திருவிடைக்கோடு மகாதேவர் ஆலயம்: Difference between revisions
No edit summary |
|||
Line 23: | Line 23: | ||
'''சடையப்பர் கதை''': | '''சடையப்பர் கதை''': | ||
திருவிஇடைக்கோடு பகுதி குடியிருப்புகள் இன்றி காடாக போது பறையர் சாதியை சார்ந்த ஒரு சிறுவனும் இஸ்லாமிய சிறுவனும் அவ்வழியே பழம் பறிக்க வந்தனர். அப்போது வில்வ மரத்தில் கீழ் சுயம்புவாக நின்ற சிவலிங்கத்தை கண்டனர். ஊர்மக்கள் சிவலிங்கத்திற்கு சிறிய கோவில் கட்டினர். சிவலிங்கத்தின் உச்சிப்பகுதி சடைபோல் தெரிந்ததால் சடையப்பர் என்று பெயரிட்டு வழிபட்டனர். | |||
சடையப்பர் கோவிலுக்கும் பறையர் மற்றும் இஸ்லாமிய சமூகங்களுக்கும் இடையே சடங்குரீதியான தொடர்பு உள்ளது. அதனால் இக்கதை வாய்மொழி கதையெனினும் முக்கியமானதாகிறது. | சடையப்பர் கோவிலுக்கும் பறையர் மற்றும் இஸ்லாமிய சமூகங்களுக்கும் இடையே சடங்குரீதியான தொடர்பு உள்ளது. அதனால் இக்கதை வாய்மொழி கதையெனினும் முக்கியமானதாகிறது. | ||
'''நந்தி கதை''': | '''நந்தி கதை''': | ||
திருவிடைக்கோடு மகாதேவரின் ஸ்ரீகோவில் கட்டப்பட்டபோது சிவலிங்கம், ஆவுடை, நந்தி ஆகிய மூன்றையும் சிற்பிகள் செதுக்கி கொண்டிருந்தனர். சிவலிங்கம் மற்றும் ஆவுடை செதுக்க்ப்பட்டு முடிந்து நந்தி சிற்பம் பூரணமடைந்தபோது நந்தி உக்கிரமாய் எழுந்ததன் அடையாளம் தெரிந்தது. சிற்பியால் நந்தியை கட்டுபடுத்த முடியவில்லை. ஊரிக்கு கெடுதல் ஏற்படும் என்று பெரியவர்கள் சொல்ல ஊரில் அதன் அடையாளமும் தெரிந்தது. | |||
சிற்பி வேறு வழியின்றி நந்தியின் கொம்பை உடைத்து திமிலை பாதியாக வெட்டினார். நந்தியின் உக்கிரம் கொஞ்சம் தணிந்த சமயம் அவசரமாக மூலவரை ஆவுடையில் பிரதிஷ்டை செய்து எதிரே நந்தியை வைத்த்னர். நந்தியின் உக்கிரம் முழிமையாக அடங்கியது. | |||
கோவில் நந்தியின் கொம்பும் திமிலும் உடைந்திருப்பதன் காரணாமாக இக்கதை சொல்லப்படுகிறது. | |||
== கோவில் அமைப்பு == | == கோவில் அமைப்பு == |
Revision as of 10:35, 8 March 2022
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.
This page is being created by User:Arulj7978
கன்னியாகுமரி மவட்டம் வில்லுகுறி பஞ்சாயத்தில் திருவிடைகோடு கிராமத்தில் உள்ள சிவ ஆலயம். மூலவர் மகாதேவர் என்று அழைக்கப்படும் சடையப்பர். சிவாலய ஓட்டம் நிகழும் பன்னிரு சிவாலயங்களில் ஒன்பதாவது ஆலயம்.
இடம்
கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் வட்டம் வில்லுகுறி பஞ்சாயத்தில் உள்ளது திருவிடைகோடு. திருவிடைகோடு ஊரில் வில்லுகுறி கால்வாயை ஒட்டி ஆலயம் உள்ளது. நாகர்கோவில் திருவனந்தபுரம் சாலையில் வில்லுகுறியிலிருந்து கால்வாயை ஒட்டி கிழக்கே சுமார் ஒரு கிலோ தொலைவில் உள்ளது.
மூலவர்
திருவிடைகோடு ஆலய மூலவர் மகாதேவர் என்று பரவலாக அறியப்பட்டாலும் ஆதாரபூர்வமான பெயர் சடையப்பர். மூலவர் ஆவுடையில் பிரதிஷ்டை செய்யபட்டு லிங்க வடிவில் உள்ளார்.
தொன்மம்
இடைகாடர் கதை:
இடைகாடன் என்னும் இடையர் ஜாதி இளைஞன் பொதிய மலை அடிவாரத்தில் ஆடு மேய்த்து கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்த நவசித்தர்களில் ஒருவர் குடிக்க தண்ணீர்கேட்க இடையன் ஆட்டுபால் கொடுத்தான். சித்தர் நன்றி கடனாக சித்துகளை சொல்லிகொடுத்தார்.
