திருவேகம்பரந்தாதி
திருவேகம்பரந்தாதி காஞ்சிபுரத்தில் கோவில்கொண்ட ஏகாம்பரநாதரைப் பாடிய அந்தாதி என்னும் சிற்றிலக்கியம்.
பதிப்பு
இ.இராமசுவாமிப்பிள்ளை என்னும் ஞானசம்பந்தப்பிள்ளையின் உரையுடன் பாண்டித்துரைத் தேவரின் வேண்டுகோளின்படி சித்தாந்த வித்தியாநுபாலன யந்திரசாலையில் பதிப்பிக்கப்பட்டதாக மூன்றாம் பதிப்பில் கூறப்பட்டுள்ளது. இதன் காப்புச் செய்யுளும் முதல் 6 பாடல்களும் கிடைக்கவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆசிரியர்
திருவேகம்பரந்தாதியை இயற்றியவர் சிவஞான முனிவர்.
நூல் அமைப்பு
திருவேகம்பரந்தாதியில் காப்பு, சிறப்புப் பாயிரம் தவிர 100 பாடல்கள் அந்தாதித் தொடையாக அமைந்துள்ளன. நான்கு அடிகளும் ஒரே சொல்லில் தொடங்கி ஒவ்வொரு அடியிலும் வேறு வேறு பொருளைத் தருமாறு மடக்கணியில் அமைந்துள்ளன.
பாடல் நடை
குவலயமாமை
குவலையமாமைவிழியார்மயக்கிற்கொட்கும்புலையேன்
குவலையமாமையுருவெனக்காலன்குறுகிலென்செய்
குவலையமாமைதருங்கச்சியேகம்பகோளரவா
குவலையமாமையினோடணியாக்கொண்டகொள்கையனே.
கேட்டையனாமய
கேட்டையனாமயமாங்கம்பங்கிட்டவொட்டாதமதன்
கேட்டையனாமயன்மீறச்செய்தீங்கைக்கெடுத்தியெனக்
கேட்டையனாமயங்கேலெனவாண்டனன்கேழரியாங்
கேட்டையனாமயனாமறிவாரவன்கீர்த்திகளே.
உசாத்துணை
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.