நாதன்|கி. வா. ஜகந்நாத]]னின் அன்புக்குரியவர்களாக இருந்தனர். மஞ்சரி இதழில் த.நா.சேனாபதியின் பெரும்பாலான மொழியாக்கங்கள் வெளியாயின. கலைமகள் காரியாலய வெளியீடுகளாக அவருடைய நூல்கள் வெளிவந்தன.
 
== இலக்கிய வாழ்க்கை ==
சிறுகதைகள்
 
த.நா.சேனாபதி சென்னை பல்கலையில் பயில்கையில் தன் 19 ஆவது வயதில்  முதல் சிறுகதையை எழுதினார். ’அகஸ்தியர் வந்தால்’ என்னும் அச்சிறுகதை 1933 ல் ஆனந்தவிகடன் இதழில் வெளியாயிற்று. தொடர்ந்து குழந்தைமனம், சத்யவாதி போன்ற சிறுகதைகளை வெளியிட்டார். மாயை, பாதகாஹரணம், குற்றமுள்ள நெஞ்சு, அண்ணாமலைக் கோபுரம், செவிலித்தாய், பிரேமதூதன், சிசுலோகம், பழிக்குப்படி, யார் திருடன், ஏமாந்தவர் யார், பஸ் சொன்ன கதை போன்றவை த.நா.குமாரசாமியின் நல்ல சிறுகதைகளாகக் குறிப்பிடப்படுகின்றன.
 
மொழிபெயர்ப்பு
 
தமிழிலக்கியத்தில் 1940 முதல் முப்பதாண்டுகளை மொழியாக்க காலகட்டம் என்று கூறுவது வழக்கம். வங்காளம், மராட்டி, இந்தி மொழிகளில் இருந்து ஏராளமான மொழியாக்கங்கள் தமிழுக்கு வந்து மிகுந்த செல்வாக்கைச் செலுத்தின. த.நா.குமாரசாமி, [[ஆர். சண்முகசுந்தரம்]], [[கா.ஸ்ரீ.ஸ்ரீ]] ,[[அ.கி.கோபாலன்]] போன்றவர்கள் அன்று புகழ்பெறற மொழிபெயர்ப்பாளர்கள். த.நா. சேனாபதி தன் தமையனின் வழி தொடர்ந்து வங்காளம், இந்தி மொழிகளில் இருந்து தொடர்ச்சியாக மொழிபெயர்ப்புகளைச் செய்தார். முதன்மையாக ரவீந்திரநாத் தாகூரின் படைப்புகளை மொழியாக்கம் செய்தார். சரத்சந்திர சட்டர்ஜி, தாராசங்கர் பானர்ஜி, விபூதிபூஷன் பந்த்யோபாத்யாய , சௌரீந்த்ரமோகன் முகோபாத்யாய போன்றவர்களின் படைப்புகள் த.நா.சேனாபதி மொழியாக்கத்தில் வெளியாயின. முப்பதுக்கும் மேற்பட்ட நாவல்களையும் இருநூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் த.நா.சேனாபதி மொழியாக்கம் செய்துள்ளார்.
 
உசாத்துணை
 
[https://www.jeyamohan.in/54010/ நேற்றைய புதுவெள்ளம்- ஜெயமோகன்]

Revision as of 08:04, 13 June 2022

த.நா.சேனாபதி (2 பிப்ரவரி 1914 ) தண்டலம் நாராயண சாஸ்திரி சேனாபதி. (த.நா.சேநாபதி) தமிழ் எழுத்தாளர். மொழிபெயர்ப்பாளர். வங்காள மொழியில் இருந்து தாகூர் உள்ளிட்ட படைப்பாளிகளை மொழியாக்கம் செய்தமைக்காகப் புகழ்பெற்றவர். காந்தியின் நூல்களையும் மொழியாக்கம் செய்திருக்கிறார்.

பிறப்பு, கல்வி

த. நா. சேனாபதி தண்டலம் என்னும் கிராமத்தைச் சேர்ந்த நாராயண சாஸ்திரி - ராஜம்மாள் தம்பதியருக்கு 2 பிப்ரவரி 1914 ல் பிறந்தவர். த.நா.குமாரசாமியின் தந்தை நாராயண சாஸ்திரி தமிழ், ஆங்கிலம் , சம்ஸ்கிருதம் அறிந்த எழுத்தாளர். போஜ சாஸ்திரம் என்னும் நாடகத்தை எழுதியவர். மகத மன்னர்கள், ஆதிசங்கரரின் காலம் போன்ற நூல்களின் ஆசிரியர். புகழ்பெற்ற மொழிபெயர்ப்பு எழுத்தாளரான த.நா.குமாரசாமி இவருடைய மூத்த சகோதரர். பம்மல் சம்பந்த முதலியார், பரிதிமாற்கலைஞர் போன்றவர்கள் தண்டலம் நாராயண சாஸ்திரியின் நண்பர்கள். த.நா.சேனாபதி சிறுவராக இருக்கையிலேயே தந்தை மறைந்தார். குடும்பம் வறுமைவாய்ப்பட்டது. த.நா.குமாரசாமி ஆசிரியராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றி குடும்பத்தை காப்பாற்றினார்.