சித்தரான இடைகாடர் பஞ்சம் வரப்போவதை முன்பறிந்தார். தன் ஆடுகளுக்கு எருக்கிலை தின்ன பழக்கினார். குரு விரகு என்னும் தனியத்தை மண்ணுடன் கலந்து வீடு கட்டிக்கொண்டார். மழையில்லாமல் பஞ்சம் வந்தபோது ஆடுகள் எருக்கை தின்று வாழ்ந்தன. எருக்கை தின்று ஆடுகளுக்கு அரிப்பு வந்து இடைகாடர் கட்டிய வீட்டில் உடம்பை தேய்த்தன. சுவரிலிருந்து விழுந்த குருவரகினை உண்டு வாழ்ந்தார் இடைகாடர்.
நவகிரக அதிபதிகள் பெருபஞ்சத்தில் உயிர் வாழும் ஆடுகளையும் இடைகாடரையும் பார்க்க வந்தனர். அவர்களை உபசரித்து குருவரகு கலந்த ஆட்டு பாலை குடிக்க கொடுத்தார். பாலை குடித்த நவகிரகங்கள் மயங்கின. இடைகாடர் அவற்றை மாற்றி கிடத்தியதும் மழை பெய்தது.
திருவிடைகோடு என்னும் பெயரை பதினெண் சித்தர்களில் ஒருவரான இடைகாடருடன் இணைத்த இந்த தொன்மம் வாய்மொழி கதையாக உள்ளது. திருவிடைக்கோடு ஊரில் உள்ள மலை இடைகாடர் மலை என்றும் குளம் இடைகாடர் குளம் என்றும் அழைக்கபடுகிறது. ஊர் சாஸ்தா கோவிலை இடைகாடர் சமாதி என்றும் வாய்மொழி செய்தி உண்டு.
சடையப்பர் கதை:
திருவிஇடைக்கோடு பகுதி குடியிருப்புகள் இன்றி காடாக போது பறையர் சாதியை சார்ந்த ஒரு சிறுவனும் இஸ்லாமிய சிறுவனும் அவ்வழியே பழம் பறிக்க வந்தனர். அப்போது வில்வ மரத்தில் கீழ் சுயம்புவாக நின்ற சிவலிங்கத்தை கண்டனர். ஊர்மக்கள் சிவலிங்கத்திற்கு சிறிய கோவில் கட்டினர். சிவலிங்கத்தின் உச்சிப்பகுதி சடைபோல் தெரிந்ததால் சடையப்பர் என்று பெயரிட்டு வழிபட்டனர்.
சடையப்பர் கோவிலுக்கும் பறையர் மற்றும் இஸ்லாமிய சமூகங்களுக்கும் இடையே சடங்குரீதியான தொடர்பு உள்ளது. அதனால் இக்கதை வாய்மொழி கதையெனினும் முக்கியமானதாகிறது.
நந்தி கதை:
திருவிடைக்கோடு மகாதேவரின் ஸ்ரீகோவில் கட்டப்பட்டபோது சிவலிங்கம், ஆவுடை, நந்தி ஆகிய மூன்றையும் சிற்பிகள் செதுக்கி கொண்டிருந்தனர். சிவலிங்கம் மற்றும் ஆவுடை செதுக்க்ப்பட்டு முடிந்து நந்தி சிற்பம் பூரணமடைந்தபோது நந்தி உக்கிரமாய் எழுந்ததன் அடையாளம் தெரிந்தது. சிற்பியால் நந்தியை கட்டுபடுத்த முடியவில்லை. ஊரிக்கு கெடுதல் ஏற்படும் என்று பெரியவர்கள் சொல்ல ஊரில் அதன் அடையாளமும் தெரிந்தது.
சிற்பி வேறு வழியின்றி நந்தியின் கொம்பை உடைத்து திமிலை பாதியாக வெட்டினார். நந்தியின் உக்கிரம் கொஞ்சம் தணிந்த சமயம் அவசரமாக மூலவரை ஆவுடையில் பிரதிஷ்டை செய்து எதிரே நந்தியை வைத்த்னர். நந்தியின் உக்கிரம் முழிமையாக அடங்கியது.
கோவில் நந்தியின் கொம்பும் திமிலும் உடைந்திருப்பதன் காரணாமாக இக்கதை சொல்லப்படுகிறது.
கோவில் அமைப்பு
பூஜைகளும் விழாக்களும்
வரலாறு
உசாத்துணை
- புகைப்படங்கள் உதவி நன்றி https://shivantemple.blogspot.com/2019/07/9.html
- சிவாலய ஓட்டம், முனைவர் அ.கா. பெருமாள், காலச்சுவடு பதிப்பகம், இரண்டாம் பதிப்பு 2021.
- தென்குமரி கோவில்கள், முனைவர் அ.கா. பெருமாள், சுதர்சன் புக்ஸ், இரண்டாம் பதிப்பு 2018.
- https://490kdbtemples.org/about/kumari-shivalayam-ottam/
- குமரி மாவட்ட தேவச கோவில்கள் - இணையதளம்
- https://shaivam.org/hindu-hub/temples/place/669/thiruvidaikodu-chadayappar-temple-tamil