தந்தையிடமிருந்து தமிழ்,ஆங்கிலம்,சம்ஸ்கிருதம் ஆகியவற்றில் அடிப்படைக் கல்வி பெற்ற த.நா.சேனாபதி பின்னர் தமையன் த.நா.குமாரசாமியிடமிருந்து வங்கமொழி கற்றார். சென்னை முத்தியாலுப்பேட்டை உயர்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வி முடித்து சென்னை பல்கலைக் கழகத்தில் இளங்கலைப் பட்டப்படிப்பு (BOL) முடித்தார். த. நா. சேனாபதி இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்று பின்னர் தமிழிலக்கியம் பயின்று வித்வான் பட்டமும் ஒரிய மொழியில் முன்ஷி பட்டமும் பெற்றார்.

தனிவாழ்க்கை

அன்னிபெசன்ட் தொடங்கிய பிரம்மஞான சபை (தியோசஃபிகல் சொசைட்டி) பள்ளியின் ஆசிரியராகப் பணியாற்றினார்.

இதழியல்

1947 நவம்பரில் கலைமகள் நிறுவனம் தொடங்கிய மஞ்சரி என்னும் மொழிபெயர்ப்பு இதழுக்கு ஆசிரியராக த.நா.குமாரசாமி பொறுப்பேற்றார். 1948ல் த.நா.சேனாபதி அதில் துணையாசிரியராகப் பதவி ஏற்றார். இருவருமே கலைமகள் ஆசிரியர் கி. வா. ஜகந்நாதனின் அன்புக்குரியவர்களாக இருந்தனர். மஞ்சரி இதழில் த.நா.சேனாபதியின் பெரும்பாலான மொழியாக்கங்கள் வெளியாயின. கலைமகள் காரியாலய வெளியீடுகளாக அவருடைய நூல்கள் வெளிவந்தன.

இலக்கிய வாழ்க்கை

சிறுகதைகள்

த.நா.சேனாபதி சென்னை பல்கலையில் பயில்கையில் தன் 19 ஆவது வயதில் முதல் சிறுகதையை எழுதினார். ’அகஸ்தியர் வந்தால்’ என்னும் அச்சிறுகதை 1933 ல் ஆனந்தவிகடன் இதழில் வெளியாயிற்று. தொடர்ந்து குழந்தைமனம், சத்யவாதி போன்ற சிறுகதைகளை வெளியிட்டார். மாயை, பாதகாஹரணம், குற்றமுள்ள நெஞ்சு, அண்ணாமலைக் கோபுரம், செவிலித்தாய், பிரேமதூதன், சிசுலோகம், பழிக்குப்படி, யார் திருடன், ஏமாந்தவர் யார், பஸ் சொன்ன கதை போன்றவை த.நா.குமாரசாமியின் நல்ல சிறுகதைகளாகக் குறிப்பிடப்படுகின்றன.

மொழிபெயர்ப்பு

தமிழிலக்கியத்தில் 1940 முதல் முப்பதாண்டுகளை மொழியாக்க காலகட்டம் என்று கூறுவது வழக்கம். வங்காளம், மராட்டி, இந்தி மொழிகளில் இருந்து ஏராளமான மொழியாக்கங்கள் தமிழுக்கு வந்து மிகுந்த செல்வாக்கைச் செலுத்தின. த.நா.குமாரசாமி, ஆர். சண்முகசுந்தரம், கா.ஸ்ரீ.ஸ்ரீ ,அ.கி.கோபாலன் போன்றவர்கள் அன்று புகழ்பெறற மொழிபெயர்ப்பாளர்கள். த.நா. சேனாபதி தன் தமையனின் வழி தொடர்ந்து வங்காளம், இந்தி மொழிகளில் இருந்து தொடர்ச்சியாக மொழிபெயர்ப்புகளைச் செய்தார். முதன்மையாக ரவீந்திரநாத் தாகூரின் படைப்புகளை மொழியாக்கம் செய்தார். சரத்சந்திர சட்டர்ஜி, தாராசங்கர் பானர்ஜி, விபூதிபூஷன் பந்த்யோபாத்யாய , சௌரீந்த்ரமோகன் முகோபாத்யாய போன்றவர்களின் படைப்புகள் த.நா.சேனாபதி மொழியாக்கத்தில் வெளியாயின. முப்பதுக்கும் மேற்பட்ட நாவல்களையும் இருநூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் த.நா.சேனாபதி மொழியாக்கம் செய்துள்ளார்.

உசாத்துணை

நேற்றைய புதுவெள்ளம்- ஜெயமோகன்